என் மலர்
நீங்கள் தேடியது "திரிஷா"
- சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்று செய்தி வெளியானது.
- என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.
இந்த நிலையில் திரிஷா தன்னுடைய இன்ஸ்டா ஸ்டோரியில் "என்னுடைய வாழ்க்கையை பிறர் திட்டமிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். எனது தேனிலவையும் திட்டமிட்டு கொடுப்பார்கள் என காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் திரிஷா இன்னும் திருமணத்திற்கு தயாராகவில்லை எனத் தெரிகிறது.
- இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது.
- திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
தென்னிந்திய திரை உலகில் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் திரிஷா. தனது அழகாலும், நடிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு வருகிறார்.
42 வயதாகிவிட்ட நிலையிலும் திருமணம் செய்து கொள்ளாத திரிஷா யாரை திருமணம் செய்வார்? எப்போது திருமணம் செய்வார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலக வட்டாரத்திலும் பல ஆண்டுகளாக மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
அடிக்கடி அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் பரபரப்பாக வருகிறது. ஆனால் கடைசியில் அது வதந்தியாகவே நின்று விடுகிறது. தற்போது மீண்டும் அவர் திருமணம் செய்து கொள்ளப்போவதாக இன்று காலை முதல் பரபரப்பான தகவல்கள் வெளியானது.
சண்டிகரை சேர்ந்த பிரபல தொழில் அதிபரை திரிஷா திருமணம் செய்ய போகிறார் என்றும் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இரு குடும்பங்களும் பல ஆண்டுகளாக நெருங்கிய நட்புடன் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
இந்த தகவல் குறித்து திரிஷாவின் தாயாரை தொடர்பு கொண்டபோது, சிரித்தபடி இது அடிக்கடி வரும் தகவல்கள்தான். இதில் உண்மை இல்லை. திரிஷாவுக்கு திருமணம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.
- சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
- 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார்.
தமிழ் சினிமாவில் உள்ள பணக்கார நடிகைகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
அந்தவகையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நயன்தாரா அதிக சொத்து சேர்த்த நடிகை பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.220 கோடி முதல் ரூ.250 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.
2-வது இடத்தில் பால்நிற மேனி நடிகை தமன்னா இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.120 கோடி முதல் ரூ.150 கோடி வரை இருக்கும் என்கிறார்கள். தென்னிந்திய சினிமா தாண்டி பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக ஜொலிக்கும் சமந்தாவின் சொத்து ரூ.90 கோடி முதல் ரூ.110 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. இவர் பட்டியலில் 3-ம் இடத்தில் உள்ளார்.
முன்னணி நடிகை திரிஷா ரூ.85 கோடி சொத்துடன் 4-ம் இடத்தில் இருக்கிறார். 5-ம் இடத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ.60 கோடி முதல் ரூ.70 கோடி வரை இருக்கும் என்கிறார்கள்.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், இவர்களுடன் ஸ்வாசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர். படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
கருப்பு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் படக்குழுவால் தீபாவளுக்கி வெளியிட முடியவில்லை. திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அன்று விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் வெளியாக இருப்பதால். படக்குழு பொங்கலுக்கும் வெளியிடாது என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 மற்றும் தக் லைஃப் திரைப்படங்கள் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க இருக்கின்றனர். அப்படத்தை கமலின் RKFL இண்டெர்னேஷ்னல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் இரு வயதான கேங்ஸ்டர் கதாப்பாத்திரங்களை அடிப்படையாக கொண்டதாகும் என்ற தகவல் அண்மையில் வெளியானது.
