search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "blood donation"

    • பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
    • உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.

    ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.

    ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்

    உண்மை:

    ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்

    உண்மை:

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.

    ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்

    உண்மை:

    ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.

    பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

    வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.

    • காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
    • இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்திரா காந்தி நினைவுதினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் ரத்த தானம் முகாம் நடந்தது.

    புதுவை அரசு ஆஸ்பத்திரியில் நடந்த ரத்ததான முகாமுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார்.

    புதுவை மாநில பொறுப்பாளர் ஜோஸ்வா ஜெராட், முன்னிலை வகித்தார்.

    முகாமை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன், ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.

    வக்கீல் பிரிவு தலைவர் மருதுபாண்டியன், மாநில பொதுச்செயலாளர்கள் திருமுருகன், சந்திரிகா, இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ், வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆறுமுகம், சுந்தர், அயலக பிரிவு தலைவர் பரந்தாமன்,

    இளைஞர் காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் தமிழரசன்,மாநில பொதுச் செயலாளர், சத்ய நாராயணன், செயலா ளர்கள், வினோத், சித்தானந்தம், உதயா, மனோஜ், அத்வானி, மாவட்ட தலைவர்கள், பிரகாஷ், அய்யப்பன், கார்த்திகேயன், அஷ்ரப் அலி, தொகுதி தலைவர்கள், ராஜேஷ், சுரேஷ் ராஜ், சரத் பாபு, கண்ணன், வீர மணிகண்டன், ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் கென்னடி, ஜனா,மற்றும் இளைஞர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரிக்கு சிறந்த குருதிக் கொடையாளர் விருது வழங்கப்பட்டது.
    • கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஆலம் பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப் பணித்திட்டம் சார்பில் அரசு மருத்துவமனைக்கும், மீனாட்சி மிஷன் மருத்துவ மனைக்கும் வருடம் தோறும் ரத்த தானம் வழங்கி வருகிறது. கடந்த 2022-

    23-ம் கல்வியாண்டில் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு அன்னை பாத்திமா கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அதிக அளவு ரத்த தானம் வழங்கி ரத்தம் தேவைப்பட்ட நோயாளி களுக்கு தகுந்த நேரத்தில் உதவி செய்து உயிர் காத்துள்ளனர்.

    அதன் அடிப்படையில் அதிக அளவு ரத்த தானம் செய்த சிறந்த கல்லூரி என்ற கோப்பையை அன்னை பாத்திமா கல்லூரிக்கு வழங்கி கவுரவித்தது. கோப்பையை கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பேராசிரியர் முனியாண்டி பெற்றுக்கொண்டார்.

    சிறந்த முறையில் மாணவர்களுக்கு ரத்த தானம் செய்வதற்கு ஊக்கம் கொடுத்து வழிகாட்டியாக அமைந்த பேராசிரியர் முனியாண்டி, ரத்த தான முகாம் நடத்த உறுதுணையாக இருந்த பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, சகாயவாணி, விக்னேசுவரசீமாட்டி, மணிமேகலை, கதிரேசன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    இதே போல் ரத்த தானம் செய்த மாணவ-மாண வியர்கள் பகவதிக்கண்ணன், நற்குணபாண்டியன், மணிக்குமார், வீரமுருகன், கிருஷ்ணகுமார், உதய பிரகாஷ், சுதாகர், சிந்து பைரவி, ராஜசுபத்தாரா, மாயாண்டி, கார்த்திக், தங்கராஜ், உமாமகேசுவரன், வேல்முருகன் உள்ளிட்டோ ரையும் ரத்த தான முகாமில் கலந்து கொண்டு மாண வர்களை ஊக்கப்படுத்திய மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் பாண்டியையும், கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா மற்றும் முதல்வர் டாக்டர். அப்துல் காதிர் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    • த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா பங்கேற்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகம் ஆனந்தூர் கிளை மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு ம.ம.க. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டார் கலந்து கொண்டு வரவேற் றார். ரத்ததான முகாமில் ம.ம.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமிற்கு த.மு.மு.க. தொண்டி மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தலைமை பிரதிநிதி ஜெயி னுல் ஆபுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முனீஸ்வரி, ஆர்.எஸ்.மங்க லம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி சான்றிதழ் வழங்கினார்
    • ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் என்.எஸ்.எஸ். 7 நாள் சிறப்பு முகாமில்

