search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prohibition"

    • படகுகள் பறிமுதல் செய்யப்படுவதுடன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.
    • பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள், இலங்கை கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதாக கூறி சமீப காலமாக தொடர்ந்து கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதில், படகுகள் பறிமுதல் செய்யப்படுவது டன் இரண்டாவது முறையாக கைது செய்யப்படும் மீனவர்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது.

    இதனை கண்டித்து, ராமேசுவரம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் மற்றும் உண்ணாவிரத போராட்டங்களை மேற்கொண்டனர். மேலும் இலங்கை மீனவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது. கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர் நடத்திய சமரச பேச்சுவார்த்தையை ஏற்றுக் கொண்ட ராமேசுவரம் மீனவர்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு மீண்டும் கடலுக்கு சென்றனர்.

    இதனை கண்டித்து, இலங்கை மன்னார், பேசாளை, நெடுந்தீவு பகுதி மீனவ சங்கத்தினர் கண்டனம் தெரிவித்ததுடன் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும் என போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்று இலங்கை மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடியுடன் நடுக்கடலில் போராட்டம் அறிவித்துள்ளனர்.

    இதனால் ராமேசுவரம், பாம்பன், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க செல் லும் மீனவர்களுக்கு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர். மேலும் பெரும்பாலான படகுகள் எச்சரிக்கை காரணமாக கரை திரும்பி உள்ளனர்.

    ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் போது இலங்கை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மீண்டும் மீனவர்கள் பிரச்சினை ஏற்படும். இதனை தடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக இந்திய தமிழ் மீனவர்கள் இலங்கை தமிழ் மீனவர்களிடையே பெரும் மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனை தடுக்க குறுகிய மீன்பிடி கடல் பகுதியை கொண்ட ராமேசுவரம் பகு தியில் அரசின் அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்துவது, அதிவேக படகுகளை மாற்று துறைமுகத்திற்கு கொண்டு செல்லுவது, எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லுவதை கட்டுப்படுத்துவது, இந்திய-இலங்கை மீனவர்கள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இரு நாட்டு மீனவர்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் மீன் பிடிக்க அனுமதிக்க வேண் டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மது விலக்கு குறித்து பேரணி நடத்த பா.ம.க. மனு அளித்தது
    • மராத்தான் ஓட்டத்திற்கு அனுமதி வழங்குவதை நீதிபதி குறிப்பிட்டார்

    பாட்டாளி மக்கள் கட்சி, தமிழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு கோரி பல வருடங்களாக தமிழ்நாட்டின் ஆளும் கட்சிகளுக்கு கோரிக்கை வைத்து வருகிறது. அக்கட்சியின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக பூரண மதுவிலக்கை நீண்ட காலமாக பிரச்சாரம் செய்து வருகிறது.

    தங்களின் கோரிக்கையை மக்களிடம் பிரச்சாரம் செய்ய அக்டோபர் 5-ஆம் தேதி ஒரு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் பா.ம.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அனுமதி வழங்கவில்லை.

    அனுமதி மறுக்கப்பட்டதால் பா.ம.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    பேரணி செல்லும் பாதையில் பிற மதத்தினர் உள்ளனர் என கூறி அனுமதி மறுக்கப்பட்டதாகவும், பா.ம.க. மதம் சார்ந்த கட்சி அல்ல என்றும் பா.ம.க. வழக்கறிஞர் தெரிவித்தார்.

    இதை கேட்ட நீதிபதி ஜெயச்சந்திரன் அரசு தரப்பு வக்கீலிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.

    அவர் விசாரணையின் போது கேட்டதாவது:

    ஆளும் கட்சியினர் மராத்தான் ஓடவும், நடப்பதற்கும் அனுமதி வழங்குகிறீர்கள்; மதுவுக்கு எதிரான பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கினால் என்ன? யாருக்காக காவல்துறை உள்ளது? தமிழ்நாட்டில் வருமான வரித்துறையும், அமலாக்கத்துறையும் சோதனைகளை நடத்தினால் அவை மத்திய அரசின் ஏஜென்சிகள் என குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படி என்றால் தமிழ்நாடு காவல்துறை யாருடைய ஏஜென்சியாக செயல்படுகிறது? ஆளும் கட்சிக்கு ஆதரவாகத்தான் காவல்துறை செயல்படுமா?

