என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 தேர்தல்"

    • கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என மாநிலக்குழு தீர்மானித்துள்ளது
    • தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானித்துவிட்டுதான் அடுத்து எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கூறுவோம்

    2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக கூட்டணியின் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்சிகளும், பேச்சுவார்த்தையை தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தை நடத்தியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம்,

    "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கிறது என முன்னறே கூறியிருந்தோம். அதனடிப்படையில் இன்று திமுக தொகுதிப் பங்கீடு குழுவுடன், எங்கள் கட்சி சார்பில் நானும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், சாமுவேல் ராஜ், கண்ணன் ஆகியோர் இன்று பேச்சுவார்த்தை நடத்தினோம். பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது.

    கூடுதல் தொகுதிகளில் போட்டியிடவேண்டும் என ஏற்கனவே மாநிலக்குழு தீர்மானித்துள்ளது. அந்த கோரிக்கையையும் பேச்சுவார்த்தைக் குழுவிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள் கலந்துபேசி தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

    தொகுதிப் பட்டியல் தொடர்பாக எதுவும் வழங்கவில்லை. முதலில் தொகுதிகளின் எண்ணிக்கையை தீர்மானித்துவிட்டுதான் அடுத்து எந்த தொகுதியில் போட்டி என்பது பற்றி கூறுவோம். தொகுதியை குறைக்கவேண்டும் என்பதுபோன்ற கோரிக்கையை எதுவும் திமுக வைக்கவில்லை. பாஜக-அதிமுக கூட்டணியை முறியடிக்கும் வகையில் யார் இந்த அணிக்கு வலுசேர்த்தாலும் அது நல்லதுதான். இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும். மாநிலங்களவை தேர்தலில் கூட்டணி கட்சியினர் யார் நின்றாலும் அவர்களுக்கு எங்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள்." என தெரிவித்தார். 

    • ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
    • அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    முன்னாள் அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தனது புதிய அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.  புதிய கட்சித் தொடங்கியுள்ள அவர், கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படங்களுடன் கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்கள் அடங்கிய கட்சியின் கொடியை பசும்பொன்னில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தினார். 

    அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு எடுத்த முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது கட்சிக்கு "அம்மா அதிமுக" என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் புதியக் கட்சியை தொடங்குகிறேன். 9 வருடங்கள் அமைதியாக இருந்ததுபோல இனி என்னால் அமைதியாக இருக்க முடியாது எனவும் பேசியுள்ளார். 

    சசிகலாவின் இந்த வருகை, தமிழ்நாடு அரசியலில் குறிப்பாக அதிமுக வாக்கு வங்கியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியா, கூட்டணியா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

    • கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.
    • 2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.

    தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் சந்திப்பு இன்று சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது உரையாற்றிய அவர்,

    "இந்தியாவிலேயே பூத் அளவில் டிஜிட்டல் ஏஜெண்டுகளை வைத்திருக்கும் ஒரே அரசியல் இயக்கம் தி.மு.க.தான். ஆன்லைன் மட்டுமின்றி, ஆஃப்லைனிலும் கலக்கும் அணியாக தி.மு.க. ஐடி அணி இருக்கிறது. ஆன்லைனில் உங்கள் வேலை ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்வது மட்டுமில்லை. அஜந்தாவை செட் செய்வது. ஏனெனில் கண்டென்ட்டில் கிங் தி.மு.க.தான்.

    நம்மை களங்கப்படுத்தி, தமிழ்நாட்டிற்குள் நுழைய, சிதைக்க எதிரிகள் நினைக்கின்றனர். அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம் அவதூறுகள். அவதூறு பரப்புவோருக்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்காமல், ஆக்கப்பூர்வ பணிகளும் செய்ய வேண்டும்.

    டிஃபென்ஸ் மட்டுமே ஆடக்கூடாது. அவ்வப்போது அட்டாக் மோடிலும் செயலாற்ற வேண்டும். அடித்து ஆட வேண்டும். நிறைய திட்டங்களை மக்களுக்கு கொடுத்திருக்கிறோம். கடந்த மாதத்தில் மட்டுமே எவ்வளவோ பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றை அறிந்துகொள்ள என்னுடைய சமூக வலைதளப் பக்கம், திமுகவின் பக்கங்கள், அரசு சமூக வலைதளப் பக்கங்களை பின்தொடருங்கள். ஐடி விங்கின் வாட்ஸ் ஆப் சேனலை அனைவரையும் பின்தொடர வைய்யுங்கள். நம் சாதனைகள்தான் பேச்சுப் பொருளாக இருக்கவேண்டும். 

