என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்10 Nov 2021 1:30 PM GMT (Updated: 10 Nov 2021 1:30 PM GMT)
வாலாஜா அருகே மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த மேல் புதுப்பேட்டை கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அதை மர்ம நபர்கள் திருடிச்சென்றுவிட்டனர். இதுகுறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் சதீஷ்குமார் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். இந்த நிலையில் நேற்று சப்- இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்தின் பேரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை போலீசார் மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் போளிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (32), பாணாவரம் அகதிகள் முகாமைச் சேர்ந்த ஜெயபால் (37) என்பதும், வாலாஜா அருகே இரண்டு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, இவர்களிடமிருந்து 3 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X