என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    • கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இப்படம் வெளியானது.
    • குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    மீண்டும் வெளியாகும் படங்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணாவுடன் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய திரைப்படமான அண்ணாமலை விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

    ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, டிசம்பர் 12-ந்தேதி முதல் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.

    அதிரடியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஒரு சாதாரண பால் வியாபாரியான அண்ணாமலையாக நடிக்கிறார், அவர் தனது பணக்கார நண்பர் அசோக்கால் (சரத் பாபு) ஏமாற்றப்படுகிறார். அண்ணாமலையின் வீடு இடிக்கப்பட்டு, அவரது குடும்பம் (கால்நடைகள் உட்பட) வெளியேற்றப்படும்போது பழிவாங்க சபதம் செய்கிறார். இதன் விளைவாக, அசோக்கை எதிர்த்து அண்ணாமலையின் போராட்டம் தொடங்குகிறது.

    அண்ணாமலையின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இருவர் கூட்டணியில் வீரா (1994), பாஷா (1995), மற்றும் பாபா (2002) ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது.

    கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். தேவா இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

    • தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.
    • அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள 'அதர்ஸ்' படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

    இதற்கிடையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் 'இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.

    அப்போது கவுரி கிஷன், ''இத்தனை ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண்ணான என்னை 'டார்கெட்' செய்து கேள்வி கேட்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனி உடலமைப்பு இருக்கும். அதற்காக என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆதங்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் அவர் அமைதியானார். இது படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், நடிகையும், பா.ஜ.க. மாநில துணை தலைவியுமான குஷ்பு, கவுரி கிஷனுக்கு ஆதரவாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    * பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது.

    * பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.

    * ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது?? என்ன ஒரு அவமானம்!

    * தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.

    * அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?

    * மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார். 



    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.
    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.

    இந்நிலையில், இந்த ஒன்றுகூடல் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது
    • மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    1980களில் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நட்சத்திரங்களாக திகழ்ந்த நடிகர், நடிகைகள் சந்தித்து கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

     இந்த ஒன்றுகூடல் 3 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் இந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்த மொத்தம் 31 நடிகர்கள் இந்த ஒன்றுகூடலில் கலந்து கொண்டனர்.

    இதில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, பிரபு, சரத்குமார், பாக்யராஜ் உள்ளிட்ட நடிகர்களும் குஷ்பு, ராதா, நதியா, ரேவதி , சுஹாசினி, ரம்யா கிருஷ்ணன், மீனா உள்ளிட்ட நடிகைகளும் கலந்துகொண்டனர்.


    2024 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்த சந்திப்பு, சென்னை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது நடத்தப்பட்டுள்ளது. 

    • மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க.
    • இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு.

    தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டு வரப்பட்டிருக்கு. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் பணி.

    ஆனா அது மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க. பொதுமக்களிடம் போய் சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை, தி.மு.க.வினர் நடுவில் எடுத்துக்கறதுனால, சாதாரண மக்களிடம் அதுபோய் சேர்வது இல்லை அதனால நாங்க மக்களை சந்திச்சுப் பேசப் போறோம்.

    இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துல அத்தனை பேர் இறந்து போனாங்க. அந்த வழக்கு என்னாச்சு? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்னாச்சு?

    எங்க பார்த்தாலும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை. காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது எதற்குமே பதில் இல்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுது. தி.மு.க.வின் அந்த முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்குப் பயனளிக்காமல், தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிற தி.மு.க.வைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் எங்கள் பணிதான்.

    இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

    • விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான்.
    • தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது:-

    இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.

    என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும்.

    தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.

    முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.

    பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.

    தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன்.

    நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

    அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது.

    என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.

    இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்.

    தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.

    இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.

    பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.

    இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
    • பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.

    தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.

    • பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார்.
    • சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர்.

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவி (87) காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானார்.

    தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளை பெற்றுள்ளார்.

    சரோஜா தேவி மறைவால் திரையுலகினர் சோகத்தில் மூழ்கி உள்ளனர். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் அவரது இரங்கலை தெரிவித்து இருந்தார்.

     

    அந்த வரிசையில் நடிகை குஷ்பு, பாக்கியராஜ், வைரமுத்து ஆகியோர் அவர்களது இரங்களை பதிவிட்டு வருகின்றனர்.

    வைரமுத்து - நல்ல தோழியை இழந்துவிட்டேன் என கூறியுள்ளார்.

     

    குஷ்பு - சரோஜா தேவி அம்மா எல்லா காலத்திலும் ஒரு சிறந்த நடிகை

    என கூறியுள்ளார்.

    • மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம்.
    • பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள்.

    சென்னை:

    மதுரையில் நாளை இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் பிரமாண்டமான முருகர் மாநாட்டுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.

    மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு காட்சி அரங்குகளை பார்ப்பதற்கு இப்போதே ஏராளமானவர்கள் திரண்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த மாநாடு அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாக விமர்சனம் செய்து வருகின்றன.

    இதுதொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-

    நாளை நடைபெறும் முருகர் மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பது இதை விமர்சிப்ப ர்களுக்கும் தெரியும். முதலில் கடவுளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் சேர்ப்பது தவறு. மேலும் இந்த முருகர் மாநாட்டை நடத்துவது பா.ஜ.க. அல்ல. இந்து முன்னணி அமைப்புதான் நடத்துகிறது.

    மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம். எனவே தான் இந்த மாநாட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் .அதை வைத்து பா.ஜ.க. மீது களங்கம் கற்பிக்க முயன்றால் அதன் எதிர்வினை அவர்களுக்கு தான் பாதகமாக இருக்கும். முதலில் தி.மு.க.வினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தட்டும்.

    இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிற தி.மு.க.வை சேர்ந்த குடும்பத்தினர் தான் கோபுரங்கள் முன்பு நின்று கொண்டும் குங்குமம் திருநீறு அணிந்தும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்க்கிறோம். ஆக உங்களிடம் இரண்டு முகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினரையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டு நாங்களும் முருகர் மாநாடு நடத்தினோம் என்று சொல்லுவது ஏன்? பொங்கல் நேரங்களில் பொங்கல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள்.

    இப்படி கடவுள் பெயரைச் சொல்லியே இத்தனை ஆண்டுகளாக நாடகம் போட்டு வருகிறார்கள். முருகன் என்றால் அழகு. முருகன் தமிழ் கடவுள். என்று தமிழ் மக்கள் பெருமைப்படுகிறார்கள். முருகரை வணங்குவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தானே? பஞ்சாப்புக்கு சென்றால் சீக்கியர்களுக்கு பொற்கோவில் அடையாளமாக இருக்கிறது.

    ஆந்திராவுக்கு சென்றால் திருப்பதி பாலாஜி அடையாளமாக இருக்கிறார். அதே போல் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறுபடை முருகன் அடையாளமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட தமிழர்களின் அடையாளத்தை கொச்சைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அரசியல் கலந்து நாசப்படுத்தவும் முயற்சிக்கிறது தி.மு.க.

    பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள். முருகர் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.

    சாதியை வைத்தும் ஓட்டுக்காக மதத்தை வைத்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க.வினர் இப்போது தங்கள் அரசியலுக்காக மக்களின் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கிறார்கள். தி.மு.க.வினரின் விமர்சனம் பா.ஜ.க.வுக்கு எதிரானது அல்ல. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதை தமிழக மக்கள் உணர்வார்கள்.

    கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்து வதிலும் பலப்படுத்துவதிலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?

    தி.மு.க.வினர் இரண்டு முகங்களோடு ஓட்டு வங்கி அரசியலுக்காக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் ரசிக்க மாட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • குஷ்புவின் எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது
    • எக்ஸ் தள பக்கத்தை மீட்க முயற்சி செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குஷ்பு பதிவு

    நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக குஷ்புதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், "X தளத்தில் எனது இ-மெயில் முகவரியை ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர். X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
    • ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழ் திரை உலகில் பிரபல கதாநாயகிகளான குஷ்பு, ஹன்சிகா, நமீதா ஆகியோருக்கு ரசிகர்கள் கோவில் கட்டி யுள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி யது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள குண்டூர் பர்மா காலனியில் குஷ்புவுக்கு ரசிகர்கள் கோவில் கட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில் தமிழ் திரை உலகில் அறிமுகமாகி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து தற்போது இந்திய திரை உலகில் பிரபல நடிகையாக சமந்தா உருவெடுத்து உள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தெலுங்கு திரை உலகிலும் சமந்தாவுக்கு என தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.


    பிரபல நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் சமந்தாவுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    ஆந்திர மாநிலம் தெனாலி என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் சமந்தாவின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் வசித்து வரும் பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி உள்ளார். அவருக்கு கோவில் அமைத்து கோவிலினுள் சமந்தாவின் மார்பளவு சிலை அமைத்து தினமும் பூஜை செய்து வருகிறார்.

    கோவிலின் நுழைவு வாயிலில் சமந்தா கோவில் என பெயர் வைத்துள்ளார். சமந்தாவுக்கு கோவில் கட்டி இருப்பதை அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் தினமும் குடும்பத்துடன் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர்.

    கோவிலில் உள்ள சமந்தா சிலை முன்பு குடும்பத்தோடு நின்று ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். சமந்தாவுக்கு கோவில் கட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
    • நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.

    நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2-'ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.

    இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், "சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல.

    படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.

    நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×