search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 arrest"

    • அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன்,மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை சப்-இன்ஸ்பெக்டர் வாசுதேவன், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராஜதுரை ஆகியோர் அடங்கிய குழுவினர் அம்பை மன்னார்கோவில் விலக்கு அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த ஒரு லோடு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் அவர்கள் மானுரை சேர்ந்த இசக்கிமுத்து (39), சுத்தமல்லியை சேர்ந்த முத்துராமன் மற்றும் அவரது கூட்டாளிகள் சென்னையில் இருந்து 21 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் கைது செய்து வேன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த இசக்கி பாண்டி, நெல்லை டவுனை சேர்ந்த மடத்தான், சிவா ஆகியேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
    • ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    திருப்பதி:

    ஐதராபாத்தில் கடந்த வாரம் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை காரில் கடத்திச் சென்று 5 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களின் மகன்கள் ஈடுபட்டதாக தெலுங்கானா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சி.பி.ஐ. விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் எதிர் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் ஐதராபாத்தில் மீண்டும் ஒரு சிறுமி காரில் கடத்தி சென்று பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

    ஐதராபாத், பகாடி ஷரிப், ஷகினா நகர் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. சிறுமியின் தாய் மாமா வீடு சுல்தான் ஷகி பகுதியில் உள்ளது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை 6 மணிக்கு தனது தாய் மாமா வீட்டிற்கு சென்றார்.

    இரவு 8 மணி அளவில் மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார். ஷெரிப் காமன் என்ற இடத்தில் வந்த போது, காரில் வந்த டிரைவர் காரை நிறுத்திவிட்டு சிறுமியிடம் இரவு நேரத்தில் தனியாக எங்கே செல்கிறாய் என்று விசாரித்தார்.

    அப்போது சிறுமி தன்னுடைய வீட்டிற்கு செல்வதாக தெரிவித்தார். சிறுமியை காரில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவதாக கார் டிரைவர் தெரிவித்தார்.

    இதனை நம்பிய சிறுமி காரில் ஏறி உட்கார்ந்தார். அப்போது கார் டிரைவர் தனது நண்பரான முகமத் ருக்தே அஹமதிற்கு போன் செய்து வரும் வழியில் காரில் ஏறிக் கொள்ளும்படி தெரிவித்தார். அவரது நண்பரும் வழியில் காரில் ஏறிக்கொண்டார். இதையடுத்து கார் டிரைவர் தனது வீட்டுக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர். பின்னர் கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர் இருவரும் சேர்ந்து சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    நள்ளிரவு 12 மணிவரை சிறுமி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர்.சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் அதிகாலை 5 மணி அளவில் சுல்தான் ஷகி அருகே சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு தப்பிச் சென்றனர். அந்த வழியாக சென்றவர்கள் சிறுமி மயக்கமடைந்து கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் கார் டிரைவர் ஷேக் கலீம் ஹாலி மற்றும் அவரது நண்பர் முஹமத் ருக்தே அஹமத் இருவரும் சிறுமியை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இதையடுத்து போலீசார் 2 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஐதராபாத்தில் அடுத்தடுத்து நடந்த சிறுமி கற்பழிப்பு சம்பவங்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேற்கு வங்காளத்தில் இருந்து கேரளாவின் இடுக்கிக்கு வந்த 15 வயது சிறுமியை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்த சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஒரு குடும்பத்தினர் இடுக்கியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு வந்தனர்.

    இந்த குடும்பத்தை சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று அந்த பகுதியை சேர்ந்த நண்பருடன் அருகில் உள்ள சந்தன பாறைக்கு சென்றார்.

    பூம்பாறை பகுதியில் இருவரும் சென்ற போது அங்கு வாலிபர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.அவர்கள் சிறுமியையும், அவரது நண்பரையும் வழிமறித்தனர்.சிறுமியின் நண்பரை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர்.

    பின்னர் சிறுமியை அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு தூக்கி சென்றனர்.அங்கு சிறுமியை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

    இதற்கிடையே சிறுமியின் நண்பர் அருகில் உள்ள கிராமத்துக்கு சென்று உதவி கோரினார். அவர்கள் விரைந்து வந்ததும், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் தப்பியோடிவிட்டனர்.