    தமிழ்நாட்டில் கலவரத்தை உருவாக்கி, அதில் குளிர்காய எதிரிகள் நினைக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களில் பல திட்டங்களை போட்டனர். பொய் செய்திகளை பரப்ப முயன்ற திட்டங்கள் அம்பலப்பட்டு, அவமானப்பட்டு நிற்கின்றனர். பொய் செய்திகளை பரப்ப நிறைய ரைட் விங் கணக்குகளை பாஜக நடத்தி வருகிறது. அவர்கள் நம்மை குறித்து பொய் செய்தி பரப்பினால், உரிய ஆதாரத்தோடு உடனே பதிலடி தர வேண்டும்; இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் இருக்கும். பொய் செய்திக்கு நூற்றுக்கணக்கில் தரும் பதிலடியால், அவர்கள் அதை நீக்கிவிட்டு ஓட வேண்டும். 

    காமெடியாக பதில் கூறுங்கள், கிண்டலாக பதிவிடுங்கள். ஆனால் எதுவாக இருந்தாலும் கூலாக, பொறுமையாக செய்யுங்கள். அவர்களக்கு வந்தால் ரத்தம், திமுகவிற்கு வந்தால் தக்காளி சட்னி என செய்தி சேனல்களும், தேர்தல் ஆணையமும் செயல்படுகிறது. நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு சொல்லையும், எழுத்தையும் பொறுப்போடு உருவாக்குங்கள்.

    தோழமை கட்சியினருடன் சிண்டுமுடிக்கும் வேலையில் எதிர்க்கட்சியினர் ஈடுபடுவர். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் தரக்கூடாது. திமுகவின் அதிகாரப்பூர்வ செய்திகளை மட்டும் நம்பி செயல்படுங்கள். மற்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். களத்திலும், ஆன்லைனிலும் சரியாக செயல்பட்டால் நமது இலக்கை நாம் நிச்சயம் எட்ட முடியும். அதற்கான அடித்தளம்தான் இந்த ஆடுகளம் செயலி. 

    2019-ல் இருந்து தமிழ்நாட்டில் நடந்த எல்லா தேர்தல்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. யார் ஜெயிப்பார்கள் என எல்லோருக்கும் தெரியும். தி.மு.க.கூட்டணிதான் வெல்லும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் எத்தனை தொகுதிகள், எவ்வளவு வாக்கு வித்தியாசம் என்ற முடிவுகளுக்காகத்தான் காத்திருப்போம்.

    2026 தேர்தலும் அதே போலத்தான். திமுகவின் வெற்றி உறுதிசெய்யப்பட்ட ஒன்று. ஆனால் அது எவ்வளவு பெரிய வெற்றியாக அமையும் என்பதை நோக்கிதான் இந்த உழைப்பு. செயல்வீர ர்கள் எல்லாக் கட்சிகளிலும் இருப்பார்கள். ஆனால் கொள்கைக்கான அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாமல், இணையத்தில் களமாடும் தோழர்கள் தி.மு.க.வில் மட்டும்தான் உண்டு. ஆஃப்லைன், ஆன்லைன் இரண்டிலும் தி.மு.க.தான் சிங்கம் எனக் காட்டுவோம். வெல்வோம் ஒன்றாக' என தெரிவித்தார்.

    • 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.
    • ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய துணைத் தேர்தல் ஆணையர்கள் பன்வர் பிரகாஷ், மணீஷ் கார்க், பவன் குமார் சர்மா, சஞ்சய் குமார், ஆஷிஷ் கோயல் மற்றும் பலர் அடங்கிய 7 பேர் கொண்ட குழு சென்னை வந்தடைந்தனர்.

    இந்திய தேர்தல் ஆணையத்தின் மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மணீஷ் கார்க் கூறுகையில், "தேர்தல் ஆயத்த பணிகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் குழு சென்னை மற்றும் புதுச்சேரியை அடைந்துள்ளது," என்றார்.

