என் மலர்
நீங்கள் தேடியது "Dog Show"
- தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
- அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.
- கண்காட்சியின் இறுதிநாளான நேற்று ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஊட்டி:
கோடைவிழாவின் ஒரு பகுதியாக 137-வது நாய்கள் கண்காட்சி, ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் ஹோண்டு, லேப்ரடார், ஜெர்மர் ஷேப்பர்டு, பெல்ஜியன் மாலினாய்ஸ், டாஸ் ஹவுண்ட், கோல்டர் ரீட்டிவர், கிரேட் டேன், பீகிள், சிஹூஹா, நாட்டு ரக நாய்களான ராஜபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை, கன்னி உள்பட 56 ரகங்களில் 450-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன.
கண்காட்சியில் பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டியின் நடுவர்களாக டி.கிருஷ்ணமூர்த்தி, மலேசியாவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பணியாற்றினர். கண்காட்சியின் இறுதிநாளான நேற்று ஆண்டின் சிறந்த நாய் விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் நடிகர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரனுக்கு சொந்தமான இங்கிலீஷ் செட்டர் ரக நாய், சிறந்த நாயாக தேர்வு செய்யப்பட்டது. ஜப்பானை சேர்ந்த நடுவர் சந்தோஷி இந்த நாயை தேர்வு செய்தார்.
மேலும் கொல்கத்தாவை சேர்ந்த ராய் என்பவருக்கு சொந்தமான டாபர் மேன் ரக நாயை தென்னாப்பிரிக்க நடுவர் மைக்கேல் தேர்வு செய்தார்.
- நாய் கண்காட்சியில் 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.
- 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள், சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன.
கொடைக்கானல்:
மெட்ராஸ் கெனல் கிளப்பின் 137 மற்றும் 138 ஆம் ஆண்டு, சேலம் கெனல் கிளப்பின் 25 மற்றும் 26 வது ஆண்டு, கொடைக்கானல் கெனல் அசோசியேஷனின் 7 மற்றும் 8-ம் ஆண்டு நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் நகரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நேற்று தொடங்கியது.
இதில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா புதுடெல்லி, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஜாக்ரஸ்ஸல் டெரியர், பேஷன்சி, அமெரிக்கன்ஸ்டாப்பட் டெரியர், கெயின் கார்சோ, புல்டாக், பர்னிஷ் பவுண்டன், கார்டன் ஹெட்டர், பேஷன் ஃபிரீஷ் ஆஸ்திரேலியா செப்பர்டு, உட்பட தமிழக வகைகளான ஜெர்மன் ஷெப்பர்ட் கிரேட்டன், அஸ்கர், சிப்பிப்பாறை, ராஜபாளையம், கன்னி, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த முதூர்கவுண்ட் உட்பட 48 வகைகளைச் சேர்ந்த 286 நாய்கள் பங்கேற்றன.
அதில் எஜமானர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிதல், அதன் மோப்ப சக்தி, அவைகளின் உடல் அமைப்பு, அதன் வேகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வெற்றி பெற்ற நாய்களுக்கு சுழற் கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இன்றும் கண்காட்சியில் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்றன.
போட்டியின் முடிவில் சிறந்த நாய்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு மெட்ராஸ் கெனல்கிளப்பின் தலைவர் சுதர்சன் தலைமை வகித்தார். செயலாளர் சித்தார்த் முன்னிலை வைத்தார். கொடைக்கானல் கெனல் கிளப்பை சேர்ந்த ஜெய்ஹிந்த் ஜெய்கேஸ் ஜெயதிலகர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.
இந்த போட்டிகள் குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில் மெட்ராஸ் கெனல் கிளப் 142 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டது இதில் 86 உப கிளப்புகள் உள்ளன. இதன் மூலமாக 138 வது ஆண்டுகளாக போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகளின் நடுவர்களாக செர்பியா, தென் ஆப்பிரிக்கா, மலேசியா மற்றும் இந்தியாவைச்சேர்ந்த ஆறு பேர் நடுவர்களாக உள்ளனர். ஞாபக சக்தி, துப்பறியும் திறன், குணங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன.
இந்த போட்டிகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல லட்ச ரூபாய் மதிப்புள்ள நாய்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. போட்டிகள் நடைபெற்று முடித்தவுடன் சிறந்த நாய்களுக்கு கோப்பைகள் வழங்கப்படுகின்றன. இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டியில் சிறந்த நாய்களுக்கு சுழற் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் சிறப்பு பரிசுகள் ஆகியவை வழங்கப்பட்டன என்றனர்.
நடிகர் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் தனக்கு சொந்தமான டேசன்ட் ஹஸ்கி, டாபர்மேன், கிரேட்டன், ராஜபாளையம் உள்பட ஏழு உயர்ரக நாய்களுடன் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும்.






