search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Molestation"

    • கடந்த 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் சந்தீப் லமிச்சனே இடம் பெற்றிருந்தார்.
    • காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது.

    பாகிஸ்தான் மற்றும் இலங்கை நடத்திய ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடியவர் சந்தீப் லமிச்சனே. இவர் கடந்த 2022-ம் ஆண்டு காத்மண்டுவில் உள்ள ஹோட்டலில் 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகார் கூறப்பட்டபோது சந்தீப் லமிச்சனே வெஸ்ட் இண்டீஸில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார். தன் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்தார்.

    பாலியல் புகார் கூறப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். எனினும் நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வந்தார்.

    இந்த நிலையில் தான் அவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டது. மேலும், வரும் ஜனவரி மாதம் அவருக்கான தண்டனை விவரங்கள் குறித்து அறிவிக்கபட உள்ளது.

    ஆசிய கோப்பை தொடரில் நேபாள் அணியில் விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. நேபாள் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சந்தீப் இதுவரையில் 51 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 112 விக்கெட்டுகளையும், 52 டி20 போட்டிகளில் விளையாடி 98 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

    கடந்த 2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு இவர் இடம் பெற்றார். 2018-ம் ஆண்டில் 3 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகளும், 2019-ம் ஆண்டுகளில் 6 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளும் கைப்பற்றினார். அதன் பிறகு ஐபிஎல் தொடரில் இடம் பெறவில்லை. 

    • போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து உள்ளது.
    • சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் தொந்தரவு , கற்பழிப்பு, கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடர்பாக பதிவாகும் வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை எடுக்கப்பட்ட போலீசாரின் புள்ளிவிவரப்படி இந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பாலியல் தொடர்பான வழக்குகள் கூடுதலாக பதிவாகி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்

    சென்ற ஆண்டு இந்த 4 மாதங்களில் கற்பழிப்பு தொடர்பாக 137 வழக்கு பதிவானது. இந்த ஆண்டு இது 148 ஆக உயர்ந்து இருக்கிறது.

    சில்மிஷம் தொடர்பாக பதிவான வழக்குகள் 307-ல் இருந்து 407 ஆகவும், செக்ஸ் சித்ரவதை தொடர்பான வழக்கு 13-ல் இருந்து 20 ஆகவும், பதிவாகி உள்ளது.

    போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயர்ந்து உள்ளது.

    இது 879-ல் இருந்து 1,060 ஆக அதிகரித்து இருக்கிறது.

    பெண்கள் மத்தியில் போலீசார் ஏற்படுத்திய விழிப்புணர்வு காரணமாக இது போன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக போலீஸ் டி.ஜ.ஜி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    முன்பு இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக புகார் கொடுக்க பெண்கள் தயங்கினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்காக காவல் உதவி என்ற மொபைல் ஆப் தொடங்கபட்டு உள்ளது.மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். இதறகாக ஏ.டி.ஜி.பி.வன்னியபெருமாள் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.

    இதுவரை 466 விழிப்புணர்வு பேரணி, மற்றும் 42,359 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது இடங்களில் நடத்தப்பட்டு உள்ளன. போலீசார் மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளதால் பெண்கள் தங்களுக்கு, இழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து துணிந்து போலீசில் புகார் செய்து வருகிறார்கள். இதனால் குற்றவாளிகள் மீது போக்சோ சட்டம், குண்டர் சட்டம் போன்ற குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களுக்கு தண்டணை வழங்கப்பட்டு வருகிறது.

    723 போக்சோ வழக்குகளில் 86 பேருக்கு தண்ட ணை கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    கடந்த மே 1-ந்தேதி வரை பெண்கள் உதவி எண் (181) மூலம் 11,778 அழைப்புகளும், குழந்தைகள் உதவிஎண் (1998) மூலம் 39,758 அழைப்புகளும்.காவலன் ஆப் மூலம் 15,246 புகார்களும் வந்துள்ளது. இந்த அழைப்புகளுக்கு எல்லாம் போலீசார் பதில் அளித்து வருகிறார்கள்.

    இந்த பணியில் 800 பெண் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

    சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மூலம் 6 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    • திருமணம் செய்வதாக ஆசை வார்த்வாதை கூறி மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது.
    • பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் திருமோகூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், மதுரையில் 12-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை காதலித்து வந்தார். இந்த நிலையில் சிறுவன் அந்த மாணவியை திருமோகூருக்கு அழைத்து வந்தான். அங்கு அவன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்வாதை கூறி மாணவியை கற்பழித்ததாக தெரிகிறது. இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார்.

