என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜயபிரபாகரன்"

    • தேர்தல் நேரத்தில் மட்டும் தே.மு.தி.க. அரசியல் செய்வதாக அவதூறு பரப்புகின்றனர்.
    • 2026-ல் பிரேமலதா சட்டசபைக்கு செல்வார்.

    அரூர்:

    தே.மு.தி.க. 21-ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, தருமபுரி மாவட்டம் அரூர் கச்சேரிமேட்டில், பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    தேர்தல் நேரத்தில் மட்டும் தே.மு.தி.க. அரசியல் செய்வதாக அவதூறு பரப்புகின்றனர்.

    விஜயகாந்த் ஹிந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டாலும், அன்னை மொழி காப்போம், அனைத்து மொழி கற்போம் என்றார். தமிழகத்தில் நெசவாளர்களுக்கு தொழில் பாதித்தபோது அனைத்து கட்சிகளும் கஞ்சி ஊற்றினர்.

    ஆனால், விஜயகாந்த் மட்டும்தான், நெசவாளர்களிடம் காசு கொடுத்து சேலைகளை வாங்கி மக்களுக்கு வழங்கினார்.

    தமிழகத்தில் ஒரே பெண் அரசியல் தலைவர் பிரேமலதா மட்டும் தான். அவருக்கு பெண்கள் முழு ஆதரவு தர வேண்டும்.

    இன்றைக்கு புதிது, புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்கள், தே.மு.தி.க.வை பார்த்து தான் கட்சி ஆரம்பிக்கின்றனர். சீமான், விஜய் ஆகியோர் விஜயகாந்த்தை பார்த்து தான் கட்சி ஆரம்பித்துள்ளனர்.

    கடந்த, 2006-ல் விஜயகாந்த் சட்டசபைக்கு சென்றது போல், 2026-ல் பிரேமலதா சட்டசபைக்கு செல்வார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
    • அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.

    தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    • 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.
    • கண்காட்சியின் இறுதிநாளான நேற்று ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    ஊட்டி:

    கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.

    இந்த கண்காட்சியில் ஹோண்டு, லேப்ரடார், ஜெர்மர் ஷேப்பர்டு, பெல்ஜியன் மாலினாய்ஸ், டாஸ் ஹவுண்ட், கோல்டர் ரீட்டிவர், கிரேட் டேன், பீகிள், சிஹூஹா, நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி உள்பட 56 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.

    கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் நடுவர்களாக டி.கிருஷ்ணமூர்த்தி, மலேசியாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றினர். கண்காட்சியின் இறுதிநாளான நேற்று ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான இங்கிலீஷ் செட்டர் ரக நாய், சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டது. ஜப்பானை சேர்ந்த நடுவர் சந்தோஷி இந்த நாயை தேர்வு செய்தார்.

    மேலும் கொல்கத்தாவை சேர்ந்த ராய் என்பவருக்கு சொந்தமான டாபர் மேன் ரக நாயை தென்னாப்பிரிக்க நடுவர் மைக்கேல் தேர்வு செய்தார். 

    • அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம்.
    • லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டில் தே.மு.தி.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.

    எனது தந்தை படப்பிடிப்புக்கு செல்லும் போதும், அரசியல் நிகழ்ச்சி சென்றாலும் என்னை எப்போதும் அழைத்து செல்வார். அன்று முதல் இன்று வரை எனக்கு தொண்டர்கள் தான் பாதுகாப்பு.

    இன்று என்னை வாரிசு அரசியல் என கூறுகிறார்கள். ஆனால், ஒருகாலத்தில் விஜயகாந்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருந்த நிலையில், தொண்டர்கள் அழைத்ததின் பேரில், எனது கனவுகளை தள்ளிவிட்டு தான் அரசியலுக்கு வந்தேன். கேப்டனின் வாரிசான நான் தைரியமாக, நேர்மையாக மக்களுக்காக உழைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன். இதை யாராலும் மாற்ற முடியாது.

