search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Naga Chaitanya"

    • தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் நாக சைதன்யா.
    • பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்து வருபவர் நாக சைதன்யா.

    நடிகர் நாகார்ஜூன் மகனான நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவுடன் திருமணம் ஆகி அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஏற்பட்டது.

    இதை தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கினார்.

    இதையடுத்து நாக சைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலி பாலாவுக்கும் காதல் உருவானது.

    இருவரும் பல்வேறு இடங்களில் டேட்டிங் செய்து வந்தனர். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஆண்டு இறுதியில் நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இருவரும் ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.

    அப்போது நாக சைதன்யாவும் சோபிதா துலிபாலாவும் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம் என அமைச்சர் சர்ச்சை கருத்து
    • சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை

    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

    கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.

    தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

    இதற்கிடையே, தெலுங்கானா மாநில அமைச்சரான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    தெலுங்கானா அமைச்சரின் இந்த கருத்துக்கு சமந்தா, நாகார்ஜுனா, நானி, அல்லு அர்ஜுன் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து சமந்தா குறித்து கூறிய கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு பெண் அமைச்சர் அறிக்கை வெளியிட்டார்.

    இந்நிலையில், அமைச்சர் கொண்டா சுரேகா தனது குடும்ப உறுப்பினர்களின் கெளரவம் மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் நாகார்ஜுனா நாம்பள்ளி நீதிமன்றத்தில் கிரிமினல் மற்றும் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யா தனது சமூக வலைதள பக்கத்தில் வழக்கு தொடர்பான தகவலை பதிவு செய்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது.
    • கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம்.

    சமந்தா- நாகசைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகரராவ்வின் மகனுமான கே.டி. ராமாராவ்தான் காரணம் என்று தெலுங்கானா பெண் மந்திரி கொண்டா சுரேகா அளித்த பேட்டி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக கே.டி. ராமாராவ் அவதூறு வழக்க தொடர்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் அரசியலுக்கான என் பெயரை இழுக்க வேண்டாம் என சமந்தா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சமந்தா கூறியிருப்பதாவது:-

    எனது விவாகரத்து என்பது என் சொந்த விஷயம். அது பரஸ்பர அங்கீகாரத்துடன் நடைபெற்றது. விவாகரத்தில் எந்தவித அரசியல் சதியும், குறுக்கீடும் இல்லை. கற்பனைகளை கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    கொண்டா சுரேகா தயவு செய்து எனது விவாகரத்து பற்றி ஏளனமாக நினைக்க வேண்டாம். அடுத்தவர்களின் சொந்த விஷயங்களைப் பற்றி பேசும்பொழுது பொறுப்பாக இருக்க வேண்டும். தயவுசெய்து என் பெயரை அரசியலுக்கு இழுக்க வேண்டாம். நான் எப்பொழுதும் அரசியலுக்கு அப்பாற்பட்டுதான் இருப்பேன்.

    என சமந்தா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, நாகர்ஜுனா தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், "அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள்.

    தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் கூறவில்லை.
    • சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவே காரணம் என்றார் தெலுங்கானா மந்திரி.

    ஐதராபாத்:

    தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் கடந்த 2017-ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின், ஒரு சில காரணத்தால் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

    கருத்து வேறுபாடால் பிரிவதாக அறிவித்தாலும், சரியான காரணத்தை அவர்கள் வெளிப்படையாக கூறவில்லை.

    தற்போது, நாக சைதன்யா நடிகை சோபிதா துளிபாலா என்பவரை திருமணம் செய்ய உள்ளார். சில மாதத்துக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.