    இது பற்றி சிறுமியின் குடும்பத்தினர், போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சிறுமியை பலாத்காரம் செய்ததாக அதே பகுதியை சேர்ந்த சிறுவன் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மதுரையில் விபசாரத்தில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரையில் விபசாரம் தொடர் கதையாகி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று மாநகர போலீஸ் கமி‌ஷனர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தர விட்டார்.

    மாநகர தலைமையக துணை கமி‌ஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில், விபசார தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிளவர்ஷீலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகரம் முழுவதும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த அப்துல்கலாம் ஆரிப்பை (23) செல்போனில் பெண் தொடர்பு கொண்டார். அவர், “எங்களிடம் விபசார அழகிகள் உள்ளனர். வீட்டில் வைத்து தொழில் செய்து வருகிறோம். போலீஸ் பிரச்சினை இல்லை” என்று ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

    பயந்துபோன அப்துல்கலாம் பதில் சொல்லாமல் செல்போன் அழைப்பை துண்டித்து விட்டார். இதுகுறித்து அவர் விபசார தடுப்பு பிரிவு போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதன் அடிப்படையில் அப்துல்கலாம் மூலமாகவே குற்றவாளிகளை கைது செய்வது என்று போலீசார் திட்டமிட்டனர். போலீசாரின் திட்டப்படி அப்துல்கலாம் மீண்டும் அந்த செல்போன் நம்பரை தொடர்பு கொண்டார். அவர், “நான் பணம் கொடுக்க தயார், எங்கு வரவேண்டும்?” என்று கேட்டுள்ளார். அந்த பெண் கண்ணனேந்தல் பகுதிக்கு வரச் சொல்லியதன் பேரில் அங்கு சென்றார்.

    அவரை ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் பாரதிநகர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு 2 பெண்கள் இருந்தனர். அப்துல் கலாமிடம் பணம் வாங்கிக் கொண்ட கும்பல், அவரை பெண்ணுடன் தனி அறைக்கு அனுப்பி வைத்தது. அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த போலீசார் 3 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் நாராயணபுரம் கோகலே தெருவைச் சேர்ந்த பாண்டிகுமார் (36), புதூர் மகாலட்சுமி நகர் தேவராஜ் மனைவி பிரசன்னாதேவி (33) என்பது தெரியவந்தது.

    இதையடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண் மீட்கப்பட்டார். போலீசார் இருவரையும் திருப்பாலை போலீசில் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த மேல் புதுப்பேட்டை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (32), பாணாவரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயபால் (37) என்பதும், வாலாஜா அருகே இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
    முத்தியால்பேட்டையில் கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன்(வயது53). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கனகவள்ளி என்ற பெண்ணை வளர்ப்பு மகளாக வளர்த்து வந்தனர். கனகவள்ளிக்கு திருமணமாகி விட்டது.

    இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த ஜனா என்ற ஜனார்த்தன் மதுபோதையில் முருகன் வீட்டுக்கு வந்து தகராறு செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

    இதனை அவ்போது முருகன் கண்டித்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று கனகவள்ளி வெளியே சென்ற போது ஜனா கேலி-கிண்டல் செய்து செய்தார். இதனை முருகன் தட்டிக்கேட்டார்.

    இதில் கோபத்தில் இருந்து வந்த ஜனா அவரது நண்பரான சின்னையாபுரத்தை சேர்ந்த அந்தோணி ஆகிய இருவரும் நேற்று இரவு முருகனின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து முருகனையும், அவரது மனைவியையும் ஆபாசமாக திட்டி கையால் சரமாரியாக தாக்கினர்.

    மேலும் கொலை செய்து விடுவதாக கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.

    பின்னர் இதுகுறித்து முருகன் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்கு பதிவு செய்து கணவன்-மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த ஜனா, அந்தோணி ஆகியோரை கைது செய்தார். ஜனா மீது ஏற்கனவே வெடிகுண்டு, அடிதடி, வழிபறி உள்ளிட்ட வழக்குகள் இருப்பதும், அவர் ரடிவு என்பதும் குறிப்பிடத்தக்கது. 
    திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்க சென்றவரின் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் வசந்தன். இவர் திருவொற்றியூரில் உள்ள ரெயில்வே முன்பதிவு மையத்தின் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிக்கெட் எடுக்க சென்றார். பின்னர் திரும்பி வந்த போது மோட்டார் சைக்கிள் மாயமாகி இருந்தது. அதனை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து திருவொற்றியூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது திருவொற்றியூர் பூங்காவனபுரம் பகுதியை சேர்ந்த ஜெகன் மற்றும் காஜா மொய்தீன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இரணியலில் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    இரணியல்:

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிக அளவு நடைபெறுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தார்.