    என்.எஸ்.எஸ். உதய தினத்தையொட்டி பள்ளி நாட்டு நலப் பணித்திட்டமும் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியும் இணைந்து ரத்ததான முகாம் மற்றும் ஜோதி கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமி, உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வும் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தின் தலைவருமான நேரு ஆகியோர் கலந்து கொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். மேலும் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர். மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் மதிவாணன், ஜிப்மர் ரத்த வங்கி டாக்டர் வடிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதுவை மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடு களை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

    • வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு சேவா வாரம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    இதன் ஒரு அங்கமாக புதுவை மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் மாவட்ட வரியாக நாடைபெற்று வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக நகர மாவட்ட பா.ஜனதா சார்பில் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நகர மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு தலைமை தாங்கினார்.

    ரத்ததான முகாமை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 30-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா இளைஞரணி மாநில தலைவர் கோவேந்தன் கோபதி, மாநில பொதுச்செயலாளர் அமல்ராஜ், மாநில சமூக ஊடகப்பிரிவு சார்லஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதற்கான ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளர் சத்யா, அரவிந்த், ராஜ்குமார் துணைத் தலைவர் மகேந்திரன், செயலாளர் விஷ்ணு, வேல்முருகன், ராஜ்மோகன், தொகுதி தலைவர் மணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

    • தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
    • பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    அந்தியூர்:

    மத்திய அரசால் ஆயுஷ்மான் பவ என்ற திட்டமானது தொடங்கப்பட்டது.

    இதன் தொடர்ச்சி யாக அந்தியூர் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உறுப்பு தானம் மற்றும் ரத்த தானம் செய்வ தன் அவசியம் குறித்து வட்டார மருத்துவ அலுவலர் சக்தி கிருஷ்ணன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    ரத்தத்தின் தேவையை கருத்தில் கொண்டு ரத்த தானம் செய்வதன் அவசியம் குறித்தும், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள், சக ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என்றும்,

    ஒருவருக்கு ரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், பாகுபாடு இன்றி எந்த உயிரிழப்பும் ஏற்படாத இருக்க தன்னார்வமாக ரத்த தானம் செய்வோம் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    மேலும் நம் நாட்டில் உறுப்புகள் மற்றும் திசுக்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு உடல் உறுப்பு தேவைப்படுபவர்களுக்கு புதிய வாழ்வு அளிக்க தங்கள் மரணத்திற்கு பிறகு பயன்படுத்த கூடிய எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்களின் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்வதாக உறுதி மொழி எடுக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்ததான விழிப்புணர்வு பயணம் தொடங்கியது.
    • ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும்.

    ராமநாதபுரம்

    ராமேசுவரம் முதல் சென்னை வரை ஆட்டோவில் ரத்த தானத்தை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜே.எஸ்.சாகுல் ஹமீது விழிப்புணர்வு பிரச்சாரம் தொடங்கினார். ரத்த தானத்தை வலியுறுத்தி பல்வேறு வகை பிரச்சாரங்கள் நடக்கிறது. ஒருமுறை ரத்த தானம் செய்வதால் 4 உயிர்கள் பாதுகாக்கப்படுகின்றன. ரத்ததானம் செய்த 48 மணி நேரத்தில் தானம் அளித்த ரத்தம் மீண்டும் உற்பத்தி ஆகிவிடும். தொடர்ந்து மூன்று மாத இடைவெளியில் ரத்த தானம் செய்பவர்களுக்கு மாரடைப்பு இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவு ஒவ்வொரு முறை ரத்த தானம் செய்யும் போது உடலில் உள்ள ரத்த செல்கள் புத்துணர்ச்சி அடைகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. இது போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மக்களிடையே பிரச்சாரம் செய்தபடி ஆட்டோவில் ராமேசுவரத்திலிருந்து சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது சென்னை வரை தனது பயணத்தை தொடங்கினார்.

    • புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை இன்று நடத்தியது.
    • அன்சாரி, முஹம்மத், முத்தலிப், நிஜாம், ஆரிப், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோட்டக்குப்பம் கிளை மற்றும் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை இன்று நடத்தியது.

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் முஹம்மது இலியாஸ் தலைமை தாங்கினார்.

    கோட்டக்குப்பம் பர்கத் நகரில் உள்ள தவ்ஹீத் பள்ளிவாசலில் நடைபெற்ற ரத்ததான முகாமில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.

    இதில், கிளைத் தலைவர் சல்மான், கிளை செயலாளர் ஹசன், மற்றும் நிர்வாகிகள் ஜாகிர் உசேன், அப்துல் ரகுமான், அன்சாரி, முஹம்மத், முத்தலிப், நிஜாம், ஆரிப், உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ரத்த தான முகாம் நடந்தது.
    • 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி தலைமை மருத்துவமனை மற்றும் த.மு.மு.க. சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரமேஷ், நகராட்சி ஆணையாளர், காரைக்குடி தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்தாஸ், தேவகோட்டை தலைமை மருத்துவமனை மருத்துவர் சிவதானு, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப்-இன்ஸ்பெக்டர் அன்சாரி உசேன், அகிலன் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் தேவகோட்டை, காரைக்குடி மருத்துவமனைகளில் இருந்து 20-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் கலந்து கொண்டனர். ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது.
    • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை.

    மதுரை:

    மதுரை மருத்துவக் கல்லூரியில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். கலெக்டர் சங்கீதா, மருத்துவ கல்லூரி டீன் ரத்தினவேல், எம்.எல். ஏ.க்கள் கோ.தளபதி புதூர் பூமிநாதன் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரத்த தானம் வழங்கினார்.

    தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மாணவர்களின் சமையல் தேவைக்கு ரூ.50 லட்சம் மதிப்பிலான பயோ கேஸ் மையத்தை திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரத்த தானம் செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் முதல் இடத்தில் இருந்தது. தற்போது மேற்குவங்காளம் முதலிடத்திலும், தமிழ்நாடு 2-வது இடத்திலும் இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அதிகப்படியான ரத்த வங்கிகளை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார். மதுரை அரசு மருத்துவமனை, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைகளில் ரத்தக் கூறுகளை ஆய்வு செய்யும் வகையில் ரூ. 2 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி அமைக்கப்பட்டிருக்கிறது. விரைவில் தமிழகம் ரத்த தானம் செய்வதில் முதல் இடத்திற்கு வரும்.

    மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனையை பொருத்தவரை தற்போது சுற்றுச்சுவர் மட்டும் தான் கட்டப்பட்டுள்ளது. ஜப்பானில் உள்ள ஜெய்கா நிறுவனத்தின் துணைத் தலைவரை இதுதொடர்பாக சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தி இருக்கிறோம்.

    மற்ற மாநிலங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு உள்ளது. ஆனால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்பு இல்லை. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான டெண்டர் பணிகள் அடுத்த ஆண்டு முடிவடையும். 2028-ம் ஆண்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டும் போது அப்போதைய தமிழகத்தை ஆண்ட அரசு மத்திய அரசின் நிதி பங்களிப்பு வேண்டும் என்று வலியுறுத்தி இருக்க வேண்டும். அதனை செய்யவில்லை.

    தமிழகத்தில் 8713 சுகாதார நிலையங்கள் உள்ளன. இதில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்து புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் இறந்தனர்.
    • இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கத்தில் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் இறந்தனர்.

    2 பஸ்களிலும் பயணித்த 80-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    தகவலறிந்த புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. ஜிப்மருக்கு நேரில் வந்து காயமடைந்த வர்களுக்கு தேவையான உதவிளை செய்து டாக்டர்களை சந்தித்து உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார்.

    இதனிடையே காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரத்தம் தேவைப்பட்டது. இதனை யடுத்து புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தி.மு.க. இளைஞரணியினருக்கு தகவல் அளித்து ரத்த தானம் செய்ய உத்தரவிட்டார். தொடர்ந்து ஜிப்மர் மருத்துவனையில் தி.மு.க. இளைஞரணியினர் ரத்த தானம் வழங்கினர்.

    இந்த நிலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன், கலெக்டர் அருண் நம்புராஜ் ஆகியோருடன் புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா, மாநில அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர் களிடம் கேட்டறிந்தனர்.

    தொடர்ந்து விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்ததானம் செய்த தி.மு.க. இளைஞரணியினருக்கு தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கணேசன் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

    ×