search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "collector's office"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.
    • தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள்.

    சென்னை:

    தமிழக அரசின் நிறுவனமான ஆவின் பால் பொது மக்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் 30 லட்சம் லிட்டர் பால் ஆவின் வினியோகம் செய்கிறது. சென்னையில் மட்டும் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனையாகிறது.

    ஆவின் பால் 4 வகையான பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்து வருகிறது. இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (1.5 சதவீத கொழுப்புச் சத்து), சமன் படுத்தப்பட்ட பால் (3 சதவீத கொழுப்புச் சத்து), அதிகளவு விற்பனையாகக் கூடிய நிலைப்படுத்தப்பட்ட பால் (4.5 சதவீதம் கொழுப்புச் சத்து) பச்சை நிற பாக்கெட்டில் வினியோகிக்கப்படும் பொது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

    மொத்த விற்பனையில் ஆவின் பச்சை நிற பாக்கெட் 40 சதவீதம் இடம் பெற்று உள்ளது. 40 ஆண்டுகளுக்கு மேலாக இது மக்கள் விரும்பும் பால் பாக்கெட்டாக அமைந்துள்ளது. பச்சைநிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டிலைட் ஊதா பாக்கெட் 3.5 சதவீத கொழுப்புச் சத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பாலின் விலையும் லிட்டர் ரூ.44 ஆகும். ஆனால் கிரீன் மேஜிக் பச்சைநிற பால் பாக்கெட்டுகளை விரும்பி வாங்கி வருகிறார்கள்.

    மற்ற தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு ரூ.54 முதல் ரூ.56 வரை உள்ள நிலையில் நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் ரூ.44-க்கு கிடைப்பதால் கடைகளில் உடனே விற்று தீர்ந்து விடுகிறது.

    4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44-க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருகிறது. வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை பால் பவுடர் ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து டிலைட் ஊதா வகைக்கு வாடிக்கையாளர்களை மாற்றி வருகிறது.

    சென்னை தவிர பெரும்பாலான மாவட்டங்களில் பச்சை நிற பால் பாக்கெட் நிறுத்தப்பட்டுவிட்டன. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் இன்னும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையாகிறது. அதுவும் மிக குறைந்த அளவிலேயே வினியோகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஆவின் பொது மேலாளர் (மார்க் கெட்டிங்) சுனேஜா கூறுகையில், பால் அட்டை கார்டுதாரர்களுக்கு டிசம்பர் 1-ந் தேதி முதல் அதே விலையில் டிலைட் பால் வினியோகிக்கப்படும். டிலைட் பால் கார்டு விற்பனையை செயல்படுத்தவும், டிசம்பர் 16-ந் தேதி முதல் வினியோகத்தை தொடங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    தரப்படுத்தப்பட்ட பால் கார்டு வைத்திருப்பவர்கள் (பச்சை நிறம்) இருமுறை சமன்படுத்தப்பட்ட மற்றும் புல் கிரீம் பால் ஆகிய 3 வகைகளில் ஏதாவது ஒன்றிற்கு மாற வேண்டும் என்றார்.

    செலவை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட் விற்பனையை நிறுத்த ஆவின் முடிவு செய்துள்ளது. ஆவின் பால் அட்டைகள் ஒவ்வொரு மாதமும் 1 முதல் 15-ந் தேதி வரை பால் வினியோகத்தை செய்கிறது.

    வருகிற 25-ந் தேதி முதல் பச்சை நிற பால் பாக்கெட் சில்லரை விற்பனை நிறுத்தப்படும். தற்போதைய பச்சை நிற பால் அட்டைதாரர்கள் டிசம்பர் 15-ந் தேதி வரை பெறுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • இருவருக்கும் பாகப்பிரிவினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.
    • சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அருக்காணி என்பவருக்கும் அவரது அக்கா மாரத்தாள் என்பவருக்கும் பூர்வீக சொத்தாக திருப்பூர் மாவட்டம் முத்து கவுண்டம்பாளையத்தில் 5.30 ஏக்கர் நிலம் உள்ளது. இருவருக்கும் பாகப்பிரி வினை செய்யப்பட்டு 2.75 ஏக்கர் பிரித்து கொடுக்கப்பட்டது.

