என் மலர்
நீங்கள் தேடியது "Kushboo"
- கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் இப்படம் வெளியானது.
- குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர்.
தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', தனுசின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.
மீண்டும் வெளியாகும் படங்கள் வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சுரேஷ் கிருஷ்ணாவுடன் முதன்முதலில் இணைந்து பணியாற்றிய திரைப்படமான அண்ணாமலை விரைவில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை ஒட்டி, டிசம்பர் 12-ந்தேதி முதல் இந்தப் படம் மீண்டும் திரைக்கு வரவுள்ளது.
அதிரடியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஒரு சாதாரண பால் வியாபாரியான அண்ணாமலையாக நடிக்கிறார், அவர் தனது பணக்கார நண்பர் அசோக்கால் (சரத் பாபு) ஏமாற்றப்படுகிறார். அண்ணாமலையின் வீடு இடிக்கப்பட்டு, அவரது குடும்பம் (கால்நடைகள் உட்பட) வெளியேற்றப்படும்போது பழிவாங்க சபதம் செய்கிறார். இதன் விளைவாக, அசோக்கை எதிர்த்து அண்ணாமலையின் போராட்டம் தொடங்குகிறது.
அண்ணாமலையின் பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் மற்றும் சுரேஷ் கிருஷ்ணா இருவர் கூட்டணியில் வீரா (1994), பாஷா (1995), மற்றும் பாபா (2002) ஆகிய படங்கள் எடுக்கப்பட்டது.
கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் வெளியான அண்ணாமலை படத்தில் குஷ்பு, ரேகா, ராதா ரவி, ஜனகராஜ், நிழல்கள் ரவி, மனோரமா ஆகியோரும் நடித்துள்ளனர். தேவா இசையமைப்பில் வெளியான பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
- தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.
- அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?
அபின் ஹரிஹரன் இயக்கி ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள 'அதர்ஸ்' படம் இன்று முதல் திரைக்கு வருகிறது. சென்னையில் கடந்த வாரம் நடந்த பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் 'பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே... வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்? என்று வேடிக்கையாக கேட்கப்பட்டது. இதையடுத்து யூ-டியூப் சேனல் பேட்டி ஒன்றில் பேசிய கவுரி கிஷன், இந்த கேள்வி குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கிடையில் நேற்று நடந்த ஒரு விழாவில் பேசிய கவுரி கிஷனிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அப்போது கவுரி கிஷன் 'இதுபோன்ற கேள்விகள் அபத்தமானது. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் கேள்வி கேட்பதற்கு?', என்று ஆவேசப்பட்டார். இதையடுத்து பத்திரிகையாளர்களுக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது.
அப்போது கவுரி கிஷன், ''இத்தனை ஆண்கள் உள்ள இடத்தில் ஒரு பெண்ணான என்னை 'டார்கெட்' செய்து கேள்வி கேட்கிறீர்கள். ஒவ்வொரு பெண்ணுக்கும் தனி உடலமைப்பு இருக்கும். அதற்காக என் உடல் எடை குறித்து கதாநாயகனிடம் கேட்கலாமா... இது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?'', என்று ஆதங்கப்பட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் படக்குழுவினர் கேட்டுக்கொண்டதால் அவர் அமைதியானார். இது படவிழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பான வீடியோ வைரலான நிலையில் திரை பிரபலங்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் நடிகை கவுரி கிஷனுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், நடிகையும், பா.ஜ.க. மாநில துணை தலைவியுமான குஷ்பு, கவுரி கிஷனுக்கு ஆதரவாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
* பத்திரிகைத்துறை தனது தளத்தை இழந்துவிட்டது.
* பத்திரிகையாளர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் பத்திரிகைத்துறையை சாக்கடைக்கு எடுத்துச் செல்கிறார்கள்.
* ஒரு பெண்ணின் எடை எவ்வளவு என்பது அவர்களின் வேலை இல்லை. அதைப் பற்றி ஹீரோவிடம் கேட்பது?? என்ன ஒரு அவமானம்!
* தனது நிலைப்பாட்டில் நின்று அதற்குப் பதிலடி கொடுத்த இளம் கவுரி கிஷனுக்கு பாராட்டுகள்.
