என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samanthaa"

    • நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்தார் சமந்தா
    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியானது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில், நடிகை சமந்தாவும் இயக்குநர் ராஜ் நிடிமொருவும் திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    • சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.
    • சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான சீக்ரெட் அல்கெமிஸ்ட்டை வெளியிட்டார்.

    தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்த சமந்தா, தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலவை, நாகசைதன்யா 2-வது திருமணம் செய்தார்.

    இந்த நிலையில் சமந்தாவுக்கும், தி பேமிலி மேன் 2 இயக்குநர் ராஜ் நிடிமொருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

    தி பேமிலி மேன் 2' மற்றும் 'சிட்டாடெல்: ஹனி பன்னி திரைப்படதில் நடித்த சமந்தா அந்த சமயத்தில் அந்த படங்களின் இயக்குநரான ராஜ் நிடிமொருவுடன் காதல் வயப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், சமந்தா தனது புதிய வாசனை திரவிய பிராண்டான 'சீக்ரெட் அல்கெமிஸ்ட்' வெளியீட்டு விழாவின் படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

    அதில், ராஜ் நிடிமொருவுடன் அவர் மிகவும் நெருக்கமாக, இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்துள்ளார்.

    இதன்மூலம் இயக்குநர் ராஜ் நிடிமொரு உடனான காதலை, நடிகை சமந்தா கிட்டத்திட்ட உறுதிப்படுத்தியதாக கூறப்படுகிறது. 

    • தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
    • தி பேமிலி மேன் 2 தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ஆக்ஷன் இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் தொடர்களை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் இடையே தி ஃபேமிலி மேன்' வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.

    சமந்தா நடிப்பில் இந்தியில் உருவாகி வெளியான 'தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் ஈழத்தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்நாட்டில் கண்டனக் குரல்கள் எழுந்தது.

    இந்நிலையில், தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் உருவாகியுள்ளது. இந்த தொடரில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த சீசனை ராஜ் & டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர்

    தி பேமிலி மேன் வெப் தொடரின் 3 ஆம் பாகம் நவம்பர் 21 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 'தி ஃபேமிலி மேன்' வெப் தொடரின் சீசன் - 3 டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

    • நாக சைத்தன்யா - சமந்தா நடிப்பில் வெளியான 'ஈ மாயா சேசாவா' ரீ-ரிலீஸ் ஆகிறது.
    • 'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் தொடங்கியது.

    சமீபத்தில் பழைய திரைப்படங்கள் 'ரீ ரிலீஸ்' செய்யப்படுவது டிரெண்ட் ஆகி விட்டது. அவ்வகையில் ரீ ரிலீசான கிள்ளி திரைப்படம் வசூல் சாதனை படைத்தது.

    குறிப்பாக சிம்பு - திரிஷா நடிப்பில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம் ரீ ரிலீசில் 1000 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்தது.

    நாக சைத்தன்யா, சமந்தா இணைந்து நடித்த 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'ஈ மாயா சேசாவா' படம் ஜூலை 18ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

    'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

    தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல் மலர்ந்தது.
    • நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலை மணந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

    பிரபல நடிகை சமந்தா தனது முதுகில் குத்தியிருந்த 'YMC' டாட்டூ காணாமல் போனது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

     தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்த 'ஏ மாயா சேசாவே' (YMC) திரைப்படத்தின் நினைவாக இந்த டாட்டூவை அவர் குத்தியிருந்தார்.