    தேர்தல் ஆணைய குழுவினர் நாளை, நாளை மறுநாள் (பிப். 12 மற்றும் 13) சென்னையில் முகாமிட்டு, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். 12ஆம் தேதி தலைமை தேர்தல் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு, வருமான வரித்துறை, சுங்கத்துறை, காவல்துறை, ரெயில்வே, துணை ராணுவம், தபால்துறை, சிவில் விமான போக்குவரத்துறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதைத் தொடர்ந்து 13ஆம் தேதி அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) துணை கமிஷனர் ஆலோசனை மேற்கொள்கிறார். அதன் பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரக்கூடிய தொகுதிகள், வாக்குச்சாவடிகள் ஆகியவை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படும். தேவையான முன்னேற்பாடு பணிகள் நிறைவுபெற்ற பிறகு தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

    • கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.
    • கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.யான கமல்ஹாசன், சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் முதல்முறையாக உரையாற்றினார். கமல்ஹாசன் உரை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பலரும், கமல்ஹாசன் பேசியது புரியவில்லை என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில், சென்னை திரும்பிய கமல்ஹாசன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது உரை பற்றிய கேள்விக்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், "ஆக்கப்பூர்வமான யோசனைகள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நான் நல்ல எண்ணத்துடன் பேசினேன், மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விவாதத்தில் ஈடுபட வேண்டும்," என்று கூறினார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பற்றிய கேள்விக்கு பதிலளித்த கமல் ஹாசன், "ஒட்டுமொத்த இந்தியாவுடன் தான் எனது கூட்டணி, கூட்டணியை விட கொள்கை தான் முக்கியம்," என்றார்.

    • ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது.
    • கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும்.

    தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாடு முழுவதும் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவரது இந்த ரத யாத்திரை நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரம் வந்தது.

    தொடர்ந்து அங்கு நடந்த கூட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

    சென்னை கோட்டை முதல் கன்னியாகுமரி வரை நடந்த உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற கேப்டன் ரத யாத்திரை நிகழ்ச்சி இன்று கொட்டாரம் சந்திப்பில் நிறைவு பெற்றுஉள்ளது. இனி நமது கட்சிக்கு எல்லாம் நல்லதாக நடக்கும். படித்தவர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டம், கன்னியாகுமரி. இங்கு தான் குமரி கண்டம் இருந்தது. அதேபோல தமிழ் மொழி பிறந்ததும் இந்த குமரி கண்டத்தில்தான்.

    ஆண்ட கட்சிக்கும், ஆளுகின்ற கட்சிக்கும் சிம்ம சொப்பனமாக தே.மு.தி.க. இருக்கிறது. 2026-ல் நடை பெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. இடம்பெறும் கூட்டணி தான் மகத்தான வெற்றி பெறும். கூட்டணி குறித்து சென்னையில் பிப்ரவரி 3-ந் தேதி (நாளை) அறிவிப்பேன். கன்னியாகுமரி சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலம் ஆகும். தே.மு.தி.க. இடம் பெறும் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த சுற்றுலா தளம் மேம்படுத்தப்படும்.

    தோவாளை மலர் சந்தையில் சென்ட் தொழிற்சாலை அமைக்கப்படும். மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும். இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து மீனவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். கனிம வளக்கொள்ளை தடுக்கப்படும். மயிலாடியில் கல் சிற்ப பூங்கா அமைக்கப்படும். சுசீந்திரத்தில் தடுப்பணை கட்டப்படும்." என அவர் தெரிவித்தார். 

    • கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.
    • காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை ராகுல்காந்தி முடிவு செய்வார்

    தமிழ்நாட்டில் 2026 ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. தமிழ்நாட்டின் இருபெரும் கட்சிகளாக திமுக, அதிமுக கூட்டணியை இறுதிசெய்துவிட்டன. ஒருசில கட்சிகள் மட்டுமே இன்னும் கூட்டணியை அறிவிக்கவில்லை.

    நாடாளுமன்ற தேர்தலின்போது உருவான திமுக தலைமையிலான இந்தியக் கூட்டணியே தொடரும் என திமுக தரப்பும், காங்கிரஸும், அதில் இடம்பெற்றுள்ள மற்ற கூட்டணி கட்சிகள் கூறினாலும், திமுக- காங்கிரஸ் இடையே உரசல் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் மீண்டும் திமுக-காங்கிரஸ் இடையே வார்த்தை போர் வெடித்துள்ளது. திமுக மதுரை வடக்குத் தொகுதி எம்எல்ஏ தளபதி, 'வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்' என பேசியிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    "மாணிக்கம் தாகூர், ஜோதி மணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும். இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்எல்ஏ ஆனால் என்ன, ஆகாவிட்டால் என்ன என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை 'சீட்'டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் இந்தியா கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு 3000, 4000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டி போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ்" என மதுரையில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் திமுக எம்எல்ஏ கோ.தளபதி பேசியிருந்தார்.