    லஞ்சம், ஊழல் இல்லாத தமிழ்நாட்டை கொண்டு வர வேண்டும் என்று கூறிய முதல் தலைவர் நமது கேப்டன் தான். 25 ஆண்டுகளுக்கு முன்பே ரேஷன் பொருள் வீடு தேடி வரும் என்று அறிவித்தவர் கேப்டன் விஜயகாந்த்.

    தனது பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக உறுதியேற்று, தனது சொந்த பணத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தவர் விஜயகாந்த் தான். அதேபோல் நானும், தொண்டர்களும் 'இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கு' என்பதில் உறுதியாக உள்ளோம்.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுகள் உள்ளன. அதற்குள் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அரசியலில் பல்வேறு மாற்றங்கள் வரலாம். தே.மு.தி.க. இன்னும் பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.
    • விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்.

    சிவகாசி:

    பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இணைந்துள்ளன. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    அங்கு ஒரே மேடையில் 40 வேட்பாளர்களையும் அறிமுகப்படுத்தி பேசினார். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா, புதிய தமிழகம் கட்சி நிறுவனர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று தூத்துக்குடியில் பிரசாரம் செய்த அவர் இன்று மாலை தென்காசி தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவில் வருகிறார்.

    அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு தென்காசி பாராளுமன்ற தொகுதி வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்து விட்டு அங்கிருந்து கார் மூலம் சிவகாசிக்கு வருகிறார். சிவகாசியில் உள்ள பிரபல ஓட்டலில் இரவு அவர் தங்குகிறார். நாளை காலை சிவகாசி பகுதியில் உள்ள தீப்பெட்டி, பட்டாசு, அச்சகம் உள்ளிட்ட தொழில்களை சார்ந்த அதிபர்களையும், அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசுகிறார்.

    மாலை 5 மணிக்கு சிவகாசி பாவடி தோப்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளரான விஜயகாந்த் மகனை ஆதரித்து பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து கார் மூலம் மதுரை செல்கிறார்.

    எடப்பாடி பழனிசாமி சிவகாசிக்கு பிரசாரம் செய்ய வருவதையொட்டி பொதுக்கூட்ட ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் செய்து வருகிறார்கள்.

    • என்னை நடிக்க வைக்க ஆசைப்பட்டவர் என் தந்தை என விஜயபிரபாகரன் உருக்கம்.
    • காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்.

    ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்கிற படத்தை விஜயகாந்தின் மகன் மூத்த மகன் விஜயபிரபாகன் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், " ஜெட்லியின் சீனப்படமான 'மை பாதர் இஸ் ஏ ஹீரோ' என்ற படம் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும்.

    நானும் அவரும் நடிக்க வேண்டும் என்று அப்பா மிகவும் விரும்பினார்.

    ஆனால் அது நடக்காமலேயே போய்விட்டது. அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அந்த படத்தை எடுக்க முடிவு செய்துள்ளேன். காலமும் நேரமும் எப்படி கை கொடுக்கிறது என பார்ப்போம்" என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • 3,80,877 வாக்குகளை விஜயபிரபாகரன் பெற்றார்.
    • 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் போட்டியிட்டார். விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பாக விஜயபிரபாகரனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக தி.மு.க. வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களில் விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார். இதனால் விஜயபிரபாகரன் வெற்றி பெறுவார் என ஊகிக்கப்பட்டது. எனினும் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். மொத்தம் 3,80,877 வாக்குகளை விஜயபிரபாகரன் பெற்றுள்ளார்.


    இந்நிலையில், இது முடிவல்ல... தொடக்கம் தான்... என தேர்தல் முடிவு குறித்து விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவர், மன்னிக்கவும் நண்பர்களே... மிகவும் சிறிய வித்தியாசத்தில் தோற்று உள்ளேன். எனினும் வாக்களித்த அனைத்து அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

    • வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • 13-வது சுற்றுக்கு பின்னர் பல முறைகேடுகள் நடந்தது உண்மை.

    சென்னை:

    சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * விஜயபிரபாகரன் தோற்கவில்லை, தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

    * திட்டமிடப்பட்ட சூழ்ச்சியால் விஜயபிரபாகரன் வீழ்த்தப்பட்டுள்ளார்.

