search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததானம்"

    • பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
    • உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.

    ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.

    ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்

    உண்மை:

    ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்

    உண்மை:

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.

    ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்

    உண்மை:

    ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.

    பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

    வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.

    • பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்
    • 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்

    பெரம்பலூர்,

    திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை பெரம்பலூர் அருகேயுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் நாட்டு நலபணித்திட்ட மாணவர்களின் சார்பாக இரத்த தான முகாம் நடைபெற்றது.முகாமை ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சிவசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது,தானத்தில் சிறந்தது இரத்த தானமெனவும், இப்போதுள்ள இளைஞர்கள் தங்களின் குருதியை தானம் செய்வதன் மூலம் அவர்களின் கொடையுள்ளம் பெருகும், மற்றும் உடலிலுள்ள இரத்த அணுக்கள் மீண்டும் உற்பத்தியாகும். எனவே அனைவரும் தகுந்த இடைவெளியில் குருதி தானம் செய்ய வலியுறுத்தினார்.முன்னதாக துவக்க முகாமில் கல்லூரி நிறுவங்களின் செயலாளர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார் இம்முகாமில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர். கல்லூரி முதல்வர் மாரிமுத்து பேராசிரியர்கள், பேராசிரியைகள் முகாம் ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

    • ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
    • ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்த தானத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜே.எஸ்.சாகுல் ஹமீது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார். ரத்த தானத்தை வலியுறுத்தி பல்வேறு வகை பிரச்சாரங்கள் நடக்கிறது. ஒருமுறை ரத்த தானம் செய்வதால் 4 உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும் போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி ஆட்டோவில் ராமேசுவரத்திலிருந்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சென்னை வரை தனது பயணத்தை தொடங்கினார்.

    • ராஜபாளையம் அருகே ரத்ததான முகாம் நடந்தது.
    • தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே தளவாய்புரம் அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் 2-ம் ஆண்டு ரத்த தான முகாம் நடந்தது. ராஜ பாளையம் தங்கப்பாண்டி யன் எம்.எல்.ஏ., ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்த னர்.

    பின்னர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், ரத்த தான முகாமை நடத்திய அரிசி ஆலை உற்பத்தி யாளர்கள் சங்க நிர்வாகி களை பாராட்டி னார். பின்னர் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல் போன்ற மக்கள் சேவையை மேற்கொள்ள வேண்டுமெனவும், தங்கள் தொழில் வளர்ச்சிக்கு முதல்-அமைச்சரும், நமது மாவட்ட வருவாய்த்துறை அமைச்சரும், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்ச ரும், நானும் உறு துணையாக இருப்போம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் தலைமை மருத்துவர் கருணாகரபிரபு, பேரூர் சேர்மன் ஜெய முருகன், துணை சேர்மன் விநாயக மூர்த்தி, அரிசி ஆலை உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் ரத்ததான முகாம்-மரக்கன்று வழங்கும் விழா நடந்தது.
    • ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் இந்திய எல்லையை காத்த மாவீரன் ஹவில்தார் பழனியின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம், மரக்கன்று வழங்கும் விழா கழுகூரணி கிராமத்தில் நடந்தது. இந்தியன் ரெட் கிராஸ் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

    வீர மரணம் அடைந்த ஹவில்தார் பழனி உருவ படத்திற்கு அவரது மனைவி வானதி தேவி, அவரது குழந்தைகள் பிரசன்னா, திவ்யா, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

    அதனைத்தொடர்ந்து ரத்ததான முகாம், மரக்கன்றுகள் வழங்குதல், மரம் நடுதல் என பல்வேறு நிகழ்வுகள் நடை பெற்றன. இந்த அனைத்து நிகழ்வுகளையும் ராமநாதபுரம் மாவட்டம் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் ரமேஷ், யூத் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளர் வள்ளி விநாயகம், இணை அமைப்பாளர் ஆனந்த் மற்றும் வள்ளுவன் அறக்கட்டளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். ராமநாதபுரத்தில் அவரின் வீரத்தினையும், தேச பற்றினையும் நினைவு கூறும் வகையில் நினைவு மண்டபம் அல்லது நினைவு ஸ்தூபியினை இந்த மூன்றாவது ஆண்டிலாவது தமிழக அரசு கட்டி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.
    • ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தாலுகா பிகேடி நர்சிங் ஹோமில் 'உலக ரத்தக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியை ராய்டிரஸ்ட் இன்டர்நேஷனல் ஏற்பாடு செய்திருந்தது.

