என் மலர்
நீங்கள் தேடியது "அனுஷ்கா"
- தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
- இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.
திரை உலகில் ஹீரோக்கள் மட்டுமே அதிக சம்பளம் வாங்கி வந்தனர். சமீபகாலமாக ஹீரோயின்களின் சம்பளமும் அதிகரிக்க தொடங்கி வருகிறது. கதாநாயகர்களை போல கதாநாயகிகளின் சம்பளமும் கோடிகளை தாண்டி உள்ளது.
சினிமா மட்டுமின்றி விளம்பரங்கள் மற்றும் சொந்தமான தொழிலில் ஈடுபடுவது மூலம் கதாநாயகிகளின் வருமானம் உச்சத்தை அடைந்து வருகிறது.
இந்நிலையில் 2026-ம் ஆண்டு தென்னிந்திய திரை உலகில் டாப் 10 கதாநாயகிகளின் பட்டியல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நயன்தாரா: தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வரும் நயன்தாரா சினிமா நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, விளம்பர படங்கள், சொந்தமாக அழகு சாதன பொருட்கள் விற்பனை போன்றவை செய்து வருகிறார்.
தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.200 கோடி என தகவல் வெளியாகி இருக்கிறது.
அனுஷ்கா: பாகுபலி, அருந்ததி போன்ற படங்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமான அனுஷ்கா சொத்து மதிப்பு ரூ.135 கோடியை தாண்டியுள்ளது.
தமன்னா: தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடிப்பது, தனி பாடலுக்கு நடனம் ஆடுவது என திரை உலக ரசிகர்களை கவர்ந்து வரும் தமன்னா சொத்து மதிப்பு ரூ.110 முதல் ரூ.120 கோடி என கூறப்பட்டுள்ளது.
சமந்தா: ரூ.110 முதல் ரூ.120 கோடி, திரிஷா-ரூ.85 முதல் ரூ.100 கோடி, காஜல் அகர்வால்-சுமார் ரூ.85 கோடி, ராஷ்மிகா மந்தனா-ரூ.66 கோடி, பூஜா ஹெக்டே-ரூ.50 கோடி, சாய்பல்லவி-ரூ.47 கோடி, சுருதிஹாசன்-ரூ.45 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
- அருந்ததி திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
- அருந்ததி படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
அனுஷ்கா நடிப்பில் 2009ல் வெளியான 'அருந்ததி' திரைப்படம் தெலுங்கில் மட்டுமில்லாமல் தமிழிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது.
அன்றைய காலகட்டத்திலேயே இப்படம் ரூ.60 கோடிக்கும் மேல் உலகளவில் வசூல் செய்து சாதனை படைத்தது.
ஒன்னிலையில் 'அருந்ததி' திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோகன் ராஜா இயக்கும் இப்படத்தில் அருந்ததியாக ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாகவும், 2026 ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
- 2 ஆண்டுக்கு பிறகு, விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்துள்ள ‘காட்டி' படம் சமீபத்தில் வெளியானது.
- பெரியளவில் வரவேற்பைப் பெறாத இந்த படத்தால் அனுஷ்கா வருத்தத்தில் இருந்தார்.
ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிய அனுஷ்கா, உடல் எடை கூடி போனதின் விளைவாக படவாய்ப்புகளை இழந்தார்.
2016-ம் ஆண்டில் வெளியான 'சிங்கம்-3' படத்துக்கு பிறகு அனுஷ்கா நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. கடைசியாக 2023-ம் ஆண்டு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.
2 ஆண்டுக்கு பிறகு, விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்துள்ள 'காட்டி' படம் சமீபத்தில் வெளியானது. பெரியளவில் வரவேற்பைப் பெறாத இந்த படத்தால் அனுஷ்கா வருத்தத்தில் இருந்தார்.
இதற்கிடையில் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'உலகத்துடன் கொஞ்சம் தொடர்பில் இருக்கலாம் என்று நினைப்பதால், சமூக வலைதளங்களுக்கு ஓய்வு தருகிறேன். நிறைய கதைகளுடன் விரைவில் சந்திப்பேன்' என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
- அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
- இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார்.
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற "Miss ஷெட்டி MR பொலிஷெட்டி" திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் 2ஆவது சிங்கிளான தஸ்ஸோரா வெளியாகியுள்ளது.
- அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது.
அண்மையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் இரண்டாம் பாடலான தசரா வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பதை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
- அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்தது.
இந்நிலையில், காதி படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகவுள்ளது.
- அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். இத்திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் பட ரிலீசை படக்குழு தள்ளிவைத்தது.
இந்நிலையில், காதி படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். படத்தில் இடம்பெற்ற சைலோரே பாடலை படக்குழு சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தற்பொழுது பட ரிலீசை தள்ளிவைத்துள்ளது. இதனை படக்குழு அறிவிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதியை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளனர்.
- அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் பிரபு தெலுங்கில் அறிமுகமாகிறார். திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் பாடலான சைலோரே பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
- தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா.
- இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.

இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.

இந்நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் ஜூலை 11 ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- காதி படத்தின் மூலம் நடிகர் விக்ரம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
- திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் நடிகை அனுஷ்கா. கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற Miss ஷெட்டி MR பொலிஷெட்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார்.
அதைத் தொடர்ந்து அனுஷ்கா அடுத்ததாக காதி (Ghaati) என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிரிஷ் ஜகர்லமுடி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது.
இந்நிலையில், காதி திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த அப்டேட்டை படக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, காதி திரைப்படம் வெளியாகும் தேதி குறித்து நாளை பிற்பகல் 3.33 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
- தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை அனுஷ்கா.
- இவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி பரவி வந்தது.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளுள் முக்கியமானவர் அனுஷ்கா. அருந்ததி, இஞ்சி இடுப்பழகி, பாகமதி, பாகுபலி போன்ற படங்களில் தன்னுடைய கம்பீரமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் அனுஷ்கா. இவர் இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றி அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

அனுஷ்கா
தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை அனுஷ்காவிற்கு அரிய வகை நோய் உள்ளதாக தகவல் பரவி வருகிறது. அதாவது, இவருக்கு அரிதான சிரிக்கும் நோய் உள்ளது என்றும் இவர் சிரிக்க ஆரம்பித்தால் 15 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார் என்றும் அனுஷ்கா பேட்டியில் தெரிவித்ததாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.






