search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனு"

    • சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டி.
    • ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக்கூட்டணியில் அங்கம் வகிக்கும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் ஓ. பன்னீர்செல்வம் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர் நவாஸ் கனி, அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் மேலும் 4 சுயேட்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஓ.பன்னீர் செல்வம் என்ற பெயரில் 5 வேட்பாளர்கள் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட இருப்பதால் ராமநாதபுரம் வாக்காளர்களுக்கு கடும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

    இந்நிலையில், ராமநாதபரத்தில் போட்டியிடும் 5 ஓ.பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

    இதன்மூலம், ராமநாதபுரத்தில், 5 ஓ.பன்னீர்செல்வங்களும் சுயேச்சையாக சுயேச்சை சின்னத்தில் போட்டியிடுவது உறுதியானது.

    • ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.
    • ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு.

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

    சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, ஜாமின் கோரி 2வது முறையாக மனு தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

    • மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    கோவை:

    தி.மு.க. அரசு பொறுப்பேற்றது முதல் மக்கள் நலப்பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன்அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளது.

    இந்த புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (18-ந் தேதி) கோவையில் தொடங்கி வைக்கிறார். கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி அரங்கத்தில் காலை 9.30 மணிக்கு நடக்கும் விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர் அவர் பொதுமக்களிடம் மனுக்களை வாங்குகிறார்.

    கோவையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்த பின்னர் மாநிலம் முழுவதும் இந்த திட்டம் செயல்பாட்டு வரும். மக்களிடம் இருந்து வாங்கப்படும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை காந்திபுரத்தில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட உள்ள மைதானத்துக்கு செல்கிறார். அங்கு செம்மொழி பூங்காவுக்கான அடிக்கல் நாட்டை நாட்டி பணிகளை தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் அவர் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசுகிறார்.

    இந்த விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நாளை காலை 9.20 மணிக்கு கோவை வருகிறார். முதலமைச்சர் வருகையை முன்னிட்டு தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் வந்து செல்லும் இடங்களில் திரளாக கூடி நின்று வரவேற்பு அளிக்க முடிவு செய்துள்ளனர்.

    மேலும் செம்மொழி பூங்கா நடைபெறும் மைதானத்தில் 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கோவையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கோவை போலீசாருடன் நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்ட போலீசாரும் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை கேட்பு கூட்டம் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.பரங்கிப்பேட்டை பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர். அந்த மனுவில், பரங்கிப்பேட்டை பகுதியில் சந்தை கடை தெரு மற்றும் குமரக்கோயில் தெற்கு தெரு பகுதியில் 40 ஆண்டு காலமாக வசித்து வருகின்றோம்.

    எங்களுக்கு சொந்த வீட்டு மனை இல்லாமல் தெருக்களில் வசித்து வருகின்றோம். மேலும் கூலி வேலை செய்து வருவதால் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றோம்.இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பரங்கிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தி லும், குடிசை மாற்று வாரியத்திலும், வருவாய் துறை அலுவலகத்திலும் மனு அளித்தும் பலனில்லை.ஆகையால் தமிழக முதல மைச்சரால் வீட்டு மனை மற்றும் வீடு இல்லாத வர்களுக்கு வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    • மண்ணச்சநல்லூரில் கலெக்டர் காரை பொதுமக்கள் வழி மறித்தனர்
    • செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்தனர்

    மண்ணச்சநல்லூர்,

    மண்ணச்சநல்லூரில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரதீப்குமார் வருகை தந்தார்.அப்போது அப்பகுதி மக்கள் அவரின் காரை வழிமறித்து மனு கொடுத்தனர்.அந்த மனுவில், மண்ணச்சநல்லூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர், காந்தி நகர், பி எஸ் ஏ நகர் பகுதியில் நீண்டகாலமாக சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.பாரதிநகரில் தனி நபர் ஒருவரின் காலி மனையில் மிகப்பெரிய தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் பொக்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.இந்த டவர் அமைக்கப்பட்டால் இப்பகுதி கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும் டவர் அமைக்கும் இடம் அருகே குழந்தைகளின் விளையாட்டு மைதானம் உள்ளது.எனவே செல்போன் டவர் இப்பகுதியில் வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

    • தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர்.
    • பாழடைந்த கட்டிடங்களை இடித்து பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் வாகன நெரிசல்கள் குறைந்து விடும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள குறும்பலாபேரி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜசேகர பாண்டியன் என்பவர் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரசித்தி பெற்ற தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வெளியூரில் இருந்து தினமும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். மேலும் இக்கோவிலை சுற்றி அதிக அளவில் வணிக நிறுவனங்கள் உள்ளன.

