search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலில் தவறிவிழுந்து மீனவர் சாவு
    X

    கடலில் தவறிவிழுந்து மீனவர் சாவு

    • அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.
    • இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கீழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து மகன் சேகர் (வயது 54).

    மீனவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் சேகர் நேற்று முனாங்காடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அப்பகுதி மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க படகில் சென்றார்.

    அப்பொழுது அலையாத்திகாடுகள் நிறைந்த லகூன் அருகே உள்ள மேல கடைசித்தீவு பகுதி கடலில் படகில் நின்றவாறு வலையை வீசினார்.

    அப்போது சேகர் திடீரென்று தடுமாறி விழுந்து நீரில் மூழ்கினார்.

    இதனைக்கண்ட சக மீனவர்கள் அவரை மீட்டு இடும்பாவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

    ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, மகன் தினேஷ் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் பலியான சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    Next Story
    ×