சமீபத்தில் நடந்த சைமா விருது விழாவில் நடிகர் கமல்ஹாசன் இதனை உறுதி செய்துள்ளார். மேலும் திரிஷா நடிகர் கமல்ஹாசனை பற்றி கூறீயது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கமலை பார்த்து " எப்படி சார் இத்தனை வருடங்களும் அதே ஹாட்டாக கவர்ச்சியாகவும் அழகாகவும் இருக்கிங்க?" என கேட்டார். அதற்கு நன்றி தெரிவித்து கமல் கொடுத்த ரியாக்ஷன் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் விஜய் குறித்து த்ரிஷா பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்வில் கடைசி திரைப்படமான ஜனநாயகனில் நடித்து முடித்துள்ளார். திரைப்படம் வரும் ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
நடிகை த்ரிஷா விஜய்யுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி, லியோ படங்களில் நடித்துள்ளார்.கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தில் மட்ட எனும் பாடலுக்கு த்ரிஷா நடனமாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சைமா விருது நிகழ்ச்சியில் த்ரிஷாவிடம் விஜய்யின் புகைப்படம் காட்டப்பட்டது. அதற்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.
அப்புகைப்படத்தை பார்த்த பின்னர் த்ரிஷா பேசியதாவது:விஜய்யின் புதிய பயணத்திற்கு வாழ்த்துகள். அவரது கனவுகள் எதுவாக இருந்தாலும் அனைத்துமே நிறைவேறட்டும். ஏனெனில், அவர் அதற்குத் தகுதியானவர் எனக் கூறியுள்ளார்.
இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டு மாநில மாநாட்டை முடித்துள்ள விஜய்க்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், சிவகார்த்திகேயன் இதைப் பார்த்து புன்னகைத்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
- சிரஞ்சீவியின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார்.
- படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.
இதைத்தொடர்ந்து சிரஞ்சீவியின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 'விஸ்வம்பரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இவருடன் திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கனாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
அதன்பிறகு, அதை தொடர்ந்து படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் மெகா பிளாஸ்ட் அறிவிப்பு இன்று மாலை வெளியாகி இருக்கிறது.
இது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விஸ்வம்பரா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
- தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி.
- சிரஞ்சீவின் 156-வது படமான விஸ்வம்பரா படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார்.
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் வசூலையும் குவித்தது.
இதைத்தொடர்ந்து சிரஞ்சீவின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு 'விஸ்வம்பரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இவருடன் திரிஷா, மிருணால் தாகுர் மற்றும் அஷிகா ரங்கனாத் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
பேன்டஸி ஜானரில் உருவாகும் இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் டீசன் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களின் கவனத்தை பெற்றது.
இந்நிலையில் அதை தொடர்ந்து படத்தை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் படத்தின் மெகா பிளாஸ்ட் அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. இது படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- அதில் முதன்மையானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" (2010) திரைப்படம்.
- இன்றுடன் திரைப்படம் ரீ-ரிலீசாகி 1300 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் சில படங்கள் மட்டும் தான் காலம் கடந்தாலும் ரசிகர்களின் இதயத்தில் புது புது உணர்வுகளோடு வாழ்ந்து கொண்டே இருக்கும். அதில் முதன்மையானது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய "விண்ணைத்தாண்டி வருவாயா" (2010) திரைப்படம்.
இப்படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இந்த கதாப்பாத்திரத்தை இவர்களை தவிர வேறு யாராலும் மிக கச்சிதமாக நடித்திருக்க முடியாது. திரைப்படம் வெளியன போது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் மீண்டும் ரீ–ரிலீஸ் ஆன பிறகு ரசிகர்கள் அளித்த வரவேற்பு இன்னொரு வெற்றிக்கதை. திரையரங்குகளில் மீண்டும் ஹவுஸ் ஃபுல் காட்சி, ரசிகர்கள் ஆரவாரம், பாட்டுகளுக்கு தியேட்டரில் கைத்தட்டல் – இது 2010–ம் ஆண்டின் நினைவுகளை அப்படியே மீண்டும் கொண்டு வந்தது.
