என் மலர்
நீங்கள் தேடியது "Molestation"
- போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து உள்ளது.
- சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் தொந்தரவு , கற்பழிப்பு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எடுக்கப்பட்ட போலீசாரின் புள்ளிவிவரப்படி இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பாலியல் தொடர்பான வழக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்
சென்ற ஆண்டு இந்த 4 மாதங்களில் கற்பழிப்பு தொடர்பாக 137 வழக்கு பதிவானது. இந்த ஆண்டு இது 148 ஆக உயர்ந்து இருக்கிறது.
சில்மிஷம் தொடர்பாக பதிவான வழக்குகள் 307-ல் இருந்து 407 ஆகவும், செக்ஸ் சித்ரவதை தொடர்பான வழக்கு 13-ல் இருந்து 20 ஆகவும், பதிவாகி உள்ளது.
போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து உள்ளது.
இது 879-ல் இருந்து 1,060 ஆக அதிகரித்து இருக்கிறது.
பெண்கள் மத்தியில் போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக போலீஸ் டி.ஜ.ஜி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
முன்பு இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக புகார் கொடுக்க பெண்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்காக காவல் உதவி என்ற மொபைல் ஆப் தொடங்கபட்டு உள்ளது.மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதறகாக ஏ.டி.ஜி.பி.வன்னியபெருமாள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இதுவரை 466 விழிப்புணர்வு பேரணி, மற்றும் 42,359 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் நடத்தப்பட்டு உள்ளன. போலீசார் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் பெண்கள் தங்களுக்கு, இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து துணிந்து போலீசில் புகார் செய்து வருகிறார்கள். இதனால் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம், குண்டர் சட்டம் போன்ற குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டு வருகிறது.
723 போக்சோ வழக்குகளில் 86 பேருக்கு தண்ட ணை கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
கடந்த மே 1-ந்தேதி வரை பெண்கள் உதவி எண் (181) மூலம் 11,778 அழைப்புகளும், குழந்தைகள் உதவிஎண் (1998) மூலம் 39,758 அழைப்புகளும்.காவலன் ஆப் மூலம் 15,246 புகார்களும் வந்துள்ளது. இந்த அழைப்புகளுக்கு எல்லாம் போலீசார் பதில் அளித்து வருகிறார்கள்.
இந்த பணியில் 800 பெண் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருமணம் செய்வதாக ஆசை வார்த்வாதை கூறி மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது.
- பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.
மதுரை:
மதுரை மாவட்டம் திருமோகூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மதுரையில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியை திருமோகூருக்கு அழைத்து வந்தான். அங்கு அவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்வாதை கூறி மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது. இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.
பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதன் ஒரு பகுதியாக பிளஸ்-2 மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அந்த சிறுமியை 17 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருமோகூர் சிறுவனை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.
- என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டினார்.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-
நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.
இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.
இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.
இது சம்மந்தமாக கடந்த 08.04.2022 காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.
இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும்,அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.
எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டுமிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- சித்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி.
இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 42 வயது தொழிலாளி ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.
சிறுமி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
- ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பதி:
ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களின் மகன்கள் ஈடுபட்டதாக தெலுங்கானா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் எதிர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
ஐதராபாத், பகாடி ஷரிப், ஷகினா நகர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. சிறுமியின் தாய் மாமா வீடு சுல்தான் ஷகி பகுதியில் உள்ளது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தனது தாய் மாமா வீட்டிற்கு சென்றார்.
இரவு 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். ஷெரிப் காமன் என்ற இடத்தில் வந்த போது, காரில் வந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு சிறுமியிடம் இரவு நேரத்தில் தனியாக எங்கே செல்கிறாய் என்று விசாரித்தார்.
அப்போது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். சிறுமியை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கார் டிரைவர் தெரிவித்தார்.
இதனை நம்பிய சிறுமி காரில் ஏறி உட்கார்ந்தார். அப்போது கார் டிரைவர் தனது நண்பரான முகமத் ருக்தே அஹமதிற்கு போன் செய்து வரும் வழியில் காரில் ஏறிக் கொள்ளும்படி தெரிவித்தார். அவரது நண்பரும் வழியில் காரில் ஏறிக்கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். பின்னர் கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.
நள்ளிரவு 12 மணிவரை சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் சுல்தான் ஷகி அருகே சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதில் கார் டிரைவர் ஷேக் கலீம் ஹாலி மற்றும் அவரது நண்பர் முஹமத் ருக்தே அஹமத் இருவரும் சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த சிறுமி கற்பழிப்பு சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.