    எனவே இங்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நான்கு ரத வீதிகளில் சாலை யிலேயே நிறுத்துவதால் இப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகின்றது.

    இப்பிரச்சினைக்கு தீர்வு காண இப்பகுதியில் பார்கிங் வசதி இல்லை. கோவிலுக்கு எதிராக உள்ள 2427 சதுர மீட்டர் கொண்ட நிலமானது தொடக்கத்தில் கோவிலுக்கு பாத்தியப்பட்ட நிலமாக இருந்து பின்னர் ஆங்கிலே யர் ஆட்சி காலத்தில் பொதுப்பணித்துறையால் கையகப்படுத்தப்பட்டு அதில் தென்காசி முதன்மை சார்பு நீதிமன்றம் மற்றும் முதன்மை மாவட்ட உரிமை யியல் நீதிமன்றம் இயங்கி வந்தது. நீதிமன்றங்கள் தற்போது புதிய கட்டிடம் கட்டப்பட்டு வேறு இடத்திற்கு மாற்றப் பட்டு விட்டது. இதனால் அந்த நிலம் வெற்றிடமாக உள்ளது.

    எனவே மேற்படி நிலத்தில் உள்ள பாழடைந்த கட்டிடங்களை இடித்து அகற்றி அந்த நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைத்தால் கோவிலை சுற்றி ஏற்படும் வாகன நெரிசல்கள் முற்றிலுமாக குறைந்து விடும்.

    அதே நிலத்தில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க வேண்டுமென மாவட்ட கலெக்டருக்கும், இந்து அறநிலைய துறைக்கும் மனு கொடுத்திருந்தேன்.

    மனுவிற்கு அந்த இடத்தில் நீதிபதிகள் குடியிருப்பு கட்ட அனுமதி அளித்து அரசின் நிதி ஒதுக் கீட்டிற்காக காத்திருப்பதாக பொதுப்பணித்துறையினர் பதில் அளித்துள்ளனர். குற்றாலத்திலோ, தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவல கம் அருகில் கட்டப்படயி ருக்கும் மாவட்ட நீதிமன்றம் அருகிலோ நீதிபதிகள் குடியிருப்பு கட்டினால் உகந்ததாக இருக்கும். கோவில் முன்பு உள்ள அந்த நிலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கார் பார்க்கிங் அமைக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது:-

    விழுப்புரம் மாவட்டம் ஆமூர் கிராமத்தை ச் சேர்ந்த சுமார் 150- க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேலூர் கிராம எல்லையில் சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் நாங்கள் நெல், கரும்பு, உளுந்து உள்ளிட்ட பயிர்களை பயிர் செய்து வருகிறோம். இந்நிலையில் எங்களது விவசாய நிலங்களுக்கு செல்லும் பொது பாதையை ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியாமல் ஏரியில் ஒத்தையடி பாதையில் வந்து செல்லும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். மேலும் பொதுப் பாதையை அகற்றவில்லை என்றால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.

    • விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துவதாக வேதனை
    • உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டுகோள்

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று நடந்தது.

    இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் சு.பழனிசாமி தலைமையில் விவசாயிகள் கையில் முட்டைகோசை ஏந்தியபடி வந்து மனு கொடுத்தனர். அவர்கள் கொடுத்து மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவை மாவட்டத்தில் குறிப்பாக தொண்டாமுத்தூர் பகுதியில் தீத்திப்பாளையம், குப்பனூர், மாதம்பட்டி, கரடிமடை, பூலுவப்பட்டி, தென்கரை, சென்னனூர், மத்திபாளையம், நாதே கவுண்டன்புதூர், இருட்டுப்பள்ளம் செம்மேடு, இக்கரை போளுவாம்பட்டி, தேவராயபுரம், ஜாகீர்நாயக்கன்பாளையம், தெ ன்னமநல்லூர், தொண்டாமுத்தூர், தாளியூர், நரசிபுரம் போன்ற பகுதிகளில் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக விவசாயிகள் முட்டைக்கோஸ் சாகுபடி செய்து வருகிறார்கள்.

