என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alliance"

    • தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை.

    வரும் 2026 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வுடன் நிச்சயம் கூட்டணி கிடையாது என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் சென்னையில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என விஜய் இதுவரை கூறவில்லை. பிறர் கூறுவதற்கு பதில் சொல்ல முடியாது" என்றார்.

    இந்நிலையில், திமுகவுடனும், பாஜகவுடனும் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கூட்டணி தொடர்பாக எங்கள் வாயில் வரும் வார்த்தை, தகெவ தலைவர் விஜய் தெரிவித்த வார்த்தையே.

    பாஜகவுடனும், திமுகவுடனும் தவெக கூட்டணி கிடையாது என்று தவெக முதலாம் ஆண்டு நிறைவு விழாவில் தலைவர் விஜய் ஏற்கனவே தெளிவாக அறிவித்துவிட்டார்.

    கூட்டணி குறித்து விஜய் தெரிவித்த நிலைப்பாட்டையே நாங்களும் தெரிவிக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    கூட்டணி குறித்த கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டிய தேவை இல்லை.

    • அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி.
    • இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வரும் 23ம் தேதி விருந்து அளிக்க உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    அதிமுக- பாஜக கூட்டணி உறுதியான நிலையில் மகிழ்ச்சியில் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

    அதன்படி, எடப்பாடி பழனிசாமியின் பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்திலேயே விருந்து உபசரிப்பு நடைபெற உள்ளது.

    இன்று மாலை விருந்து திட்டமிட்டிருந்த நிலையில் வரும் 23ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.
    • அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களத்தில் காட்சிகள் அதிரடியாக மாறி வருகின்றன. அதில் சமீபத்தியது, அதிமுக - பாஜக கூட்டணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் இருந்த நிலையில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பேச்சால் கடந்த லோக் சபா தேர்தலில் கூட்டணி முறிந்தது.

    இது அத்தேர்தலில் தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்குமே பின்னடைவை தந்தது. இதிலிருந்து பாடம் கற்ற இவ்விரு கட்சிகள் தற்போது மீண்டும் கூட்டு சேர்ந்துள்ளன.

    இந்நிலையில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவில் இருந்து தான் விலகிவிடுவேன் என்று தான் சொல்லவே இல்லை என முன்னால் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கியுள்ளார்.

    அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, "பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் அதிமுகவில் இருந்து விலகுவேன் என நான் எப்போதும் கூறவில்லை.

    பதவிக்காக யார் வீட்டு வாசலிலும் இந்த ஜெயக்குமார் நின்றதில்லை. அதிமுகதான் எனது உயிர் மூச்சு" என்று தெரிவித்துள்ளார். முன்னதாக மத்திய பாஜக அரசின் செயல்பாடுகள் குறித்தும் அண்ணாமலை குறித்து ஜெயகுமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
    • புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.

    அதிமுக- பாஜக கூட்டணி மூலம் வளம், வளர்ச்சி, வாய்ப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடும் பெருமை எனக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் கிடைத்தது.

    திமுகவின் பின்னடைவு தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வாய்ப்புகளின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.

    எனது இல்லத்தில் நடத்தப்பட்ட இரவு உணவு விருந்தை தனது முன்னிலையில் கவுரவித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

    ஒன்றிணைந்து, பிரகாசமான, வலுவான மற்றும் துடிப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியான தீர்மானத்துடன் நாம் முன்னேறிச் செல்கிறோம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என அறிவிப்பு.
    • யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

    அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமித்ஷா மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் மோடி தலைமையிலும் மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    பாஜக, அதிமுக கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியமைக்கும். ஜெயலலிதா காலம் முதலே, அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது.

    அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினர் அமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு வெற்றிப்பெற்ற பிறகு பதில் சொல்கிறோம்.

    அதிமுக தரப்பில் இருந்து எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி என்பது அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் தலையிட முடியாது.

    அதிமுகவின் தனிப்பட்ட கட்சி விஷயங்களில் பாஜக பங்கேற்காது, தேர்தல் விவகாரத்தில் மட்டுமே பங்கேற்போம்.

    யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அதிமுக பாஜக கூட்டணியால் இருவருக்குமே பலன் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை.
    • வருகின்ற ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அ.தி.மு.க பிரிந்துள்ளது.

    ஜெயலலிதா பற்றி பேசும்போது அமைதியாக இருந்தவர்கள். இப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர்.

    அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை.

    ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அ.தி.மு.க.

    மக்கள் மத்தியில் தி.மு.க. கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளது.

    2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட்டணி பலத்தால் வென்றனர்.

    தி.மு.க- காங்கிரஸ் கூட்டணி வென்றால் தமிழகத்திற்கு அனைத்து கிடைக்கும் என்கிறார்கள்.