    இவ்வாறு நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    விவாதங்களுக்கு பிறகு வழக்கை வரும் 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

    • கரூர் ஜவஹர் பஜாரில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போலீசார் நடவடிக்கை

    கரூர்,

    தீபாவளி பண்டி கையை முன்னிட்டு கரூர் மாநகரில் ஒரு வாரத்துக்கு முன்னதாகவே, கரூர் வர்த்தக மையங்களான ஜவஹர் பஜார், கோவை ரோடு, வடக்கு மற்றும் தெற்கு பிரதட்சணம் சாலை ஆகிய பகுதிகளுக்கு தீபா வளி சம்பந்தமான பொருட்கள் வாங்க ஆயிரக்கணக்கான மக்கள் 5 வந்து செல்வார்கள். இதிலும், தீபா வளி பண்டிகைக்கு 3 நாட்களுக்கு

    முன்னரே. வந்து செல்லும் மக்க ளின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும். அதுபோன்ற சமயங்க ளில் கனரக வாகனங்கள் உள்ளே சென்று, போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்கும் வகையில், காவல்துறை சார்பில் மாநகரின் நுழைவுவாயில் பகுதிகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையி மாநகரின்லும் உள்ளே செல்ல தடை என்ற வாசகங்கள் அடங்கிய பதாதை களை வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகை நாட்களில் அதிகளவு வாகனங்கள் வரத்து காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்ப டாதவகையில் போலீசார்கள் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன்சப்.இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் நேற்று காலை 9 மணிக்கு பண்ருட்டி சத்தியமூர்த்தி தெரு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்ப னை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் படி தீவிர ரோந்து பணி யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி (வயது 57) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் நல்ல நேரம் லாட்டரி சீட்டு, தங்கம் லாட்டரி சீட்டு ஆகிய வைகளை விற்பனைக் காக வைத்திருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். அவரிட மிருந்து ஏராளமான லாட்டரி சீட்டுகளை பறி முதல் செய்யப்பட்டது. பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் மாவட்ட தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுவின் ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழகத்தில் சமீபகால மாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள்மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசுவிற்பனை மற்றும் வெடி பொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறை ப்படுத்தி உயிர் சேதம்மற்றும் பொருட்சே தம் ஆகியவற்றை தவிர்த்திடும் பொருட்டும், வெடிபொருள் தயாரிக்கு ம்போதுபின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்தும், வெடிபொருள் தயாரிக்கும் உரிமத்தலங்களை தணிக்கை செய்திட செல்லும் அரசுஅலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மாவட்ட அளவிலான தீ மற்றும்பாதுகாப்பு தொழிலக குழு உறுப்பினர்கள் மற்றும் பட்டாசு உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது. கிப்ட் பெட்டியில் தீப்பெட்டி மத்தாப்பு மற்றும் கேப்வெடிகள் இருத்தல் கூடாது. பட்டாசுக் கடை அருகில் புகைப்பிடித்தல் கூடாது மற்றும் பட்டாசு வெடித்தல் கூடாது என்ற அறிவிப்பு பதாகைகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பட்டாசு கடை உரிமம் பெற்றவர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நடைமுறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அறிவியல் முறையில்கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களு க்கு உள்ள காப்பீடு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் .தடை செய்யப்பட்ட நாட்டு வெடி, சீன வெடிக ளை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய்கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணன், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராஜா, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர்சரவ ணன், சென்னை முதன்மை இணை கட்டுப்பாட்டு அலுவலர் (வெடிபொருள்) தானுலிங்கம், விழுப்புரம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பருவதம், வெடிபொருள் உரிமம் வழங்கப்பட்ட உரிமதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது.
    • ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

    புதுச்சேரி:

    காரைக்கால் டூப்ளக்கஸ் வீதியில், மளிகை கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார், சம்பந்தப்பட்ட கடையில் சோதனைச் செய்தபோது அங்கு ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லெமேர்வீதியைச்சேர்ந்த கடை உரிமையாளர் முகமது முஜாஹிதீனை (வயது23) கைது செய்தனர்.