    தென்மேற்கு பருவமழை பொய்த்த நிலையிலும், பல்வேறு பருவநிலை மாற்றங்களாலும், காய்கறி பயிர்கள் உரிய நேரத்திற்கு பயிரிட முடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு விவசாயிகள் ஆளாகி வருகிறார்கள்.

    இந்நிலையில் முட்டைகோஸ் பயிரிடும் விவசாயிகள் நிலைமை நாளுக்கு நாள் சரிவை சந்தித்து கொண்டு வருகிறது. குறிப்பாக முட்டை கோஸ் 1 ஏக்கருக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் நாற்றுகள் வரை நாற்று பண்ணையில் இருந்து ஒரு நாற்று 90 பைசா வீதத்தில் வாங்கி நடுகிறார்கள். ஏக்கருக்கு 6 டன் முதல் 8 டன் வரை விளைச்சல் இருக்கும்.

    தற்போது கிலோ ரூ.3 முதல் ரூ.6 வரை விற்கப்படுகிறது. விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை செலவு செய்து வரும் நிலையில், இந்த விலை சரிவு விவசாயிகள் மத்தியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

    எனவே, தமிழக அரசு விவசாயிகளிடம் இருந்து நேரடியாக முட்டைகோஸ் கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும். தோட்டக்கலைதுறை மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கணக்கீடு செய்து ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

    விலை சரிவு காலங்களில் பிற மாவட்டங்களுக்கு முட்டைகோஸ் ஏற்றுமதி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும். உள்ளூர் முட்டைகோஸ்க்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இடுப்பொருட்கள் மானிய விலையில் வழங்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மேலும், விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்திற்கு கொண்டு வந்த முட்டைகோஸ்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி சென்றனர். 

    • லாந்தை ெரயில்வே சுரங்கப்பாதையை மேம்பாலமாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை அளித்தனர்.
    • மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக மத்திய நிதிய மைச்சர் நிர்மலா சீதாரா மன் வருகை தந்தார். அப்போது திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் லாந்தை கிராம பொதுமக்கள் சார்பில் கிராம தலைவர் தங்கவேல் அளித்த கோரிக்கை மனுவில் கூறியி ருந்ததாவது:-

    லாந்தை, கண்ணணை, பெரியதாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திருப்பனை என ஐந்து கிராமங்களை உள்ளடக்கி, சுமார் 600 குடும்பங்களைக் கொண்ட 2,500-க்கும் மேற் பட்ட மக்கள் பயன்படுத்தும் இந்த ஒரு வழிச் சாலையில் தான் தற்போது ெரயில்வே சுரங்கப்பாதை அமைய பெற்றி ருக்கிறது. இந்த கிராமங்களை நகரத்துடன் இணைக்க வேறு எந்த பாதையும் இல்லை.

    மேலும் மேற்கில் 6 கி.மீ. தூரத்திலும், வடமேற்கில் 10 கி.மீ. தூரத்திற்கு அப்பாலும் தெற்கில் 7 கி.மீ. அளவில் இருந்து கிழக்கு நோக்கி வரும் மழை நீர் ராமநாதபுரம் பெரிய கண்மாயின் தென்கலுங்குக்கு சென்று கடலில் கலக்கும் ஆற்று வழித்தடக் கால்வாயை மறைத்து தான் தடுப்பணை போல தான் இந்த சுரங்கப் பாதை அமைந்திருக்கிறது.

    ெரயில்வே தண்டவாளத் தின் இருபுறமும் வரும் உபரிநீர் நேராக சென்று கடலில் கலப் பதை தடுக்கும் விதமாக தடுப் பணை போல் இந்த பாலம் அமைந்துள்ளது. பாலத் தின் இரு முகப்புகளும் இரு வாக னங்கன் ஒன்றாக ஒரே நேரத் தில் கடந்து செல்ல இயலாத வகையில் குறுகலாக அதாவது வெறும் 15 அடியிலிருந்து 20 அடி தான் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படு கிறது. தேசிய நெடுஞ்சா லைக்கும், ெரயில்வே தண்டவா ளத்திற்கும் இடையே மிக குறைந்த 30 மீட்டருக்குள் தூரம் இருப்பதால் மேற்கில் இருந்து வரும் தண்ணீர் முழுவதும் அங்கேயே தேங்கி விடுகிறது. இதனால் சுரங்கப்பாதையில் இருந்து 100 மீ. தூரத்திற்கு மற்றும் இருக்கும் மெக்கா நகர் 60 வீடுகளும், செய்யது அம் மாள் பொறியியல் கல்லூரியும் நீரில் மிதக்கிறது.

