search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்
    X

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளியையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகள்.

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி கொண்டாட்டம்

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    நெல்லை:

    பாளை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளி மாணவ, மாணவிகள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்துப் பேசியும், அழகாக நடனமாடியும், பல்வேறு மாநிலங்களிலும் இப்பண்டிகை கொண்டாடும் விதத்தை அந்தந்த மாநிலத்தின் உடை அணிந்து அழகாக விளக்கம் அளித்தனர்.

    மேலும் விபத்தில்லாத, மாசற்ற, பசுமை தீபாவளியைக் கொண்டாடுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

    Next Story
    ×