என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rajiv Gandhi Government Hospital"

    • ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • கிட்டத்தட்ட 7 முறை அவருக்கு சி.பி.ஆர். மற்றும் ஷாக் கொடுக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜேஷ் (38). இவர் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் பிழைத்த அதிசய சம்பவம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நடந்துள்ளது.

    ஆசிரியர் பணி செய்து வந்த ராஜேசுக்கு கடந்த மாதம் 28-ந்தேதி திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரை சைதாப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்றனர். அங்கே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.

    முதலுதவி அங்கு செய்யப்பட்டபிறகு ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்க்கப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போதே இதயத் துடிப்பு முற்றிலும் நின்று போய்விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    ஆனாலும் இதய சிகிச்சை நிபுணர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது இதயத்துடிப்பு சீர் இல்லாத நிலையில் இருந்தது.

    கிட்டத்தட்ட 7 முறை அவருக்கு சி.பி.ஆர். மற்றும் `ஷாக்' கொடுக்கப் பட்டது. அதன்பிறகு இதயத் துடிப்பு சீரானது மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    ராஜேசின் இதய ரத்த குழாயில் அடைப்பு மோசமான நிலையில் இருந்ததை இதயவியல் நிபுணர்கள் பரிசோதனை மூலம் தெரிந்துகொண்டனர். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றி ரத்தக்குழாயின் அடைப்பை சீர் செய்ய `ஸ்டெண்ட்' அமைக்கப்பட்டது. ஆஞ்சியோ பிளாஸ்டு சிகிச்சை முடிந்த வுடன் அவரது இதயத்துடிப்பு சீராகும் என்று மருத்துவர்கள் எதிர்பார்த்தனர்.

    ஆனால் மீண்டும் ராஜேசுக்கு இதயத்துடிப்பு நின்று போனது. அதையடுத்து 30 நிமிடங்களுக்கு சி.பி.ஆர். செய்து இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் செலுத்தப்பட்டன.

    இதைத்தொடர்ந்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. செயற்கை சுவாசத்தில் இருந்த அவர் படிப்படியாக மீண்டு வந்தார். பின்னர் செயற்கை சுவாசம் இல்லாமல் சுயமாக மூச்சு விடவும், பேசவும் தொடங்கினார்.

    இதையடுத்து செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டு நடக்கவும், சாப்பிடவும் ஆரம்பித்தார்.

    இதுகுறித்து ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டீன் தேரணி ராஜன் கூறியதாவது:-

    ஆசிரியர் ராஜேசுக்கு 6 முறை இதயத்துடிப்பு நின்றுவிட்டது. ஒருமணிநேரத்தில் 5 முறை இதயத்துடிப்பு இல்லாமல் போனது. பின்னர் அதனை மருத்துவர் கள் சீராக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். அதன்பிறகு ஒரு முறை இதயத்துடிப்பு நின்று விட்டது.

    ஆனாலும் மருத்துவர்கள் தொடர்ந்து போராடினார்கள். அதிகபட்ச மருத்துவ முயற்சி எடுத்தனர். இதயத் துடிப்பு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் நின்றுவிட்டால் மரணம் ஏற்பட்டுவிடும். ஆனால் இறுதிக்கட்டம் வரை மருத்துவர்கள் அவரது உயிரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

    அவரது இதயத்துடிப்பு படிப்படியாக சீராகி முன்னேற்றம் ஏற்பட்டது மருத்துவத்துறையில் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது போன்று நிகழ்வது அரிதாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர்.

    சென்னை:

    சென்னை கொளத்தூரில் வசித்து வருபவர் மாரிமுத்து. இவரது மனைவி மாலா. இவர்களுக்கு 5 குழந்தைகள். மாரிமுத்துவின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் பஞ்சந்திருத்தி இருளர் குடியிருப்பு ஆகும்.

    மாரிமுத்து தனது மூத்த மகன் முத்துக்குமரன்(13) என்பவனை திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு மற்ற 4 குழந்தைகளுடன் சென்னை யில் வசித்து வந்தார். கடந்த 27-ந்தேதி முத்துக்குமரன், தனது உறவினரின் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 12 வயது நண்பனுடன் வெளியில் சென்றார்.

    திருப்பாச்சூர் அருகே திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை கடந்த போது திருத்தணி நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு கடந்த 30-ந்தேதி முத்துக்குமரன் மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த முத்துக்குமரனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க பெற்றோர் முன் வந்தனர். அதன்படி சிறுவனின் உடல் உறுப்புகள் மற்ற நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டன.