    மேற்கண்ட ஐந்து கிராமங் களை சுற்றிலும் கிழக்கில் பெரிய கண்மாய் கலுங்கும், தெற்கில் திருப்பனை கண்மாய், மேற்கில் லாந்தை கண்மாய் கலுங்கின் ஆற்று கால்வாயும் மற்றொரு தெற்குப் பகுதியில், பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி கண்மாயிகளும், வடக்கில் ராமநாதபுரம் பெரிய கண்மாய் அமைந்திருப்பதால் மாற்று வழித்தடமோ, சாலையோ இல்லை. எனவே இந்த சுரங் கப்பாதையில் தான் பள்ளி வாகனங்கள், டெம்போக்கள், ஆட்டோ, விவசாய பொருட் களை எடுத்துச் செல்லும் லாரி கள், இருசக்கர வாகனங் கள், அவசரத் தேவைக்கு ஆம்பு லன்ஸ், நகரப்பேருந்து என இந்த வழியில் தான் செல்கிறது.

    சிறிய மழை பெய்தால்கூட சுற்றியுள்ள அனைத்து வழித–டங்களில் இருந்தும் தண்ணீர் வந்து சுரங்கப்பாதைக்குள் தேங்குவதால் மழைநீரை வெளியேற்ற 6 மணி முதல் 7 மணி நேரம் வரை ஆகிறது. அதுவரை இருசக்கர வாகனம் உட்பட எந்தவித போக்குவரத்து இல்லாமல் ஊருக்குள்ளேயே அந்த பகுதி மக்கள் முடங்கும் நிலை உள்ளது. மேலும் 7 கீ.மீ தொலைவில் உள்ள ராமநாத புரம் நகரத்திற்கும் பிற ஊர்க ளுக்கும் செல்ல முடியாமல் எவ்வித தொடர்பின்றி தீவு போல ஆகிவிடுகிறது.

    பிற மாவட்டங்களை போல இல்லாமல் பூலோக ரீதியாக கடற்கரை பகுதி என்பதாலும் அனைத்து கண்மாய்களின் உபரிநீர் வந்து சேரும் கடைநிலைப் பகுதியாக இருப்பதாலும் பாலம் அமைந்து இருப்பது தாழ்வாகவும் அதன் தண்ணீர் வெளியேரும் பகுதி உயர்வாக இருப்பதாலும் பெரிய கண்மாய் கலுங்கு திறந்தால் பாலத்தை முழ்கடிக் கும் அளவுக்கு தண்ணீர் வரும் பகுதி என்பதாலும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தண் ணீரை வெளியேற்ற இயல வில்லை.தொடர்ந்து மேற்கண்ட கிராம மக்கள் பெரும் துயரங்க ளையும், துன்பங்களை யும் சந்தித்து வருவதால் அன்றாட வாழ்க்கையே பெரும் பாதிப் புக்கு உள்ளாகிறது.

    மேலும் நெடுஞ்சாலைத் துறை நான்குவழி சாலை அமைக்க இந்த பாலம் அமைந்து இருக்கும் பகுதியை யும் கையகபடுத்தி உள்ளார்கள். அதனை தொடர்ந்து இந்த பாலத்திற்கு நேரே உள்ள லாந்தை காலணி பகுதியில் உள்ள 30 வீடுகளையும் கைய கப்படுத்தி உள்ளனர். இதனால் இந்த மக்களின் வாழ்வாதாரமும் கேள்வி குறியாக உள்ளது. இவ்வாறு கையகப்படுத்தி உள்ளதால் எதிர்காலத்தில் நான்குவழி சாலை வந்தால் இந்த பாலத்திலிருந்து கிராம மக்கள் வெளியேரும் பொழுது விபத்து ஏற்படும் பகுதியாக மாறும் சூழல் உள்ளது.எனவே சமூகம் தயவு கூர்ந்து இப்பி ரச்சனையில் சிறப்பு கவனம் செலுத்தி சுரங்கபா தைக்கு மாற்றாக ஆள் உள்ள கேட்டா கவோ அல்லது மேம்பாலமா கவோ தரம் உயர்த்தி கொடுத்து பெரும்பான்மையாக விவசாய பெருங்குடி மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு அளித்து உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுடன் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தரணி ஆர்.முருகேசன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில சேவா துணைத்தலைவர் பிரபாவதி, விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் முகவை சிவா (எ) சிவசாமி உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