    இதில் ஆக்சிஸ் வங்கி திருத்துறைப்பூண்டி கிளை, பி. கே. டி. நர்சிங் ஹோம், த.மு.மு.க திருத்துறைப்பூண்டி நகர ஒன்றியம், தமிழ்நாடு குருதிக் கொடை ஒருங்கிணைப்பாளர் நல சங்கம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருத்து றைப்பூண்டி கிளை, திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம், தமிழக அமைப்பு சாரா தெருவோர சுமை சிறு வியாபாரிகள் முன்னேற்ற தொழிற் சங்கம் மற்றும் கிங்ஸ் இன்டிரியர் வுட் வோர்க்ஸ் முத்துப்பேட்டை போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தின.

    இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் தலைமை வகித்தார்.

    நகர்மன்ற செயலாளர் கவிதா பாண்டியன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருத்துறைப்பூண்டி ஆக்சிஸ் வங்கி மேலாளர் பிரேம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    முன்னாள் நகர் மன்ற தலைவரும் நகரச் செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான ஆர்.எஸ்.பாண்டியன் , திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத் தலைவர் கே.எஸ்.செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் சீமான் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    த.மு.மு.க ஒன்றிய செயலாளர் அன்சாரி, நகர தலைவர் இக்பால்ராஜா , நகர செயலாளர் நிஜாம், நகர பொருளர் முகமது யூசுப், நகர இளைஞரணி செயலாளர் பைசல், கடியாச்சேரி உறுப்பினர்கள் சாதிக் அலி மற்றும் அபுபக்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    இதில் 50-க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர். ரத்ததான முகாமி ற்காக மருத்துவமனையை வழங்கிய குழந்தை மருத்துவர் ராஜாவை அனைவரும் பாராட்டினர்.

    அம்மாலு, அனுசியா தலைமையிலான ஸ்ரீ வெங்கடேஸ்வரா ரத்த வங்கி ஊழியர்கள் 7 பேர் தானமாக வழங்கப்பட்ட ரத்தத்தை சேகரித்தனர்.

    முடிவில் மனித நேய மக்கள் கட்சி ஒன்றிய செயலாளர் செய்யது யூசுப் நன்றி கூறினார்.

    • சிவகாசியில் நடந்த ரத்ததான விழாவில் கலெக்டர், எம்.பி. பங்கேற்றனர்.
    • பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    விருதுநகர்

    உலக குருதி கொடை யாளர் தினத்தை முன்னிட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி பகுப்பாய்வு மையம் துவக்க விழா மற்றும் குருதி கொடையாளர் தினவிழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தலைமை தாங்கினார்.

    இதில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் ரத்த பகுப்பாய்வு உபகரணங் களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் நிறுவனத்தினர் சி.எஸ்.ஆர் நிதியில் வழங்கினர்.

    குருதி கொடையாளர் களுக்கு கேடயத்தினை மாணிக்கம் தாகூர் எம்.பி. வழங்கி வாழ்த்தி பேசினார்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தொழிலதிபர் ஏ.பி.செல்வரா ஜன், சிவகாசி மேயர் இன்பம், ஒன்றிய துணைத்தலைவர் விவேகன்ராஜ், ஆணையா ளர் சங்கரன், விருதுநகர் முன்னாள் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம், மாநகர காங்கிரஸ் தலைவர் சேர்மத்துரை, தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் மாரனேரியில் அமைந்துள்ள தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டது. 

    நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி அனைவரும் ரத்ததானம் வழங்கி ஜாதி வேற்றுமைகளை கலைய வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.

    திருத்துறைப்பூண்டி:

    உலக ரத்ததானதினத்தை முன்னிட்டு திருத்துறை பூண்டி ராய் டிரஸ்ட் ரத்ததான குழு,ஆலத்தம்பாடி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருத்துறைப்பூண்டி நகராட்சி இணைந்து நடத்திய மாபெரும் ரத்ததான விழிப்புணர்வு முகாம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு ராய் டிரஸ்ட் நிறுவனத் தலைவர் முனைவர் துரை ராயப்பன் வரவேற்று, ரத்த தானத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தலைமை தாங்கி ,அனைவரும் ரத்ததா னம் வழங்கி ஜாதி வேற்று மைகளை கலைய வலியுறுத்தி சிறப்புரையாற்றினார்.டாக்டர்.கௌரி கலைச் செல்வம், வட்டார மருத்துவ அலுவலர் உலக ரத்த தான உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.நகராட்சி பொறியாளர் மனோகர், சுகாதார ஆய்வாளர் அருண்குமார், ரொட்டரியன்.ராஜ்நா ராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நகரமன்ற மேலாளர் அனைவருக்கும் நன்றி கூறினார்.இதில் நகராட்சி மற்றும் வட்டார மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
    • வட்டார மருத்துவ அலுவலர் ரத்த தானம் செய்தவர்களை பாராட்டி ரத்த தானம் குறித்து எடுத்துக் கூறினார்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி ரத்த தானம் குறித்து எடுத்துக் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் ரத்த தானம் செய்தவர்கள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் ,வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • நெல்லை ஷிபா ஆஸ்பத்திரியில் ரத்ததான முகாம்.
    • 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் ஜூன் 14-ந் தேதி உலக ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    இதை முன்னிட்டு நெல்லை ஷிபா மருத்துவமனையில் ரத்ததான கொடையாளர் சங்கம் சார்பில் 30-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

    ஷிபா ரத்ததான கொடையாளர் சங்கத்தின் நிறுவனர் ஹாஜி எம்.கே.எம்.முகம்மது ஷாபி முகாமை தொடங்கி வைத்து கூறியதாவது:-

    பொதுமக்களுக்கு ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று இந்த முகாம் நடைபெறுகிறது.

    மேலும் ஷிபா மருத்துவமனை சார்பில் ரத்த வகைகளை கண்டறியும் முகாம்கள் தொடர்ந்து நடத்தி ரத்த கொடையாளர்களை அதிகப்படுத்தும் பணியும் நடைபெறும்.

    18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை ரத்ததானம் செய்யலாம்.

    முகாமில் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் முகம்மது அரபாத் உட்பட பலர் ரத்ததானம் செய்தனர்.

    • உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்ததானம் கல்லூரி மாணவர்கள் செய்தனர்.
    • ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளனர,

    திருப்பூர்:

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாக உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்தனர். முன்னதாக மருத்துவர் வசந்தகுமார்இரத்த தானம் ஏன் வழங்க வேண்டும், யாரெல்லாம் ரத்த தானம் வழங்கலாம் என்று மாணவர்களுக்கு விளக்கிகூறினார். மேலும் தானம் செய்யும்இரத்தம் பல உயிர்களை காப்பாற்ற பயன்படுகிறது. ரத்த தானம் செய்ய மாணவர்கள் முன்வரவேண்டும் என்றார்.

    அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் கூறுகையில் , ஆண்டுதோறும் அலகு -2 சார்பாக ரத்த தானம் வழங்குவதை கொள்கையாகவே வைத்துள்ளோம். முகம் தெரியாத உயிரை காப்பாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார். பின்பு மாணவ பிரதிநிதி பாலசுப்பிரமணியன் தலைமையில் 17 யூனிட்ரத்த தானம் வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    ×