    சமீபத்தில் அவர் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோவில் இந்த டாட்டூ இல்லாததால், அதை அவர் நிரந்தரமாக நீக்கிவிட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சமந்தா தனது இன்ஸ்டாகிராம் வீடியோவில் மெரூன் நிற முதுகு இல்லாத உடையணிந்து "மறைக்க எதுவுமில்லை" என்று ஸ்க்ரீனில் எழுதினார். ஆனால், ரசிகர்களின் கவனம் அவரது மேல் முதுகில் இருந்த 'YMC' டாட்டூவின் மீது விழுந்தது. டாட்டூ தெரியாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

    நெட்டிசன்கள் இது குறித்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "சமந்தா தனது YMC டாட்டூவை அகற்றிவிட்டார்" என்று ஒருவர் கூற, மற்றொருவர் "விளம்பரப் படப்பிடிப்பிற்காக மேக்கப்பால் மறைத்திருக்கலாம்" என்று கருத்து தெரிவித்தார்.

    விவாகரத்துக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து சமந்தா இந்த டாட்டூவை அகற்ற முடிவு செய்திருக்கலாம் என பலர் நம்புகின்றனர்.

    'ஏ மாயா சேசாவே' (2010) படப்பிடிப்பின் போது தொடங்கிய சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் காதல், 2017 ஆம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது.

    தென்னிந்திய திரையுலகின் பிரபல ஜோடியாக அறியப்பட்ட இவர்கள், கிட்டத்தட்ட நான்கு வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டு பிரிந்தனர்.

    தற்போது, நாக சைதன்யா நடிகை ஷோபிதா துலிபாலை மணந்து புதிய வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார். சமந்தா இயக்குனர் ராஜ் நிதிமோருவுடன் டேட்டிங் செய்வதாக கிசு கிசுக்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.  

    • ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர்.
    • இந்த தொடரின் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்து இருக்கிறார்கள்.

    தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சமந்தா விவாகரத்து, மயோசிடிஸ் நோய் பாதிப்பு போன்ற பிரச்சினைகளால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்து விட்டு இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கி உள்ளார். ஹாலிவுட் வெப் தொடரான சிட்டாடல் தொடரில் பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் இந்தி பதிப்பில் சமந்தா, வருண் தவான் நடித்து இருக்கிறார்கள். ராஜ் அண்ட் டிகே இயக்கி உள்ளனர்.

    சிட்டாடல் தொடர் விரைவில் ஓ.டி.டி.யில் வெளியாக இருக்கும் நிலையில் லண்டனில் இந்த தொடரின் சிறப்பு காட்சி திரையிடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, சமந்தா ஆகியோர் பங்கேற்று ஒருவரையொருவர் சந்தித்து நலம் விசாரித்துக்கொண்டனர். அப்போது இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்த புகைப்படம் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது.
    • இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்துள்ளார்.

    பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா நடித்துள்ள சிடாடெல் ஹனி பன்னி (CITADEL HONEY BUNNY) ஹாலிவுட் வெப் தொடர் நவம்பர் 7 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ராஜ் & டிகே இயக்கியுள்ள இந்த வெப் தொடரின் ட்ரைலர் அக்டோபர் 15 அன்று வெளியாகவுள்ளது.

    ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த சிடாடெல் வெப் தொடர் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வெப் தொடரின் யூனிவர்சின் ஒரு அங்கமாக தான் இந்த புதிய சிடாடெல் வெப் தொடர் உருவாகியுள்ளது.

    இந்த வெப் தொடருக்காக நடிகை சமந்தா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்தது.
    • இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

    2012 அம ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் 'நீதானே என் பொன்வசந்தம்' என்ற திரைப்படம் வெளியானது.

    இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன.

    இந்நிலையில், இன்றுடன் நீதானே என் பொன்வசந்தம் திரைப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை நிறைவடைந்ததை ஒட்டி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்த போது எடுத்த புகைப்படங்களை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "நீதானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் இசை எனக்காவும், நமக்காகவும், இந்த மொத்த உலகத்துக்காகவும் இளையராஜா கொடுத்த அன்பின் வெளிப்பாடு!" என்று கவுதம் வாசுதேவ் மேனன் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ திரைப்படம் புதிய மைல்கல்லை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

    அதுமட்டுமின்றி, உலக அளவிலும் ‘மெர்சல்’ படத்துக்கு கவனம் கிடைத்துள்ளது. சில விருதுப் போட்டிகளிலும் இந்தப் படம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.