இன்றுடன் திரைப்படம் ரீ-ரிலீசாகி 1300 நாட்கள் நிறைவடைந்துள்ளது. ஒரு காதல் படம் இத்தனை நாட்கள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து, இன்னும் பேசப்படுவது தமிழ் சினிமா வரலாற்றில் அபூர்வம்
சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் #1300DaysOfVTV என்று ஹாஷ்டேக் உருவாக்கி கொண்டாடி வருகிறார்கள். மீண்டும் மீண்டும் பார்த்தாலும் புதிதாகவே உணர்வுகளை தரும் படம் என்ற பெருமை VTV–க்கே பொருந்தும்.
விண்ணைத்தாண்டி வருவாயா ஒரு படம் மட்டுமல்ல – அது ஒரு உணர்வு, அது ஒரு தலைமுறையின் காதல் கதை. 1300 நாட்கள் கடந்தும் இன்னும் ரசிகர்கள் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பது, அந்த படத்தின் மாபெரும் வெற்றியைச் சுட்டிக்காட்டுகிறது.
- சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும்.
- பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும் செய்யுமாம்.
விலங்குகள் மீது நடிகை திரிஷா பிரியம் கொண்டவர். இந்நிலையில் அவர், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலுக்கு எந்திர யானை வழங்கி உள்ளார். அந்த யானையின் அறிமுக நிகழ்ச்சியில் ஊர்மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் செல்வ விநாயகர் கோவில் மற்றும் வராகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு பிரபல நடிகை திரிஷா மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து ரூ.6 லட்சத்தில் எந்திர யானையை வழங்கி இருக்கிறார்கள்.
3 மீட்டர் உயரமும், 800 கிலோ எடையிலும் நிஜயானை போன்று பிரமாண்டமாக இந்த எந்திர யானை உள்ளது. அதற்கு கஜா என பெயரிட்டு இருக்கிறார்கள்.
கேரளாவில் உருவாக்கப்பட்ட இந்த எந்திர யானைக்கு தந்தங்கள், கண்கள், காதுகள் அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. சக்கரங்கள் மூலம் வீதி உலா அழைத்துச்செல்ல முடியும். சுவாமி ஊர்வலத்துக்கும் பயன்படுத்த முடியும். காதுகள், தும்பிக்கையும், தலையையும் அசைக்கின்றது. பக்தர்களுக்கு ஆசீர்வாதமும் செய்கிறது. பக்தர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கவும் செய்யுமாம்.

இந்த எந்திர யானையை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி மேளதாளங்கள் முழங்க கோவிலில் நடைபெற்றது. உதவி போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு எந்திர யானையை அறிமுகம் செய்து வைத்தனர். அந்த யானை நகர வீதிகளில் அழைத்துச்செல்லப்பட்டபோது, மக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக எந்திர யானை, கோவிலுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதனை தகர செட் அமைத்து நிஜயானை போன்று வைத்து இருக்கிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி பக்தர்கள் கூறும்போது, "வனவிலங்குகளை பாதுகாக்கும் விதமாகவும், யானைகள் துன்புறுத்தப்படுவதை தடுக்கும் வகையிலும் நடிகை திரிஷா இந்த எந்திர யானையை வழங்கி இருக்கிறார்" என்றனர்.
- ஜன நாயகன் படத்திற்கு பின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.
- இதனால் இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனென்றால் இப்படமே நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகி வருகிறது. அதற்குபின் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது.
விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. விஜய்க்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை திரிஷா விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "சிறப்பானவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
- ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.
- படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் படத்தில் நடித்துள்ளார்.சூர்யாவின் 45- வது திரைப்படமான இப்படத்திற்கு கருப்பு என்ற பெயர் வைத்துள்ளனர். இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.
இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரிஷா படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா வக்கீல் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர்களுடன் ஸ்வசிகா, மலையாள நடிகரான இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி நடித்துள்ளனர்.
படத்திற்கு இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவை ஜி.கே விஷ்ணு மேற்கொண்டுள்ளார்.
படத்தின் டைட்டில் டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.