    அதன்படி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். கஞ்சா கும்பலையும் கைது செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம கணேசன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திங்கள்நகர் சந்தை, இரணியல் சந்திப்பு ஆகிய இடங்களில் ரோந்து வரும்போது அங்கு சந்தேகப் படும்படியாக 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர்.

    போலீசார் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறினார்கள். இதையடுத்து போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் நெய்யூர் பகுதியை சேர்ந்த அய்யப்பன் (வயது 29), ராஜேஷ் (26) என்பது தெரியவந்தது.

    போலீசார் அவர்களிடம் சோதனை செய்தபோது இருவரும் பையில் தலா 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து அய்யப்பன், ராஜேசை கைது செய்தனர்.

    மேலும் அவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது யார்? எந்தெந்த இடங்களில் விற்பனை செய்தனர். யார், யாருக்கெல்லாம் கஞ்சா சப்ளை செய்யப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராசிபுரத்தில் நடைபெற்ற குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #RasipuramNurse
    நாமக்கல்:

    பெண் செவிலியர் உதவியாளராக பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்ற ராசிபுரம் அமுதவள்ளி (50), தர்மபுரியை சேர்ந்த சதீஷ்குமாரிடம் குழந்தையை விற்பனை செய்வது தொடர்பாக பேசிய ‘வாட்ஸ்-அப் ஆடியோ’ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், பள்ளிபாளையம், சேலம், பரமத்திவேலூர், ராசிபுரம் பகுதிகளில் நர்சாக பணியாற்றிய அமுதவள்ளி 2012-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றதும், அதன்பிறகு வறுமையில் வாடும் குடும்ப பெண்களிடம் இருந்து குழந்தைகளை வாங்கி, குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளை பேரம் பேசி விற்ற நர்சு, கணவருடன் கைது செய்யப்பட்டார். 



    குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராசிபுரம் குழந்தை விற்பனை விவகாரத்தில் தொடர்புடைய குழந்தைகளை விற்பனை செய்தவரின் கணவர் மற்றும் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களது புகைப்படங்களை போலீசார் வெளியிட்டனர்.

    கொல்லிமலை வாழவந்திநாடு அரசு மருத்துவமனையில் பணியாற்றிய ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன் மற்றும் செவிலியர் பர்வின்னை போலீசார் கைது செய்துள்ளனர். #RasipuramNurse
    நர்சிங் கல்லூரி, சொசைட்டி அமைக்கப் போவதாக பொதுமக்களிடம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    குள்ளனம்பட்டி:

    மதுரை மேலூரை சேர்ந்தவர்கள் டேவிட் பீட்டர் (வயது47), பாக்கியலட்சுமி (36). இவர்கள் கொடைக்கானலில் நர்சிங் கல்லூரி அமைக்கப்போவதாக கூறி பரணிகுமார் என்பவரிடம் ரூ.6 லட்சம் வாங்கி உள்ளனர்.

    பரணி குமாரின் மனைவி மீனாகுமாரியை கல்லூரியின் முதல்வராக நியமிப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர். ஆனால் கல்லூரி கட்டாமல் மோசடி செய்துள்ளனர்.

    மேலும் சிலரிடமும் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளனர். இது குறித்து டி.எஸ்.பி. ஜஸ்டின் பிரபாகரன் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், ரெய்கானா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் அவர்கள் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டதால் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் பணம், சொகுசு கார், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சொசைட்டி அமைக்கப்போவதாக கூறி மேலும் பலரிடம் மோசடி செய்ததும் தெரிய வந்தது.

    இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #tamilnews
    மேட்டூர் அருகே சொத்து தகராறில் தந்தையை கொல்ல கூட்டாளிகளை ஏவிய மகனை போலீசார் கைது செய்தனர்.
    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக் கூடல் ஆண்டிக்கரையை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 52). இரும்பு கம்பி மொத்த வியாபாரி. இவரது மகன் அரவிந்த் (26).