* அதே ஆண்கள், பெண்கள், நடிகர்கள், தங்கள் குடும்பங்களில் உள்ள பெண்களைப் பற்றி அதே கேள்வியைக் கேட்டால் சரியா?
* மரியாதை ஒருபோதும் ஒரு வழி போக்குவரத்து அல்ல. மதிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் மரியாதை கொடுக்க கற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.
- மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க.
- இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு.
தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் குஷ்பு அளித்துள்ள ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் விவசாயிகளுக்கான திட்டங்கள், பெண்களுக்கான திட்டங்கள், மாணவர்களுக்கான திட்டங்கள் என பல்வேறு தரப்பு மக்களுக்கான நல்ல திட்டங்கள் பிரதமர் மோடி தலைமையில் கொண்டு வரப்பட்டிருக்கு. இந்தத் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே எங்கள் பணி.
ஆனா அது மக்களிடம் போய் சேரும்போது தி.மு.க.வோட ஸ்டிக்கரை ஒட்டி, அவங்க திட்டங்கள் மாதிரி கொண்டு போயிடறாங்க. பொதுமக்களிடம் போய் சேர வேண்டிய நல்ல திட்டங்களின் சலுகைகளை, தி.மு.க.வினர் நடுவில் எடுத்துக்கறதுனால, சாதாரண மக்களிடம் அதுபோய் சேர்வது இல்லை அதனால நாங்க மக்களை சந்திச்சுப் பேசப் போறோம்.
இன்னைக்கு தமிழ் நாட்டுல சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியா இருக்கு. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்துல அத்தனை பேர் இறந்து போனாங்க. அந்த வழக்கு என்னாச்சு? அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த பாலியல் விவகாரம் என்னாச்சு?
எங்க பார்த்தாலும் செயின் பறிப்பு, கொலை, கொள்ளை. காவல் துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இது எதற்குமே பதில் இல்லை. இது எல்லாமே மூடி மறைக்கப்படுது. தி.மு.க.வின் அந்த முகத்திரையைக் கிழிச்சு மக்களிடம் அம்பலப்படுத்துவோம். மக்களுக்குப் பயனளிக்காமல், தினமும் பயத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்கி வைத்திருக்கிற தி.மு.க.வைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதும் எங்கள் பணிதான்.
இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.
- விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான்.
- தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று வெளியானது. இதில் நடிகை குஷ்புவுக்கு துணை தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. துணை தலைவராக நியமிக்கப்பட்டு உள்ள குஷ்பு கூறியதாவது:-
இந்தப் பதவி நான் எதிர்பாராதது. எதிர்பாராத மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது. இதற்காக கட்சிக்கு எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பா.ஜ.க.வை பொறுத்தவரை முன்பு சரியான பதவி தரப்படவில்லை என்று சொல்வது ஏற்புடையதல்ல. நான் பா.ஜ.க.வில் இணைந்த உடனேயே சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் பொறுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தார்கள்.அதன்பிறகும் தேசிய செயற்குழு உறுப்பினர், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற பதவிகளை எல்லாம் வழங்கினார்கள்.
என்னைப் பொருத்தவரை பா.ஜ.க.வில் கொடுக்கும் பொறுப்பில் இருந்து தனது வேலையை அமைதியாக செய்தாலே போதும் கட்சித் தலைமை மகுடம் சூட்டி மகிழும்.
தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி மாநில தலைவர் முறையான பயிற்சிகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்குவார். அதன்படி மக்களிடம் கட்சியை வளர்க்கவும் பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ள நல்ல திட்டங்கள் பற்றியும், விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் முன்னேற்றத்திற்கும் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் சொல்வோம்.
முன்பெல்லாம் வறுமை, ஊழல் மலிந்த தேசமாகவே இந்தியாவை மற்ற நாடுகள் பார்த்தன. ஆனால் இப்போது இந்தியாவின் வளர்ச்சியையும், கட்டமைப்பையும் ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.உலக அளவில் முதலாவது 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா வளர்ந்துள்ளது.
பிரதமர் மோடியை பார்த்து இப்படி ஒரு தலைவரை பார்த்தது இல்லை என்று உலக நாடுகள் எல்லாம் வியக்கின்றன. பிரதமர் மோடி பற்றி நான் தமிழகம் முழுவதும் சென்று பேசுவேன்.
