search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்ததான முகாம்
    X

    ரத்ததான முகாம்

    • குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.
    • சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் குடியரசு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் பல்லடம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது.

    மாவட்டத்தலைவர் அப்துல் கய்யூம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், மருத்துவ அணி செயலாளர் அப்துல் பாசித், முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் பாரூக் வரவேற்றார்.

    ரத்ததான முகாமை பொங்கலூர் ஒன்றிய சேர்மன் வக்கீல் எஸ்.குமார், தி.மு.க. பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கணபதிபாளையம் சிவசுப்பிரமணியம், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 50க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

    Next Story
    ×