    இவர் தனது தந்தை கலைவாணனிடம் சொத்து கேட்டு தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. அதற்கு அவர் சொத்தை எழுதி தர முடியாது என மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் தனது கூட்டாளிகளுடன் ஒரு காரில் நேற்று கலைவணனின் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரை தீர்த்துக்கட்ட கத்தி, வெடிகுண்டுகளுடன் காரில் இருந்து இறங்கினர். அந்த சமயத்தில் அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு வந்தனர். இதை பார்த்ததும் அரவிந்த், தனது கூட்டாளிகளுடன் காரில் தப்பி சென்று விட்டார்.

    இது குறித்து கலைவாணன் கருமலைக் கூடல் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காம்பவுண்ட் சுவர் அருகே கார் நிறுத்தப்பட்டிருந்தது.

    இந்த காரை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அவர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓடினர். இதில் 2 பேர் மட்டும் போலீசாரின் பிடியில் சிக்கினர். அவர்கள் அரவிந்தின் கூட்டாளிகளான முருகன் (39), கோவிந்தராஜ் (30) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து காருக்குள் இருந்து 3 வீச்சு அரிவாள்கள், 4 கத்தி, ஒரு குத்து கம்பி, 12 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர். இதனை பறிமுதல் செய்த போலீசார் அவர்களிடமிருந்து 7 மூட்டைகளில் போதை குட்கா பொருட்களும், அதை கடத்த பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அரவிந்த் மற்றும் அவரது கூட்டாளி தியாகு ஆகியோரை தேடி வருகிறார்கள். #tamilnews
    புதுவை மேட்டுப்பாளையத்தில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை மேட்டுப்பாளையம் சண்முகாபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் கட்டிட காண்டிராக்டர். இவரது மனைவி சாந்திமதி (வயது 45). இவர்களுக்கு பொன்னி, தாமரை ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இவர்களுடன் ரங்கநாதனின் தாயார் பார்வதி (70) என்பவரும் வசித்து வருகிறார்.

    பொன்னியின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு ஆபரேஷன் செய்யப்பட்டது.

    ஆஸ்பத்திரி செலவுக்காக பொன்னி தனது நகைகளை புதுவை தட்டாஞ்சாவடியில் உள்ள வங்கியில் அடகு வைத்து விட்டு ரூ.6 லட்சம் பெற்றார். பின்னர் பணத்தை ஒரு பையில் வைத்து கொண்டு தாயார் சாந்திமதியுடன் ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள். ஸ்கூட்டியின் பின்னால் சாந்திமதி இருந்தார். அப்போது யாரோ அவர் மீது அரிப்பு பொடியை தூவியதாக தெரிகிறது.

    இதனால் அவர் உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டது. வீட்டுக்கு சென்றதும் பணப்பையை கட்டிலில் வைத்து விட்டு சாந்திமதி ஒரு அறைக்கு சென்று விட்டார். கட்டிலில் ரங்கநாதனின் தாயார் பார்வதி மட்டும் இருந்தார். அந்த நேரத்தில் ஒரு வாலிபர் வீட்டுக்குள் புகுந்து தண்ணீர் கேட்பது போல் நடித்து கட்டிலில் இருந்த பணப்பையை தூக்கிக் கொண்டு வெளியே ஓடி வந்தார்.

    பின்னார் அவர் அங்கு நின்ற மற்றவர்களுடன் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.

    இந்த சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசில் சாந்திமதி புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், சப்- இன்ஸ்பெக்டர் இனியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் சூப்பிண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த தனிப்படை போலீசாரும், குற்றப்பிரிவு போலீசாரும் இணைந்து விசாரணை நடத்தினர். மேலும் பொன்னி வங்கியில் இருந்து பணத்தை கொண்டு வருவதை பார்த்து நோட்டமிட்டு அவரை பின் தொடர்ந்து வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையொட்டி அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் ஒரு வங்கியின் அருகே 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் 2 பேரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். போலீசார் தங்கள் பாணியில் விசாரித்த போது கட்டிட காண்டிராக்டர் ரங்கநாதன் வீட்டில் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக் கொண்டனர். விசாரணையில் அவர்கள் திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த அருண்பாண்டி (22), மூர்த்தி (48) என்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வீட்டில் சோதனை செய்த போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் ரொக்கப்பணம் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கும்பல் பெரும்பாலும் அரிப்பு பொடியை தூவி நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்து வந்தனர்.

    மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    ×