    * 0.4 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் தான் விஜயபிரபாகரன் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

    * 3 மணி முதல் 5 மணிவரை வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியது ஏன்?

    * தனக்கு நெருக்கடி இருந்ததாக வெளிப்படையாக அறிவித்தார் விருதுநகர் மாவட்ட ஆட்சியர்.

    * வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடப்பதாக முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    * 13-வது சுற்றுக்கு பின்னர் பல முறைகேடுகள் நடந்தது உண்மை.

    * விருதுநகர் தொகுதி முடிவு அறிவிக்கும் முன் 40 தொகுதிகளில் வெற்றி என முதல்வர் கூறியது ஏன்?

    * விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல...
    • அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

    இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

    39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

    ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?
    • இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலத்தவன் வழக்கம்.

    விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜயப்ரபாகரன் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வியடைந்தார்..

    இது தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள அலுவலகத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "50 - 60 வருசமா கட்சி நடத்துறீங்க, ஆட்சியில இருக்கீங்க. ஒரு சின்ன பையன் முதல்முறையா தேர்தல்ல நிக்கிறாரு. அப்படி ஜெயிச்சாதான் என்ன போச்சு உங்களுக்கு?

    39 தொகுதி நீங்க ஜெயிச்சதா அறிவிச்சிங்கள்ல, ஒரு தொகுதில கடைசி வரைக்கும் போராடி வராரே ஒரு இளைஞர், அவரை பெரிய மனசோட நீங்க ஜெயிக்க வச்சிருந்தீங்கனா, இந்த ஆட்சியை நா தலைவணங்கி போற்றியிருப்பேன் வரவேற்றிருப்பேன்.

    ஆனால் அதிலும் சூழ்ச்சி செய்து அவர் ஜெயிக்க கூடாது என்பதற்காக அவர்கள் அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி தவறு செய்துள்ளீர்கள்.

    விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி முன்னிலையில் மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இது தொடர்பாக பேசிய விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், "பிரேமலதா முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார். வாக்கு என்னும் மையத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு கிளம்பினார்கள். ஆனால் அடுத்த நாள் சென்னையில் சின்ன பையனா இருந்தா என்ன என்று பிரேமலதா பேசுகிறார். இது என்ன வடிவேல் படமா" இது பாராளுமன்ற தேர்தல். இப்படி பொறுப்பில்லாமல் பேசுவது பிரேமலதாவின் வழக்கம். வேண்டுமானால் அவர் சட்ட போராட்டம் நடத்தட்டும்" என்று தெரிவித்துள்ளார் .

    மேலும் பேசிய அவர், "மோடியின் பதவியேற்பு விழாவில் அதானியும் அம்பானியும் கலந்து கொண்டுள்ளனர். இந்த அரசு அதானி அம்பானிகளுக்கானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை மோடி நிரூபித்துள்ளார். பீகார் சட்டமன்ற தேர்தலோடு பாஜக கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வரும். ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவின் நிர்வாக தோல்வி" என்று பேசியுள்ளார்.

    • எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன்.
    • கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர்.

    கோவை:

    கோவை சிங்காநல்லூரில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவில் விஜயகாந்தின் மகனும், கட்சியின் இளைஞர் அணி செயலாளருமான விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசினார்.

    அவர் பேசுகையில் மறைந்த தனது தந்தையை நினைத்து மேடையிலேயே கண்ணீர் வடித்தார். அதை பார்த்து அங்கு திரண்டு இருந்த தொண்டர்களும், பெண்களும் கண் கலங்கினர்.

    மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு தலைவர் விஜயகாந்த் தொடங்கினார். கட்சிக்கு பெயர் வைக்கும் பொழுது எங்களிடம் பெயர் குறித்து விவாதித்தார். முடிவில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று பெயர் தேர்வு செய்யப்பட்டு இன்று 20 வருடத்தை கடந்து நிற்கிறது.