    • பெரியாறு கால்வாயை சாத்தியார் அணையுடன் இணைக்க வேண்டும்.
    • கலெக்டரிடம் பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணையை முல்லைப் பெரியாறு கால்வாயுடன் இணைக்க வலியுறுத்தியும், அணையை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டியும் பா.ஜ.க. மாநில விவசாய அணி துணை தலைவர் முத்துராமன்ஜி, புறநகர் மாவட்ட தலைவர் ராஜ நரசிம்மன், மாவட்ட பொது செயலாளர் கண்ணன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் தமிழ்முரசு மற்றும் நிர்வாகி கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    இதுகுறித்து விவசாய அணி மாநில துணைத் தலைவர் முத்துராமன்ஜி கூறியதாவது:-

    உங்கள் தொகுதியின் ஸ்டாலின் முதலமைச்சர் நிகழ்ச்சியின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ஆட்சிக்கு வந்தவுடன் மதுரை மாவட்டத்தின் முதல் கையெழுத்து முல்லைப் பெரியாறு கால்வாய்- சாத்தையாறு அணை இணைப்பு திட்டம் என கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. திட்டத்தை விரைவில் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் விரைவில் மாநில தலைவர் அண்ணாமலை தலைமை யில் மாபெரும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். சாத்தியார் அணையை தூர்வார வேண்டும்.

    சிறுமலை பாதுகாக்கப் பட்ட வனப்பகுதியில் அதிகப்படியான மரங்கள் நடுவதற்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும். சாத்தையாறு அணை மதகு பழுதை விரைந்து சரிசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோ ரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் 20-வது வார்டில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மட்டும் மகளிர் உரிமை கிடைத்துள்ள தாகவும் ஆனால் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு தகுதி இருந்தும் மகளிர் உரிமை தொகை கிடைக்க வில்லை என கூறி 20-வது வார்டு கவுன்சிலர் ரம்யா ராஜாவுடன் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திண்டிவனம் தாசில்தார் அலுவல கத்தில் தாசில்தாரி டம் மனு கொடுக்க வந்தனர். அப்போது தாசில்தார் இல்லாததால் திண்டிவனம் வருவாய் ஆய்வாளர் டோமிஸ் சேவியரை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர்.
    • கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது.

    தென்காசி:

    ஆலங்குளம் அருகே உள்ள குத்தப்பாஞ்சான் ஊராட்சி பரும்பு நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி கேயன் என்பவரது மகன் திருமாறன். (வயது3). தனது தாயுடன் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த திருமாறன் கலெக்டரை சந்தித்து மனு ஒன்றை வழங்கி னான். அதில் கூறியிருப்பதாவது:-

    குத்தப்பாஞ்சான் ஊராட்சி, பரும்புநகர் பகுதியில் உள்ள அங்கன்வாடியில் ஆரம்ப கல்வி பயின்று வருகிறேன். இந்த அங்கன்வாடி மையத்தில் சுமார் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி பயின்று வருகின்றனர். எங்கள் பரும்பு நகர் பகுதியில் பரும்புநகர் மெயின் ரோடு வாறுகால் அமைக்கும் பணி நடைபெறு கிறது. இந்த வாறுகால் வழியாக கிராமத்தில் உள்ள கழிவுநீர் அனைத்தும் அங்கன்வாடி அருகே தேக்கும் வகையில் கட்டமைப்பு பணி நடைபெறுகிறது. கழிவுநீர் தேக்குவதால் அங்கு துர்நாற்றம் வீச கூடும். கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உருவாகும் இதனால் அங்கன்வாடியில் பயிலும் இளம் குழந்தைகளுக்கு தொற்று நோய் மற்றும் உயிர்கொல்லி நோய் வர அதிகமான வாய்ப்புகள் உள்ளன. எனவே குழந்தை களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் அமைக்கும் வறுகால் பணியினை தடைசெய்து மாற்றுமுறையில் வேறு இடத்தில் கழிவு நீர் செல்லும் வகையில் பணியினை மேற்கொள்ள நடவடிக்கை வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    ×