    • இரு தரப்பினரையும் அழைத்து குத்தகை பூக்கடை குறித்து ஆலோசனைக் கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடத்தப்பட்டது.
    • போலீசாருக்கு ஆதரவாக போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை நகரில் உள்ள பூக்கடை உரிமையா ளர்கள் சங்கம் அமைத்துக் கொண்டு தமிழ் மாதத்தில் முதல் செவ்வாய்க்கிழமை குத்தகை கடை என்ற பெய ரில் ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கு மேல் எந்த பூக்கடைக்காரர் அதிக அளவில் ஏலம் எடுக்கிறாரோ அன்றைய தினம் அவர் மட் டுமே பூ வியாபா ரம் செய்து கொள்வார்.

    இவர் மட்டும் விற்பனை செய்வதால் அதிக விலைக்கு பூமாலைகள் விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. மேலும் இது பொதுமக்க ளிடையே மிகுந்த மன வேத னையை அளித்து வந்தது. இதுதொடர்பாக நடவ டிக்கை கோரி மாலை மலர் நாளிதழில் செய்தி வெளியா னது.

    இதன் எதிரொலியாக தேவகோட்டை டி.எஸ்.பி. பார்த்திபன், நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்சாரி, நமச்சிவாயம் மற்றும் போலீசார் பூக்கடை உரிமையாளர்கள் மற்றும் 25-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுதா தலைமை யில் பொதுமக்கள் இரு தரப்பினரையும் அழைத்து குத்தகை பூக்கடை குறித்து ஆலோசனைக் கூட்டம் நகர் காவல் நிலையத்தில் நடத்தப் பட்டது.

    கூட்டத்தில் இன்ஸ்பெக் டர் சரவணன் பூக்கடை உரி மையாளர்களிடம் குத்தகை கடையால் பொது மக்கள் பெரிதும் பாதிப்பு அடைகின் றனர். மார்க்கெட் நிலவரப் படி அன்றாடம் பூ விற்பனை செய்து கொள்ளலாம். பொது மக்களின் கோரிக்கை ஏற்று இனிவரும் காலங்களில் பூ வியாபாரிகள் சங்கம் குத்தகை என்ற பெயரில் பூக்களை மொத்தமாக வாங்கி அதிக விலை நிர்ணயம் செய்து பொது மக்களை பாதிக்கும் வகையில் விற்பனை செய்ய கூடாது.

    பூக்கள் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. அதை பதுக்குபவர் கள் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்கப்படும். தனி நபர்களும் உதிரி பூக்களை விற்பனை செய்யலாம். தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் பொதுமக்கள் போலீசாருக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர். ேமலும் போலீசாருக்கு ஆத ரவாக போஸ்டர்களும் ஒட்டியுள்ளனர்.

    • திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
    • ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது

    மண்ணச்சநல்லூர்,

    தமிழ்நாட்டில் உள்ள பிரபல ஆலயங்களின் கருவறையில் உள்ள தெய்வ சிலைகளின் புகைப்ப டங்கள், வீடியோக்கள் வெளியாகின்றன. இதே போல திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் கருவறையை போட்டோ மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்புவதும் அதிகமாகி வருகிறது. கோவிலில் பணிபுரியும் சிலர் வீடியோ எடுத்து பதிவிடுகின்றனர். இதன் காரணமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலில் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    கோயில் இணை ஆணையர் கல்யாணி கோயிலுக்குள் செல்போன் எடுத்து செல்ல தடை என ராஜகோபுரம் , கோயில் நுழைவாயில் உள்ளிட்ட இடங்களில் அறிவிப்பு பலகை வைத்துள்ளார்.

    பக்தர்களின் வசதிக்காக செல்போன், வீடியோ சாதனங்கள் வைப்பதற்கு விரைவில் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. எனவே பக்தர்கள் செல்போன் மற்றும் கேமிரா உள்ளிட்ட, மின் சாதனங்களை கோவிலுக்கு கொண்டு வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தடையை மீறி கொண்டு வரும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது.
    • அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குறுவட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாள ர்களுக்கு சாத்தனூர் அணை உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது;- நேற்று பிற்பகல் 12 மணியளவில் சாத்தனூர் அணையானது முழு கொள்ளளவை எட்டியது. இதனால் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவு தண்ணீரினை திறந்து விட உள்ளோம். அந்த நேரத்தில் ஆற்றில் வெள்ள நீர் அதிக அளவு செல்லும். இந்த நேரத்தில் பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் ஆற்றினை கடக்கவும் அனுமதிக்க கூடாது.

    ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பொதுமக்களை பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு சாத்தனூர் அணையின் உதவி செயற்பொறியாளர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்சி மாநகராட்சி பகுதியில் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது
    • மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வரும் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வாகனங்களில் காய்கறி, பழங்கள் விற்பனை செய்வதும், பல்வேறு பகுதி களில் வார சந்தைகளும் நட ந்து வருகிறது.குறிப்பாக தில்லை நகர் 80 அடி ரோடு, உறையூர் ஹவுசிங் யூனிட், லிங்கம் நகர், பாத்திமா நகர், ராம லிங்க நகர் விரிவாக்கம், வயர்லெஸ் ரோடு, உடையா ம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வார ச்சந்தைகள் நடந்து வருகிறது.இங்கு அல்லித்துறை, எட்டரை கோப்பு, தாயனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் இந்த வார சந்தைகளில் வியாபாரம் செய்து வந்தனர்.இது அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வசதி யாக இருந்ததால் பொதும க்களிடையே வரவேற்பும் அதிகமாக இருந்தது.இந்த வார சந்தைகளால் அந்தப் பகுதிகளில் நிரந்தர மாக கடை அமைத்துள்ள உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இத னால் வார சந்தைகளுக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவி த்து வந்தனர்இந்த நிலையில் தற்போது மாநகரப் பகுதிகளில் குடியி ருப்பு மற்றும் சாலைகளில் வாரச் சந்தைகள், தினசரி மாலை நேர சந்தைகள் ந டத்த மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.இது குறித்து மாநகராட்சி வட்டாரத்தில் விசாரித்த போது, மாநகரில் கடை அமைத்துள்ளவர்கள் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்தி வருகின்றனர்.ஆனால் வார சந்தை வியாபாரிகள் எதுவும் செலுத்துவதில்லை. இது போன்ற வாரச் சந்தைகள் சாலைகளில் நடத்தப்ப டுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு குப்பைகள் அதிகமாகி மாந கராட்சிக்கு கூடுதல் பணி ஏற்படுகிறது.ஆகவே புதிய பகுதிகள், மற்றும் சாலைகளில் உரிய அனுமதியின்றி நடத்தப்படும் கடைகளுக்கு தடை விதிக்க ப்பட்டுள்ளது.அதேசமயம் விவசாயிகள் வியாபாரிகள் வழக்கம் போல் வாகனங்கள் மூல மும், வழக்கமான மார்க்கெட் பகுதிகளிலும் வியாபாரம் செய்ய எந்த தடையும் விதி க்கப்படவில்லை என்றனர்.

    • ஐகோர்ட்டு உத்தரவுப்படி புதுக்கோட்டையில் அனைத்து கல் குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டது
    • இது தொடர்பாக அந்தந்த கல் குவாரி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே ஒரு கல் குவாரி தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பொதுநல மனுவை விசாரித்த நீதிபதிகள் கல் குவாரிகள் செயல்பாடுகள், கனிம வளங்கள் அதிகமாக எடுக்கப்பட்டது தொடர்பாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருந்தனர். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளுக்கும் தடை விதித்து, குவாரிகளை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கனிம வள இயக்குனர் ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தனர். இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதித்து அமல்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் கேட்ட போது, 'மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் அனைத்து குவாரிகளும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அந்தந்த கல் குவாரி உரிமையாளர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டன. மாவட்டத்தில் இன்று (அதாவது நேற்று) கல் குவாரிகள் இயங்கவில்லை. ஐகோர்ட்டு உத்தரவுப்படி மாவட்டத்தில் கல் குவாரிகளை ஆய்வு செய்து 2 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என்றனர்.

    • கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார்.
    • எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த கோபிநாத் (வயது) 27 என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் அவர் முத்தாண்டிக் குப்பத்தில் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். பின்னர் தனது ஊருக்கு செல்வதற்காக இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பேராசிரியர் கோபிநாத்தை எச்சரிக்கை செய்து அறிவுரை வழங்கி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாரை அழைத்து பேராசிரியர் கோபிநாத்தை பாதுகாப்பாக தஞ்சாவூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×