    இதற்கிடையே, தெலுங்கானா மாநிலத்தின் மந்திரியான கோண்டா சுரேகா சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், சமந்தா-நாக சைதன்யா விவாகரத்துக்கு கே.டி.ராமாராவ் தான் காரணம். அவர் செய்த விஷயங்களால் பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு தெலுங்கு சினிமாவை விட்டே போய்விட்டார்கள் எனக்கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

    இந்நிலையில், தெலுங்கானா மந்திரி சுரேகாவின் இந்தப் பேட்டிக்கு நடிகர் நாகர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, நாகர்ஜுனா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அமைச்சர் கோண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் சினிமா நட்சத்திரங்களின் வாழ்க்கையை எதிரிகளை விமர்சிக்கப் பயன்படுத்தாதீர்கள். தயவுசெய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
    • கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.

    நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாவுக்கும் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்து நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது.

    இந்த நிலையில் பிரபல ஜோதிடர் ஒருவர் நாகசைதன்யா சோபிதா துலிபாலா ஜாதகத்தை பரிசீலித்ததாகவும் பொருத்தம் சரியில்லை என்றும் இருவரும் 2027-ல் பிரிந்து விடுவார்கள் என்றும் அவர்களின் பிரிவுக்கு ஒரு பெண் காரணமாக இருப்பார் என்றும் கருத்து தெரிவித்து இருந்தார்.

    இந்த தகவல் வலைத்தளத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜோதிடர் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பின. தெலுங்கு சினிமா சங்கங்கள் சார்பில் மகளிர் ஆணையத்தில் ஜோதிடர் மீது புகார் செய்யப்பட்டது. கேட்காமலே மற்றவர்கள் வாழ்க்கையில் புகுந்து ஜாதகம் பார்த்து பகிரங்கமாக வெளியிடுவது தவறு என்றும் கண்டித்தனர்.

    இதையடுத்து தெலுங்கு மகளிர் ஆணையம் ஜோதிடருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. வருகிற 22-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி இருக்கிறார்.
    • நாக சைதன்யா, சமந்தா கடந்த 2021 ஆண்டு பிரிந்தனர்.

    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நாக சைதன்யா. இவர் பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் ஆவார். தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள நாக சைதன்யா நடிகை சமந்தாவை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    எனினும், தவிர்க்க முடியாத காரணங்களில் திருமண வாழ்வில் பிரிவிதாக நாக சைதன்யா மற்றும் சமந்தா முறையே அறிவித்தனர். இந்த ஜோடி கடந்த 2021 ஆம் ஆண்டு பிரிந்த நிலையில், நாக சைதன்யா அடுத்த திருமணத்திற்கு தயாராகி உள்ளார்.

    அதன்படி நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சோபிதா துலிபலா திருமண நிச்சயதார்த்தம் இன்று காலை நடைபெற்றது. இருவருக்கும் நடிகர் நாகர்ஜூனாவின் வீட்டில் வைத்து எளிய முறையில் நிச்சியதார்த்த விழா நடைபெற இருப்பதாக தெரிகிறது. இதில் இருவீட்டாருக்கு நெருக்கமானவர்கள் மட்டும் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ‘தண்டேல்’ என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார்.
    • மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.

    'பிரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய்பல்லவி. படத்தில் இவரது மலர் டீச்சர் கதாபாத்திரம் பெரிய வரவேற்பை பெற்றது.

    தொடர்ந்து தனுசுடன் மாரி-2 மற்றும் தியா, என்.ஜி.கே ஆகிய தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார்.

    தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தி மொழியில் தயாராகி வரும் ராமாயணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூரும், சீதா கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளனர். அதிக பொருட்செலவில் தயாராகி வரும் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    நாகசைதன்யாவுடன் 'தண்டேல்' என்ற படத்தில் மீனவ பெண்ணாக நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்பல்லவி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

    மகாபாரதம் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அர்ஜூனனின் மகன் அபிமன்யூவை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 10 வருடங்களாக அபிமன்யூவை பற்றி நிறைய படித்துள்ளேன். அவரை கடந்த 10 வருடங்களாக காதலித்து வருகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.
    • புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் நடிகர் நாகார்ஜுனாவின் மகன் ஆவார்.

    நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

    இதைத்தொடர்ந்து சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

    நாக சைதன்யாவும் மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். புதிய படம் ஒன்றில் மீனவர் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதா துலி பாலாவுடன் அடிக்கடி டேட்டிங் செல்வதாக தகவல்கள் பரவின.

    இந்த தகவலை இருவரும் ஏற்கவோ மறுக்கவோ இதுவரை இல்லை. இந்நிலையில் இருவரும் ஐரோப்பாவில் விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு நாக சைதன்யாவும் சோபிதா துலி பாலாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.
    • நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    பிரபல நடிகர் நாகர்ஜூனாவின் மகன் தான் நடிகர் நாக சைதன்யா, ஹைதராபாத்தில் பிறந்திருந்தாலும், தனது இளமை பருவத்தை பெரிதளவும் சென்னையில் கழித்தவர் அவர். நடிகர் நாக சைதன்யா 2009ம் ஆண்டு வெளியான ஜோஷ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

    சமீபத்தில் இவர் நடித்த படம் 'கஸ்டடி'. இதனை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கினார். ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா சித்தூரி இதனை தயாரித்தது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார்.


    பிரபல தனியார் நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கார்கள் மீது தனக்குள்ள ஈடுபாடு குறித்தும் சென்னையில் தான் தனக்கு கார்கள் மீதான ஒரு ஈர்ப்பு துவங்கியது என்றும் கூறி மனம் திறந்து உள்ளார். கார்கள் தான் தனக்கு முதல் காதலி என்று கூறிய நாக சைதன்யா சென்னையில் இருந்து பொழுது "ஃபியட்" நிறுவனத்தின் "பேலியோ" காரைத் தான் முதலில் ஓட்டி பழகியதாக கூறினார்.

    அதன் பிறகு தனது 19 வது வயதில் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்த அவர் பல சூப்பர் பைக்குகளை ஓட்டி பழகிய பின், "மிட்சுபிஷி" நிறுவனத்தின் "லான்சர்" என்ற காரைத் தான் வாங்கி ஒட்டியதாக கூறியிருக்கிறார். இன்றளவும் இந்த கார்களுக்கு மவுசு உள்ளது குறிப்பிடத்தக்கது.


    நாக சைதன்யாவிடம் பெராரி முதல் பிஎம்டபிள்யூ வரையிலான ஈர்க்கக்கூடிய சொகுசு கார்களின் சேகரிப்பு உள்ளது. தற்போது அந்த சேகரிப்பில் புதிய கார் ஒன்றை சேர்த்துள்ளார். தற்போது நாக சைதன்யா போர்ஸ்ர் சி 911 ஜிடி3 ஆர்எர் ஸ் என்ற காரை வாங்கியுள்ளார்.

    கார்ட்ரேட் படி, இந்தியாவில் காரின் முந்தைய ஷோரூம் விலை ₹3.51 கோடி. இது மே 17 அன்று பதிவு செய்யப்பட்டது மற்றும் ஹைதராபாத்தில் முதல் போர்ஷே 911 GT3RS என்று கூறப்படுகிறது. சென்னை போர்ஸ் சென்டர் சைதன்யா காருடன் போஸ் கொடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

    இதனை நாக சைதன்யா ஓட்டி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.



    • சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.
    • இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த ”எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.

    தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக இருப்பவர் சமந்தா. நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் விவாகரத்து ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கிய சமந்தா திடீரென மயோசிடிஸ் என்ற அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்காக சினிமா நடிப்புக்கு சில காலம் இடைவெளி விட்ட சமந்தா நோய் குணமான நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்.

    இந்நிலையில் சமந்தா நேற்று நடந்த "எல்லே சஸ்டேய்னபிலிட்டி' விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். விழாவுக்கு 2016-ஆம் ஆண்டு நாகசைதன்யாவுடன் நடந்த திருமணத்தின் போது அணிந்திருந்த கவுனை அணிந்து வந்தார். அந்த கவுனில் என்ன சிறப்பு என்று நீங்கள் கேட்கலாம். அந்த கல்யாண கவுனை மீண்டும் ஆடை வடிவமைப்பு செய்து அதை கருப்பு நிறமாக மாற்றியுள்ளார் சமந்தா.

