என் மலர்
நீங்கள் தேடியது "நெல்லை"
- இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
- திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும்.
நெல்லை:
கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியான மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காஞ்சீபுரத்தில் தொடங்கி வைத்தார்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட இல்லத்தரசிகளின் வங்கி கணக்கில் 1 நாளுக்கு முன்னதாக நேற்றே ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்ட இல்லத்தரசிகள் கூறிய கருத்துக்கள் வருமாறு:-

சுதா (நெல்லை புதுப்பேட்டை)
நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அரசால் வழங்கப்படும் மகளிர் உரிமை தொகை எனது வங்கி கணக்கில் நேற்றே வந்து சேர்ந்துவிட்டது. இதற்கான குறுந்தகவல் எனது போனுக்கு வந்ததும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இந்த தொகை எனது மகன்களின் டியூசன் கட்டணத்திற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். மசாலா பொருட்கள் வாங்கி கொள்வேன். அரசுக்கு மிக்க நன்றி.

கவிதா (செங்கோட்டை)
எனது கணவர் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். ரூ.1000 உரிமைத்தொகை எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கணவர் தனி ஆளாக வேலைக்கு சென்று சிரமப்பட்டு வருகிறார். கியாஸ் சிலிண்டர் வாங்குவதற்கு இந்த தொகை எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த தொகை எனக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தி உள்ளது.

சண்முக சுந்தரி (செங்கோட்டை)
ரூ.1000 உரிமை தொகைக்காக முன்னோட்டமாக எனது வங்கி கணக்கில் 10 பைசா ஏற்றப்பட்ட குறுந்தகவல் வந்தது. இன்று முதல் தொடங்கப்படும் என அறிவித்த நிலையில் நேற்றே எனக்கு பணம் ஏறிவிட்டது. எனது கணவர் வெளியூரில் தங்கி பணிபுரிகிறார். 2 கைக்குழந்தைகளை வைத்து சிரமப்பட்டு வருகிறேன். திடீர் மருத்துவ தேவைக்கு இந்த ரூ.1000 உரிமை தொகை மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
சாந்தா (நெல்லை சந்திப்பு)

அரசின் இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இன்று முதல் தொடங்கும் என அறிவித்த நிலையில் நேற்றே எனது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு விட்டது. நான் இன்று காலையிலேயே அந்த தொகையில் ரூ.300-க்கு எனது போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டேன். இப்போது கடைக்கு சென்று மளிகை பொருட்கள் வாங்க போகிறேன். மாதத்தில் 10 நாட்களுக்கு எங்கள் குடும்பத்திற்கு மளிகை பொருட்கள் வாங்க இது உதவியாக இருக்கும்.
ஜீவா (ஆலங்குளம்)

பெண்களுக்கு ஒரு பெருமையை ஏற்படுத்தும் விதமாக இந்த திட்டம் அமைந்துள்ளது. மாதந்தோறும் சிறு சேமிப்பு தொகையாக இது உள்ளது. மாதந்தோறும் 5-ந்தேதி முதல் 8-ந்தேதிக்குள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டால் மிகவும் உதவியாக இருக்கும். அதே நேரத்தில் பணத்தை பெற வங்கிக்கு அலைவதை தவிர்த்து அதற்கு எளிய வழிமுறை ஏதேனும் நடைமுறைப்படுத்த முடியுமா என்பதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.
செல்வி (கீழப்பாவூர்)

எனது கணவர் ஆட்டோ ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வருகிறார். எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த கலைஞர் மகளிர் உதவித்தொகை கிடைத்ததனால் ஒரு மாதத்தில் 15 முதல் 20 நாட்கள் வரையில் தேவைப்படும் மளிகை பொருட்களை வாங்குவதற்கு இந்த தொகை மிகவும் உதவியாக இருக்கும்.
முனீஸ்வரி (தூத்துக்குடி திரேஸ்புரம்)

எனக்கு கலைஞரின் உரிமை தொகை கிடைக்க பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வீட்டின் சிறு சிறு அவசர தேவைகளுக்கு உதவிகரமாக இருக்கும் இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
மேரி பிரான்சிஸ் (தூத்துக்குடி குரூஸ்புரம்)

மகனின் பராமரிப்பில் வீட்டில் இருந்து வரும் எனக்கு கலைஞரின் ரூ.1,000 உரிமை தொகை கிடைக்க பெற்றதால் சுய தேவைகளுக்கு பிறரை எதிர்பார்க்காமல் செலவு செய்ய உதவும் என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன்.
ராதா (தூத்துக்குடி ஆரோக்கியபுரம்)

