search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
    X

    கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்

    • கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது.
    • உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினாா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனா்.

    இதனைத் தொடா்ந்து, ஆதரவற்ற விதவை ஓய்வூதிய திட்டத்தின்கீழ் ஊட்டி, நஞ்சநாடு கிராமத்தைச் சோ்ந்த தங்கமணி என்பவருக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினாா்.பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினாா்.

    மேலும், அரசின் நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்களின் அடிப்படை வசதிகள் கோரும் மனுக்கள் மீது முன்னுரிமை அளித்து, பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், முதல்வரின் முகவரி திட்டத்தின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அனைத்து அலுவலா்களும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

    இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தனபிரியா, மாவட்ட வழங்கல் அலுவலா் வாசுகி உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா். மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

    Next Story
    ×