தமிழ்நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்காக பிரதமர் மோடி நிறைய செய்து இருக்கிறார். இதுபற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பேசுவேன்.
நடிகர் விஜய் பா.ஜ.க.வை கொள்கை எதிரி என்று கூறினாலும் அவர் எப்போதும் என் தம்பிதான். அரசியல் ரீதியாக அவர் வேறு இடத்தில் இருந்தாலும் அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா? என்பதை மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைத்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கூட்டணிக்கு மேலும் கட்சிகள் வருவது பற்றி அ.தி.மு.க.-பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பேசி முடிவு செய்வார்கள். மற்றபடி கூட்டணி விவகாரங்கள் பற்றி நான் மேலிட அனுமதி இல்லாமல் பேச இயலாது.
என்றாலும் தம்பி என்ற முறையில் விஜய்க்கு அழைப்பு விடுக்கிறேன். விஜய் கட்சியின் முக்கிய குறிக்கோளே தி.மு.க.வை வருகிற தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான்.
இதே கொள்கையுடன்தான் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியும் இருக்கிறது. நீங்கள் தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்று நினைத்தால் நாம் அனைவரும் ஒரே அணியில் கைகோர்க்க வேண்டும்.
தி.மு.க. ஆட்சியில் எத்தகைய தவறுகள் நடக்கிறது என்பது விஜய்க்கு நன்றாக தெரியும். தி.மு.க. அரசு அனைத்து துறைகளிலும் தோல்வியை தழுவி இருப்பதும் தெரியும். எனவே அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணிக்கு விஜய் வருவதுதான் சரியான முடிவாக இருக்கும் என்பது எனது கருத்தாகும்.
இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும். ஆனால் இப்போதும் முதல்வர் கண்ணை கட்டிக்கொண்டு சுற்றி இருப்பவர்கள் சொல்லிக் கொடுப்பதை கேட்டு எல்லாம் நன்றாக நடக்கிறது என்று பேசிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த 4 ஆண்டுகளில் திமுக செய்த சாதனைகள் என்ன? தினமும் கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள், போதை பழக்கங்கள் அதிகரிப்பு என்று தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது போதும் எங்கள் வெற்றிக்கு என்று தி.மு.க.வினர் கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும்போது அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் சொன்னபடி செய்தார் களா? பலருக்கு அந்த பணம் கிடைக்கவில்லை.
இப்போது கணக்கெடுக்கும் போது தான் கள நிலவரம் கலவரமாக இருக்கிறதே என்று கலங்கி போய் இருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கணக்கெடுப்பதை ஆட்சிக்கு வந்ததும் முறையாக கணக் கெடுத்து எல்லா பெண்களுக்கும் வழங்கி இருக்கலாமே. ஏன் செய்யவில்லை? இதுதான் தி.மு.க.வின் தேர்தல் ஏமாற்று வேலை. ஆனால் இந்த முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறினார்.
- துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
- பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
- மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம்.
- பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள்.
சென்னை:
மதுரையில் நாளை இந்து முன்னணி சார்பில் நடத்தப்படும் பிரமாண்டமான முருகர் மாநாட்டுக்கு பா.ஜ.க. உள்ளிட்ட இந்து அமைப்புகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன.
மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடு காட்சி அரங்குகளை பார்ப்பதற்கு இப்போதே ஏராளமானவர்கள் திரண்டு வருகிறார்கள். அதேநேரம் இந்த மாநாடு அரசியல் ரீதியாகவும் விமர்சிக்கப்படுகிறது. தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பா.ஜ.க. அரசியல் ஆதாயத்திற்காக மதத்தை பயன்படுத்துவதாக விமர்சனம் செய்து வருகின்றன.
இதுதொடர்பாக பா.ஜ.கவை சேர்ந்த நடிகை குஷ்பு கூறியதாவது:-
நாளை நடைபெறும் முருகர் மாநாட்டில் பல லட்சம் மக்கள் பங்கேற்பார்கள் என்பது இதை விமர்சிப்ப ர்களுக்கும் தெரியும். முதலில் கடவுளை அரசியல் கட்சிகளின் பட்டியலில் சேர்ப்பது தவறு. மேலும் இந்த முருகர் மாநாட்டை நடத்துவது பா.ஜ.க. அல்ல. இந்து முன்னணி அமைப்புதான் நடத்துகிறது.
மற்றவர்களை விட பா.ஜ.க. கட்சியினருக்கு கடவுள் நம்பிக்கை கொஞ்சம் அதிகம். எனவே தான் இந்த மாநாட்டிற்கு ஆதரவாக இருக்கிறோம் .அதை வைத்து பா.ஜ.க. மீது களங்கம் கற்பிக்க முயன்றால் அதன் எதிர்வினை அவர்களுக்கு தான் பாதகமாக இருக்கும். முதலில் தி.மு.க.வினர் தங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்தட்டும்.
இந்துக்களின் கடவுள் நம்பிக்கையை கொச்சைப்படுத்துகிற தி.மு.க.வை சேர்ந்த குடும்பத்தினர் தான் கோபுரங்கள் முன்பு நின்று கொண்டும் குங்குமம் திருநீறு அணிந்தும் போட்டோக்களுக்கு போஸ் கொடுப்பதை பார்க்கிறோம். ஆக உங்களிடம் இரண்டு முகம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் உங்கள் குடும்பத்தினரையும் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி விட்டு நாங்களும் முருகர் மாநாடு நடத்தினோம் என்று சொல்லுவது ஏன்? பொங்கல் நேரங்களில் பொங்கல் வைத்து வழிபடவும் செய்கிறார்கள்.
இப்படி கடவுள் பெயரைச் சொல்லியே இத்தனை ஆண்டுகளாக நாடகம் போட்டு வருகிறார்கள். முருகன் என்றால் அழகு. முருகன் தமிழ் கடவுள். என்று தமிழ் மக்கள் பெருமைப்படுகிறார்கள். முருகரை வணங்குவது தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் தானே? பஞ்சாப்புக்கு சென்றால் சீக்கியர்களுக்கு பொற்கோவில் அடையாளமாக இருக்கிறது.
ஆந்திராவுக்கு சென்றால் திருப்பதி பாலாஜி அடையாளமாக இருக்கிறார். அதே போல் தமிழகத்தில் உள்ளவர்களுக்கு அறுபடை முருகன் அடையாளமாக திகழ்கிறார். அப்படிப்பட்ட தமிழர்களின் அடையாளத்தை கொச்சைப்படுத்தவும் சிறுமைப்படுத்தவும் அரசியல் கலந்து நாசப்படுத்தவும் முயற்சிக்கிறது தி.மு.க.
பா.ஜ.க.வை எதிர்ப்பது போல் தமிழகத்தின் கலாச்சாரத்தை எதிர்க்கிறீர்கள். முருகர் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம்.
சாதியை வைத்தும் ஓட்டுக்காக மதத்தை வைத்தும் அரசியல் செய்து வரும் தி.மு.க.வினர் இப்போது தங்கள் அரசியலுக்காக மக்களின் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கிறார்கள். தி.மு.க.வினரின் விமர்சனம் பா.ஜ.க.வுக்கு எதிரானது அல்ல. மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது. இதை தமிழக மக்கள் உணர்வார்கள்.
கடவுள் நம்பிக்கை கொண்ட மக்கள் ஒன்று திரண்டு தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்து வதிலும் பலப்படுத்துவதிலும் உங்களுக்கு என்ன பிரச்சனை?
தி.மு.க.வினர் இரண்டு முகங்களோடு ஓட்டு வங்கி அரசியலுக்காக நடத்தும் நாடகங்களை தமிழக மக்கள் இனியும் ரசிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும்.
- நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார்.
நயன்தாரா 'மூக்குத்தி அம்மன் 2-'ம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர்.சி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் உதவி இயக்குனர் ஒருவர் நயன்தாராவிடம் அவர் நடிக்க வேண்டிய காட்சிகளை விளக்கி சொன்னதாகவும் அப்போது நயன்தாரா இடைமறித்து உதவி இயக்குனரிடம் சில கேள்விகளை கேட்டதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகவல் பரவியது.
இந்த மோதலை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், நயன்தாராவுக்கு பதில் தமன்னாவை நடிக்க வைக்க யோசனை நடப்பதாகவும் பேசப்பட்டது. இதற்கு படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் குஷ்பு வெளியிட்ட அறிக்கையில், "சுந்தர்.சியின் நலம் விரும்பிகளுக்கு தெரிவிப்பது, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்து தேவையற்ற வதந்திகள் பரவி வருகின்றன. அது உண்மையல்ல.
படப்பிடிப்பு திட்டமிட்டபடி சுமூகமாக நடந்து வருகிறது. சுந்தர்.சி எப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். நயன்தாரா திறமையான நடிகை. அதை அவரே நிரூபித்து இருக்கிறார்.
நயன்தாரா கடந்த காலத்தில் நடித்த ஒரு கதாபாத்திரத்தில் மீண்டும் நடித்து வருகிறார். தற்போது பரவும் வதந்திகள் திருஷ்டி எடுத்த மாதிரி. நடப்பதெல்லாம் நல்லதுக்கே. உங்களின் ஆசிர்வாதம், அன்பை நம்புகிறோம். அடுத்த வெற்றிப்படத்துக்கு காத்திருங்கள்'' என்று கூறியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா?
- என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை.
புதுடெல்லி:
தி.மு.க. நிர்வாகியான சைதை சாதிக் பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பற்றி பொதுக்கூட்ட மேடையில் ஆபாசமாக பேசினார். அவரது பேச்சுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது.
அவரை கண்டித்து பா.ஜனதா மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் அண்ணாமலை கைதாகி விடுதலையானார்.
சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கும் வரை ஓயப்போவதில்லை என்று அறிவித்த குஷ்பு இன்று டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்துக்கு சென்று ஆணைய தலைவி ரேகா ஷர்மிளாவிடம் நேரில் புகார் மனு அளித்தார்.
அந்த மனுவில் சைதை சாதிக்கின் பேச்சுக்கான வீடியோ ஆதாரத்தையும் இணைத்து கொடுத்துள்ளார்.
குஷ்பு தனது புகாரில் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் சைதை சாதிக் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.
புகார் அளித்த பிறகு குஷ்பு டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எனக்கே இந்த கதி என்றால் மற்ற பெண்களுக்கு தமிழகத்தில் என்ன கதி ஏற்படும்?
அமைச்சர் பொறுப்பில் இருக்கும் மனோ தங்கராஜ் தூங்கி விழித்து 4 நாள் கழித்து நான் விளம்பரம் தேடுவதாக கூறி இருக்கிறார். அதை கேட்டதும் சிரிப்பு தான் வந்தது.
எனக்கு இனி விளம்பரம் தேவையில்லை. நானும், அவரும் பொது வெளியில் நின்றால் அவரை எத்தனை பேருக்கு அடையாளம் தெரியும்? அவருக்குத்தான் இப்போது விளம்பரம் தேவை.
அவரது தலைமையில் நடந்த கூட்டத்தில் தான் இவ்வளவு அநாகரீகமாக பேசி உள்ளனர். அதை கேட்டு சிரித்துக் கொண்டிருந்த அமைச்சர் தனியாக அழைத்து கண்டித்ததாக கூறுகிறார்.
உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களை இப்படி விமர்சித்து விட்டு தனியாக அழைத்து கண்டித்தால் ஏற்பீர்களா? என்னிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. எனக்கு மன்னிப்பும் தேவையில்லை. நடவடிக்கை தான் தேவை.
அமைச்சர் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். சைதை சாதிக்கை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.
இது தொடர்பாக டெல்லியில் தேசிய பெண்கள் ஆணையத்தில் புகார் அளித்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசியவர் மீதும் அமைச்சர் மனோ தங்கராஜ் மீதும் புகார் அளித்துள்ளேன். என்னை பற்றி பேசிய பேச்சை மனோ தங்கராஜ் அமர்ந்து ரசித்துக் கொண்டிருக்கிறார். அந்த வீடியோ ஆதாரத்தையும் சமர்ப்பித்துள்ளேன் என்றார்.
- பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ‘தாவல் திலகம்’ குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றி பேசாமல் தனது வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார்.
- நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன ‘தாவல் திலகம்’ என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும்.
சென்னை:
தமிழகத்தில் மின்கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, சொத்துவரி உயர்வை கண்டித்து சென்னையில் நடைபெற்ற பா.ஜனதா கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு பங்கேற்று ஆவேசமாக பேசி இருந்தார்.
மின்கட்டணம், பால் விலையை உயர்த்தியது தான் திராவிட மாடலா? என்று கேள்வி எழுப்பிய குஷ்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பற்றியும் விமர்சித்து பேசினார்.
குஷ்புவின் பேச்சுக்கு தி.மு.க. இப்போது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் எழுதி இருப்பதாவது:-
பா.ஜ.க. சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 'தாவல் திலகம்' குஷ்பு ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தைப் பற்றி பேசாமல் தனது வாய்த்துடுக்கை காண்பித்துள்ளார். நடிகர் திலகம், நடிகையர் திலகம் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இது என்ன 'தாவல் திலகம்' என்று சிலருக்கு ஐயம் ஏற்படக்கூடும்.
அந்த அம்மையார் அரசியலில் ஈடுபட்ட குறைந்த காலத்தில் நிறைய கட்சிகளுக்குத் தாவியதால் 'தாவல் திலகம்' என்ற பட்டம் பொருத்தமாக இருக்குமல்லவா. அந்த 'தாவல் திலகம்'தான் தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில், முதல்-அமைச்சர் குறித்து பேசி வீண் வம்பை விலைக்கு வாங்கியுள்ளார்.
"முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையைப் படிக்கவில்லை. எழுதிக் கொடுப்பதைத் தான் அவர், படிப்பது வழக்கம்" எனத் தேவையின்றி முதல்வர் குறித்து விமர்சித்துள்ளார்.
மின்கட்டண உயர்வு 'ஷாக்' அடிக்கிறது. பால் விலை உயர்வால் வயிறு எரிகிறது எனத் துடித்துத் துவண்டுள்ளார். அம்மையார் பா.ஜ.க. வின் தேசிய அளவில் பதவி வகிப்பவர்.
மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாதா மாதம் சகட்டுமேனிக்கு ஏற்றிய போதும், பெட்ரோல், டீசல் விலைகளை உயர்தித்திக்கொண்டே இருந்த போதும், அதன் விளைவாலும், ஜி.எஸ்.டி. போன்ற ஒழுங்குமுறைப்படுத்தாத வரிவிதிப்பாலும், விண்முட்ட விலைவாசி ஏறியபோதெல்லாம் எரியாத வயிறு, ஏழைகளைப்பாதிக்காத வகை யில் பால் விலையை ஏற்றி, பால் முகவர்களுக்கு விலையை உயர்த்தியுள்ளது கண்டு எரிகிறதாம்.
அதன் பெயர் வயிறு எரிவதல்ல. வயிற்றெரிச்சல். தி.மு.க. அரசு எந்தத் திட்டமிட்டாலும் ஏழை எளியவர்களைப் பாதிக்காத வகையில் போடுவதால் ஏற்பட்ட மன அரிப்பு. மின்கட்டண உயர்வுக்குப் பிறகும் மற்ற மாநிலங்களில் உள்ளதைவிட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு என்பதை பலமுறையும் விளக்கியாகி விட்டது.
மேலும், இப்போதுள்ள ஏற்றம்கூட மத்திய அரசு தரும் அழுத்தத்தின் காரணத்தால், என்பதும் தெளிவாக்கப்பட்டுவிட்டது. அம்மையார் தேசிய அளவில் அந்த கட்சியின் பொறுப்பில் உள்ளவர், அவருக்கும் அண்ணாமலைக்கும் தமிழ்நாட்டின் மின்கட்டண உயர்வு ஷாக் அடிக்கிறது.
மற்ற மாநில கட்டணங்கள் ஷாக் அடிப்பதில்லை. மைக் கிடைத்து விட்டது என்பதால் எதையும் பேசிவிடலாம் என்று தரம் தாழ்ந்து பேசினால் கொடுத்த வழியிலேயே அதற்குப் பதிலும் வரும் என்பதை குஷ்பு உணர வேண்டும்.
தி.மு.க. பேச்சாளர் ஒருவர் இந்த அம்மையார் குறித்து பேசுகையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள், அம்மையார் மனதைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டபோது, அந்தப் பேச்சாளர் கண்டிக்கப்பட்டார்.
அவர் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கப் பணிக்கப்பட்டு வருத்தமும் தெரிவித்தார். கழக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி அந்த பேச்சுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளார். அந்த பேச்சாளர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவர் பேசியதற்கு, முதல்-அமைச்சர் ஸ்டாலின் மேடையில் இருந்த அமைச்சரும் மன்னிப்பு கோர வேண்டும் என்று அங்கு பேசியுள்ளார். பல நேரங்களில் வாய் நீளம் காட்டுவது பல சங்கடங்களை உருவாக்கி விடும் என்பதை அம்மையார் உணராது பேசுவது 'சும்மா இருந்தசங்கை ஊதிக்கெடுத்த' கதையாக மாறிவிட்டது.
ஓவராக சில காட்சிகளில் 'ரீ ஆக்ட்' செய்தால் அது விரசமாகிவிடும் என்பது சிறந்த நடிகையான அம்மையாருக்குத் தெரியாமல் போனது ஏனோ? அம்மையார் அரசியலில் 'மைலேஜ்' எடுக்கும் நோக்கில் பேசியது இப்போது 'சேம் சைடு' கோல் போல ஆகிவிட்டது அவரைப்பற்றி அதாவது இன்றைய பா.ஜ.க.வின் தேசிய செயற்குழு உறுப்பினர் பற்றி அன்றைய தேசியச் செயலாளராக இருந்த எச்.ராஜா பேசிய 'அருவருக்கத்தக்க' பேச்சு மீண்டும் வலைதளங்களில் 'வைரலாக' வலம் வரத் தொடங்கி விட்டது.
தி.மு.கழகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்ட சில வார்த்தைகளுக்காக, அவர் வருத்தம் தெரிவித்தும், வழக்கு அவர் மீது போடப்பட்ட பின்னும், அவர் பேசியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்கிற குஷ்பு, எச்.ராஜா பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்டாரா? அவர் பேசியதற்காக, அமித் ஷாவும், பிரதமர் மோடியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு கேட்டாரா. அல்லது இனியாவது கேட்பாரா?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.
- தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.
சென்னை:
ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல் இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடைசியில் மிஞ்ச போவது ஏமாற்றமே.
கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து விட்டதாக சொல்கிறார். அவர் சென்றதும் மக்களும் அவரை மறந்து விட்டார்கள்.
அவர் நடைபயணம் சென்று கொண்டிருக்கும்போது தான் குஜராத்தில் தோல்வி, டெல்லியில் படுதோல்வி என்ற தகவலும் அவருக்கு சென்றது. அந்த நடைபயணத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தால் வாக்களித்து வெற்றி பெற செய்து இருப்பார்கள்.
புதிதாக தலைவராக பொறுப்பேற்ற கார்கே அடித்த 'டைமிங்' காமெடி தான். காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான முகத்தை காட்டியது. உலகமே மீண்டும் கொரோனா வருகிறதே என்ற பீதியில் இருக்கிறது. அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கை டெல்லியில் ராகுல் நடைபயணத்தை முடக்க செய்யும் சதி வேலை என்கிறார்.
இப்படித்தான் ஒவ்வொருவரும் ராகுலிடம் நல்ல பெயர் வாங்க அவரை சுற்றி இருந்து ஜால்ரா தட்டுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டையே அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. பாராளுமன்றத்துக்குள் செல்லவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே? அதை ஏன் விமர்சிக்கவில்லை.
மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம்தான். இதுதான் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. எனவே தமிழ் நாட்டிலும் இனி காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
- பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?
சென்னை:
சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இதுபோன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது" என்று கூறியுள்ளார்.
- தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது.
- தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.
கோவை:
கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.
பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். அவர்களுடன் நடிகை குஷ்புவும் இணைந்து கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். சிறிது தூரம் ரேக்ளா வண்டியிலும் பயணித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரிய பண்டிகையாகும். இது வீட்டிலும், குடும்பத்திலும் சந்தோஷம் கொடுக்க கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகையை இங்கு நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி உள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது அவரது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் கருத்து சொல்ல முடியாது.
பா.ஜ.க.வில் எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகவில்லை. ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பா.ஜ.க.வில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன்.
தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.
தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் அவரிடம் பொங்கலுக்கு துணிவு பார்ப்பீர்களா? வாரிசு பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் பொங்கலுக்கு எங்கும் போகவில்லை. வீட்டில் தான் இருக்க போறேன். எந்த படத்திற்கு போவார்கள் என்பதை நீங்கள் ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து விலகிய நிலையில் நேற்று நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் அந்த கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் நடிகை குஷ்பு இன்று கோவையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