    இதுவரை எந்த தமிழ் படத்தின் பாடலுக்கு கிடைத்திராத பெருமை பெற்று மெர்சல் திரைப்படம் சாதனைப் படைத்துள்ளது.
    அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தை சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. #Mersal #Vijay
    விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான படம் ‘மெர்சல்’.

    விஜய் முதன்முதலாக மூன்று வேடங்களில் நடித்த இந்தப் படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். நித்யாமேனன், சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், வடிவேலு என்று முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நடித்திருந்தனர்.

    ஜி.எஸ்.டி வரி மற்றும் பணமதிப்பிழப்பு பற்றி பேசப்பட்டதால் சர்ச்சைகளுக்குள்ளானது. ரசிகர்களின் ஆதரவுடன் படம் பெரும் லாபம் ஈட்டியது. ‘மெர்சல்’ ரிலீசான போது வெளிநாடுகளில் பிரிமியர் காட்சிகள் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.

    ‘மெர்சல்’ படத்தை சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய வேலைகள் நடந்து வருகின்றன. சீனாவில் மொத்தம் 40,000 தியேட்டர்களுக்கு மேல் இருக்கிறது. அதனால் ஹாலிவுட் படங்கள், பாலிவுட் படங்கள் என உலக சினிமா அனைத்தும் சீன சினிமா மார்க்கெட்டை குறிவைத்தே ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன.



    அதே பாணியைப் பின்பற்றி, இப்போது ‘மெர்சல்’ திரைப்படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ‘தேனாண்டாள் பிலிம்ஸ்’ முரளி. ஏற்கெனவே இந்தியாவில் தயாரான தங்கல், பஜ்ரங்கி பாய்ஜான் போன்ற படங்கள் சீனாவில் வெளியாகி அதிக வசூலை குவித்தன.

    அமீர் கானின் ‘தங்கல்’, `சீக்ரட் சூப்பர் ஸ்டார்’ படங்களை சீன மொழியில் டப்பிங் செய்து வெளியிட்ட திரைப்பட நிறுவனத்தின் மூலமாக ‘மெர்சல்’ படத்தை டப்பிங் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. வருகிற டிசம்பர் 6-ம் தேதி, ‘மெர்சல்’ திரைப்படம் சீனாவில் 10,000 திரையரங்குகளில் வெளியாகிறது. #Mersal #Vijay

    விஜய் நடிப்பில் கடும் சர்சைகளுக்கு மத்தியில் வெளியான `மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது. #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. 

    தற்போது உலக திரைப்பட விழாக்களில் `மெர்சல்' படம் திரையிடப்பட்டு வருகிறது. தென்கொரியாவில் உள்ள புச்சியான் நகரில், புச்சியான் சர்வதேச திரைப்பட விழா நடந்தது. இதில் ஆசியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக `மெர்சல்' படத்தையும் தேர்வு செய்து திரையிட்டனர். படத்தை பார்த்தவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    முன்னதாக, வருகிற செப்டம்பர் 22-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள திரைப்பட விழாவில் ஐஏஆர்ஏ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. #Mersal #Vijay

    `மெர்சல்' படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த சர்வதேச நடிகருக்காக ஐஏஆர்ஏ என்ற விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். #Mersal #Vijay
    ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகம் முழுக்க வெளியானது. 

    விஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நடித்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்களும் பல்வேறு சாதனைகளை படைத்தது. 

    இந்த நிலையில், ஐஏஆர்ஏ என்ற சர்வதேச விருதுக்கு நடிகர் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மெர்சல் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் மற்றும் சர்வதேச சிறந்த நடிகர் என இரு பிரிவுகளில் விஜய் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அதற்காக இணையதளத்தில் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறும் நடிகர் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்படுவார். #Mersal #Vijay

    ×