    மேலும் விபத்து தொடர்பாக திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சென்னையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நலவாழ்வு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
    • ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும். இதற்காக நகர் முழுவதும் தேவையான வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன

    சென்னை மீஞ்சூரில் கடும் வெயிலில் கட்டட வேலையில் ஈடுபட்டிருந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி சச்சின் (25), 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

    சென்னையில் கடுமையான வெப்பம் தாக்குவதால் வெப்பத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக நகரில் உள்ள 140 நகர்ப்புற சுகாதார நிலையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

    • நோயாளிகளை சேர்க்கும் பிரிவில் முறைகேடு நடந்துள்ளது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் தினமும் 10 ஆயிரத்துக்கும் மேல் புறநோயாளிகளும் 5 ஆயிரம் உள் நோயாளிகளும் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சிகிச்சை பெறுவதற்காக வருகிறார்கள்.

    சிக்கலான தீராத நோய் பிரச்சனைகளுக்கு அனைத்தும் மருத்துவ பரிசோதனையும், சிகிச்சையும் சிறப்பாக கிடைப்பதால் அறை எடுத்து தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். பிற மாநில நோயாளிகளுக்கு கட்டணத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்ஸ்சூரன்ஸ் திட்டம் அவர்களுக்கு வழங்குவதில் சிக்கல் இருப்பதால் குறைந்த கட்டணத்தில் சிகிச்சை பெறும் நிலை உள்ளது. இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளை சேர்க்கும் பிரிவில் முறைகேடு நடந்துள்ளது. பல வருடங்களாக ஆவண கிளார்க்காக பணியாற்றி வரும் பெருங்குளத்தை சேர்ந்த குபேரன்(50), ஆவடியை சேர்ந்த கலைமகன் (42) ஆகிய இருவரும் சேர்ந்து ஆஸ்பத்திரி பதிவேட்டில் போலி கணக்கு எழுதி பணம் கையாடல் செய்திருப்பது தெரியவந்தது. கடந்த மே மாதம் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சை முடித்து வீட்டிற்கு போகும் முன்பு அட்மிஷன் கவுண்டரில் பணம் செலுத்தி உள்ளனர். அந்த பணத்தை இருவரும் கையாடல் செய்து விட்டு போலி ஆவணங்கள் தயாரித்து வைத்துள்ளனர்.

    மேலும் இருவரும் சேர்ந்து ரூ.20 ஆயிரத்துக்கும் மேல் பணத்தை கையாடல் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து டீன் தேரணிராஜன் ஆஸ்பத்திரி புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்தி குபேரன், கலைமகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    அரசு ஆஸ்பத்திரியில் நிர்வாக அலுவலகத்தில் பணம் கையாடல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் புறநோயாளிகள் அட்மிஷன் விவரங்கள் முழுவதும் ஆய்வு செய்யப்படுகின்றன.

    வெளி மாநிலத்தவர்கள் எத்தனை பேர் சிகிச்சை பெற்றர்கள். அவர்களிடம் பெறப்பட்ட பணத்தை ஆஸ்பத்திரி கணக்கில் செலுத்தாமல் மூடி மறைத்தது எப்படி? இதற்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புறநோயாளிகள் பிரிவை மேம்படுத்துவதற்காக சுகாதாரத்துறை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது.
    • புறநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    சென்னை:

    ஆசியாவிலேயே மிகப்பெரிய அரசு ஆஸ்பத்திரியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி திகழ்ந்து வருகிறது. அதிநவீன சிகிச்சைகளுக்காக தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நோயாளிகள் ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே ஆஸ்பத்திரியை தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகராக மேம்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை பல்வேறு பணிகளை செய்து வருகிறது.

    அந்தவகையில், ஆஸ்பத்திரியில் டவர்-3 தரைதளத்தில் செயல்படும் புறநோயாளிகள் பிரிவை சர்வதேச அளவிற்கு மேம்படுத்துவதற்காக சுகாதாரத்துறை ரூ.1 கோடியே 85 லட்சத்திற்கு தனியார் நிறுவனங்களிடம் டெண்டர் கோரியுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் பொதுப்பணித்துறை மேற்பார்வையில் நடைபெறும். புறநோயாளிகள் பிரிவுக்கு சிகிச்சைக்காக தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் ஏழை நோயாளிகளுக்கு தனியார் ஆஸ்பத்திரிக்கு நிகரான அதிநவீன வசதிகளுடன் சிகிச்சை அளிக்கும் விதமாக புறநோயாளிகள் பிரிவை சர்வதேச அளவிற்கு மேம்படுத்தும் பணியில் சுகாதாரத்துறை இறங்கியுள்ளது. இந்த பணியின் மூலம் புறநோயாளிகள் பிரிவில் குளிர்சாத வசதி, புதிய இருக்கைகள், நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் நோயாளிகள் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

    இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதால் புறநோயாளிகள் பிரிவில் செயல்பட்டுவரும் பொது மருத்துவம், பொது அறுவை புறநோயாளிகள் பிரிவு, எலும்புகளுக்கான புறநோயாளிகள் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் அடுத்த வாரம் முதல் ஆஸ்பத்திரியில் உள்ள வேறு இடத்திற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட இருக்கிறது. கட்டுமான பணிகள் முடிந்த பின்னர் புறநோயாளிகள் பிரிவு வருகிற ஏப்ரல் மாதம் நோயாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு பொது ஆஸ்பத்திரிகளில், உலகத்தரம் வாய்ந்த மருத்துவ வசதிகளை கொண்ட ஆஸ்பத்திரியாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரி இருந்து வருகிறது. இங்கு பிரபல மருத்துவ நிபுணர்கள், நர்சுகள் பணியாற்றி வருகின்றனர்.

    கடந்த ஆண்டு தமிழகத்தில் கொரோனா முதல் அலை தொடங்கிய போது ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த டாக்டர்கள் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு நட்சத்திர ஒட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

    அவர்கள் கொரோனா சிகிச்சை பணியில் ஈடுபட்டதால் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த ஏற்பாட்டை செய்திருந்தது.

    கொரோனா சிகிச்சை பணியில் இருந்த பெண் டாக்டர்களும் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு தங்கியிருந்த டாக்டர் வெற்றிச்செல்வன் (வயது 35) என்பவர் பெண் டாக்டர் ஒருவர் தங்கியிருந்த அறைக்கு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அதேபோன்று மற்றொரு டாக்டர் மோகன்ராஜ் (28), வேறொரு பெண் டாக்டரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் டாக்டர்கள் இருவரும் டீன்னிடம் புகார் செய்துள்ளனர். இந்தப்புகார் குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது குற்றம்சாட்டப்பட்ட டாக்டர்கள் இருவரும் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து பெண் டாக்டர்கள் இருவரும் அளித்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர்கள் வெற்றிச்செல்வன், மோகன்ராஜ் ஆகியோரை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

    தமிழகத்தின் பிரபல அரசு ஆஸ்பத்திரியான ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியின் டாக்டர்கள் 2 பேர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். #DPandian #RajivGandhiHospital
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீர் பிரச்சினை காரணமாக நேற்று இரவு 9 மணி அளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே 2 முறை இதே பிரச்சினைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மீண்டும் இதே பிரச்சினைக்காக நேற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தா.பாண்டியனின் உடல் நிலை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். #DPandian #RajivGandhiHospital
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனுக்கு இன்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடனடியாக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #DPandianHospitalised
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன். முன்னாள் எம்.பி.யும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் முன்னாள் செயலாளருமான இவர், இன்று சென்னையில் இருந்தபோது திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பின்னர் தேவையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதேபோல் கடந்த ஆண்டும் தா.பாண்டியனுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டு, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.



    நேற்று தி.மு.க  தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த தா.பாண்டியன், கருணாநிதி விரைவில் நலம் பெறுவார்  என்றும் தமிழ் உள்ளவரை அவர் வாழ்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. #DPandianHospitalised
    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது.
    சென்னை:

    சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று உலக செவிலியர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    ‘மருத்துவத் துறையில் செவிலியர்கள் பெரும் பங்கு வகித்து வருகின்றனர். மருத்துவர்களுக்கும், நோயாளிகளுக்கும் செவிலியர்கள் பாலமாக விளங்குகின்றனர். அரசு மருத்துவமனைகளில் சேவை மனப்பான்மையோடு செவிலியர்கள் நோயாளிகளைப் பராமரித்து வருகிறதை நான் பாராட்டுகிறேன். மருத்துவமனையின் இதயத் துடிப்பே செவிலியர்கள் தான்’, என்றார்.

    நிகழ்ச்சியின்போது செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர் தின விழா உறுதிமொழி எடுத்தனர். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் ஜெயந்தி ‘கேக்’ வெட்டி செவிலியர்கள் அனைவருக்கும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் நாராயணசாமி, மருத்துவ நிலைய அதிகார் டாக்டர் இளங்கோ, டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
        
    ×