    இது கூட்டணிக்குள் மேலும் சலசலப்பை ஏற்படுத்த இவரின் இந்தப் பேச்சுக்கு பதிலளிக்கும் விதமாக மதுரை வடக்கு தொகுயில் போட்டியிட கார்கேயிடம் கோரிக்கை வைக்க உள்ளதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்திருந்தார். மேலும் அதிகார திமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது எனவும் தெரிவித்திருந்தார். 

    இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணியும் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  

    "திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள், நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை.

    அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம். அமைதி காக்கிறோம்.

    கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும், அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது." எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
    • லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

    எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.

    இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.

    லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

    தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது
    • 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க திமுக, அதிமுக, பாஜக வுக்கு இடையே கடும் போட்டி நிலவும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில் நடிகர் விஜய் புதிதாக தொடங்கிய 'தமிழக வெற்றிக் கழகம்' வருகிற தேர்தலில் போட்டியிட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு ஏற்படும் தெரிகிறது.



    இதே போல வருகிற தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் கடந்த மாதம் அறிவித்தார். கண்டிப்பாக 2026 தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.




    தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே 2026 தமிழக அரசியல்களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2026 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை மலரச் செய்வோம்.
    • தி.மு.க. தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வாக்குறுதியாக அறிவித்தது.

    சென்னை:

    சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் துரைப்பாக்கத்தை அடுத்த கண்ணகி நகரில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை வெளி மாநிலங்கள் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் எம்.ஜி.ஆர். என்ற மாமனிதர் தோன்றியதால் தான் தமிழ்நாடு இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அவர் உயிரோடு இருந்தவரை யாராலும் அவரை வெல்ல முடியவில்லை.

    அவர் உயிரோடு இருந்தவரை முதலமைச்சராக இருந்தார். ஆனால் இன்று தனக்கு பின்னால் தனது மகன் பேரன் கொள்ளு பேரன், ஆட்சிக்கு வர வேண்டும் என்று ஆசைப்படும் தலைவர்கள் தான் இருக்கிறார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். அவருக்காக வாழ்ந்ததில்லை. அவருக்குப் பிறகு புரட்சித்தலைவி அம்மா இந்த இயக்கத்தை கட்டிக் காத்து ஆட்சிக்கு வந்தார். தி.மு.க.வினரால் அவர் எதிர்கொண்ட சோதனைகள் ஏராளம். ஆனாலும் துணிந்து நின்று வென்று 15 ஆண்டுகள் முதலமைச்சராக ஆட்சி செய்து சாதனை படைத்தார்.

    அ.தி.மு.க.வில் தொண்டர்களின் உழைப்புக்கு ஏற்ற பதவிகள் தேடி வரும். ஆனால் தி.மு.க.வில் கருணாநிதி அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் அவருக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் இப்போது அடுத்ததாக இன்பநிதி ஸ்டாலினும் அழைத்து வரப்பட்டு உள்ளார்.

    2026 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை மலரச் செய்வோம். தற்போதைய தி.மு.க. அரசுக்கு ஒரு கேள்வி இந்த 4 ஆண்டில் என்ன சாதித்தீர்கள் துணை முதலமைச்சர் பதவி கொடுத்தீர்கள். தினம் ஒரு அறிவிப்பு வெளியிடுகிறீர்கள். ஆனால் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அ.தி.மு.க. ஆட்சி காலம் நினைத்துப்பாருங்கள்.


    ஏழை மக்கள் வாழும் பகுதியில் அம்மா மினி கிளினிக் 2000 தொடங்கினோம் தி.மு.க.வினர் அதையும் மூடிவிட்டார்கள் நல்ல நல்ல திட்டங்களை மூடுவது தான் அவர்கள் வாடிக்கை.

    மூன்று லட்சத்து 26 ஆயிரம் ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் கொடுத்தோம். அதையும் நிறுத்திவிட்டீர்கள். தி.மு.க. தேர்தல் நேரத்தில் 525 அறிவிப்புகளை வாக்குறுதியாக அறிவித்தது. அதில் இதுவரை 20 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. நாங்கள் மகளிர் உரிமைத் தொகையை கொடுத்திருக்கிறோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    அந்தத் தொகையை கூட நாங்கள் அல்லவாவாதாடியும் போராடியும் பெற்றோம். அதுவும் ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்த பிறகு தான் கொடுத்தார்கள். கட்டணமில்லா பயணம் செய்கிறார்கள் பெண்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால் ஓட்டை உடைசல் பஸ்களுக்கு லிப்ஸ்டிக் போட்டது போல் பெயிண்ட் அடித்து அந்த பஸ்களை தான் பெண்களுக்காக இயக்குகிறீர்கள் எங்கள் ஆட்சியில் 15,000 புதிய பேருந்துகளை வாங்கினோம்.

