search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு.
    • சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கி ஆவணங்களை வழங்க கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது வரும் ஜூலை 8ம் தேதிஉத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரிய மேல் முறையீட்டு மனு மற்றும் வங்கி ஆவணங்களை கோரியும் செந்தில் பாலாஜி வழக்கு தொடர்ந்திருந்தார்.

    மேலும், அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்க கோரிய, வழக்கின் விசாரணையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.
    • கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜெயில்களில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என அவர்களது குடும்பத்தினர் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டியிடம் மனு அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து மூத்த அதிகாரிகள் கைதிகளின் குடும்பத்தினர் அளித்த மனுக்களை ஆய்வு செய்தனர். இதில் விடுதலை செய்ய தகுதியான கைதிகள் குறித்த விவரங்களை பட்டியலிட்டு அளித்தனர்.

    இந்த பட்டியல் அமைச்சரவை ஒப்புதலுக்கு பிறகு கவர்னரிடம் அளித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து தெலுங்கானா மாநிலம் கொல்லப்பள்ளி ஜெயிலில் இருந்து 213 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்த கைதிகள் இன்று விடுதலை செய்யபட்டனர். இந்த கைதிகளில் 205 பேர் ஆயுள் தண்டனை 8 பேர் அதற்கு குறைவான தண்டனை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சி.பி.சி.ஐ.டி போலீசார் 16 பேரை கைது செய்தனர்.
    • மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ந் தேதி மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், மற்றும் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் நேற்று வரை 63பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மற்றவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக முதலில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து முதல்கட்டமாக கருணாபுரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜா ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டதை அடுத்து சி.பி.சி.ஐ.டி போலீசார் மெத்தனால் சப்ளை செய்த புதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால், கவுதம், தேவபாண்டலத்தை சேர்ந்த சடையன், ரவி, சேஷசமுத்திரம் செந்தில், மல்லிகைப்பாடி ஏழுமலை உள்பட 16 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டகோவிந்தராஜ் என்கிற கண்ணுக்குட்டி, அவரது மனைவி விஜயா, சகோதரர் தாமோதரன், சேஷசமுத்திரத்தை சேர்ந்த சின்னதுரை, விரியூரை சேர்ந்த ஜோசப் என்ற ராஜாதுவை சேர்ந்த மாதேஷ் , மற்றும் சென்னையை சேர்ந்த சிவக்குமார், பன்சிலால், கவுதம், தேவபாண்டலத்தை சேர்ந்த சடையன், ரவி, சேஷசமுத்திரம் செந்தில், மல்லிகைப்பாடி ஏழுமலை ஆகிய 12 பேரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

    இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது. அதன் பின்னர்சி.பி.சி.ஐ.டி போலீசார் 12 பேரையும் எத்தனை நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்குவார் என்பது தெரியவரும்.

    • மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.
    • போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    மதுரை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினருடன் ஓய்வு எடுக்க கொடைக்கானல் செல்வதற்காக நேற்று காலை மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து மனு கொடுப்பதற்காக கஞ்சா பொட்டலத்துடன் பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாநில செயற் குழு உறுப்பினர் சங்கர் பாண்டி வந்திருந்தார்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, போலீசார் அவரிமிருந்த மனுவை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் அவரை கைது செய்தனர்.

    இதையடுத்து விமான நிலையத்தில் பாதுகாப்பிலிருந்த போலீசாரை ஆபாசமாக திட்டியது, அரசு பணி செய்யவிடாமல் தடுத்தது, வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவேன் என மிரட்டியது, அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தது என்பது உள்ளிட்ட ஆறு பிரிவின் கீழ் மதுரை அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் பணி புரியும் மாதவன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க. நிர்வாகி சங்கர் பாண்டியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

    • விவசாயம் செய்து வருபவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் நீர் நிலைப்பாதைகளில் கொட்டி இருக்கும் தேவையற்ற கழிவுகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன.
    • பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாததால், பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். இதில் சிலர் குப்பைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாசில்தார் ஜீவா மற்றும் அதிகாரிகளை சந்தித்து கரைப்புதூர் ஊராட்சி குப்பை கிடங்கை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அப்புறப்படுத்தவில்லை. எனவே உடனடியாக குப்பை கிடங்கை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கரைப்புதூர் - உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள நீர்நிலை முழுவதிலும் குப்பைகள், கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். ஊருக்குள் இருக்கும் அனைத்து கழிவுகளையும் கொண்டு வந்து மேற்படி நீர் நிலைப்பாதையில் கொட்டி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதி மிகவும் அசுத்தம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் குடியிருப்போருக்கும் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டு நோய்வாய்ப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

    விவசாயம் செய்து வருபவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் நீர் நிலைப்பாதைகளில் கொட்டி இருக்கும் தேவையற்ற கழிவுகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாததால், பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் குப்பைகளை அகற்ற வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கரைப்புதூர் பஞ்சாயத்து நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் 8 வாரங்கள் ஆகியும் குப்பைகளை அகற்றாமல், மீண்டும் அதே இடத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். எனவே உயர்நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.
    • தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தேர்தல் நடத்தி முடிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அலுவலகம் தேர்தலையொட்டி பூட்டப்பட்டிருந்தது.

    தேர்தல் அட்டவணை வெளியான மார்ச் 16-ந்தேதி முதல் மாவட்ட கலெக்ர்கள் இவற்றை பூட்ட உத்தரவிட்டனர். அதன்படி இன்னும் இந்த அலுவலகங்கள் பூட்டப்பட்டு கிடக்கிறது. நகராட்சித் தலைவர் அலுவலகம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு ஒதுக்கப்பட்ட தனி அலுவலகங்களும் பூட்டியே கிடக்கிறது.

    தற்போது தேர்தல் முடிந்து 1 வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்றுவதற்காக எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறந்து விட வேண்டும் என்று 234 தொகுதியிலும் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

    தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இ-மெயில் மூலம் இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மீது ஓரிரு நாளில் இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
    • தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது.

    மதுபான கொள்கை ஊழல் வழக்கில் தனது கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பான வழக்கு இன்று டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, கெஜ்ரிவாலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "முதல்வரின் கைது மக்களவை தேர்தல் நடைபெறும்போது சம வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படை கோட்பாடுக்கு எதிரானது. அமலாக்கத் துறையின் நடவடிக்கை நியாயம் அல்ல" என குறிப்பிட்டார்.

    அப்போது, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் "டெல்லி முதல்வர் கைதில் எவ்வித சட்ட விரோதமும் இல்லை. போதுமான ஆதாரங்கள் இருந்ததன் அடிப்படையிலேயே அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

    அரசியலில் இருப்பவர் தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு கொலை செய்தால் அவரை கைது செய்யாமல் இருக்க முடியுமா? முறைகேட்டில் கெஜ்ரிவாலின் தொடர்பை விசாரணையின் முடிவில்தான் தெரிந்துகொள்ள முடியும்.

    தேர்தலை காரணம் காட்டி யாரும் தப்பிக்க முடியாது" என வாதிடப்பட்டது.

    இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்வர்ண காந்தா ஷர்மா, மனு மீதான தீர்ப்பை மறுதேதி குறிப்பிடால் ஓத்திவைத்தார்.

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
    • ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    • ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    • மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    இந்த புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    கோவையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டு வரும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மைதானத்துக்கு செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டை நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அவர் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை 9.20 மணிக்கு கோவை வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் வந்து செல்லும் இடங்களில் திரளாக கூடி நின்று வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும் செம்மொழி பூங்கா நடைபெறும் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை போலீசாருடன் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதியில் சந்தை கடை தெரு மற்றும் குமரக்கோயில் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றோம்.

    எங்களுக்கு சொந்த வீட்டு மனை இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றோம். மேலும் கூலி வேலை செய்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றோம்.இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தி லும், குடிசை மாற்று வாரியத்திலும், வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலனில்லை.ஆகையால் தமிழக முதல மைச்சரால் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • மண்ணச்சநல்லூரில் கலெக்டர் காரை பொதுமக்கள் வழி மறித்தனர்
    • செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூரில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார்.அப்போது அப்பகுதி மக்கள் அவரின் காரை வழிமறித்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், காந்தி நகர், பி எஸ் ஏ நகர் பகுதியில் நீண்டகாலமாக சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பாரதிநகரில் தனி நபர் ஒருவரின் காலி மனையில் மிகப்பெரிய தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.இந்த டவர் அமைக்கப்பட்டால் இப்பகுதி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் டவர் அமைக்கும் இடம் அருகே குழந்தைகளின் விளையாட்டு மைதானம் உள்ளது.எனவே செல்போன் டவர் இப்பகுதியில் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    ×