search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "hospitals"

    • புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது.
    • மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 18 செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அமைக்க ஒப்புதல் கேட்டு, பல்வேறு தனியார் மருத்துவமனை நிர்வாகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றில் தொழில்நுட்ப ரீதியான மருத்துவ வசதிகள் உள்ளதா, உள்கட்டமைப்பு நிலவரம் குறித்து, மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனகராணி, தேசிய மருத்துவம் மற்றும் சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, மூத்த மகப்பேறு மருத்துவர் ஸ்ரீ வித்யா தலைமையிலான மாவட்ட மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர்.

    குழு அதிகாரிகள் கூறுகையில், புதிய செயற்கை கருத்தரித்தல் மையங்களுக்கு மாநில குழு ஆய்வு நடத்தி ஒப்புதல் வழங்கி வந்தது. தற்போது நடைமுறை மாற்றப்பட்டு மாவட்ட மருத்துவக்குழு ஆய்வு நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பித்துள்ள மருத்துவமனைகளில் ஆய்வு நடக்கிறது என்றனர்.

    • தி.மு.க. ஆட்சியில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
    • அரசு மருத்துவமனை புதிய கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் 227 படுக்கைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், சுப்பிரமணியன் ஆகியோர் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

    விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கும் அதிக மான மக்கள் தொழிலாளர்க ளாக உள்ளனர். அதனால் தான் பிற இடங்களில் மாவட்டத்திற்கு ஒரு தலைமை மருத்துவமனை உள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக் கோட்டை தலைமை மருத்துவமனையாகவும், ராஜபாளையம் அதற்கு இணையான மருத்துவ மனையாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கடந்த காலத்தில் 18 மாவட்ட தலைமை மருத்துவ மனைகளே இருந்தன. தி.மு.க. அரசு பொறுப்பேற்ற 22 மாதத்தில் ரூ.1,038 கோடி மதிப்பில் புதிதாக 25 அரசு தலைமை மருத்துவ மனைகள் உருவாக்க் பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் உருவாக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இந்தியாவிலேயே அதிக பயனாளிகளை கொண்டு தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராஜபாளையம் தொகுதி எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், தனுஷ்குமார் எம்.பி., சுகாதார பணிகள் இணை இயக்குநர் முருகவேல், நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஒன்றிய தலைவர் சிங்கராஜ், மாவட்ட விளையாட்டு மேம்பட்டு பிரிவு அமைப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    எம்.எல்.ஏ. தங்கபாண்டி யன் தேர்தல் நேரத்தின்போது ராஜபாளையம் அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும் என வாக்கு றுதி அளித்திருந்தார். அதன் அடிப்படையில் தற்போது ரூ.40 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணி நடந்தது. எம்.எல்.ஏ.வின் நடவடிக்கைக்கு தொகுதிமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்றுப்புற கிராமத்தில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருப்பதில்லை. மேலும் இருக்கும் மருத்துவரை மாற்று பணி இடத்திற்கு அனுப்புவதால் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இருதயம், மூளை நோயால் பாதிக்கப்பட்டு வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க நிரந்தர மருத்துவர்கள் இல்லாததால் உள் நோயாளிகள், வெளி நோயாளிகள் சிரமப்படுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது.

    இந்த அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. தலைமை மருத்துவமனைக்கு உண்டான எந்த ஒரு வசதிகளும், செயல்பா–டுகளும், நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நோயாளிகள் குற்றம் சாட்டினர். இங்குள்ள ஸ்கேன் கருவி 2, 3 நாட்களாகவே பழுதடைந்து உள்ளது. இதனால் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

    இந்த மருத்துவமனையில் பிணவறை இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருத்துவமனையில் பல கட்டிடங்கள் ஆங்காங்கே விரிசல் அடைந்து உள்ளது.

    தேசிய தர சான்றிதழ் பெற்ற இந்த அரசு தலைமை மருத்துவமனையின்

    அவலநிலையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்தனர்.

    • கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
    • கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார்.

    கடையநல்லூர்:

    தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை மற்றும் நகர் மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் கடையநல்லூர் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்த வேண்டும் என முதல்-அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

    இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர சிகிச்சை பிரிவுக்கான கட்டிடத்தை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் திறந்து வைத்தார். இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அவசர முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கான நவீன உபகரணங்கள் அமைக்கப்பட்டு நேற்று முதல் நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. இதனை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை, நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் உபகரணங்களை இயக்கி பார்வையிட்டனர்.

    நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் அனிதா பாலீன், மருத்துவர்கள் சரவணக்குமார், மீனாட்சி, நகர தி.மு.க. செயலாளர் அப்பாஸ், கவுன்சிலர்கள் திவான் மைதீன், முகையதீன் கனி, தனலட்சுமி, ஒன்றிய செயலாளர் சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் அருணாசலபாண்டியன், பகவதியப்பன், நெசவாளர் அணி அமைப்பாளர் மூவன்னா மசூது மற்றும் நிர்வாகிகள் கருப்பணன், முதலியான்கான், வேல்சாமி, பேரூர் செயலாளர் வெள்ளத்துரை, கிளை செயலாளர்கள் பாலாஜி, கணேசன், முத்துராஜ், தங்கம், சுப்பிரமணியன், நகர நிர்வாகிகள் காளிமுத்து, அப்துல் மஜீத், அப்துல் வகாப், முகைதீன் அப்துல் காதர், சாகுல் ஹமீது, மசூது, ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்கள் பயன்படுத்தப்படும் என்று மத்திய மந்திரி ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார். #JayantSinha #Drones #Organs
    புதுடெல்லி:

    மத்திய விமானத்துறை மந்திரி ஜெயந்த் சின்கா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தானம் செய்பவர்களின் உடல் உறுப்புகளை சாலை வழியாக கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன. போக்குவரத்து நெருக்கடியில் குறிப்பிட்ட நேரத்தில் உடல் உறுப்புகளை கொண்டு செல்வது சவாலான பணியாக இருக்கிறது.



    எனவே உடல் உறுப்புகளை ஒரு ஆஸ்பத்திரியில் இருந்து மற்றொரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இதற்கான நடவடிக்கை இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. ஒரு மாதத்துக்குள் இந்த பணியை முடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். இந்த குட்டி விமானங்கள் உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மட்டுமே பயன்படுத்தப்படும். குட்டி விமானங்கள் புறப்பட்டு செல்லவும், அதை இறக்குவதற்கும் தேவையான வசதிகளை ஆஸ்பத்திரிகளில் முதலில் ஏற்படுத்த வேண்டும். இதனால் நேரம் விரயமாவதை குறைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார். #JayantSinha #Drones #Organs

    கிராமப்புற மக்கள் காய்ச்சல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட நோயிகளுக்கு முழு நேரம் சிகிச்சை பெற வசதியாக 8,706 துணை காதார நிலையங்களில் மேலும் ஒரு செவிலியரை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. #nurse
    சென்னை:

    நகர்ப்புறங்களில் கிடைக்கும் மருத்துவ வசதி கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    காய்ச்சல், ரத்தகொதிப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றால் பாதிக்கப்படும் கிராம மக்கள் நகரங்களுக்கு சென்று சிகிச்சை பெறுவதில் சிரமங்கள் இருக்கின்ற காரணத்தால் தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1806 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு ஆரம்ப சுகாதார மையங்களிலும் ஒரு டாக்டர் மற்றும் ஒரு நர்சு வீதம் பணியாற்றி வருகிறார்கள். இது தவிர 8706 துணை சுகாதார மையங்களில் ஒவ்வொரு மையத்திற்கும் ஒரு கிராம செவிலியர் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் அந்தந்த கிராமங்களில் வீடு வீடாக சென்று காலை முதல் மாலை வரை மருத்துவ சேவையாற்றி வருகிறார்கள். அவ்வாறு செல்லும் போது துணை சுகாதார மையங்கள் பூட்டப்பட்டு இருக்கும்.

    இதனால் சுகாதார மையத்துக்கு நேரில் வரக் கூடியவர்களுக்கு மருத்துவ உதவி கிடைப்பதில்லை என்ற குறை நீண்ட காலமாக இருந்து வந்தது.

    இந்த மையங்களில் உள்ள ஒரே ஒரு கிராம செவிலியர்கள் வீடுகளுக்கு சென்று மருத்துவ உதவியினை வழங்கி வருவதால் மையத்திற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு நேரில் வரும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகும் நிலை அறிந்து அரசு புதிய மருத்துவ திட்டத்தினை செயல்படுத்தியுள்ளது. அந்த திட்டத்தின் பெயர் அனைவருக்கும் நல வாழ்வு திட்டமாகும்.

    இந்த திட்டத்தின் கீழ் 8706 துணை சுகாதார மையங்களிலும் மேலும் ஒரு கிராம செவிலியர்களை நியமித்து கிராம மக்களுக்கு முழுமையான மருத்துவ சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. புதிதாக நியமிக்கப்படும் இவர்கள் சுகாதார மையத்தை திறந்து வைத்து அங்கு வருகின்ற மக்களுக்கு தேவையான சிகிச்சையினை அளிப்பார்கள்.

    அனைத்து தடுப்பூசிகளும், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய்களுக்கு டாக்டரின் பரிந்துரையின்படி ஒரு மாதத்திற்கான மாத்திரைகள் வழங்குவார்கள். மேலும் ரத்த மாதிரி பரிசோதனை, ரத்த அழுத்தம், சிறுநீர் பரிசோதனை போன்ற பரிசோதனைகளையும் கிராம செவிலியர்கள் மேற்கொள்வார்கள். இது தவிர கர்ப்ப கால பரிசோதனை, விபத்து முதல் உதவி போன்றவற்றிற்கும் அங்கு சிகிச்சை அளிக்கப்படும்.

    அனைவருக்கும் நல வாழ்வு திட்டம் தமிழகத்தில் தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 3 பிளாக்களில் பரீட்சார்த்தமாக தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் மேலும் 39 பிளாக்களில் தொடங்கப்பட உள்ளது. 5 வருடத்தில் 8706 துணை சுகாதார மையங்களிலும் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ளது.

    இது குறித்து பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி கூறியதாவது:-


    அனைவருக்கும் நலவாழ்வு திட்டம் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால் இதனை மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி கிராம செவிலியர்கள் 8706 பேர் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள்.

    துணை சுகாதார மையங்களில் ஏற்கனவே ஒருவர் இருந்த நிலையில் கூடுதலாக ஒருவர் நியமிக்கப்பட்டு அந்த மையங்களை முழுமையாக திறந்து வைத்து மக்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.

    இதுவரையில் மூடி இருந்த துணை சுகாதார நிலையங்கள் இனி படிப்படியாக திறக்கப்பட்டு கிராம மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்கப்படும். சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் சுகாதார மையங்களுக்கு நேரில் சென்றாலே ஊசி, மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். ரத்த பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் இங்கு செய்யலாம். இத்திட்டம் 2022-23-ல் நிறைவடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #nurse
    ×