    காவிரி விவகாரத்தில் கர்நாடகாவிடம் இருந்து தண்ணீரை பெற்று தர முடியவில்லை. இவர்கள் கூட்டணி அமைத்து மக்களை ஏமாற்ற முடியாது.

    அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் தருவோம் என்றார்கள்.

    தற்போது உரிமைத்தொகை கிடைக்காத ஒவ்வொரு குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது.

    இந்த ஆட்சி விடியல் தரும் ஆட்சி அல்ல. சசிகலாவிடமிருந்து பன்னீர்செல்வம் பிரிந்து சென்றதால் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

    மத்தியில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும்.

    அதேபோல் பாராளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் போது தான் தட்டிக் கேட்க முடியும்.

    இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க மூட்டையிலிருந்து நெல்லிக்காய் போல சிதறும். ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். அப் போது தான் உள் ஒதுக்கீடு செய்ய முடியும்.

    2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்றாக அ.ம.மு.க.வுக்கு மக்கள் அமோக ஆதாரவு அளிப்பார்கள்.

    வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம்.

    அப்படி வாய்ப்பு இல்லை என்றால் தனித்து போட்டியிட முடிவு செய்வோம். வருகின்ற டிசம்பர் , ஜனவரியில் எங்களது முழு நிலைப்பாட்டை தெரிவித்து விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரெங்கசாமி, தஞ்சை மாநகர் மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.
    • சுதாகர்ரெட்டி கூறும்போது கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    சென்னை:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நடப்பதாக இருந்தது. ஆனால் அண்ணாமலை டெல்லியில் இருப்பதால் இந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கட்சி அலுவலகமான கமலாலயத்தில் முக்கிய நிர்வாகிகள் அண்ணாமலை இல்லாமல் கூடி ஆலோசனை நடத்தினார்கள்.

    இந்த கூட்டத்தில் மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள், கோட்ட பொறுப்பாளர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த பா.ஜனதா துணைத் தலைவர் வி.பி.துரைசாமி கூறும்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடக்கிறது. கூட்டணி தொடர வேண்டும் என்பதால்தான் ஆலோசனை நடக்கிறது என்றார்.

    மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி கூறும்போது, கூட்டணி பற்றி தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் எங்கள் பதிலை அறிவிப்போம் என்றார்.

    • மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.
    • தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் திருமங்கலம் அருகே காங்கேய நத்தத்தில் உள்ள வீரசின்னம்மாள் கோவில் உள்ளது. தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் குலதெய்வ கோவிலான இங்கு சாமி கும்பிடுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து இன்று விமானம் மூலம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வருமான வரித் துறையினர், அமலாக்கத் துறையினர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் வீடுகளில் மட்டும் சோதனை செய்வது என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் சோதனைக்கு பின்னர் என்ன என்பது மர்மமாகவே உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தை சொந்த பணமாக மாற்றும் நபர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றமில்லை.

    தமிழகத்தில் அதிகமாக லஞ்ச ஊழல் தலை விரித்தாடுகிறது. அதனால் இது போன்ற சோதனைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த சோதனையை தே.மு.தி.க. வரவேற்கிறது.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலம் உள்ளது. நிச்சயமாக ஜனவரி மாதம் கூட்டணி குறித்தும், தே.மு.தி.க. நிலைப்பாடு குறித்தும் அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். தமிழகத்தில் பட்டாசு வெடி விபத்து அதிகமாக உள்ளது.

    அதனை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி நீர் பிரச்சனையில் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமை கிடைக்கவில்லை. தி.மு.க., அ.தி.மு.க. மாறி மாறி வந்தாலும் இதே நிலை தான் தொடர்கிறது. மத்திய அரசு தலையிட்டு நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்தி இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால் மட்டுமே இது போன்ற பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

    தி.மு.க. ஆட்சி ஒரு ஹிட்லர் ஆட்சி போல உள்ளது. உரிமைக்காக போராடுபவர்கள் நியாயமான கோரிக்கையாக இருந்தால் நிச்சயமாக அரசு அவர்களுக்கு செவிசாய்க்க வேண்டும்.

    இஸ்ரேல் போரில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கை தாமதமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர்.
    • தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்தியலிங்கம் எம்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

    புதிதாக பொறுப்பேற்ற வைத்திலிங்கம் எம்.பி. கூட்டணி கட்சித்தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேற்று முன்தினம் சந்தித்தார்.

    இந்த சந்திப்பு சென்னை அறிவாலயத்தில் நடந்தது. அவருடன் புதுவை முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, சட்டமன்றக்கட்சி தலைவர் வைத்தியநாதன் மற்றும் காங்கிரசார் உடன் சென்றிருந்தனர்.

