என் மலர்
நீங்கள் தேடியது "TN BJP Leader"
- துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.
- பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்.
தமிழக பாஜக மாநில துணைத் தலைவர்களாக 14 பேரை நியமனம் செய்து மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அதன்படி, தமிழக பாஜக துணைத்தலைவராக (தென்சென்னை) நடிகை குஷ்பு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாநில துணைத்தலைவர்களாக சர்கவரத்தி, துரைசாமி, ராமலிங்கம், கரு. நாகராஜன், சசிகலா புஷ்பா கனகசபாபதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், பாஜக மாநில துணைத் தலைவர்களாக டால்பின் ஸ்ரீதர், சம்பத், பால் கனகராஜ், ஜெயபிரகாஷ், வெங்கடேசன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக மாநில பொதுச் செயலாளர்களாக பால கணபதி, ஸ்ரீநிவாசன், முருகானந்தம், கார்த்தியாயினி, ஏ.பி. முருகானந்தம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
பாஜக மாநில பொருளாளராக சேகர், இணைப் பொருளாளராக சிவசுப்பிரமணியம் நியமனம் செய்து நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
- நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
- நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.
இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது.
நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்த விட்டனர். எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 5 மணியளவில் வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சி தொடங்கிய நிலையில், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவித்தார்.
அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவித்தனர்.
அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.
- மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
- ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபட்டது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.
இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபட்டதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார்.
இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை வழங்கினார். நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செயயப்படவில்லை.
இதனால், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.
- செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
- எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.
இதில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இன்று சென்னைக்கு வருகைத்தர உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேலும், எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பணிகளை ஒப்படைப்பது குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அப்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
- லண்டனில் இருந்து சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
- அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.
லண்டனில் 3 மாத கால படிப்பை முடித்துவிட்டு சென்னை வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
லண்டன் சென்று படிப்பதற்கு அனுமதி அளித்த பாஜகவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவின் மீது அறிஞர்கள் வைத்துள்ள மரியாதையை லண்டனில் கண்கூடாக பார்க்க முடிந்தது.
அரசியலுக்கு வந்துள்ள உச்ச நட்சத்திரமான விஜயை வரவேற்கிறேன்.
தவெக தலைவர் விஜய் தனது கருத்துகளை மக்கள் முன்பு வைக்கும்போது நாங்களும் கருத்து கூறுவோம். விஜயை கேள்வி கேட்கும் நேரத்தில் நாங்கள் நிச்சயமாக கேள்வி கேட்போம்.
விஜயின் சித்தாந்தங்கள் திராவிட கட்சிகளை போன்று தான் உள்ளது. தவெக மாநாட்டுக்குப் பின் எத்தனை முறை விஜய் வெளியே வந்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செந்தில் பாலாஜியை கொண்டாடுவது ஆச்சரியம் அளிக்கிறது. சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியை தியாகி போல் கொண்டாடுவதா ?
துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக பாராட்டுவோம்.
2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல் நிச்சயமாக சரித்திர தேர்தலாக இருக்கும்.
தமிழக பாஜகவில் கடந்த 3 மாதமாக நிறைய வேலைகள் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் எஸ்.வி.சேகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜபாளையத்தில் நடந்த மாநில பா.ஜனதா செயற்குழு கூட்டத்திற்கு எனக்கு அழைப்பு இல்லை. அதற்காக நான் ஒதுக்கப்படுவதாக கருதவில்லை.
இந்த தலைமை என்னை பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. இல்லாவிட்டால் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை. இதற்காக நான் தமிழிசை வீட்டு வாசலில் போய் நிற்க வேண்டுமா? எல்லோரும் அவரை அக்கா என்று அழைப்பார்கள். என்னை விட அவர் வயது குறைந்தவர். எனவே எனக்கு அவர் தங்கைதான்.
தமிழக பா.ஜனதாவுக்கு தலைமை ஏற்க வாய்ப்பு கிடைத்தால் அதை நான் ஏற்க தயார். அப்படி ஏற்றால் இப்போது இருப்பதை விட கட்சியை பலமாக்குவேன்.

நான் சட்டத்தை மதித்து முன்ஜாமீன் வாங்கினேன். நான் தலைமறைவாக இல்லை. கைது செய்யும் அளவுக்கு எந்த தவறும் பா.ஜனதாவினர் செய்யவில்லை. தமிழ்நாட்டில் பா.ஜனதா ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் நல்லது. கூட்டணியை தலைமைதான் தீர்மானிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #BJP #SVeShekher