    பாதிக்கப்பட்ட மாணவி இதுதொடர்பாக தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதன் ஒரு பகுதியாக பிளஸ்-2 மாணவி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அந்த சிறுமியை 17 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, திருமோகூர் சிறுவனை தல்லாகுளம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்து, அவரிடம் இது தொடர்பாக மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார்.
    • என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மாமனார் மிரட்டினார்.

    கடலூர்:

    கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன். அவரது மனைவி ஜெயந்தி (வயது35). இவர் தனது 3 குழந்தைகளுடன் சென்று கலெக்டரிடம் மனு வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது:-

    நான் மேற்கண்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் கார்த்திகேயன் 6 மாதங்களுக்கு முன்பாக புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். அது முதல் என் கணவர் வீட்டில் எனது 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறேன்.

    இந்த நிலையில் எனது மாமனார் சுந்தரமூர்த்தி எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். என்னோடு இணக்கமாக இருந்தால் உன்னை ராணிபோல் வாழ வைப்பேன். இல்லை எனில் உன்னையும், உன் குழந்தையையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார்.

    இரவு நேரங்களில் போன் செய்து மிகவும் ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டினார். இதனை நான் என்னுடைய செல்போனில் பதிவு செய்து வைத்து உள்ளேன்.

    இது சம்மந்தமாக கடந்த 08.04.2022 காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் அவரது ஆசைக்கு இணங்கவில்லை என்று கூறி என் தலையினை பிடித்து இரும்பு கேட்டில் இடித்ததால் என் தலையில் இருந்து ரத்தம் கொட்டியது. நான் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அன்று நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மேலும் 19.05.2022 அன்று காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தேன்.அவர்கள் பதிவு செய்து பண்ருட்டி மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை.

    இப்போது எங்கள் ஊரின் முன்னாள் கவுன்சிலர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எனது மாமனாருடன் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். கந்துவட்டிக்காரர் என் மாமனாருக்கு ரூ.5 லட்சம் பணம் கொடுத்ததாகவும்,அந்த பணத்தை நான் கொடுக்கவில்லை என்றால் ஊரில் இருக்க முடியாது என மிரட்டுகின்றனர்.

    எனவே, எனக்கும் எனது குழந்தைகளின் உயிருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பாலியல் தொல்லை, பணம் கேட்டுமிரட்டல் போன்ற சம்பவங்களில் இருந்து என்னையும், எனது குழந்தைகளையும் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சித்தூர் அருகே சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் அடுத்த குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 6 வயது சிறுமி.

    இவர் அப்பகுதியில் விளையாடிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 42 வயது தொழிலாளி ஒருவர் சிறுமியிடம் நைசாக பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார்.

    சிறுமி வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தனர். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்தவரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதுகுறித்து குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தொழிலாளியை மீட்டு அழைத்துச்சென்று குப்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    கொளத்தூர் அருகே திருட வந்த இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
    கொளத்தூர்:

    சென்னை கொளத்தூரை அடுத்த வெற்றி நகர் சிவலிங்கம் தெருவை சேர்ந்தவர் மகேஷ்பாபு. பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (30). வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் இருந்த மகேஷ் பாபு தனது உறவினரான அந்தோணிராஜ் என்பவருடன் வீட்டு வாசலில் படுத்து தூங்கினார். கதவு திறந்த நிலையில் சசிகலாவை தனது பிள்ளைகளுடன் வீட்டுக்குள் தூங்கினார். நேற்று அதிகாலை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த சசிகலாவிடம் யாரோ மர்ம ஆசாமி சில்மிஷம் செய்ததாக தெரிகிறது. உடனே சசிகலா கண்விழித்து பார்த்ததில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. சசிகலா சத்தம் போட்டதால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார். மேலும் வீட்டில் இருந்த 2 செல்போன் திருட்டு போனதும் தெரியவந்தது.

    விசாரணையில் திருடவந்த வாலிபர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.இது குறித்த புகாரின் பேரில் திரு.வி.க. நகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    கீழ்ப்பாக்கத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
    சென்னை:

    கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்த 6 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டது தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசில் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த நாகமூர்த்தி (56) கைது செய்யப்பட்டார்.