     

    இதுக்குறித்து ஆடைவடிவமைப்பாளர் கிரேஷா பஜாஜ் எப்படி சமந்தாவின் கல்யாண கவுன் மாற்றி வடிவமைக்கப்பட்டது என்ற வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் எப்போதும் புதிய நினைவுகளை உருவாக்க வேண்டும். நடக்க எப்போதும் புதிய பாதைகள் உள்ளன. எப்பொழுதும் புதிய கதைகள் சொல்ல இருக்கிறது. சமந்தாவுடன் இணைந்து ஒரு புதிய நினைவை உருவாக்கவும், மற்றொரு கதையைச் சொல்லவும் நாங்கள் விரும்பினோம். அழகு எப்பொழுதும் நிரந்தரம் அது ஒவ்வொரு நாளும் புதிய வடிவத்தை எடுத்துக்கொள்கிறது. என்ரு பதிவிட்டுள்ளார்.

    இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா பகிர்ந்துள்ளார். இது பற்றி அவரது ஆடை வடிவமைப்பாளர் வெளியிட்டுள்ள பதிவில் சமந்தாவுடன் இணைந்து பணியாற்றுவதை நாங்கள் விரும்பினோம். அவருக்கு புதிய நினைவை ஏற்படுத்தவும் உதவினோம். அது அவரது திருமண கவுன்போன்று உருவாக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டது என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா - சமந்தா நடிப்பில் பிசியாகி விட்டனர்.
    • உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.

    நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதியாக திகழ்ந்த நாக சைதன்யா - சமந்தா ஜோடி, கடந்த 2021-ம் ஆண்டில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

    விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா - சமந்தா நடிப்பில் பிசியாகி விட்டனர். மயோசிடிஸ் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டு வரும் சமந்தா ஓராண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார்.

    இந்தநிலையில் நாக சைதன்யாவும், நடிகை ஷோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இருவரும் ஜோடியாக சுற்றுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஷோபிதாவிடம், 'நாக சைதன்யாவுக்கும், உங்களுக்கும் காதலாமே...' என்று கேட்கப்பட்டது. இதற்கு ஷோபிதா பதிலளிக்கையில், "உண்மை என்னவென்று தெரியாமல் பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.

    நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றிய விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும்? எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுபவர்களுக்கெல்லாம் பதில் கொடுப்பதை விட அவரவர் வாழ்க்கையைப் பார்த்து சொல்வதே மேல்'', என்று காட்டமாக பதிலளித்தார்.

    • நாக சைதன்யா நடித்துள்ள வெப் தொடர் ‘தூத்தா’.
    • இந்த வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் கே குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'தூத்தா' (Dhootha). இதில், நடிகர் நாக சைதன்யா, பார்வதி, பிரியா பவானி சங்கர், பிராச்சி தேசாய், பசுபதி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.


    இதைத்தொடர்ந்து 'தூத்தா' வெப் தொடரின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட நடிகர் நாக சைதன்யாவிடம் அவரின் இந்தி அறிமுகம் சரியாக அமையாதது பற்றி கேட்கப்பட்டது.

    அவர் பேசியதாவது, "எனது இந்தி அறிமுகமான 'லால் சிங் சத்தா' சரியான வரவேற்பைப் பெறவில்லை என்று கேட்கிறார்கள். அதனால் எனக்கு வருத்தம் ஏதுமில்லை. அந்தப் படத்தில் அமீர்கானுடன் நடித்ததில் கற்றுக்கொண்டது அதிகம். அதனால் அதில் நடித்ததில் மகிழ்ச்சிதான்" என்று பேசினார்.

    ×