    வழக்கமாக கூட்டணிக்கட்சித் தலைவர்களை புதுவை அரசியல் கட்சித்தலைவர்கள் சந்திக்கும் போது அந்த கட்சியின் புதுவை மாநில தலைவர்கள் மூலம் அனுமதி பெற்றுதான் சந்திப்பார்கள். இதுதான் நடைமுறை வழக்கம்.

    ஆனால் இந்த சந்திப்பில் தி.மு.க. அமைப்பாளர் சிவாவோ, அக்கட்சி நிர்வாகிகளோ இல்லை. நேரடியாகவே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரம் ஒதுக்க கேட்டு அறிவாலயத்தில் சந்தித்துள்ளனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. தேர்தலில் 2 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

    அதேநேரத்தில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தி.மு.க 6 எம்.எல்.ஏ.க்கள் பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

    தேர்தலுக்கு பிறகு கூட்டணி கட்சியான காங்கிரசுடன் இணக்கமான உறவை தொடரவில்லை.

    காங்கிரஸ் சார்பில் கூட்டணி கட்சி கூட்டத்துக்கு அழைத்தபோது காங்கிரஸ் அலுவலகத்துக்கு வர முடியாது என்று தி.மு.க. பதில் அளித்தது.

    இதனால், ஓட்டல்களிலோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திலோ கூட்டணி கட்சி கூட்டம் நடந்து வருகிறது. இது புதுவை காங்கிரசுக்கும்-தி.மு.க.வுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதனாலேயே தி.மு.க. அமைப்பாளர் சிவாவை புறக்கணித்து விட்டு நேரடியாகவே ஸ்டாலினை புதுவை காங்கிரசார் சந்தித்துள்ளனர். இது புதுவை தி.மு.க. அமைப்பாளர் சிவா மற்றும் நிர்வாகிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
    • முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளன.

    கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. வருகிற தேர்தலில் இந்தியா கூட்டணியில் முக்கிய கட்சியாக இடம் பெற்றுள்ள தி.மு.க. இந்த கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று கருதுகிறது.

    எனவே அதற்கு ஏற்ப கூட்டணி கட்சிகளின் பலத்தை எடை போட்டு ஒவ்வொரு தொகுதியையும் ஒதுக்க திட்டமிட்டுள்ளது. கட்சிகளின் வெற்றிக்கு அடித்தளமாக இருப்பது பூத் கமிட்டிகள்தான். எனவே கூட்டணி கட்சிகளின் பூத் கமிட்டிகளின் பலத்தையும் எடை போடுகிறது.

    காங்கிரசை பொறுத்தவரை 10 தொகுதிகள் குறையக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உள்ளது. சமீபத்தில் சென்னை வந்த சோனியா, பிரியங்காவிடமும் கூடுதல் இடங்கள் கேட்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோனியா கட்சியை வலுப்படுத்தும் படி கூறினார்.

    இந்நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகள் அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் இடங்களில் பலப்படுத்தவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உத்தரவிட்டார். இந்த பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது.

    தேர்தலுக்கான செயல் திட்டங்களை வகுக்க மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கு கே.எஸ்.அழகிரி அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி இன்று மாவட்ட தலைவர்களுடன் கே.எஸ்.அழகிரி ஆலோசனை நடத்தினார்.

    முன்னதாக பூத் கமிட்டிகள் நிலவரம் பற்றி கே.எஸ்.அழகிரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    இன்றைய கூட்டத்தில் முக்கியமாக இதைப்பற்றி தான் ஆலோசிக்கிறோம். எங்கள் கையை நாங்கள் பலப்படுத்துகிறோம். பூத் கமிட்டிகளை பொறுத்த வரை குறைந்தபட்சம் ஒரு தலைவர் அவரின் கீழ் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். ஏற்கனவே 60 சதவீதம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுவிட்டன. இன்றும் பலர் ஒப்படைப்பார்கள்.

    எனவே 85 சதவீதம் வரை நிறைவடையும் என்று கருதுகிறோம். 100 சதவீத பூத் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்று ராகுல் உத்தரவிட்டுள்ளார். எனவே அந்த இலக்கை நோக்கி பணியை தீவிரப்படுத்து வோம்.

    முக்கியமாக சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி மக்கள் மத்தியில் பரப்புரை மேற்கொள்ளவும் திட்ட மிட்டுள்ளோம் என்றார்.

    கூட்டத்தில் சென்னை மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், டெல்லிபாபு, சிவராஜசேகரன், முத்தழகன், ரஞ்சன்குமார், அடையாறு துரை, ஊட்டி கணேஷ், கே..டி.உதயம் உள்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    மாநில நிர்வாகிகள் கோபண்ணா, உ.பலராமன், தளபதி பாஸ்கர், அகரம் கோபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும்.
    • பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும்.

