search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blood donation"

    • கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர்.
    • அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து நடிகர் சூர்யா பாராட்டினார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர், சூர்யா. இவர் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உள்ளது. மேலும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் 500 கோடி வியாபாரம் ஆகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ் படங்களை தொடர்ந்து கூடிய விரைவில், இந்தி படங்களிலும் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், நடிகராக அறிமுகமாவதற்கு முன்பே ஒரு தயாரிப்பாளராகவும் களமிறங்கிவிட்டார். இவர் தயாரிப்பில், அக்ஷய் குமார் நடிப்பில் 'சூரரை போற்று' படத்தின் ரீமேக்காக வெளியான சர்பராஸ் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா, தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம் செய்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறார். அதாவது ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என, கடந்த ஆண்டு சூர்யா எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, இப்போது இரத்த தானம் செய்துள்ளார்.

    நடிகர் சூர்யாவின் 49-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், நேற்றைய தினம் 400-க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

    ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார். கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கிய நிலையில் அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார். சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    • 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.
    • ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது.

    விபத்தின்போதோ, அறுவை சிகிச்சையின்போதோ, வேறு ஏதேனும் வகையில் ஒருவருக்கு ரத்த இழப்பு ஏற்படும்போது அவரது உயிரை காக்கவும், இழந்த ரத்தத்தை ஈடு செய்யவும் பிறரிடம் இருந்து ரத்தம் தானமாக பெறப்படுகிறது. உயிரை காக்கும் அருங்கொடையான ரத்த தானம் செய்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 14-ந் தேதி ரத்ததான தினம் அனுசரிக்கப்படுகிறது.

    அன்றைய நாளில் மட்டும் ரத்த தானம் செய்வதற்கு ஆர்வம் காட்டாமல், ஆரோக்கியமான மனிதர் 3 மாதங்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்யலாம்.

    மனித உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் உள்ளது. அதில் 470 மில்லி லிட்டர் வரை ரத்தத்தை தானமாக வழங்கலாம். ரத்த தானம் செய்வதால் உடலுக்கு பாதிப்போ, பலவீனமோ ஏற்படாது. ஏராளமான நன்மைகளைத்தான் வழங்கும். அவற்றுள் சில...


    1. மாரடைப்பை தடுக்கும்

    உடலில் இரும்புச்சத்து அதிகமாக குவிந்து விட்டால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தொடர்ந்து ரத்த தானம் செய்து வருவது உடலில் இரும்பு சத்தை குறைக்கவும், அதனை சீராக நிர்வகிக்கவும் உதவும். எனவே அடிக்கடி ரத்த தானம் செய்வது மாரடைப்பு அபாயத்தை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

    2. புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

    உடலில் அதிக அளவு இரும்புச்சத்து புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும். ரத்த தானம் செய்வது இரும்பு அளவை பராமரிக்க உதவும். புற்றுநோய் செல்கள் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். அதிலும் அடிக்கடி ரத்த தானம் செய்வது கல்லீரல், வயிறு, நுரையீரல், பெருங்குடல் மற்றும் தொண்டை புற்றுநோய் போன்ற முக்கியமான புற்றுநோய்களை நெருங்க விடாது.

    3. கல்லீரலை காக்கும்

    ரத்த ஓட்டத்தில் கலந்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை நீக்குவதே கல்லீரலின் முக்கியமான செயல்பாடாகும். ஆனால் கல்லீரலில் ஆக்சிஜனேற்றப்பட்ட இரும்புச்சத்து அதிகம் இருந்தால் அதனால் திறம்பட செயல்பட முடியாது. மேலும் அதிகப்படியான இரும்புச்சத்து செல் சேதத்துக்கும் வழிவகுக்கும். அதனால் கல்லீரலுக்கு பாதிப்பு ஏற்படும். ரத்த தானம் செய்வதன் மூலம் உடலில் இருக்கும் அதிகப்படியான இரும்பை அகற்றுவதோடு கல்லீரலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.

    4. உடல் எடை குறைப்பு

    உடல் எடையை குறைப்பதிலும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்து வதிலும் ரத்த தானம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது 450 மில்லி லிட்டர் ரத்த தானம் செய்வது உடலில் 650 கலோரிகளை எரிக்கச் செய்யும். வழக்கமான உடற்பயிற்சி மற்றும் தினசரி உணவில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் உடல் எடையை சீராக பராமரிக்கலாம். மீண்டும் ரத்தம் உற்பத்தியாகுவதற்கும் வழிவகை செய்துவிடலாம்.

    5. புதிய ரத்த அணு உற்பத்தி

    ரத்த தானம் செய்வது புதிய ரத்த அணுக்களின் உற்பத்தியையும் ஊக்குவிக்கும். ரத்த தானம் செய்ததும் 48 மணி நேரத்திற்குள் எலும்பு மஜ்ஜையின் உதவியுடன் உடல் அமைப்பு துரிதமாக செயல்படத் தொடங்கும். 30 முதல் 60 நாட்களுக்குள் ரத்த சிவப்பணுக்கள் மாற்றப்பட்டு புதிய ரத்த அணுக்கள் உருவாக தொடங்கிவிடும்.

    • இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம்.
    • இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவது.

    உலகம் முழுக்க இன்று சர்வதேச இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான இரத்தம் சேமிக்கப்படுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கட்டணமின்றி தங்களின் குருதியை தானம் செய்து பலரின் உயிரை காக்கும் பரிசை வழங்குவோருக்கு பாராட்டு தெரிவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்.

    வலிமையான சுகாதார கட்டமைப்பில் போதுமான அளவுக்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்படும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை சேமித்து வைப்பதே இரத்த சேவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரத்த தான நாளுக்கான கருப்பொருள் மாறிக் கொண்டே இருக்கும்.

    கருப்பொருள் எதுவாயினும், மக்களிடம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நாளின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஆகும். இந்த ஆண்டு இரத்த தானம் நாளின் 20 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.

    சர்வதேச இரத்த தான நாளில் கடந்த ஆண்டுகளில் உலகளவில் இரத்தம் தானம் செய்து வருவோருக்கு நன்றி தெரிவிக்கவும், மருத்துவர்கள் மற்றும் தானம் வழங்குவோரை பெருமைப்படுத்தவும் உலக சுகாதார மையம் திட்டமிட்டுள்ளது.

    இதுமட்டுமின்றி இரத்தம் தானம் செய்வதில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு, வரும் காலங்களில் இரத்த தானம் செய்வதை மேலும் துரிதப்படுத்தவும் உலக சுகாதார மையம் உறுதியேற்கிறது.

    • ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒருமுறை ரத்த தானம் செய்ய முடியும்.
    • ஒரு ஆண்டிற்கு சுமார் 6 முறை ரத்த தானம் செய்ய முடியும்.

    ரத்த தானம் செய்வதில் பல வழிகள் உள்ளன. நீங்கள் ரத்தத்தை தானம் செய்யலாம் அல்லது ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா, சிவப்பு ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லேட்கள் போன்ற ரத்த கூறுகளை மட்டும் தானம் செய்யலாம்.

    ரத்த தானம் செய்யும்போது அதில் உள்ள எந்திரமானது ரத்தத்தை பல்வேறு கூறுகளாக பிரித்து அவற்றை உடலுக்கு வழங்குகிறது. ஒவ்வொரு ரத்த நன்கொடையை செய்யும்போதும் அதை எவ்வளவு பாதுக்காப்பாக செய்ய முடியும் என்பதுதான் மிகவும் முக்கியம்.

    ஒவ்வொரு 56 நாட்களுக்கு ஒருமுறையும் நீங்கள் முழுமையாக ரத்த தானம் செய்ய முடியும். எனவே ஒரு ஆண்டிற்கு சுமாராக 6 முறை ரத்த தானம் செய்ய முடியும் என நியூயார்க் ரத்த மையத்தின் தலைமை மருத்துவ அதிகாரியான புரூஸ் சாச்சிஸ் கூறுகிறார். அதே போல நீங்கள் ரத்த பிளேட்லேட்கள் மற்றும் பிளாஸ்மாவை அதிகமாக தானம் செய்யலாம்.

    யாரெல்லாம் ரத்த தானம் செய்ய கூடாது?

    ரத்த தானம் செய்வதற்கு குறைந்தது 18 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். ஆனால் ஆரோக்கியமான உடல் நிலையை கொண்டிருக்கும் பட்சத்தில் 16 முதல் 17 வயதுடையவர்கள் பெற்றோர் அல்லது பாதுக்காவலரின் ஒப்புதலுடன் நன்கொடை அளிக்கலாம். ஆனால் 75 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மருத்துவரிடம் கடிதம் பெற்ற பிறகே ரத்த தானம் செய்ய முடியும்.

    அமெரிக்க மக்கள் தொகையில் சுமார் 38 சதவீதம் மக்கள் ரத்த தானம் செய்யும் தகுதியை பெற்றுள்ளனர். சில தற்காலிகமான காரணங்கள் கூட ரத்த தானம் செய்வதை தடுக்கின்றன.

    கர்ப்பிணிகள்

    கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுகிறது. மேலும் அவர்களுக்கு கர்ப்ப காலங்களில் லேசான ரத்த சோகை ஏற்படுவதாலும் அவர்கள் ரத்த தானம் செய்வதில் நிறைய சிக்கல்கள் உள்ளன, எனவே அவர்கள் ரத்த தானம் செய்ய முடியாது. அவர்கள் குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்கு பிறகே ரத்த தானம் செய்யும் தகுதியை பெறுகின்றனர்.

    மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள்

    சில மருந்துகளை உட்கொள்பவர்கள் தற்காலிகமாக ரத்த தானம் செய்யும் தகுதியை இழக்கின்றனர். அவர்களை எடுத்துக்கொள்ளும் மருந்தை பொறுத்து காலம் மாறுப்படும். எடுத்துக்காட்டாக கூமாடின் அல்லது வார்ஃபிலோன் போன்ற மருத்துகளை நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால் அந்த மருந்தை நிறுத்திய ஏழு நாட்களுக்கு பிறகே நீங்கள் ரத்த தானம் செய்ய முடியும்.

    ஆனால் தடிப்பு தோல் அழற்சிக்கான வாய்வழி ரெட்டினாய்டு சிகிச்சையான சோரியாடேன் செய்தவர்கள் மூன்று ஆண்டுகள் கழித்தே ரத்த தானம் செய்ய முடியும்.

    • பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
    • உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.

    ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.

    ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்

    உண்மை:

    ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்

    உண்மை:

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.

    ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்

    உண்மை:

    ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.

    பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

    வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.

    • காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
    • இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்த தானம் முகாம் நடந்தது.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ரத்ததான முகாமுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.

    புதுவை மாநில பொறுப்பாளர் ஜோஸ்வா ஜெராட், முன்னிலை வகித்தார்.

    முகாமை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், மாநில பொதுச்செயலாளர்கள் திருமுருகன், சந்திரிகா, இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், சுந்தர், அயலக பிரிவு தலைவர் பரந்தாமன்,

    இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் தமிழரசன்,மாநில பொதுச் செயலாளர், சத்ய நாராயணன், செயலா ளர்கள், வினோத், சித்தானந்தம், உதயா, மனோஜ், அத்வானி, மாவட்ட தலைவர்கள், பிரகாஷ், அய்யப்பன், கார்த்திகேயன், அஷ்ரப் அலி, தொகுதி தலைவர்கள், ராஜேஷ், சுரேஷ் ராஜ், சரத் பாபு, கண்ணன், வீர மணிகண்டன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா,மற்றும் இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரிக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது வழங்கப்பட்டது.
    • கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் அரசு மருத்துவமனைக்கும், மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் வருடம் தோறும் ரத்த தானம் வழங்கி வருகிறது. கடந்த 2022-

    23-ம் கல்வியாண்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அதிக அளவு ரத்த தானம் வழங்கி ரத்தம் தேவைப்பட்ட நோயாளி களுக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்து உயிர் காத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அதிக அளவு ரத்த தானம் செய்த சிறந்த கல்லூரி என்ற கோப்பையை அன்னை பாத்திமா கல்லூரிக்கு வழங்கி கவுரவித்தது. கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    சிறந்த முறையில் மாணவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர் முனியாண்டி, ரத்த தான முகாம் நடத்த உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, சகாயவாணி, விக்னேசுவரசீமாட்டி, மணிமேகலை, கதிரேசன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் ரத்த தானம் செய்த மாணவ-மாண வியர்கள் பகவதிக்கண்ணன், நற்குணபாண்டியன், மணிக்குமார், வீரமுருகன், கிருஷ்ணகுமார், உதய பிரகாஷ், சுதாகர், சிந்து பைரவி, ராஜசுபத்தாரா, மாயாண்டி, கார்த்திக், தங்கராஜ், உமாமகேசுவரன், வேல்முருகன் உள்ளிட்டோ ரையும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு மாண வர்களை ஊக்கப்படுத்திய மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியையும், கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா மற்றும் முதல்வர் டாக்டர். அப்துல் காதிர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகம் ஆனந்தூர் கிளை மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு ம.ம.க. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டார் கலந்து கொண்டு வரவேற் றார். ரத்ததான முகாமில் ம.ம.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு த.மு.மு.க. தொண்டி மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தலைமை பிரதிநிதி ஜெயி னுல் ஆபுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முனீஸ்வரி, ஆர்.எஸ்.மங்க லம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார்
    • ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். 7 நாள் சிறப்பு முகாமில்

    என்.எஸ்.எஸ். உதய தினத்தையொட்டி பள்ளி நாட்டு நலப் பணித்திட்டமும் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவருமான நேரு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர். மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன், ஜிப்மர் ரத்த வங்கி டாக்டர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

    • வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சேவா வாரம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதன் ஒரு அங்கமாக புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நகர மாவட்ட பா.ஜனதா சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார்.

    ரத்ததான முகாமை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில பொதுச்செயலாளர் அமல்ராஜ், மாநில சமூக ஊடகப்பிரிவு சார்லஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளர் சத்யா, அரவிந்த், ராஜ்குமார் துணைத் தலைவர் மகேந்திரன், செயலாளர் விஷ்ணு, வேல்முருகன், ராஜ்மோகன், தொகுதி தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    மத்திய அரசால் ஆயுஷ்மான் பவ என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சி யாக அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் செய்வ தன் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும்,

    ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், பாகுபாடு இன்றி எந்த உயிரிழப்பும் ஏற்படாத இருக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    மேலும் நம் நாட்டில் உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு புதிய வாழ்வு அளிக்க தங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படுத்த கூடிய எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வதாக உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
    • ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்த தானத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜே.எஸ்.சாகுல் ஹமீது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார். ரத்த தானத்தை வலியுறுத்தி பல்வேறு வகை பிரச்சாரங்கள் நடக்கிறது. ஒருமுறை ரத்த தானம் செய்வதால் 4 உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும் போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி ஆட்டோவில் ராமேசுவரத்திலிருந்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சென்னை வரை தனது பயணத்தை தொடங்கினார்.

    ×