என் மலர்

    நீங்கள் தேடியது "மீனவர்கள்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஸ்வகர்மா திட்டத்தில் மீனவர்கள் பயனடைந்தனர்.
    • பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.

    ராமநாதபுரம்

    மீன்பிடி, மண்பாண்டம் தயாரித்தல், பனை ஓலை பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட பாரம்பரிய தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் அமைச்சகம் விஷ்வ கர்மா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தில் அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் உறுப்பினர்களுக்கு தொழில் தொடங்க 5 சதவீத வட்டியில் முதற்கட்டமாக ரூ 1 லட்சம் வங்கி கடனுதவி அளிக்கப்படுகிறது. தவணை தொகையை உரிய காலத்தில் திரும்ப செலுத்தும் பாரம்பரிய தொழிலாளர்களுக்கு 2-ம் கட்டமாக ரூ.2 லட்சம் திரும்ப வழங்கப் படும்.

    இத்திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளனம் பரிந்துரை படி காந்திஜி மீனவர் சங்க தலைவர் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா வட்டாணம் அருகே தாமோதர பட்டினத்தை சேர்ந்த நாட்டுப்படகு வலை பின்னும் தொழிலாளி பழனிவேல்,ராமநாதபுரம் மாவட்ட மீனவர் சங்கங்களின் சம்மேளன உறுப்பினர் ராமேஸ்வரம் நடராஜபுரத்தைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர் கருப்பசாமி ஆகியோருக்கு கடந்த 17-ம் தேதி டெல்லியில் நடந்த விழாவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அடையாள அட்டை வழங்கினார். பிரதமரை சந்தித்து விட்டு ஊர் திரும்பிய பழனி வேல்,கருப்பசாமி ஆகி யோரை ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன் வர வேற்று வாழ்த்து தெரி வித்தார்.

    பழனிவேல் கூறுகையில், பாரம்பரிய தொழில்கள், அதனை சார்ந்த துணை தொழில்கள் அழிவின் விளிம்பில் சென்று விடாமல் இருக்க பிரதமர் மோடி தலைமையில் மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் செயல்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் நாடு முழுவதும் பராம்பரிய தொழில்கள் பாதுகாக்கப் பட்டுள்ளது என்றார்.

    பா.ஜ.க. ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன் உடனிருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
    • ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து கடந்த வாரம் மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    வருகிற 27-ந் தேதி வரை ராமேசுவரம் மீனவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர்கள் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இலங்கை அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், மீனவர்கள் மற்றும் படகுகளை விடுக்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனை வலியுறுத்தி ராமேசுவரத்தில் மீனவர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகத்தில் 650-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரம் மீனவர்கள் மற்றும் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    2-வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நடந்தது. இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. கடற் கரையில் விசைப்படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன.

    ராமேசுவரத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு இறால் மீன், நண்டு, கனவாய் உள்ளிட்ட மீன்கள் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஆனால் வேலை நிறுத்தம் காரணமாக 2 நாள்கள் மீன்வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மீன் வகைகள் ஏற்றுமதி இல்லாததால் ரூ.5 கோடி அளவில் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.
    • தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் வங்க கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். தொடர்ந்து இவர்களின் இதுபோன்ற நடவடிக்கையால் தமிழக மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து, நிம்மதியின்றி தவிக்கின்றார்கள்.

    மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தமிழக மீனவர்கள் பிரச்சினையில் நிரந்தர தீர்வுகாணும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே பேச்சு வார்த்தையின் மூலம் முடிவெடுக்க வேண்டும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பான முறையில் மீன்பிடிக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அவர்களின் எதிர்கால பாதுகாப்பை மத்திய, மாநில அரசுகள் உறுதிசெய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அவர்கள் கச்சத்தீவு நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு 5 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதில் அட்டமால் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவரது விசைப்படகை சிறைபிடித்தனர். படகில் இருந்த ஜான்சன், அருண், முருகன், கிங்ஸ்டன், கிரிட்டன், முருகன், ராரல் மானிக்ஸ், ரிமோட்டன் ஆகிய 8 மீனவர்களை சிறை பிடித்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதேபோன்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெக தாப்பட்டினத்தை சேர்ந்த நடராஜன், கோவிந்தராஜ், சோனையன், சேப்பான், ராமகிருஷ்ணன் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், ரங்கய்யன், அழகிரி முருகேசன், கருப்பையா உள்பட 2 விசைப்படகுகள் மற்றும் 9 மீனவர்களையும் கைது செய்து காங்கேசம் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    ஒரே நாளில் மூன்று விசைப்படகுகள் மற்றும் 17 தமிழக மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள் ளது.

    மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சூறைக்காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்.
    • இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இருந்து மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தது. அவர்களுக்கான மீன்பிடி அனுமதியும் வழங் கப்படவில்லை.

    இதன் காரணமாக 1,650 விசைப்படகும், 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் நான்கு நாட்க ளாக கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந் தன. இந்த நிலையில் இன்று காற்றின் வேகம் குறைந்ததின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்க சென்ற னர். இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது.
    • கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    ராயபுரம்:

    காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த 24-ந்தேதி ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் வேலு உள்பட 9 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.

    கடந்த 26-ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது படகின் என்ஜின் திடீரென பழுதானது. அதனை சரிபார்க்க முயன்றும் முடியவில்லை. இதனால் மீனவர்கள் 9 பேரும் கரைதிரும்ப முடியாமல் படகில் தத்தளித்தனர்.

    மேலும் காற்றின் திசைக்கு ஏற்ப விசைப்படகு நடுக்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் தங்களிடம் இருந்த வயர்லெஸ் மூலம் அருகில் மீன்பிடித்து கொண்டு இருந்த மற்ற தமிழக விசைப்படகுகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுபற்றி ராயபுரத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மீன்வளத்துறை இயக்குனர் பழனிசாமி கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக கடலோர காவல்படையினர் ரோந்து படகு மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காசிமேடு மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்களை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் மீனவர்களின் குடும்பத்தினர் கவலை அடைந்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து 240 கடல் மைல் தூரத்தில் பழுதான படகில் மீனவர்கள் தத்தளிப்பதை அந்தபகுதி வழியாக வந்த சரக்கு கப்பலில் இருந்த ஊழியர்கள் கண்டு பிடித்தனர். அவர்கள் மீனவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உள்ளிட்டவை கொடுத்து உதவினர். இதுபற்றி சரக்கு கப்பல் அதிகாரிகள் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து கடலோரகாவல் படையினர் ரோந்து படகில் விரைந்து சென்று பழுதான விசைப்படகில் இருந்த காசிமேடு மீனவர்கள் 9 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    பின்னர் விசைப்படகை தங்களது படகில் கயிறு மூலம்கட்டி இழுத்தபடி நேற்று இரவு அருகில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்து சேர்ந்தனர். அங்கு காசிமேடு மீனவர்கள் 9 பேரும் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் துறைமுக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    விசைப்படகை சரிசெய்து மீனவர்கள் விரைவில் காசிமேடு திரும்ப உள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.
    • மீன் பிடிக்க சென்றவர்கள் உடனடியாக கரை திரும்பினர்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடி யக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் கடல் பகுதியில் பலத்த காற்று வீசியது.

    இதனால் கடல் சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் இன்று 2-வது நாளாக 5 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    ஒரு சில மீனவர்கள் கரையோரம் மீன்பிடிக்க சென்ற நிலையில் காற்று அதிகமாக வீசியதால் உடனடியாக கரை திரும்பி னார்.

    இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்ப டுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை
    • அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

    நாகர்கோவில் :

    வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை மையம் குமரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    குமரி கடல் பகுதியில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திற்கும், சில நேரங்களில் 65 கிலோ மீட்டர் வேகத்திற்கும் பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதையடுத்து குமரி மாவட்டத்தின் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதையடுத்து மாவட்டம் முழுவதும் இன்று காலையிலும் பரவலாக சாரல் மழை

    நாகர்கோவிலில் காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. தக்கலை, திருவட்டார், குலசேகரம், தடிக்காரன் கோணம், கீரிப்பாறை, குழித்துறை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலையில் மழை பெய்தது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும், அணைப்பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை களுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 18.87 அடியாக உள்ளது. அணைக்கு 614 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையிலிருந்து 584 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 37.90 அடியாக உள்ளது. அணைக்கு 385 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே பல்வேறு பகுதிகளில் பயிர் செய்யப்பட்ட கன்னி பூ அறுவடை பணிகள் முடிவடைந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் கும்பபூ சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.

    சுசீந்திரம், பூதப்பாண்டி பகுதிகளில் நாற்று பாவும் பணி நடைபெற்று வருகிறது. பருவமழையையும் பாசன குளத்தில் உள்ள தண்ணீரை யும் நம்பி விவசாயி கள் சாகுபடி பணியை தொடங்கி யுள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ராமநாதபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது.
    • 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்:

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் இன்று முதல் வருகிற 8-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    இதற்கிடையே ராமநாதபு ரம் மாவட்டத்தின் பிரதான தொழிலான மீன்பிடி தொழில் கடந்த சில தினங்களாக முடங்கியுள்ளது. ஒரு சில மீன் ரகங்களுக்கு போதிய விலையை ஏற்றுமதி நிறுவனங்கள் வழங்காததை கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் மீன்பிடி தொழில் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. ராமேசுவரம் கடல் பகுதியில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசுவதால் மீனவர்கள் இரண்டாம் நாளாக இன்றும் கடலுக்கு செல்லவில்லை.

    இது தொடர்பான எச்சரிக்கையையும் மீன்வளத் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் மீனவர்களுக்கு கடலுக்கு செல்வதற்கான அனுமதி சீட்டும் வழங்கப்படவில்லை. குறிப்பாக ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி, கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8,800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீனவர்கள் மற்றும் அதன் சார்பு தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் வேலையிழந்துள்ளனர். மீன்பிடி தொழில் முடங்கியதால் நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.11 கோடி அளவிலான வர்த்தக இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இயற்கை சீற்ற காலங்களில் படகுகள் சேதம் அடைவதை தடுக்கவும், படகுகளை நிறுத்தி வைக்கவும் ராமேசுவரம் பகுதியில் துறைமுகம் அமைக்க வேண்டும் எனவும், இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் வருமான இழப்பிற்கு மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது.
    • கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    மண்டபம்:

    ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் ஒரு விசைப்படகில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். ராமேசுவரத்தில் இருந்து 5 நாட்டிகல் கடல் தொலைவில் மீனவர்கள் வலைகளை விரித்து மீன் பிடித்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கரைக்கு புறப்பட ஆயத்தமானார்கள்.

    இதற்காக விசைப்படகை இயக்கியபோது திடீரென என்ஜினில் பழுது ஏற்பட்டது. உடனே மீனவர்கள் அதனை சரி செய்ய முயன்றனர். ஆனால் எந்த பலனுமில்லை. இதனால் மீனவர்கள் செய்வதறியாது தவித்தனர். பல மணிநேரம் நடுக்கடலில் மீனவர்கள் படகுடன் தத்தளித்தனர். மற்ற மீனவர்களும் அந்த பகுதியில் வரவில்லை.

    இந்த நிலையில் இந்திய கடலோர காவல்படையினர் அந்த பகுதியில் ரோந்து வந்தனர். தனியாக தத்தளித்து கொண்டிருந்த படகை பார்த்த கடலோர காவல்படையினர் படகின் அருகில் சென்று மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நடந்த விவரத்தை கூறினர். இதையடுத்து கடலோர காவல்படையில் இருந்த சில வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி என்ஜின் பழுதை சரி செய்தனர்.

    இதையடுத்து மீனவர்களின் விசைப்படகு அங்கிருந்து புறப்பட்டு சென்றது. முன்னதாக கடலோர காவல்படையினருக்கு மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print