     திருப்பூர்:

    புதிய நீதிக்கட்சி நிறுவனத்தலைவர் ஏ.சி.சண்முகம் திருப்பூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் புதிய நீதிக்கட்சி அங்கம் வகிக்கும். அந்த கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும். 5 மாநில சட்டமன்ற தேர்தல் வந்த உடன் இந்தியா கூட்டணியை கடந்த 3 மாதங்களாக காணவில்லை.

    5 மாநில தேர்தல்களில் பா.ஜனதா 3 மாநிலங்களை கைப்பற்றும். ஏற்கனவே ஆட்சியில் உள்ள மாநிலத்தை காங்கிரஸ் தக்க வைத்துக் கொள்ளுமா என்பது தெரியாது. அதேபோல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் பிரதமர் யார் என்று அவர்களால் சொல்ல முடியாது.

    பிரதமர் யார் என்று அறிவிக்கும் சூழல் ஏற்படும் போது அந்த கூட்டணி காணாமல் போய்விடும். ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமையும். தமிழகத்திலும் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜனதா. கூட்டணி வெற்றி பெறும். பிரதமர் மோடியை தவிர நல்ல தலைவரை இந்தியா கூட்டணி மற்றும் எந்த கட்சியாலும் காட்ட முடியாது. தமிழகத்தில் யார் பிரதமர் என்று வாக்கு கேட்பார்கள் என்பதும் கேள்விக்குறிதான். இதுவே பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்க காரணமாக அமையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சே காரணம் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள்.
    • தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றிய சந்தேகம் இருந்து வருகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணி வியூகங்களும் தீவிரமாகி உள்ளன.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் அ.தி.மு.க. வெளியேறியது. அதன்பிறகு அ.தி.மு.க.வை சிறுபான்மையினருக்கு ஆதரவான கட்சி என்பதை அந்த மக்கள் மத்தியில் நிலை நிறுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சிகளை மேற்கொண்டார்.

    பா.ஜனதாவுடன் இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று அறிவித்த எடப்பாடி பழனிசாமி தி.மு.க., மற்றும் பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணியை உருவாக்க முயற்சித்து வருகிறார்.

    இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க. உறவு தமிழகத்தில் பலமாக இருந்தாலும் அகில இந்திய அளவில் நெருடல்களை ஏற்படுத்தி உள்ளது.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்ம எதிர்ப்பு பேச்சு மற்றும் தி.மு.க. எம்.பி.யின் கோ மூத்திர பேச்சு ஆகியவை டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் தோல்விக்கு உதயநிதி பேசிய சனாதன எதிர்ப்பு பேச்சே காரணம் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர்கள் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார்கள்.

    இந்த நெருடலை பயன்படுத்தி காங்சுடன் கை கோர்க்க அ.தி.மு.க. தரப்பில் திரைமறைவு வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அ.தி.மு.க. எம்.பி. தம்பித்துரை டெல்லியில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

    குறிப்பாக தி.மு.க. அமைச்சர்கள் மீது நடந்து வரும் வருமானவரி சோதனைகள், சமீபத்தில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பில் அரசின் செயல்பாடுகள் ஆகியவை மக்கள் மத்தியில் தி.மு.க.வின் செல்வாககை குறைத்து இருப்பது பற்றியும் காங்கிரஸ் தலைவர்களிடம் எடுத்த கூறி வருகிறார்கள். எனவே பாராளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி மீதான அதிருப்தி வெற்றியை தேடி தரும் என்று எடுத்து சொல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    அ.தி.மு.க.வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து வரும் சிலரும் டெல்லி காங்கிரஸ் தலைவர்களிடம் அ.தி.மு.க. கூட்டணியே கை கொடுக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

    ஏற்கனவே தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பற்றிய சந்தேகம் இருந்து வருகிறது.

    காங்கிரசுடன் உறவை வளர்த்து கொள்வதன் மூலம் இந்தியா கூட்டணியில் இடம் பிடித்து விட முடியும் என்று அ.தி.மு.க. கருதுகிறது. அவ்வாறு காங்கிரசுடன் கூட்டணி ஏற்படும் நிலையில் மேலும் சில கட்சிகள் தங்கள் பக்கம் வருவார்கள் என்று எடப்பாடி பழனிசாமி கணக்கு போட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமி யின் கூட்டணி நகர்வுகள் கை கொடுக்குமா? என்பதற்கு வருகிற 19-ந்தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கூட்டத்துக்கு பிறகு தெளிவு கிடைக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

    ×