    ஆனால் போக்குவரத்து துறை அமைச்சர் முரண்பட்ட தகவலை வெளியிடுகிறார். மொத்த பஸ்களின் எண்ணிக்கையே 20,000 தான் நாங்கள் வாங்கியது 15 ஆயிரம் பஸ்கள் அப்படியானால் நீங்கள் எத்தனை பஸ்களை வாங்கினீர்கள். இந்த விவகாரங்களை எல்லாம் இரண்டு மணி நேரம் 52 நிமிடங்கள் சட்டமன்றத்தில் புள்ளிவிவரமாக எடுத்துச் சொன்னேன் இதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்காக வீடியோவை கேட்டால் இரண்டு நிமிட வீடியோவை மட்டுமே தருகிறார்கள். இது தொடர்பாக நீதி மன்றத்திற்கும் சென்று விட்டோம் இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை

    அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி ஒருவருக்கு நேர்ந்த கொடுமையை எல்லோரும் அறிவீர்கள். அந்த மாணவி ஒரு சாரையும் அட்ஜஸ்ட் பண்ண வேண்டும் என்று சொன்னதாக தெரிவித்துள்ளார். அதைத்தான் யார் அந்த சார் என்று நாங்கள் கேட்டோம். அதைக் கேட்டால் ஏன் கோபம் வருகிறது. இதன் பின்னணியில் ஒரு பெரும்புள்ளி இருக்கிறார். உறுதியாக சொல்கிறேன். அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும் போது அந்த பெரும்புள்ளி நிச்சயமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்.

    தி.மு.க. ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். எனவே மக்கள் ஆதரவுடன் 2026-ல் மீண்டும் ஆட்சிக்கு வருவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பொதுக்கூட்டத்தில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை துணைச் செய லாளர் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், கழக எம்.ஜி.ஆர். இளைஞ ரணி துணைச் செயலாளர் 193-வது வார்டு மாமன்ற உறுப்பினர் துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் எம்.பி. ஜெய வர்தன், ஆலந்தூர் கிழக்கு பகுதி செயலாளர் நங்கநல்லூர் வெ.பரணிபிர சாத், காமராஜ், மாலதி ஏசுபாதம், மாநக ராட்சிமன்ற கழக குழு தலைவர் கே.பி.கே.சதீஷ் குமார், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரஷ்நேவ், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் லட்சுமிகாந்தன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பி.எம்.ஆர்.கவுதம், பி.எம்.ஆர்.ராமதாஸ், மேடவாக்கம் சக்திவேல், நிர்மலா பெரியசாமி, நடிகை கவுதமி, டி.சி.கே.ஹரிஷ், கோ.ஹரி பிரசாத், கண்ணபிரான், ராமச்சந்திரன் ஜானகிராமன், குமார், பழனிவேல், கே.பி.ஏசுபாதம், ராஜசேகர், தேன்ராஜா, வரதராஜன், கவுன்சிலர் அஸ்வினி கருணா, வி.என்.பி. வெங்கட்ராமன், சி.மணிமாறன், பகீம், சக்திவேல, பாபு, இந்திராணி, புருசோத்தமன், கபாலீசுவரன், லோகேஷ், செல்வராணி சுந்தர், பூபதி, மனோகரன், அப்துல்லா, சீனிவாசன், ராஜன், ராஜசேகர், ராஜேஷ், சுர்ஜித்குமார், தனசேகர், விஸ்வநாதன் முடிவில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் டி.சி.கருணா நன்றி கூறினார்.

    • மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.
    • ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

    2026 சட்டமன்ற தேர்தலையொட்டி பணிகளை மேற்கொள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

    அதிமுகவில் அமைப்பு ரீதியாக 82 மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதிமுகவின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியை வலுப்படுத்த பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இடம்பெறவில்லை.

    செங்கோட்டையன் மாவட்ட செயலாளர் என்பதால் அவருடைய பெயர் மாவட்ட பொறுப்பாளர் பட்டியலில் இல்லை என கூறப்படுகிறது.

    இதேபோல், ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி மற்றும் தங்கமணி ஆகியோருக்கும் பொறுப்பு வழங்கப்படவில்லை.

    கட்சி வளர்ச்சி பணிகள், பூத் கமிட்டி பணிகள் தொடர்பாக அதிமுகவில் மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மாவட்ட செயலாளர்களுடன் இணைந்து பொறுப்பாளர்கள் வளர்ச்சி பணி செய்ய வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார்.

    ×