இட்லி வியாபாரம் செய்யும் எனக்கு ரூ. 1,000 கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்காக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கி றேன். இதன் மூலம் எனது பேத்தியின் படிப்புக்கும், தினசரி செலவிற்கும் உதவி கரமாக இருக்கும்.
- வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
- களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும்.
நெல்லை:
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பாக நெல்லை மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட நகர்ப்புற கோட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் கே.டி.சி. நகரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
புகார்களுக்கு உடனடி நடவடிக்கை
நெல்லை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க செயற்பொறியாளர் காளிதாசன் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நிகழ்ச்சியில் நெல்லை நகர்ப்புற கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். குறைதீர்க்கும் முடிந்தவுடன் மின் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை மின் பொறியாளர் சந்திரசேகரன் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை
மின்துறை அமைச்சர் உத்தரவின் படி வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய பணிகளான பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின் விநியோகம் வழங்கும் மின் பாதையில் உள்ள மின்கம்பங்கள், மின்சாதனங்கள், முறையாக தொடர் ஆய்வு மேற்கொண்டு பழுதான மின் கம்பங்கள், தாழ்வான மின்பாதைகள், பழுதான மின்சாதனங்களை உடனுக்குடன் மாற்ற வேண்டும்.
விவசாய மின் இணைப்பில் சுயநிதி அடிப்படையில் விவசாயிகள் மின் இணைப்பு வேண்டி விண்ணப்பம் அளித்தால் உடனடியாக ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க வேண்டும். மின்வாரியத்திற்கு எந்த நிலையிலும் வருவாய் இழப்பீடு ஏற்படாமல் இருப்பதற்கு தொடர்ச்சியாக மின் இணைப்புகளை ஆய்வு செய்து மின்வாரிய விதிமுறை களுக்கு முரணாக இருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் இழப்பீட்டை தடுக்க வேண்டும்.
பணிகளை மேற்கொள்ளும் களப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு நெறிமுறைகளுடன் பணிபுரிய தொடர் பாதுகாப்பு வகுப்புகளை அந்தந்த பிரிவு அலுவலகத்தில் நடத்த வேண்டும். நகர்ப்புற கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் மின் நுகர்வோர்கள் கேட்கின்ற வினாக்களுக்கு உரிய பதிலை கனிவுடன் தெரிவிக்க அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பொதுமக்கள் மின்சாரம் சம்பந்தமாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால் மின்னகம் மின் நுகர்வோர் சேவை மையம் தொலைபேசி எண் 94987 94987- ஐ தொடர்பு கொண்டு மின்சாரம் சம்பந்தமான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
- அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.பி. முத்துகருப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி,
மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜான்சி ராணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசு ப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் பள்ளமடை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் வசந்தி, கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை மாணவரணி செயலாளர் புஷ்பராஜ் ஜெய்சன், இளைஞர் இளம் பெண்கள் பாசறை தலைவர் ஆறுமுகம், செயலாளர் முத்துப்பாண்டி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், பகுதி செயலாளர்கள் காந்தி வெங்கடாசலம், சண்முக குமார், திருத்து சின்னத்துரை, ஜெயபாலன், வட்டச் செயலாளர்கள் பாறையடி மணி, பக்கீர் மைதீன், நத்தம் வெள்ளபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
- 10-ம் திருநாளில் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.
நெல்லை:
பாளை மார்க்கெட் செல்வ விநாயகர் கோவில் தெரு அய்யா வைகுண்ட சுவாமி தத்துவ தவ தர்மபதி யில் 76-வது திருக்காட்சி திரு விழா இன்று தொடங்கியது.
இவ்விழா இன்று தொடங்கி 11 நாட்கள் நடைபெறுகிறது.
முதல் நாள் திருவிழா வையொட்டி இன்று அதி காலையில் அய்யாவுக்கு பால் பணிவிடை, திருக்கொடி பட்டம் வீதி வலம் வந்து திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உகப்பெருக்கு பணிவிடை, சூரிய வாகனத்தில் அய்யா பவனி, ஊர் தர்மம் எடுத்தல் ஆகிய நிகழ்ச்சி கள் நடை பெற்றது. 2-ம் நாள் திருநாளில் குமரி மாவட்டம் நாஞ்சில் அசோகன் சின்னத்தம்பி தலைமையிலான அய்யாவழி இசை பட்டிமன்றம் நடை பெறுகிறது. அதனை தொடர்ந்து 8-ம் திருநாளில் வெள்ளை குதிரை வாகனத்தில் அய்யா பவனி வந்து கலி வேட்டையாடல் உகப் பெருக்கு பணிவிடை ஏக மகா சிறப்பு அன்ன தர்மம் ஆகியவை நடைபெறுகிறது .
10-ம் திருநாளில் குமரி மாவட்டம் சாமிதோப்பு சிவசந்திரனின் அய்யாவழி அருளிசை வழிபாடு நடைபெறுகிறது.
அதைதொடர்ந்து 11-ம் திருநாளில் குமரி மாவட்டம் சுண்டப்பற்றி விளை ஜெகநாதனின் அய்யா வழி வில்லிசை கச்சேரி ஆகியவை நடைபெறுகிறது.இவ் விழாவி ற்கான ஏற்பாடு களை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- கல்லூத்து ஏ.டி.காலனியில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
- பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.
நெல்லை:
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து ஏ.டி.காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.
நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் வி.கே.கணபதி, எஸ்.ராதா, பஞ்சாயத்து தலைவர் ஆ.செல்லப்பா, துணைத்தலைவர் ஒளிவுலெட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து குழுவினர் கேட்டறிந்தனர்.
- இந்த மாத இறுதிக்குள் பாலத்தில் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அரசு திட்டப்பணிகள் குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று உறுப்பினர்கள் 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டனர்.
உயர்மட்ட பாலம் கட்டும் பணி
இதில் உறுப்பினர்கள் ராஜேஷ்குமார், ஜவா ஹிருல்லா , மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இன்று நெல்லையை அடுத்த பொன்னாக்குடியில் நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள், அதே சாலையில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதுமான வகுப்பறைகள், கழிப்பறை உள்ளிட்ட மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டனர். மேலும் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் அடிப்படை வசதி தேவைகள் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்பு திட்டப்பணிகள் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் கடந்த 2009-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கடந்த ஆட்சி காலங்களில் பணிகள் தொய்வு ஏற்பட்டிருந்தது. தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது.
இதுவரை 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. ஒரு பாலம் கட்டுமானப் பணி முடிவடைந்துள்ளது. அதில் இந்த மாத இறுதிக்குள் போக்குவரத்து செல்வதற்கான நடவடிக்கை தொடங்கப்படும். எஞ்சியுள்ள நதிநீர் இணைப்பு பணிகள் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும்.
கல்லணை அரசுப்பள்ளி
தொடர்ந்து, நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பள்ளியில் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு மாணவிகளின் சேர்க்கை குறைந்துள்ளது. இனிமேல் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை குறையாத அளவிற்கு பள்ளிகளில் தேவையான அடிப்படை வசதி களை மேம்படுமங மப்படும். மேலும், பள்ளி அருகில் உள்ள கால்வாயில் அசுத்தமாக இருக்கிறது. அதனையும் சரிசெய்து, பள்ளியில் அதிக கழிப்பறை வசதி, வகுப்பறை வசதி கட்டி கொடுத்து, அனைத்து மாணவிகளும் பயன்பெறும் வகையில் வசதி ஏற்படுத்தி தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள குழுவின் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்ட கலெக்டர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டு, தனித்தனியாக வெளியில் அமைந்துள்ள துறைகள் அனைத்தையும் பொதுமக்களின் நலன்கருதி ஒரே இடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
கூடுதல் கட்டிடம்
அரசு விருந்தினர் மாளிகையில் கூடுதலாக 10 அறைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது. ரூ.92 கோடியில் நெல்லை அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கல்லணை பள்ளி மாணவிகள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த தேவையை மனுவாக எழுதி மதிப்பீட்டு குழுவினரிடம் வழங்கினர்.
- கடல் அலையில் சிக்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்.
- மாலையில் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
நெல்லை:
உவரி அருகே நவ்வலடி பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்களான ராகுல், முகேஷ், ஆகாஷ் ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி பலியானார்கள். தகவல் அறிந்ததும் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் வீடுகளுக்கு நேற்று காலை நேரில் சென்றார். அவர்களின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கடல் அலையில் சிக்கி பலியான 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கும் தமிழக அரசு நிவாரண நிதியாக தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும். ஏரி, கடல் போன்ற நீர்நிலைகளுக்கு செல்லும்போது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் இல்லாமல் செல்லக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு பாடங்களையும், போதனைகளையும் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கல்வித்துறை முயற்சி எடுக்க வேண்டும்" என்றார்.
பின்னர் மாலையில் மாணவர்கள் 3 பேரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நவ்வலடி கடற்கரை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் ஊர்வலமாக நடந்து சென்ற முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, 3 பேரின் உடல்களுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் வள்ளியூர் அருண்குமார், வள்ளியூர் பேரூர் கழக துணை செயலாளர் கருப்பசாமி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரசேகர், ஒன்றிய தலைவர் ஆவுடை மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
- பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
- ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
நெல்லை:
மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.
வருகிற 20-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி கேட்ட போது போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை யொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவில்லை. எனவே ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
திட்டப் பணிகள் குறித்து ஆய்வு
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணி கள் குறித்து ஆய்வு செய்வ தற்காக வந்த இந்த குழுவில் எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், சிவகுமார், பரந்தாமன், ராஜேஷ்குமார், ஜவாஹிருல்லா, அப்துல் வஹாப் ஆகியோர் வந்திருந்தனர். நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன், சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலையில் அந்த குழுவினர் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
மேலப்பாளையம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் அடிப்படை வசதிகள் மற்றும் போதுமான மருந்துவ வசதிகள் குறித்து மதிப்பீட்டுக் குழுதலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் உறுப்பி னர்கள் பார்வையிட்டதோடு, பாம்பு கடி, நாய்கடி உள்ளிட்ட சிகிச்சைக்கான மருந்துகள் இருப்பு குறித்து பார்வையிட்டார்கள்.
நான்கு வழிச்சாலைப் பணிகள்
மேலும் இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் திட்டம் மற்றும் மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் கீழ் இதயம் காப்போம் மருத்துவ பெட்டகங்களை ஆய்வு மேற்கொண்டதோடு, சிகிச்சைக்காக வந்த நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சை வழங்குவது குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து, வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலையில் நான்கு வழிசாலை விரிவாக்க பணிக்காக பாளையங்கால்வாய் விரிவாக்கம் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.
குலவணிகர்புரத்தில் "தோழி" பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதியினையும், அவ்விடுதியில் பயோமெட்ரிக் முறையில் கதவு திறக்கப்படுவது குறித்தும் பார்வையிட்டு, போதுமான இடவசதி உள்ளதா? என்பதையும் பணிபுரியும் மகளிர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து பாளை ஏ.ஆர். லைனில் உள்ள வணிகவரி இணை ஆணையர் அலுவ லகத்தினை பார்வையிட்டு, இணைய வழியாக ஒவ்வொரு சோதனை சாவடிகளில் சரக்கு போக்குவரத்து சரியான முறையில் செல்லும் நடைமுறை கள் குறித்து பார்வையிட்டனர்.
சித்தா கல்லூரி
மேலும், அரசினர் சித்தா கல்லூரி மாணவிகள் ஆதிதிராவிடர் விடுதியினை நேரில் பார்வையிட்டு, அங்கு மாணவிகளுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரம் குறித்தும், சுகாதார முறையில் கழிப்பிட வசதி, தங்குமிடம் உள்ளிட்ட அடிப் படை வசதிகள் இருக்கிறதா? என்பது குறித்தும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் ஜான்ஸ் பள்ளி அருகே உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திலும், நெல்லை அரசு மல்டி ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மற்றும் அவரது சகோதரியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து ரெட்டியார்பட்டி அரசு பள்ளியை ஆய்வு செய்தனர். பின்னர் சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றில் இருந்து பிரிந்துள்ள பாளை யங்கால்வாயில் பார்வையிட்ட போது அமலை செடிகள் அதிகளவில் அடர்ந்திருந்தது. அதனை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளை சரிசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து ஆதிதிராவிடர் நல விடுதியில் சமையலுக்கு கொடுக்கப்பட்ட சமையல் எந்திரங்களை பயன்படுத்தாமல் உள்ளனர். நாங்குநேரியில் நடந்த சம்பவம் போல் இனியும் வராமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .
ரூ.652 கோடியில் 3-ம் கட்டப்பணி
தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தை மேம்படுத்தும் வகையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்பும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 6 மாத காலமாக அந்த கோப்பை கிடப்பில் போட்டுள்ளார். இது வேதனை அளிக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் திட்டப்பணிகள் அனைத்தும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் 4 கட்டங்களில் நடைபெற்று வரும் நிலையில் அதில் தற்போது 2 கட்டப்பணி முடிந்து உள்ளது. ரூ.652 கோடி மதிப்பில் 3-ம் கட்ட பணிக்கு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு பணிகள் கொடுக்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் இன்னும் ஓராண்டு காலத்திற்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பாளை சித்தா கல்லூரி மகளிர் விடுதியில் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்தபடம்.