என் மலர்

    நீங்கள் தேடியது "Motorcycle theft"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.
    • வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் அண்ணாதுரை. கடந்த சனிக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ள வந்த அண்ணாதுரை தனது இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கின் பின்புறம் நிறுத்திவிட்டு பணிக்கு சென்றுள்ளார்.

    மாலை பணி முடிந்து வந்து பார்த்தபோது அவரது இரு சக்கர வாகனம் காணவில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி. காட்சிகளை பார்த்தபோது அதில் மதியம் 3மணியளவில் குல்லா அணிந்து வந்த நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு அண்ணாதுரையின் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது . இருசக்கர வாகனத்தின் பெட்டியில் 13 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் 2 ஏ.டி.எம். கார்டுகள் வைத்திருந்தார்.

    இது குறித்து காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி., காட்சி பதிவுகளை கொண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தி லேயே இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.
    • சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் எடையபட்டியை சேர்ந்தவர் கணபதி(வயது24), பாப்பம்பாடி சந்தைபேட்டை பகுதியை சேர்ந்தவர் ஹரிஹர சுதன்(19). இவர்கள் சம்பவத்தன்று தாரமங்கலம் அருகிலுள்ள அணைமேடு நீர் வீழ்ச்சியை சுற்றி பார்க்க மோட்டார்சைக்கிளில் வந்தனர்.

    இருவரும் சாலையோரம் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நீர் வீழ்ச்சியை பார்த்து விட்டு திரும்பி வந்த போது அவர்களது மோட்டார் சைக்கிள்களை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தனி தனியாக தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார்ட் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.
    • வாரசந்தை அருகே சாராயக்கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் புதுவை கடற்கரை சாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று லோகநாதன் கடற்கரை சாலையில் உள்ள துமாஸ் வீதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடற்கரை சாலையில் நடைபயிற்சிக்கு சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் லோகநாதன் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றி ருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து லோகநாதன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரைண நடத்தி வருகிறார்கள்.

    திருபுவனை சின்னபேட் பகுதியை சேர்ந்த ராஜ துரை(27). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் உறவினரின் மோட்டார் சைக்கிளை வாங்கி கொண்டு மதகடிப்பட்டு வாரச்சந்தைக்கு குடும்பத்துக்கு தேவையான பொருட்களை வாங்க சென்றார். வாரசந்தை அருகே சாராயக்கடை எதிரே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சந்தையில் காய்கறிகள் வாங்கினார்.

    பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் ராஜதுரை திடுக்கிட்டார். யாரோ மோட்டார் சைக்கிளை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து ராஜதுரை திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.
    • போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்களிடையே ஒருவிதமான அச்சம் ஏற்பட்டுள்ளது. சுமார் 20 நாட்களில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நடைபெற்று உள்ளது.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் திருடர்கள் தங்கள் கைவரிசை காட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்பட்டியை சேர்ந்த சூசை என்பவரது மகன் இயேசுராஜ் (வயது 52). இவர் நேற்று முன்தினம் இரவு பொல்லிக்காளிபாளையம் பகுதியில் வீட்டின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    இதுகுறித்து அவர் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அவரது வீட்டை விட்டு சற்று தள்ளி கணேஷ் என்பவரது வீட்டில் மர்ம நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டில் இருந்தவர்கள் சத்தம் போடவே அங்கிருந்து திருடர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

    தொடர்ந்து பொங்கலூர் சுற்றுவட்டார பகுதியில் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. எனவே அவினாசி பாளையம் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நெல்லை மாநகர பகுதியில் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.
    • புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    மோட்டார் சைக்கிள் திருட்டு

    பஸ் நிலையங்கள், ரெயில் நிலையம், தியேட்டர்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு போய் வந்தது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு ஒருவர் தனது மோட்டார் சைக்கிளில் உறவினரை வழி அனுப்ப வந்தார். இதற்காக மோட்டார் சைக்கிளை பஸ்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு சென்றார்.

