என் மலர்
நீங்கள் தேடியது "ரசிகர்கள்"
- மூளை (அறிவு) கம்மியாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்.
- ரசிகர்கள் அவர்களின் பெற்றோரையும், கடவுளையுமே கொண்டாட வேண்டும்.
சென்னை வடபழனியில் Fanly எனும் செயலியின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் நடிகர் சிவகார்த்திகேயன், உலக செஸ் சாம்பியன்ஷிப் குகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்,
"மூளை (அறிவு) கம்மியாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன். மூளை அதிகமாக இருந்தால், நான் இயக்குநர்களை எல்லாம் தொல்லை செய்ய ஆரம்பித்திருப்பேன். அதனால் மூளை கம்மியாக இருப்பதே நல்லதுதான். என்னை கொண்டாடும் ரசிகர்கள் எனக்கு வேண்டாம். தங்கள் பெற்றோரையும், கடவுளையுமே அவர்கள் கொண்டாட வேண்டும். என்னிடம் நண்பனாக, குடும்பமாக பழகக்கூடிய ரசிகர்கள் இருக்கவேண்டும் என்பதுதான் எனது ஆசை.
அதனால்தான் நான் அனைவரையும் 'ஃபிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்' என சொல்லிக்கொண்டே இருக்கிறேன். நான் என் ரசிகர்களுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பேன். இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் கவனம் பெறுவதற்காகவே நிறைய வதந்திகளை பரப்புகின்றனர்" என தெரிவித்தார்.
தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
- ரசிகர்களின் அன்பு காரணமாக தான் நான் இந்த நிலைமையில் இன்று இருக்கிறேன்.
- ரசிகர்களின் அன்பையும் கனவை ஈர்ப்பையும் நாம் கண்காணிக்க வேண்டும்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட. தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டிருக்கும் அஜித்குமார் ஹாலிவுட் ரிப்போர்ட்டர் நேர்காணலின்போது பல்வேறு விஷயங்களை மனம் திறந்து பேசியுள்ளார்.
நேர்காணலில் பேசிய அஜித்குமார், "ரசிகர்களின் அன்பு காரணமாக தான் நான் இந்த நிலைமையில் இன்று இருக்கிறேன். ஆனால் அவர்களின் அன்பையும் கனவை ஈர்ப்பையும் நாம் கண்காணிக்க வேண்டும்.
திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். ஆனால் கொண்டாட்டம் என்ற பெயரில் திரையரங்கிற்கு உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, Once More கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும்"என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, "கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல, நாம் அனைவரும் இதற்கு பொறுப்புதான். ஊடகங்களுக்கும் அதில் பங்கு உண்டு. ரசிகர்களின் அன்புக்காகவே நடிகர்களான நாங்கள் உழைக்கிறோம். ஆனால், உயிரைப் பணயம் வைத்து அன்பு காட்ட வேண்டாம். அன்பை காட்ட வேறு வழிகள் உண்டு. முதல் நாள் முதல் காட்சி கலாச்சாரத்தை நாம் ஆதரிக்கக் கூடாது. ஊடகங்களும் பொறுப்புடன் இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியானது.
- கருப்பு படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
:ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு கருப்பு படத்தின் டீசர் இன்று வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், சூர்யா பிறந்தநாளை முன்னிட்டு அவரை பார்ப்பதற்காக அவரது வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டனர். அப்போது அவரது வீட்டின் பால்கனியில் இருந்து வெளியே வந்த சூர்யா கையசைத்து, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- தமிழில் தவிர்க்க முடியாத கதாநாயகன்களில் ஒருவரான நடிகர் கார்த்தி
- நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் கார்த்தி அதன்பிறகு பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். தமிழில் தவிர்க்க முடியாத கதாநாயகன்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
நடிகர் கார்த்தி மே 25-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி, நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் கடந்த ஒருவார காலமாக பல்வேறு நற்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதவிர்த்து நடிகர் கார்த்தியின் பிறந்த நாளில் இருந்து தற்போது வரைக்கும் 515 பேர் தமிழ்நாடு முழுவதும் இரத்ததானம் செய்திருக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி செல்வது, கேக் வெட்டி கொண்டாடுவது என்றில்லாமல் பொது மக்கள் நலன் சார்ந்த முன்னெடுப்புகளில் நடிகர் கார்த்தியின் ரசிகர்கள் ஈடுபட்டது பொது மக்களிடையே பாராட்டை பெற்று வருகிறது. மேலும் ரசிகர்களின் இந்த செயலால் நடிகர் கார்த்தி நெகிழ்ந்து ரசிகர்களை பாராட்டி இருக்கிறார்.
- ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன.
- நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் குஜராத்- டெல்லி அணிகள் மோதுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு நடக்கும் 35-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியை நேரில் காண வரும் ரசிகர்களுக்கு இலவசமாக தண்ணீர், சன்ஸ்கிரீன் மற்றும் ORS ஆகியவற்றை குஜராத் அணி வழங்குவதாக அறிவித்துள்ளது. வெயிலை சமாளிக்க இந்த சலுகை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதேபோல் சிஎஸ்கே நிர்வாகமும் சென்னையில் நடக்கும் 3.30 போட்டிக்கு இத்தகைய சலுகை வழங்குமா என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சை பெரிய கோவில் முன்பு நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு பிரம்மாண்டமான முறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதே போல் பல இடங்களிலும் இந்த போர்டு வைக்கப்பட்டுள்ளது. தஞ்சைக்கு வரும் உள்ளூர், வெளிமாநிலம், வெளிநாடு சுற்றுலா பயணிகள் இந்த போர்டு முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
நம்ம தஞ்சாவூர் என்ற போர்டு தற்போது உலக அளவில் பரவி புகழ்பெற்று விளங்குகிறது. கத்தார் நாட்டில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பல ரசிகர்கள் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகையை காண்பித்தவாறு போட்டியை ரசித்து வருகின்றனர்.
தினந்தோறும் நடக்கும் போட்டியில் நம்ம தஞ்சாவூர் என்ற பதாகை தென்படுவதை நம்மால் காண முடிகிறது.
என் மூலம் தஞ்சாவூர் புகழ் உலக அளவில் பரவ தொடங்கியுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
- பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.
- டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டிக்கான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் நேற்று இரவு முதலே குவிந்து இருந்தனர். அவர்கள் கூறியதாவது:-
மகேஷ், சாந்தகுமார், பரணி (காஞ்சீபுரம்):-நாங்கள் காஞ்சீபுரத்தில் இருந்து நேற்று மாலையே இங்கு வந்துவிட்டோம். அப்போது கவுண்டர் பகுதியில் தடுப்பு வேலி கூட அமைக்கவில்லை. அதன் பிறகுதான் அமைத்தனர்.
3 ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் போட்டி நடப்பதால் அதை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ளோம். ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்துவிட்டது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்கிவிட வேண்டும் என்று நேற்று மாலையிலேயே வந்துவிட்டோம்.
முரளி (சென்னை):-நான், நண்பர்கள் 7 பேருடன் டிக்கெட் வாங்க வந்தேன். இப்போட்டியை பார்க்க உற்சாகத்துடன் இருக்கிறோம். நள்ளிரவு முதலே இங்கு தூங்காமல் காத்திருந்தோம். அதுபற்றி எங்களுக்கு கவலையில்லை. இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதுதான் முக்கியம். கண்டிப்பாக இந்தியா ஜெயிக்கும்.
ராஜசேகர்-புவனேஸ்வரி தம்பதி (நாவலூர்):-இன்று அதிகாலை 4.30 மணிக்கு நாவலூரில் இருந்து இங்கு வந்தோம். காலை 5.30 மணிக்கு இங்கு வந்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்து இருந்தனர்.
ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் வழங்கப்படுவதால் நாங்கள் இருவரும் டிக்கெட் வாங்க வந்தோம். எங்களுக்கு டிக்கெட் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பெண்களுக்கு தனியாக கவுண்டர் அமைத்தால் நன்றாக இருக்கும்.
முல்லைவேந்தன் (சோழிங்கநல்லூர்):-நான் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அதிகாலை 4 மணிக்கு இங்கு வந்தேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு சேப்பாக்கத்தில் போட்டி நடப்பதால் அதை நிச்சயம் பார்க்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.
ஆன்லைனில் டிக்கெட் சீக்கிரம் விற்று தீர்ந்தது. இதனால் கவுண்டரில் டிக்கெட் வாங்க வந்தேன். டிக்கெட் விற்பனையை காலை 7 முதல் 8 மணிக்குள் தொடங்கினால் நன்றாக இருக்கும் என்றார்.
- போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
- காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை:
இந்தியாவில் விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மும்பையில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியாவும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன.
தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை நடக்கிறது. போட்டிக்காக ரசிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.
இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஒருநாள் போட்டியை காண வரும்.ரசிகர்களுக்கு இலவச மினி பஸ் வசதி வழக்கப்பட்டுள்ளது. அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் மைதானம் வரை காலை 11 மணி முதல் போட்டி முடியும் வரை இலவச மினி பஸ் சேவை வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
- 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.
ஆத்தூர்:
கடந்த பொங்கல் பண்டிகையை யொட்டி, ஜனவரி மாதம் 11-ம் தேதி விஜய் நடித்த வாரிசு, அஜித் நடித்த துணிவு ஆகிய 2 படங்கள், சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள 5 தியேட்டர்களில், உரிய அனுமதியின்றி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
இந்த சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்ட ஆத்தூரில் உள்ள கேசவன், என்.எஸ், பத்மாலயா, பிரியாலயா, விஸ்வநாத் ஆகிய 5 திரை யரங்கு உரிமையாளர்க ளிடம் விளக்கம் கேட்டப் பட்டது. ஆனால் திரைய ரங்கு உரிமை யாளர்கள் முறையாக பதில் அளிக்காததால், இந்த 5 திரையரங்குகளையும் 3 நாட்களுக்கு மூட மாவட்ட கலெக்டர் கார்மேகம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த நிலையில் இன்று வழக்கம்போல் 5 திரையரங்குகளிலும் காலை காட்சிக்கு ரசிகர்களுக்கு டிக்கெட் கொடுத்து திரை யரங்கில் அனுமதிக்கப் பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆத்தூர் தாசில்தார் தலைமைலான அதிகாரிகள், உடனடியாக படத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டு, திரையரங்கில் இருந்த ரசிகர்களை வெளி யேற்றினர். இதனால் படம் பார்க்க வந்த ரசிகர்கள் ஏமாற்றத்துடன் வெளியே சென்றனர்.
- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது.
- நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை-கொல்கத்தா அணிகளுக்கு இடையே நாளை மறுநாள் நடைபெற உள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா அணிகள் இடையேயான ஆட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறுகிறது. இதற்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் ரூ.1,500-க்கான டிக்கெட்டுகளும் ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகளும் கவுண்ட்டரிலும் விற்பனை செய்யப்படுகிறது. பெண்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் கணிசமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னதாக நேற்றிரவில் இருந்து நூற்றுக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திற்கு முன் குவிந்துள்ளனர். கட்டுகடங்காத கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் லேசாக தடியடி நடத்தினர்.
- மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது.
- 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர்.
இஸ்தான்புல்:
கிளப் அணிக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து கிளப்), இன்டர் மிலன் (இத்தாலி) அணிகள் துருக்கியின் இஸ்லான்புல் நகரில் மோதின. முதல் பாதியில் கோல் ஏதும் விழாத நிலையில் 68-வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரோட்ரி கோல் போட்டார். அதுவே வெற்றிக்கும் வித்திட்டது.
முடிவில் மான்செஸ்டர் சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் மிலனை தோற்கடித்து கோப்பையை தனதாக்கியது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை மான்செஸ்டர் சிட்டி வெல்வது இதுவே முதல் முறையாகும். இந்த சீசனில் பிரிமீயர் லீக், எப்.ஏ. கோப்பையை சுவைத்த மான்செஸ்டர் சிட்டிக்கு இது 3-வது மகுடமாக அமைந்தது.
இந்நிலையில் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் 3-வது முறையாக கோப்பையை வென்ற மான்செஸ்டர் சிட்டி வீரர்களை 2 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் வழிநெடுக திரண்டு வரவேற்றனர். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை ஒரு பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானாராம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது வெள்ளித்திரையில் இடம்பிடித்துவிட வேண்டும் என்று நினைத்த நடிகைக்கு ஏமாற்றமே மிஞ்சியதாம்.
காத்திருந்து.. காத்திருந்து கண்கள் பூத்த நடிகை திடீரென கவர்ச்சி அவதாரம் எடுத்தாராம். பெரிய இயக்குனர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் எல்லாம் வாய்ப்புக்காக வளைத்து வளைத்து கவர்ச்சி உடையில் வலம் வந்த நடிகை சமூக வலைதளத்தையும் விட்டு வைக்காமல் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளித்தாராம்.
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலர் என்ன இந்த நடிகை இப்படி பண்றாங்க என்று வசைபாடி வருகிறார்களாம். இதையெல்லாம் கண்டுகொள்ளாத நடிகை நான் செய்வதை தான் செய்வேன் என்று படு கவர்ச்சியாக உலா வருகிறாராம்.






