என் மலர்
நீங்கள் தேடியது "boats"
- நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
- 3000 பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லக்கூடாது என கடந்த 30-ம்தேதி மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை நாகூர், பட்டினச்சேரி நம்பியார்நகர், செருதூர் காமேஷ்வரம். விழுந்த மாவடி ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில் உள்ள 700 விசை படகுகள் 3000 பைபர் படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
மேலும் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருந்தது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததை தொடர்ந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கப்பட்டு கடல் சீற்றம் குறைந்த நிலையில் 5 நாட்களுக்குப் பிறகு மீன் பிடிக்க மீன்வளத் துறையினர் அனுமதித்துள்னர்.
மேலும் மீன்வளத்துறை மூலம் படகுகளுக்கு வழங்கப்படும் டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று அதிகாலை நாகப்பட்டினம் மீன்பிடித் துறை முகத்திலிருந்து 700 விசைப்படகுகள் 3000 பைபர் படகுகள் மீன்பிடிக்க சென்றனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் அதிக அளவில் மீன் கிடைக்கும் என மகிழ்ச்சியில் சென்றுள்ளனர்.
- சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது.
- 3000 பைபர் படகுகள் 4-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.
நாகப்பட்டினம்:
இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது.
இதனால் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது மேலும் நேற்று நாகை துறைமுகத்தில்புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றுடன் கூடிய மழை உள்ள வானிலை பகுதி உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள நாகூர், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 25கடலோர மீனவ கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.
சுமார் 10அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது ஏற்கனவே மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 4வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
- கடந்த 7-ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
நாகப்பட்டினம்:
தென்கிழக்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஏற்பட்ட குறைந்த காற்ற ழுத்த தாழ்வு பகுதி காற்றழு த்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பலத்த காற்றுடன் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த. இதையடுத்து கடந்த 7ம் தேதி முதல் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறை சார்பில் நாகப்பட்டினம் மீனவர்கள் ஆழ்கடல் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் புயல் சின்னம் வழுவிழந்ததை தொடர்ந்து15 நாட்களுக்குப் பிறகு நேற்று மீன்வளத்துறை மீனவர்கள் கடலில் மீன்பிடி க்க செல்லலாம் என்று அனுமதி வழங்கியது.இதைத் தொடர்ந்து இன்று அதிகாலைமுதல் நாகப்பட்டினம் மாவட்ட த்தில் உள்ள 700 விசைப்ப டகுகள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீன்பி டிக்க செல்லும் மீனவர்கள் அதிக அளவு மீன் கிடைக்கும் என நம்பிக்கையில் சென்று ள்ளனர்.இதை போன்று வேதார ண்யம் தாலுகாவை சேர்ந்த 5 ஆயிரம் மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க பிடிக்க சென்றுள்ளனர்.
- நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது,
- இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை கடற்கரை வெறிச்சோை காணப்படுகிறது.
வேதாரண்யம்:
கோடியக்கரையில் கடல் சீற்றம் கடந்த 5 நாட்களாக 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. படகுகளை பாதுகாப்பான இடத்திற்குகொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுகளை காரணமாக நாகை துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது இந்தநிலையில் இன்று வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.கடல் சீற்றத்தால் கடற்கரை யில் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை தண்ணீர் சூழ்ந்ததால் மீனவர்கள் படகுகளை இழுவை டிராக்டர் மூலம் படகுகளை மேடான பகுதிகளுக்கு அவசரம் அவசரமாக கொண்டு சென்று நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்மற்றும் கடற்கரை ஓரத்தில் மீன்பிடி வலைகள் அடுக்கப்ப ட்டுள்ள நிலையில் தண்ணீர் சூழ்ந்ததால் மீன்பிடிவலைகளையும் வாகனம் மூலம் பாதுகா ப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
புயல் எச்சரிக்கை கார ணமாக மீன்வளத்துறை எச்சரிக்கை அடுத்து கோடிய க்கரை, ஆறுகா ட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணின்தீவு உள்ளிட்ட மீனவ கிராமங்களில் 5000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள்மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் மீன்பிடிக்க செல்லத்தால் கடற்கரை பகுதி வெளிச்சோடி காணப்படுகிறது.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் விதி மீறிய 137 படகுகளுக்கு ரூ.4.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
- நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சுழற்சி முறையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15-ந் தேதி வரை விசைப்படகுகள் மீன்பிடிக்கும் முறைக்கு தடை விதிக்கப்பட்டது. தொழிலுக்கு செல்லும் படகுகள் தமிழக மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய விதிகள் அமலாக்கம் தொடர்பாக மீன்வளத்துறையினர் நடுக்கடலில் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சோதனையில் கடந்த ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு தற்போது வரை டோக்கன் பெறாமலும் 109 விசைப்படகுகள், அனுமதியின்றி தொழிலுக்கு சென்ற 7 விசைப்படகுகள், 5 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள் மீன்பிடித்த 21 விசைப்படகுகள் பிடிபட்டன.
இந்த படகுகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.53 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. மீன்பிடி தடை காலம் முடிந்து கடலுக்குக் சென்று விதிகளை மீறிய மேலும் 6 படகுகள் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
மீன்பிடி விதிகளை மீறும் படகுகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடுக்கடலில் சோதனையின்போது விதிகளை மீறியதாக முதல் முறை பிடிபடும் படகுகளுக்கு ரூ.10 ஆயிரம், அடிக்கடி பிடிபடும் படகுகளுக்கு ரூ.15 ஆயிரம் என தொடங்கி அந்த படகில் கொண்டு வரப்படும் மீன்களின் எடைக்கேற்ப அபராதம் விதிக்கப்படுகிறது. மீன்பிடி ஒழுங்குமுறை ஆணைய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும் படகுகளுக்கு விசாரணை முடியும் வரை மானிய டீசல், மீன்பிடி டோக்கன் ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடலில் பாதுகாப்பாக படகுகளை நிறுத்த வசதி செய்து தர வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர்.
- ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் சங்கர்லால் குமாவத் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் மீனவர்கள் கூறியதாவது:-
போஸ் ( அனைத்து விசை படகுகள் சங்க தலைவர்):- ரூ.8 லட்சம் சொந்த பணம் செலுத்தி மத்திய-மாநில அரசுகளின் மானியத்துடன் ரூ.80 லட்சம் மதிப்பில் 32 படகுகள் வாங்கி உள்ளோம். அவற்றை நிறுத்த துறைமுகம் இல்லை. பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் படகுகளுக்கு பாதுகாப்பு இல்லை.
இதனால் ஆழ்கடல் படகு வாங்க விண்ணப்பித்த பலர் வேண்டாம் என எழுதி கொடுத்துள்ளனர். ஆழ்கடல் படகுக்குரிய வங்கி கடனை ரத்து செய்ய வேண்டும். முதலீட்டை திரும்ப தரவேண்டும்.
கருணாமூர்த்தி (கடல் தொழிலாளர் சங்கம்):- கடல்பாசி சேகரிக்கும் செல்லும் பெண்களுக்கு வனத்துறையினர் பாது காப்பு என்ற பெயரில் நெருக்கடி தருகின்றனர்.
27 தீவுகளில் கடல்பாசி எடுக்க உரிமம் வழங்க வேண்டும். நல்ல தண்ணி தீவு கோவில்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும். விசைப்படகினர் ஆழ்கடலில் மீன் பிடிக்காமல் கரையோரங்களில் மீன்பிடிப்பதால் நாட்டு படகு மீனவர்கள் பாதிக்கப்ப டுகின்றனர். இதனால் 130 கிராமங்களில் உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தேவதாஸ் (மீனவர் விசைப்படகு சங்க செய லாளர், ராமேசுவரம்):- உயிரை பணயம் வைத்து மீன்பிடிக்கிறோம். அதற்கு ரிய விலை கிடைக்கவில்லை. 800 விசைப்படகுகள், 3000 நாட்டுப்படகுகள் உள்ளன. 1500 லிட்டர் டீசல் மானியம் போதுமானதாக இல்லை, அதை உயர்த்த வேண்டும். சேமிப்பு நிவாரணத்துடன் மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ரெஜிஸ் (தங்கச்சி மடம்):-ஆழ்கடல் படகை ரூ.80 லட்சம் கொடுத்து வாங்கவும், பயன்படுத்தவும் ரூ.14 லட்சம் செலவு செய்துள்ளோம். படகுகளை நிறுத்த முடியவில்லை. தூண்டில் வலை இல்லை. கேரளா, நாகர்கோவில் பகுதிகளில் நிறுத்த வேண்டியுள்ளது. இதனால் மிகுந்த மனஉளைச்சலில் உள்ளோம். இதைத்தொ டர்ந்து சில மீனவர்கள் எலி மருந்தை சாப்பிட்டு சாகப்போகிறோம் என்று தெரிவித்து எலி 'பேஸ்ட்' பாக்கெட்டை காண்பித்தனர்.
உடனே உதவி இயக்குனர் கோபிநாத், விரைந்து சென்று அவர்களிடமிருந்து அதனை பறித்து பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
மேலும் மீனவர்கள் பேசும்போது, மூக்கையூர் துறைமுகத்தில் டீசல் பம்ப் நிலையம் திறக்க வேண்டும். மடிவேலை பார்க்கும் மையம் இல்லாததால் தூத்துக்குடி செல்ல வேண்டியுள்ளது. பெண்களின் பாதுகாப்பி ற்காக மூக்கையூர் கடற்கரை பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைக்க வேண்டும். மீனவர்களின் குழந்தைகளுக்குரிய கல்வி உதவி தொகை தரவில்லை. பாசி எடுக்க செல்லும் பெண்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனர்.
மாவட்ட கலெக்டர் சங்கர்லால் குமாவத் பேசும்போது, மீனவர்கள் தெரிவித்த குறை கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும் என்றார்.
கூட்டத்தில் மீன்வளத்துறை உதவி இயக்குனர்கள் கோபிநாத், சிவராமசந்திரன், அப்துல் கலாம் ஜெயிலானி, மரைன் கூடுதல் எஸ்.பி. பாலகிருஷ்ணன் உள்பட மீன்வளத்துறை அதிகாரி கள், மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உள்நாட்டுப் போர், வன்முறை மற்றும் வறுமை காரணமாக சிரியா, ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக வெளியேறி, ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றவண்ணம் உள்ளனர். இவ்வாறு செல்பவர்களில் ஆபத்தான கடல் பயணம் மேற்கொள்ளும்போது பலர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, கடலோர காவல்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாகவும், படகுகளில் சென்றும் அவர்களை மீட்டனர். இவ்வாறு ஆங்கிலக் கால்வாயின் 5 இடங்களில் இருந்து 2 குழந்தைகள் உள்ளிட்ட 40 அகதிகள் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. குழந்தைகள் 2 பேரும் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பெரியவர்கள் குடியேற்ற அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் சிலர் ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதேபோல் கடந்த சனிக்கிழமையன்று பிரிட்டன் நோக்கி சென்ற 16 அகதிகளை பிரான்ஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி மீட்டது குறிப்பிடத்தக்கது. #EnglishChannel #MigrantsRescued