    கடந்த 2018-ம் ஆண்டு போடப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் நாகமூர்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 1000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

    இந்த வழக்கில் சிறப்பாக புலனாய்வு செய்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தந்த கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரை கமிஷனர் பாராட்டினார்.

    இதற்கிடையே கீழ்ப்பாக்கம் பகுதியில் மாயமான சிறுமியை மீட்டு அவரை அழைத்துச் சென்ற திலீப்குமார் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் திலீப்குமார் என்பவர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகள் கூறி வேலுருக்கு அழைத்துச் சென்று, பாலியல் உறவு கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தீலிப்குமார் கைது செய்யப்பட்டார்.
    திருவட்டார் அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குழித்துறை:

    திருவட்டாரை அடுத்த வியன்னூர், கீழ சாய்காடு பகுதியை சேர்ந்தவர் விஜின் ( வயது 31).

    விஜின் வீடு அருகே ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். 15 வயதான அவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் சிறுமி மட்டும் தனியாக இருந்தார். அப்போது சிறுமியின் வீட்டுக்கு சென்ற விஜின், அவரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அடிக்கடி அவர் இதுபோன்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து சிறுமி, பெற்றோரிடம் கூறி அழுதார். அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் விஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    மார்த்தாண்டம் போலீசார் தனிப்படை அமைத்து விஜினை தேடி வந்தனர். இதில் நேற்று அவர் சொந்த ஊரான கீழ சாக்கோடு வருவது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு மறைந்திருந்து கண்காணித்தனர். இரவில் விஜின், வீட்டிற்கு வந்த போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
    மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளாவின் இடுக்கிக்கு வந்த 15 வயது சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் இடுக்கியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்தனர்.

    இந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று அந்த பகுதியை சேர்ந்த நண்பருடன் அருகில் உள்ள சந்தன பாறைக்கு சென்றார்.

    பூம்பாறை பகுதியில் இருவரும் சென்ற போது அங்கு வாலிபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் சிறுமியையும், அவரது நண்பரையும் வழிமறித்தனர்.சிறுமியின் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தூக்கி சென்றனர்.அங்கு சிறுமியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதற்கிடையே சிறுமியின் நண்பர் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று உதவி கோரினார். அவர்கள் விரைந்து வந்ததும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் தப்பியோடிவிட்டனர்.

    இது பற்றி சிறுமியின் குடும்பத்தினர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலந்துர் அருகே சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெண் போலீசின் கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆலந்தூரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி போலீசாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சீட்டு பணம் தொடர்பாக தாயுடன் வீட்டுக்கு வந்த 12 வயது சிறுவனை கார்த்திக் தனியாக அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். 

    இதுகுறித்து பரங்கிமலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.
    மாங்காட்டில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 8-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    அசாம் மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் மாங்காடு பட்டூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் கூலி வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வயதில் மகள் உள்ளார்.

    தினசரி பெற்றோர் வேலைக்கு சென்றவுடன் அதே பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதான பள்ளி மாணவன், சிறுமியுடன் சேர்ந்து விளையாடுவது வழக்கம்.

    இந்த நிலையில் விளையாடுவது போல நடித்து பள்ளி மாணவன் அடிக்கடி சிறுமியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளான். இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் பூந்தமல்லி அனைத்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பள்ளி மாணவனை கைது செய்தனர்.
    செங்குன்றத்தில் தேர்வு எழுத வந்த பிளஸ்-1 மாணவியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    செங்குன்றம், காமராஜர் தெருவை சேர்ந்த தாய்-தந்தையை இழந்த மாணவி ஒருவர் திருநின்றவூரில் உள்ள சேவாலயா இல்லத்தில் தங்கி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த 12 -ந் தேதி செங்குன்றத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத சென்ற மாணவி திடீரென மாயமானார்.

    இது குறித்து சேவாலயா இல்ல நிர்வாகி செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில் செங்குன்றம் பகுதியை சேர்ந்த துரைமுருகன் என்பவர் தேர்வு எழுத வந்த மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

    இந்தநிலையில் செங்குன்றம் பஸ் நிலையம் அருகே நின்ற மாணவியை போலீசார் மீட்டனர்.

    இதுகுறித்து அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைமுருகனை கைது செய்தனர். அவர் மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, தேனி, ஆகிய இடங்களில் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்திருப்பது தெரிந்தது.

    இதையடுத்து துரை முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
    ×