search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waves"

    • சுமார் 10 அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது.
    • 3000 பைபர் படகுகள் 4-வது நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

    நாகப்பட்டினம்:

    இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறியது.

    இதனால் கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது மேலும் நேற்று நாகை துறைமுகத்தில்புயல் உருவாகக்கூடிய திடீர் காற்றுடன் கூடிய மழை உள்ள வானிலை பகுதி உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நாகை மாவட்டத்திலுள்ள நாகூர், அக்கரைப்பேட்டை, செருதூர், காமேஸ்வரம், கோடியக்கரை உள்ளிட்ட 25கடலோர மீனவ கிராமங்களிலும் கடல் வழக்கத்தை விட சீற்றத்துடன் காணப்படுகிறது.

    சுமார் 10அடி உயரத்திற்கு அலைகள் காணப்படுகிறது ஏற்கனவே மீனவர்களுக்கு கடலுக்கு செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நாகை மாவட்டத்தில் உள்ள 700 விசைபடகுகள் 3000 பைபர் படகுகள் 4வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகரித்துள்ளது.
    • 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    தரங்கம்பாடி:

    வங்க கடலில் நிலை கொண்டுள்ள மாண்டோஸ் புயல் சின்னம் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    சின்னூர்பேட்டை, சந்திரபாடி தரங்கம்பாடி சின்னங்குடி வானகிரி பூம்புகார் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் 28 மீனவர் கிராமங்களிலும் மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை மயிலாடுதுறை மாவட்டத்தில் 400 விசைப்படகுகளும் 15,000 பைபர் படகுகளும் உள்ள நிலையில் படகுகளை பாதுகாப்பாக கரைகளில் ஏற்றி நிறுத்தி உள்ளனர். தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக பகுதியில் பல அடி உயரத்திற்கு அலைகள் சீறிப் பாய்கின்றன.

    துறைமுகத்தின் தடுப்புச் சுவர்களை அலைகள் மோதி தாண்டி உள்ளே நுழைவது பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

    தற்போது 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வரும் நிலையில் சாரல் மழையாக பெய்து வருகிறது.

    வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் 25 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை இதன் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் விவசாயிகளுக்கு தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் உள்ளது போல் மீனவர்களுக்கும் மீனவர் நல கூட்டுறவு வங்கிகள் தொடங்க வேண்டும் என்றும் இதனால் தங்களுக்கு இது போன்ற தடை காலங்களில் நிவாரணம் பெறவும் கடனுதவி பெறவும் பெரும் வசதியாக இருக்கும் என்று மீனவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே இன்று மாலைக்கு மேல் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

    ×