    இந்நிலையில் மாரத்தாள் மற்றும் அவரது மகன் ஆகியோர் அருக்காணிக்கு சேர வேண்டிய 2.75 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து அருக்காணி திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்தநிலையில் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அருக்காணி மற்றும் அவரது மகன் குப்புசாமி ஆகியோர் திடீரென உடலில் மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.

    உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி 2பேர் மீது தண்ணீர் ஊற்றினர். பின்னர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.
    • ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

    கடலூர்:

    இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் தேவா தலைமையில் பொதுச் செயலாளர் சக்திவேல், அமைப்பு பொதுச் செயலாளர் ஜம்புலிங்கம், கடலூர் ஒன்றிய தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் கார்த்திக் உள்ளிட்டோர் இன்று காலை கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டியபடி வந்தனர்.

    பின்னர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரனிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-  பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ஆறுகால கட்டளை பூஜைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், பல ஏக்கர் விவசாய நிலங்கள் கணக்கில் இருக்கின்றதா? இல்லையா? என உண்மை தன்மையை கண்டறிந்து சொத்துக்களை மீட்க உயர்மட்ட விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். ஆலய கட்டளை மற்றும் ஆலய நிலங்கள் சட்டத்திற்கு புறம்பாகவும், சட்டவிரோதமாகவும் விற்கப்பட்டுள்ளது.

    அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவிலின் உள்ளே செயல் அலுவலர் அலுவலகம் செயல்படுவதால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் வெளியூரிலிருந்து வருவோருக்கு திருமண பதிவு சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. அதனால் அலுவலகத்தை கோவிலின் வெளிப்புறம் அமைக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சியினர் கலெக்டர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும் முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை வேண்டுதல், சாலை வசதி, குடிநீர் வசதி கோருதல் என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 462 மனுக்கள் பெற்று கொள்ளப்பட்டது. அதில் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ்அறிவுறுத்தினார்.

    அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாதுகாவலர் சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் சப்- கலெக்டர் (பயிற்சி) கிர்திகா எஸ்.விஜயன் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) செல்வி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி, துணை கலெக்டர்கள் மற்றும் அனைத்து அரசு த்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு நடக்கிறது.
    • 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது-

    கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களின் குறை கேட்பு கூட்டம், புதிய மாவட்ட கலெக்டர் வளாகத்தில் செப்டம்பர் 5-ந்தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் தலைமையில், சென்னை ஓய்வூதிய இயக்குநரால் நடத்தப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை 2 பிரதிகளில் "ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு" என குறிப்பிட்டு வருகிற 16-ந்தேதிக்குள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்குமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்கள் பெறப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையேற்று பேசியதாவது:-

    மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 450 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) செந்தில்குமாரி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.
    • பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சேலம்:

    சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட்டனர்.

    பேச்சுவார்த்தை

    அப்போது அங்கு பிரதான நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். கலெக்டர் அலுவலகத்திற்குள் மனு கொடுக்க அனைவரையும் அனுமதிக்க முடியாது. எந்த கோரிக்கையாக இருந்தாலும் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே அனுமதிக்க முடியும் என்றனர்.

    இதனை தொடர்ந்து 5 பேர் மட்டும் கலெக்டர் அலுவலகத்திற்குள் சென்றனர். அவர்கள் மனு கொடுத்து விட்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    சமூக விரோதிகள் அட்டகாசம்

    வாய்க்கால் பட்டறை அரசு பள்ளி அருகில் மாநகராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த பகுதியில் சமூக விரோதிகள் கஞ்சா விற்பதும், மது குடிப்பதும் என அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்களை தகாத வார்த்தையில் பேசி மிரட்டி வருகின்றனர்.

    மேலும் கடந்த 8-ந் தேதி சிறுமி ஒருவரை தகாத வார்த்தையில் பேசி உள்ளனர். இதனால் தட்டி கேட்ட எங்கள் மீது மர்ம கும்பல் சரமாரியாக தாக்கினர்.

    இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    எனவே அப்பகுதியில் கஞ்சா, மது குடித்து ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக கைது செய்து பொதுமக்களை அச்சமின்றி வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள்.
    • ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    அதன்படி 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் 37-வது மாவட்ட மாக உதயமானது.

    புதிய மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பல புதிய துறைகள் கொண்டு வரப்பட்டன.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்க தொடங்கியது.

    அங்கு செயல்பட்ட கோட்டாட்சியர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகமாக தற்போது செயல்பட்டு வரும் இடத்தில் போதிய இடவசதி இல்லை. கடும் இடநெருக்கடி காரணமாக இப்போது உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் துறைகள் அனைத்தும் ஒன்றாக செயல்பட முடியவில்லை.

    இதனால் புதிய துறைகள் மற்றும் அதன் அதிகாரிகள், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் வாடகை கட்டிடத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இதையடுத்து ஒரே கட்டிடத்துக்குள் ஒருங்கிணைந்து அலுவலகங்கள் இயங்குவதற்காக, புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    அனைத்து அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி செங்கல்பட்டு நகரை ஒட்டிய ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள வெண்பாக்கம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்து 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. தரை தளத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட ரூ.120-கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு 2022-ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது.

    கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் பொதுப்பணி துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை, சுகாதாரத் துறை, சுற்று சூழல் துறை, பேரிடர் மேலாண்மை துறை,நீர் வளத் துறை, விவசாயத் துறை, வேளாண்மை துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை, சமூக நலத்துறை, கால் நடைகள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தீயணைப்பு துறை, கல்வி துறை, தொழிலாளிகள் நலத்துறை, விஞ்ஞானத்துறை, தமிழ் இலக்கிய துறை, நிதித்துறை உள்பட 35 துறையின் அலுவலகங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்படும் வகையில் தயார் நிலையில் இருந்தன.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் புதிய கட்டிடத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு தனியார் காவலர்கள் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இப்போது இயங்கி வரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுகிறது. ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    அனைத்து துறை அலுவலகமும் ஒரே இடத்தில் செயல்பட முடியாமல் வெவ்வேறு இடங்களில் செயல்படுவதால் பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

    எந்தத் துறை அலுவலகம் எந்த இடத்தில் செயல்படுகிறது என்று தெரியாமல் தினந்தோறும் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மாவட்ட மாற்று திறனாளி அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, நீர் வளத்துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை, கனிமவளத்துறை விவசாயம் மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்டவை செங்கல்பட்டு நகரத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்குவதால் பல்வேறு ஊர்களில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

    இதனால் செங்கல்பட்டு நகரத்திற்குள் பிரம்மாண்டமாக 4 மாடிகளில் எழுந்து நிற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

    இவ்வளவு பெரிய கட்டிடம் பணிகள் முடிந்தும் ஏன் திறக்கப்படாமல் உள்ளது? என்ற கேள்வி அவர்கள் எண்ணத்தில் எழுந்து வருகிறது. ஆனால் இது பற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்கும்போது சரி வர எந்த பதிலும் கூறாமல் உள்ளனர்.

    இதனால் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பது எப்போது என்ற கேள்விகளுடனேயே அவர்கள் காத்து இருக்கிறார்கள்.

    இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 -ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிந்தது. இதனால் அரசுத்துறை அலுவலகங்களுக்கு மக்கள் எளிதில் சென்று வரலாம் என்று நினைத்தோம். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் 4 மாடியில் பிரம்மாண்டமாக கட்டி முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அங்கு எந்தத் துறைகளும் செயல்படவில்லை. கட்டிடம் மூடியே கிடக்கிறது.

    அதில் செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக செயல்படுகின்றன .இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஒவ்வொரு துறை அலுவலகமும் என்று உள்ளது எங்கு தேடி கண்டுபிடித்து செல்வதற்கு பெரும்பாடு பட்டு வருகிறார்கள்.

    புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள். தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதால் திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே தொல்லியல் துறையுடன் மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் கலெக்டர் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த கட்டிடப் பணிக்காக ரூ.120 கோடி முடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புக்கு தயார் நிலையில் உள்ளது. சில சிக்கல்கள் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றனர்

    • திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் அபகரிப்பு செய்யப்பட்டது.

    இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி சார்பதிவாளர் சிவசாமி உட்பட 16 பேரை கைது செய்தனர். கோவில் இடத்தை தனது குடும்பத்தினர் பெயரில் பதிவு செய்த பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார், மாவட்ட பதிவாளர் ரமேஷ், தாசில்தார்கள் பாலாஜி, ரமேஷ்கண்ணா ஆகியோர் மீதும் சட்டப்படி எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி இன்று காலை வழுதாவூர் சாலையில் திராவிடர் விடுதலைக்கழகம் லோகு அய்யப்பன் தலைமையில் பல்வேறு சமூக அமைப்பு நிர்வாகிகள் ஒன்று கூடினர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஜான்குமார் எம்.எல்.ஏ., வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியபடி கலெக்டர் அலுவலகத்தை தடையை மீறி முற்றுகையிட முயன்றனர்.

    இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 60-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். 

    • கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
    • கடலை மிட்டாய் கம்பெனியில் இருந்து வருகிறது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    சலவன்பேட்டை சாது கார மடத் தெருவை சேர்ந்த ஜெயபால் என்பவர் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    எனது பக்கத்து வீட்டில் கடலை பர்பி, கடலை மிட்டாய், பொரி உருண்டை உள்ளிட்ட குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தயாரித்து வருகின்றனர்.

    இந்த திண்பண்டங்களில் மிகப்பெரிய கட்டெறும்புகள் மொய்த்து வருகிறது.

    அந்த கம்பெனியிலிருந்து எங்கள் வீட்டிற்குள் கட்டெறும்புகள் மற்றும் எலிகள் அதிக அளவில் வந்து தூக்கத்தை கலைக்கிறது.

    கட்டெறும்பு கடித்ததில் எனது கை கட்டைவிரல் பாதிக்கப்பட்டுள்ளது.

    எங்கள் வீடு முழுவதும் நாளுக்கு நாள் கட்டெறும்பு பெருகிக்கொண்டே வருகிறது. அங்கிருந்து வெளிவரும் புகை கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது. என்னுடைய தாயார் ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறார்.

    எனக்கும் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளது. பக்கத்து வீட்டில் மிட்டாய் கம்பெனி இருப்பதால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நூதன புகார்

    மேலும் கட்டெறும்புகளால் தனது விரல் பாதிக்கப்பட்டதாக கூறி அதிகாரியிடம் விரலை காண்பித்தார்.

    இந்த நூதன புகாரால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    கே.வி.குப்பம் அருகே உள்ள மேல் காவனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் 88 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி அதில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி பேரில் கலைஞர் நகர் என்று பெயர் வைக்க வேண்டும்.

    இதற்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கலைஞர் நகர் என்று பெயர் பலகைவைக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    மிரட்டல்

    ஊசூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் அளித்த மனுவில்,

    `எனது மகன் கடன் வாங்கியதால் கும்பல் ஒன்று என்னையும், எனது மனைவியையும் மிரட்டி வருகின்றனர்.

    இதனால் நானும், என் மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
    • குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.

    மாவட்ட திட்ட அலுவலர் அப்போது குடியாத்தம் அடுத்த செதுக்கரையை சேர்ந்த லில்லி என்பவர் தனது கணவர் கடந்த மாதம் இறந்து விட்டதால் இறப்புச் சான்று கேட்டு மனு அளித்தார். அப்போது திடீரென லில்லி மயங்கி கீழே விழுந்தார்.

    அங்கு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் லில்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 1157 குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    • மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது.
    • தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    ஜூன் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 23-ந்தேதி வெள்ளிக் கிழமை புதிய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரி யபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

    ×