என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சட்டமன்ற தேர்தலில் போட்டியா?- குஷ்பு பதில்
    X

    சட்டமன்ற தேர்தலில் போட்டியா?- குஷ்பு பதில்

    • இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது
    • ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க. மாநிலத் துணைத்தலைவரும், நடிகையுமான குஷ்பு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- தேர்தல் பிரசாரம் மேற்கொள்வீர்களா?

    பதில்: இன்னும் நேரம் உள்ளது. கண்டிப்பாக பிரசாரம் மேற்கொள்வேன்.

    கேள்வி:- சட்டமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடுவீர்களா?

    பதில்: தலைமை அறிவித்தால் கண்டிப்பாக போட்டியிடுவேன்.

    கேள்வி:- தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

    பதில்: பீகாரில் பா.ஜ.க. தனித்து வெற்றி பெற்று ஆட்சி பிடித்ததுபோல், தமிழகத்திலும் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.

    கேள்வி:- ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா?

    பதில்: பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் தமிழக தேர்தல் பார்வையாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள்.

    கேள்வி:- தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு என்ன பொருள்?

    பதில்: அவரது கூட்டத்தில் பேசியதை நானும் கேட்டேன். என்ன அழுத்தம் என்று எனக்கு புரியவில்லை. அவர் திரைப்படத்தில் இனி நடிக்க மாட்டேன் என கூறியது தான் எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது. ஒரு கலைஞர் தனது படம் கடைசி என்று கூறக்கூடாது.

    கேள்வி:- தேசிய திரைப்பட விருதும், தமிழக திரைப்பட விருதும் தேர்வு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறார்கள் என இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

    பதில்: என்ன என்று அவரைத்தான் கேட்க வேண்டும் எனக்கு எதுவும் தெரியாது என்றார்.

    Next Story
    ×