    இந்த மக்கள் தொண்டு என்றும் தொடரும். தே.மு.தி.க.வை நீங்கள் தூக்கி எறிந்தாலும் சுற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்து மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்போம். தே.மு.தி.க. மத, இன, மொழி, பாகுபாடு பார்க்காத கட்சி.

    அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்வதில் தவறு இல்லை. நான் அரசியலுக்கு வந்திருப்பதால் வாரிசு அரசியல் என்று கூறுவதை ஏற்க முடியாது.

    என்னை மற்ற பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்ப வேண்டும். திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கட்சி தொண்டர்கள் என்னை கட்சி பணிக்கு அழைத்தார்கள்.

    நான் எனது வாழ்க்கை முழுவதையும் கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டேன். எனது தாயார், விஜயகாந்த் உயிர் பிரியும் வரை அவரது கையை தனது கைக்குள் வைத்துக் கொண்டார்.

    கேப்டன் மறைவுக்கு பிறகு அந்த கட்சி இல்லாமல் போய் விடும் என்று எண்ணினர். மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்த முயன்றனர். ஆனால் தொண்டர்கள் வியர்வை சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

    எனது தாயார் பிரேமலதா விஜயகாந்த், ஒரு தோளில் கட்சியையும், மறு தோளில் கேப்டனையும், எங்களையும் சுமந்துட்டு தொண்டர்களுக்காக இந்த கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

    நல்லவர்கள் லட்சியம், வெல்வது நிச்சயம். அது என்றுமே தோற்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் தே.மு.தி.க. மாநகர், மாவட்ட செயலாளர் சிங்கை சந்துரு உள்பட பலர் கலந்து கொண்டனர். 

    • 21 தொகுதிகளில் தான் தி.மு.க. நேரடியாக இருந்தது.
    • இனிவரும் காலம் மக்கள் கையில் உள்ளது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெரியகுளத்தில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா, தே.மு.தி.க. கட்சியின் 20ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:-

    எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.கே. சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வேலை பார்க்க தயாராக உள்ளேன். எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் கூட்டணி தர்மம் குறித்து எனக்கு கூறியுள்ளார். எனவே கூட்டணி தர்மம் கருதி அ.தி.மு.க. கூறினால் தமிழகம் முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக உள்ளேன்.

    கருப்பு எம்.ஜி.ஆர். விஜயகாந்த் ஆரம்பித்த தே.மு.தி.க., எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அ.தி.மு.க. ஆகியவை தான் மக்கள் கட்சி. அவை தான் மீண்டும் வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க. 40க்கு 40 வெற்றி பெற்றுள்ளதாக கூறி வருகின்றனர். ஆனால் அவர்கள் 40க்கு 40 வெற்றி பெறவில்லை. 21 தொகுதிகளில் தான் தி.மு.க. நேரடியாக இருந்தது. மற்ற 19 தொகுதிகளும் அவர்கள் கூட்டணி கட்சிகளின் பலம் உள்ள தொகுதிகளை அவர்களுக்கு வழங்கி அதிலிருந்து வெற்றி பெற்றுள்ளனர்.

    விஜயகாந்த் இருந்தபோது அவரை மீடியாக்கள் கிண்டலும், கேலியும் செய்து ஒதுக்கி வைத்திருந்தனர். தற்போது மக்கள் அவரை நல்லவர் என்று கூறுகின்றனர். நாங்கள் பணம் வாங்குகின்ற கட்சி என்றும், பேரம் பேசுகின்றோம் என்றும் எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.

    நாங்கள் எப்பொழுதும் யாரிடமும் பேரம் பேசியதும் இல்லை. பணம் வாங்கியதும் இல்லை. 2005ம் ஆண்டு எங்களது சொந்த நிலத்தை வைத்துத்தான் மாநாடு நடத்தினோம். இன்று வரை அப்படித்தான் கட்சி நடத்தி வருகின்றோம். எனவே இனிவரும் காலம் மக்கள் கையில் உள்ளது. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர்கள் தெரிந்து வாக்களித்தால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும். தே.மு.தி.க. எதிர்க்கட்சியாக அமரும். எனவே மக்கள் புரிந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×