    பின்னர் வந்து பார்த்த போது அது திருட்டு போய் இருந்தது. இதுதொடர்பாக அவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    சி.சி.டி.வி. காமிரா காட்சி

    இதற்கிடையே புதிய பஸ்நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சில சிறுவர்கள் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து நேற்று போலீசார் பஸ்நிலைய பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே சிறுவர்கள் மீண்டும் மோட்டார் சைக்கிள்களை திருடினர். உடனடியாக அவர்களை பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    5 மாணவர்கள் சிக்கினர்

    அதில் அவர்கள் பாளையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 5 மாணவர்கள் என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் மாநகர பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து திருடி சென்றது தெரியவந்தது. இதற்காக அவர்கள் போலியாக சாவிகளையும் தயார் செய்து வைத்திருந்தனர். அவர்களிடமிருந்து 8 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அய்யப்பன் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார்.
    • சி.சி.டி.வி. யில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் அய்யப்பன். இவர் ராஜபாளையம் சாலையில் உள்ள காங்கிரஸ் பொன்விழா மைதானத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்து வருகின்றார்.

    சம்பவத்தன்று சுமார் 50 வாகனங்களை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது அதில் ஒரு மோட்டார் சைக்கிளை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சங்கரன்கோவில் டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து பார்த்தபோது 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச்சென்றது தெரியவந்தது.அதனை வைத்து போலீசார் 2 வாலிபர்களையும் வலை வீசி தேடி வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தனது இருசக்கர வாகனம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

    விழுப்புரம்:

    திண்டிவனம் கசாமியான் தெரு பகுதியை சேர்ந்தவர் முபாரக் (வயது22). இவர் நேரு வீதி அருகே விவேகானந்தர் தெருவில் இறைச்சிக்கடை நடத்தி வருகிறார். நேற்று வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தை கடைக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் மாலை வந்து பார்த்த போது தனது இருசக்கர வாகனம்மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மர்ம நபர் ஒருவர் முபாரககின் இரு சக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சி.சி.டி.வி. காட்சி வெளியாகி உள்ளது.

    எப்பொழுதும் பரபர ப்பாக காணப்படும் இந்த சாலையில் மர்ம நபர் ஒருவர் சர்வ சாதாரணமாக இருசக்கர வாகனத்தை திருடி விட்டு சென்றது அந்தப் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து திண்டிவனம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். புகாரின் பேரில்சி.சி.டி.வி. காட்சி அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்குள் திண்டிவனம் சுற்றுப்புற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோய் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிஅடைந்து உள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வீட்டுமுன் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள் திருடு போனது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அம்மாபட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துபாரதி (வயது 32). இவர் மதுரை பைனான்ஸ் நிறுவனத்தில் கார் லோன் பிரிவில் வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று தனது வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். மறு நாள் காலையில் வந்து பார்த்தபோது அது திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.

    இது குறித்து உத்தமபாளையம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கரூர் லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39).
    • மகாதானபுரம் ரெயில்வே பிரிட்ஜ் அருகே சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    கரூர் ;

    கரூர் லாலாபேட்டையை அடுத்த பிள்ளபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மகாதானபுரம் ரெயில்வே பிரிட்ஜ் அருகே சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார்.

    அதிகாலையில் பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. அக்கம், பக்கத்தில் தேடியும் மோட்டார் சைக்கிளை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து செந்தில்குமார் லாலாபேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில்போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஸ்ரீதர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் மாயமானது
    • 4 பேரையும் போலீசார் கைது செய்து திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி காமராஜ் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி (வயது29). இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த போது காணாமல்போனது.அதே போன்று அண்ணாநகரை சேர்ந்த ஸ்ரீதர் வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளும் மாயமானது.

    இது குறித்து அவர்கள் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தூத்துக்குடி சத்யா நகரை சேர்ந்த ரெட்டை வினோத் என்ற வினோத் (25), 3 சென்ட் அந்தோனியார்புரம் பகுதியை சேர்ந்த மகாராஜா (20), அண்ணாநகரை சேர்ந்த பொன்ராஜ் என்ற ராசு (23) கருணாநிதி நகரைச் சேர்ந்த கார்த்திக் (22) ஆகிய 4 பேரும் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    4 பேர் கைது

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கங்கைநாத பாண்டியன் மற்றும் போலீசார் 4 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த திருடப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்ப ட்டர்களில் ரெட்டை வினோத் மீது ஏற்கனவே தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, வழிப்பறி உட்பட 10 வழக்குகளும், பொன்ராஜ் மீது கொலை மிரட்டல் உட்பட 2 வழக்குகளும் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp