search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NDA"

    • கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அதிமுக- பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை.
    • நேற்று ஒரேநாளில் பா.ஜனதா கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் பா.ஜனதா மற்றும் அதிமுக தனித்தனியாக தமிழகத்தில் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டன.

    இரண்டு கட்சிகளும் பாமக-வுக்கு வலைவிரித்தன. இந்த மக்களவை தேர்தலை தவிரித்து 2026 சட்டமன்ற தேர்தலையும் மனதில வைத்து பாமக பல்வேறு கணக்குகளை போட்டது.

    பல்வேறு காரணங்களை மனதில் வைத்து அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் மாநிலங்களவை இடம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாமக அதில் உறுதியாக இருந்தது. இதனால் இன்று கூட்டணி முடிவாகிவிடும். நாளை முடிவாகிவிடும் என நாட்கள் இழுத்துக் கொண்டே சென்றன.

    இந்த நிலையில்தான் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என பாமக நேற்று அறிவித்தது. நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரவில் பா.ஜனதா உடன்தான் கூட்டணி என பாமக தனது முடிவை அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை மத்திய மந்திரி எல். முருகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லம் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் வழங்கப்பட்டது.

    பாமக-வை அதிமுக முழுமையாக நம்பியிருந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளது. இது அதிமுக-வுக்கு பின்னடைவுதான்.

    இச்சம்பவத்தை வைத்து திமுக ஐ.டி. பிரிவு எக்ஸ் பக்த்தில் அதிமுக-வை கிண்டல் செய்யும் வகையில் ஊட்டிக்கு தனியாதான் போகனும் போல... என எடப்பாடி பழனிசாமி வீட்டின் படத்தை வெளியிட்டு பதிவிட்டிருந்தது.

    சத்யராஜ் நடித்துள்ள அமைதிப்படை படத்தில் சத்தியராஜ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். வாக்கு எண்ணிக்கையின் போது, அவரது வாக்கு வித்தியாசத்தில் அதிகரிக்க அதிரிக்க மணிவண்ணன் சின்னவீடு அப்படியோ சத்தயராஜ் பக்கம் சாய்வார். அப்போது மணிவண்ணன் இதுபோன்ற ஒரு வசனத்தை பேசுவார். அதை வைத்து நக்கலாக திமுக இவ்வாறு பதிவிட்டுள்ளது.

    இதற்கு அதிமுக பதிலடி கொடுக்கும் வகையில் "உனக்கென்னப்பா... நீ ஜாபர் சாதிக்கை கூட கட்சியில சேர்த்துட்டு Private Jet ல போவ.

    நாங்க அப்படியா? தமிழ்நாட்டு நலன் பத்தி சிந்திக்கிற கட்சிகளுடனும் மக்களுடனும் கூட்டணி வெச்சிருக்கோம்.

    ஊட்டி என்ன- கும்மிடிப்பூண்டில இருந்து குமரி வரைக்கும் எல்லா ஊருக்கும் போவோம்- ஸ்டைலா கெத்தா! ?️" என பதிலடி கொடுத்துள்ளது.

    • டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.
    • நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

    ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஒரே சமயத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும் உள்ளன.

    வரும் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜன சேனா கட்சி மற்றும் பா.ஜ.க. கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

    கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநிலம் மோசமாக அழிக்கப்பட்டு இருப்பதாகவும், பா.ஜ.க. மற்றும் தெலுங்கு தேசம் கட்சி ஒன்றிணைந்து நாட்டிற்கும், மாநிலத்திற்கும் வெற்றிகர சூழ்நிலையை உருவாக்கும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் பாப்டாலா மாவட்டத்தில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சந்திர பாபு நாயுடுவின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தெலுங்கு தேசம் கட்சியின் சைக்கிள் துருப்பிடித்து விட்டதாக தெரிவித்தார்.

    தொடர்ந்து பேசிய அவர், "தெலுங்கு தேசம் கட்சியின் துருப்பிடித்த சைக்கிள் செயின் சரியாக ஓடவில்லை. இதன் காரணமாக அவர் மத்திய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ளார். தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டணியை எதிர்த்து போட்டியிட நாங்கள் தயாராக இருக்கிறோம். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி பலவீன சமூகத்திற்கு ஆதரவாக நிற்கும்," என்று தெரிவித்தார்.

    • 6 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
    • இந்தக் கூட்டணியால் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது.

    அமராவதி:

    ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரலில் சட்டசபை மற்றும் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாணுக்கு பா.ஜ.க. மேலிடம் அழைப்பு விடுத்தது.

    இந்த அழைப்பை ஏற்று சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்றனர். அவர்கள் மத்திய மந்திரி அமித் ஷா, தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் பா.ஜ.க.-தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சிகள் இடையிலான கூட்டணி ஆந்திராவில் உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் இணைந்துள்ளது என அக்கட்சியின் எம்.பி. கனகமேடலா ரவீந்திர குமார் தெரிவித்துள்ளார்.

    பா.ஜ.க.-தெலுங்கு தேசம் கூட்டணி ஆந்திராவில் உருவாகி உள்ளதால் ஆளும் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    • பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக 6 தொகுதிகள்தான் தருவோம் என்கிறது பா.ஜனதா.
    • சிராக் பஸ்வானுக்கு 8 தொகுதிகளுடன், உ.பி.யில் 2 தொகுதிகள் கொடுக்க முன்வரும் இந்தியா கூட்டணி.

    பீகாரில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜனதா கூட்டணில் நிதிஷ் குமார் கட்சி, மறைந்த ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம் பிடித்திருந்தன. 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை பா.ஜனதா கூட்டணி கைப்பற்றியிருந்தது.

    இந்த முறையும் இதே கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட திட்டமிட்டுள்ளன. ராம் விலாஸ் பஸ்வான் மறைந்த பிறகு, அந்த கட்சியில் இருந்து பிரிந்து பசுபதி பராஸ் ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற கட்சியை தொடங்கியுள்ளார்.

    2019-ல் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஆறு இடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது ராம் விலாஸ் பஸ்வானின் மகன் சிராக் பஸ்வாக் அதே ஆறு தொகுதிகளை கேட்கிறார். அதேவேளையில் பசுபதி பராஸ் கட்சியுடன் சேர்த்து மொத்தமாக ஆறு தொகுதிகள் தருகிறோம். லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு தனியாக ஆறு இடங்கள் தர முடியாது என பா.ஜனதா தெரிவித்துள்ளது.

    இதனால் கூட்டணி அமைவதில் இழுபறி நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகியவை இணைந்து, கடந்த முறை லோக் ஜன சக்தி போட்டியிட்ட அதே ஆறு இடங்களை தருகிறோம். மேலும் கூடுதலாக இரண்டு தொகுதிகள் வழங்குகிறோம். அத்துடன் உத்தர பிரதேசத்தில் இரண்டு இடங்கள் தருகிறோம் எனத் தெரிவித்து, சிராக் பஸ்வானை இந்தியா கூட்டணிக்கு இழுக்க காய் நகர்த்தி வருகிறது.

    பசுபதி பராஸ்க்கு பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. அரசில் மந்திரி பதவி கொடுக்கப்பட்டதும், சிராஜ் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளம் மற்றம் பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்தார். எனினும், பா.ஜனதா மற்றும் பிரதமர் மோடியை விமர்சித்து பேசவில்லை. அவர் ஏற்கனவே பிரதமர் மோடியை ராமர் என்றும், தன்னை ஹனுமான் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    2020-ல் பா.ஜனதா உடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு சிராக் பஸ்வான் மீண்டும் பா.ஜனதா கூட்டணியில் இணைந்தார்.

    மேலும் சிராக் பஸ்வான்- பசுபதி பராஸ் இடையே ஹஜிபுர் தொகுதியை பெறுவதில் போட்டி நிலவுவதாகவும் கூறப்படுகிறது.

    ஆக மொத்தத்தில் பா.ஜனதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சிராக் பஸ்வான் இந்தியா கூட்டணி வந்தால் அது சாதகமாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பாக பிரச்சனை இருந்து வரும் நிலையில், பீகார் மாநிலத்தில் கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

    • இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
    • நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரூ.21,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றுப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதல் மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ்குமாருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த முறை தான் இருக்கும் இடத்திலேயே இருப்பேன் என்றார். குறைந்தபட்சம் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

    • பீகாரில் பிரதமர் மோடி ரூ.21,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
    • ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது என்றார்.

    பாட்னா:

    பீகாரின் அவுரங்காபாத் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது 21,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இதில் மாநில முதல் மந்திரி நிதிஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

    தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்றுள்ளதால் பீகாரில் வாரிசு அரசியல் ஓரம் கட்டப்பட்டுள்ளது.

    ஒரு காலத்தில் பீகார் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவே பயந்தனர். தற்போது சுற்றுலா பயணிகள் வருகை தரும் வகையில் பீகார் மாறியுள்ளது.

    சமீபத்தில் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது. இது ஒட்டுமொத்த பீகார் மாநிலத்திற்கே கிடைத்த கவுரவம்.

    பீகாரில் ஏழைகள், தலித், ஆதிவாசி மற்றும் தாழ்த்தப்பட்டவர்களின் நலனில் எங்கள் அரசு அக்கறை செலுத்துகிறது. ஏழைகள் முன்னேறும் போது தான், மாநிலம் வளர்ச்சி அடையும்.

    இங்கிருந்து வேலைக்காக வெளிமாநிலங்களுக்கு மக்கள் செல்லும் நிலை இருந்தது. அந்த நிலை மாறி உள்ளது. அது மீண்டும் வந்துவிடக் கூடாது.

    வாரிசு அரசியலில் ஈடுபட்டு வருபவர்கள் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. மாநிலங்களவை தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் வர முயற்சிக்கின்றனர் என தெரிவித்தார்.

    • தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திட குழு அமைத்துள்ளது பாஜக
    • இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசனை நடத்திடவும். ஒருங்கிணைத்திடவும் மாநில அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது என பாஜக அறிவித்துள்ளது.

    இந்த மாநில அளவிலான குழுவில் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இக்குழுவில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேத்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.இராதாகிருஷ்ணன், தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா மற்றும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

    ஏற்கனவே பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.
    • பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று ஆட்சியில் அமரும் என தெரிவித்துள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தியது. டிசம்பர் 15 முதல் ஜனவரி 28-ம் தேதி வரை இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன் விவரம் வருமாறு:

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என இந்தியா டுடே, சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 306 தொகுதிகளைப் பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும். தமிழகத்தில் இந்தியா கூட்டணி 39 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.


    உத்தர பிரதேசத்தில் 72 தொகுதிகளை பா.ஜ.க. கூட்டணியும், 8 தொகுதிகளை இந்தியா கூட்டணி கைப்பற்றும் என தெரிவித்துள்ளது.

    கேரளாவில் இந்தியா கூட்டணி 20 தொகுதிகளை கைப்பற்றுகிறது.

    மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 26 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

    குஜராத்தில் மொத்தமுள்ள 26 தொகுதிகளையும் பா.ஜ.க. கூட்டணி கைப்பற்றுகிறது.

    மேற்கு வங்காளத்தில் இந்தியா கூட்டணி 22 தொகுதிகளையும், பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளையும் கைப்பற்றுகிறது.

    ஜார்கண்டில் 14 தொகுதிகளில் பா.ஜ.க. 12 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    பஞ்சாப்பில் இந்தியா கூட்டணி 10 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது.

    பீகாரில் 40 தொகுதிகளில் பா.ஜ.க. 32 தொகுதிகளைக் கைப்பற்றுகிறது என தெரிவித்துள்ளது.

    • பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார்.
    • பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    திருப்பதி:

    ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வாராஹி யாத்திரை நடத்தி வருகிறார்.

    யாத்திரையின்போது ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பவன் கல்யாண் பேசும்போது பிரதமர் மோடி ஜெகன்மோகனுக்கும் அவரது ஆட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    இதனால்தான் ஜெகன்மோகன் யாரையும் மதிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தி வருகிறார். ஆந்திராவில் பா.ஜ.க. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது என்றார்.

    பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் திடீரென இப்படி பேசியது அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பா.ஜ.க. தனது கூட்டணியில் பவன் கல்யாண் இருப்பதாக கூறியது.

    பவன் கல்யாண் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் மத்திய தலைமை எடுக்கும். கொள்கை முடிவுகளை இப்போதெல்லாம் எடுக்க முடியாது. பவன் கல்யாண் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார். ஜனசேனாவில் இருந்து எத்தனை பேர் சட்டசபைக்கு சென்று உள்ளனர்.

    பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

    தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி உறுதி செய்யப்படலாம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தலைமைதான் முடிவு செய்யும். பவன் கல்யாண் பேச்சுக்கள் குறித்து பா.ஜ.க. தலைமையிடம் புகார் செய்யப்படும் என்றார்.

    இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.

    • ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
    • தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது.

    நிஜாமாபாத்:

    பிரதமர் மோடி நேற்று தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்துக்கு சென்றார். அங்கு நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார். அதில் அவர் பேசியதாவது:-

    நான் ஒரு ரகசியம் சொல்கிறேன். ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பெல்லாம், தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் என்னை வரவேற்க வருவார். அந்த தேர்தலுக்கு பிறகு அவர் வரவேற்க வருவது இல்லை.

    திடீரென்று என்ன கோபம்? ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, சந்திரசேகர ராவ் என்னை டெல்லிக்கு வந்து சந்தித்தார்.

    ஒரு அழகிய சால்வையை போர்த்தி எனக்கு மரியாதை செய்தார். பிறகு அவர், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர விரும்புவதாக தெரிவித்தார். பதிலுக்கு என்ன செய்ய வேண்டும் என்று கேட்டேன். ஐதராபாத் மாநகராட்சியை கைப்பற்ற தங்கள் கட்சிக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    ஆனால், உங்கள் தவறான செயல்களால், உங்களை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள முடியாது என்று கூறி, அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டேன். ஐதராபாத் மாநகராட்சியில் பா.ஜனதா எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தாலும் பரவாயில்லை என்று கூறிவிட்டேன்.

    அதன்பிறகுதான் என்னை நேருக்குநேர் சந்திப்பதை சந்திரசேகர ராவ் தவிர்க்க தொடங்கினார். நான் சொல்வது 100 சதவீதம் உண்மை.

    தெலுங்கானா ஆட்சிப்பொறுப்பை தன்னுடைய மகன் கே.டி.ராமாராவிடம் ஒப்படைக்க விரும்புவதாகவும் சந்திரசேகர ராவ் என்னிடம் கூறினார். அதற்கு நான், அப்படி செய்யாதீர்கள். இது மன்னர் ஆட்சியல்ல, ஜனநாயகம் என்று கூறினேன்.

    தெலுங்கானா வளர்ச்சி திட்டங்களுக்காக மத்திய அரசு கொடுக்கும் நிதியை தெலுங்கானா அரசு கொள்ளையடித்து வருகிறது. கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாரத ராஷ்டிர சமிதி மறைமுக ஆதரவு கொடுத்தது.

    எனவே, தாய்மார்களும், சகோதரிகளும் உஷாராக இருக்க வேண்டும். தெலுங்கானா சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை ஆதரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக, நிஜாமாபாத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

    அவற்றில், தெலுங்கானா சூப்பர் அனல்மின் திட்டத்தின் முதலாவது அலகு திறப்பும் அடங்கும். அந்த ஆலை, 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யவல்லது.

    மனோகராபாத்தையும், சித்திப்பேட்டையும் இணைக்கும் புதிய ரெயில் பாதை, 2 ரெயில்வே வழித்தடங்களை மின்மயமாக்கும் திட்டம் ஆகியவையும் அடங்கும்.

    அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இன்னும் சில மாதங்களில், அனைத்து ரெயில் பாதைகளும் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என்று கூறினார்.

    • அ.தி.மு.க.வை உருவாக்கிய தலைவர்களை அண்ணாமலை விமர்சித்தார்
    • அண்ணாமலையை நீக்குமாறும் இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்

    மத்தியில் ஆளும் பா.ஜ.க.வின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. அங்கம் வகித்து வந்தது. ஆனால், 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியுற்றது. பா.ஜ.க.வுடனான கூட்டணிதான் இதற்கு காரணம் என அக்கட்சியில் சிலர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனாலும் கூட்டணி தொடர்ந்தது.

    இந்நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க.வினரின் சித்தாந்த தலைவர்களில் முக்கியமானவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அண்ணாதுரை குறித்து கூறிய கருத்து சர்ச்சைக்குள்ளானது. இது அ.தி.மு.க.வினரை ஆத்திரமடைய செய்தது.

    இது மட்டுமல்லாமல், "மத்தியில் மோடி, தமிழகத்தில் எடப்பாடி" எனும் அ.தி.மு.க.வின் முழக்கத்தையும் அண்ணாமலை ஏற்க மறுத்தார். 

    இதை தொடர்ந்து அண்ணாமலையை பா.ஜ.க.வின் தலைமை பொறுப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க.வினர் பா.ஜ.க.வின் அகில இந்திய தலைமையிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை தலைமை ஏற்க மறுத்ததாக தெரிகிறது.

    இந்நிலையில், பா.ஜ.க.வை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாகவும், அக்கூட்டணி முறிந்ததாகவும் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவர் கே.பி. முனுசாமி அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

    இது தொடர்பாக அ.தி.மு.க.வின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் !

    தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா அவர்களையும், இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களையும் அவதூறாக பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

    மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை, கடந்த 20.06.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழக பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை பற்றியும் அவதூறாக விமர்சித்து வருகிறது.

    இந்த செயல், கழகத் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில், தலைமைக் கழக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 திங்கட்கிழமை) கழகப் பொது செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் 'புரட்சி தமிழர்' திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழக செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில், 2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்று முதல், பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    இதற்கிடையே, பா.ஜ.க.வுடன் எக்காலத்திலும் கூட்டணி கிடையாது என தீர்மானம் இயற்றி அ.தி.மு.க. அக்கூட்டணியிலிருந்து விலகியதற்கான காரணங்களை குறிப்பிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி" என்பதற்கு பதிலாக "பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி" என வாசகங்கள் இடம் பெற்றிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • பல மாநிலங்களிலிருந்து 28 கட்சிகள் ஒன்று சேர்ந்து I.N.D.I.A. கூட்டணியை அமைத்துள்ளது
    • பா.ஜ.க. ஏ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பாரத் ராஷ்டிர சமிதி ஆகிய 3 கட்சிகளையும் காங்கிரஸ் எதிர்க்கிறது

    வரும் 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியையும், அதனை சேர்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.வையும் எதிர்த்து இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி I.N.D.I.A. கூட்டணி எனும் எதிர்கட்சிகள் கூட்டணி மிக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஆங்காங்கே பிரச்சாரம் செய்து வருகிறார்.

    தெலுங்கானாவில் உள்ள துக்குகுடா பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய அவர் அம்மாநில கட்சிகளையும் விமர்சித்து பேசினார்.

    அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

    பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுக்கும் அக்கட்சியை மறைமுகமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கும், அத்தகைய கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிராக எந்த வழக்கும் எந்த மத்திய விசாரணை அமைப்பாலும் பதிவு செய்யபடுவதில்லை. ஹைதராபாத் பாராளுமன்ற உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி இதுவரை ஒரு வழக்கையும் சந்திக்கவில்லை. தெலுங்கானா முதல்வரையும், ஒவைசியையும் மோடி தனது அணியை சேர்ந்தவராகவே பார்க்கிறார். அதனால் அவர்கள் மீது வழக்குகள் கிடையாது. ஆனால் எதிர்கட்சி கூட்டணியை சேர்ந்தவர்கள் குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சி பா.ஜ.க.வை மட்டுமல்ல, ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சி மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி ஆகிய கட்சிகளையும் சேர்த்து எதிர்க்கிறோம். அவை தனித்தனி கட்சிகளாக இயங்கினாலும் மறைமுகமாக மூன்றும் கை கோர்த்து இயங்குகின்றன.

    இவ்வாறு ராகுல் விமர்சனம் செய்தார்.

    நேற்று, இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய ஒவைசி தெரிவித்ததாவது:

    ராகுல் அவர்களே, நீங்கள் தொடர்ந்து பெரிதாக பேசுகிறீர்கள். இனிமேல் கேரளாவில் உள்ள உங்கள் தற்போதைய தொகுதியான வயநாட்டிலிருந்து போட்டியிடாதீர்கள். உங்களுக்கு துணிச்சல் இருந்தால் ஹைதராபாத் தொகுதிக்கு வந்து என்னை எதிர்த்து போட்டியிட்டு காட்டுங்கள்.

    இவ்வாறு சவால் விடும் வகையில் ஒவைசி பதிலளித்தார்.

    எதிர்கட்சிகள் கூட்டணியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 25 கட்சிகளுக்கும் மேல் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் தேசிய கூட்டணியை எதிர்த்து வருகிறது. ஆனால், இக்கூட்டணியில் சேருமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சிக்கு அழைப்பு கூட விடப்படவில்லை என ஒவைசி சில நாட்களுக்கு முன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ×