என் மலர்
நீங்கள் தேடியது "parliament election"
- பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார்.
- பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
கோவை:
நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டது. ஆனால் எந்த ஒரு தொகுதியிலும் அந்த கட்சி வெற்றி பெறவில்லை.
கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரதிய ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் கமல்ஹாசன் திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். கமல்ஹாசன் போட்டியிட்டால் எந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு உள்ளது என ஆய்வு செய்யப்பட்டது. கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே கோவை தெற்கு தொகுதி சட்டசபை தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு உள்ளதால், தொகுதி மக்களுக்கு அவர் பரீட்சயமானவராக மாறி விட்டார். இதனால் கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி எளிதாக இருக்கும் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய் நகர்த்தி வருகிறார். பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் வெற்றி எளிதாகும் என்பதால் தனித்து போட்டி என்ற முடிவில் இருந்து கூட்டணி அமைத்து போட்டி என்ற நிலைப்பாட்டில் கமல்ஹாசன் இருக்கிறார்.
தற்போது கமல்ஹாசன், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியுடன் நட்பு ரீதியாக நெருக்கமான நிலையில் இருக்கிறார். இதனால் காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியில் இணைந்து அவர் போட்டியிடலாம் என கூறப்படுகிறது. அந்த கூட்டணியில் சேரும் பட்சத்தில் கமல்ஹாசன் எதிர்பார்க்கும் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகமே? இருந்தாலும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் பேசி எப்படியாவது கேட்கும் தொகுதியை பெற்று விடலாம் என மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
அப்படி கேட்கும் தொகுதி கிடைக்காவிட்டால் என்ன செய்வது, அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என்பது பற்றியும் கமல்ஹாசன் ஆலோசித்து வருகிறார். இந்தநிலையில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் தற்போது சிறுஉரசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறி விட்டால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேரலாமா? என்பது பற்றியும் மக்கள் நீதிமய்யம் கட்சி நிர்வாகிகள் ஆலோசித்து வருகிறார்கள்.
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை நாளை மறுநாள் (22-ந்தேதி) கோவையில் நடைபெறும் கூட்டத்தில் கமல்ஹாசன் முடிவு செய்ய உள்ளார். கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பீளமேட்டில் உள்ள தனியார் ஓட்டலில் நாளை மறுநாள் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட நிர்வாகிகள் மட்டுமல்லாமல் மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அவர்களிடம் பாராளுமன்ற தேர்தல் குறித்து கமல்ஹாசன் ஆலோசிக்கிறார். கூட்ட முடிவில் கமல்ஹாசன், யாருடன் கூட்டணி என்பதை இறுதி செய்ய இருக்கிறார்.
கமல்ஹாசன் கோவையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க உள்ளதால் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக கமல்ஹாசன் நாளை மறுநாள் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு கோவை வருகிறார். நேராக கூட்டம் நடக்கும் ஓட்டலுக்கு சென்று கூட்டத்தில் பங்கேற்கிறார். காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கூட்டம் முடிந்த பின்னர் மாலையில் கணியூரில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கிறார். அங்கு பேராசிரியர்களுக்கு அவர் விருதுகளை வழங்கி கவுரவிக்கிறார்.
- காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது.
- இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை தேர்தலுக்கு தயார்படுத்தும் பணிகளை முன்னெடுத்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரம் வாக்குச்சாவடிகள் உள்ளன.
இதில் தி.மு.க.-அ.தி.மு.க. ஆகிய கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு பூத்கமிட்டிகள் முழு அளவில் பலமாக இல்லை என்று கூறப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் கட்சிகளின் பலம், கேட்கும் தொகுதிகளில் அந்த கட்சிகளுக்கு இருக்கும் செல்வாக்கை பொறுத்தே தொகுதிப்பங்கீடு இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பூத் கமிட்டிகளை மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நேரில் ஆய்வு செய்ய உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
காங்கிரசில் 70 சதவீதம் அளவுக்கு பூத் கமிட்டி அமைக்கப்பட்டு விட்டது. எஞ்சிய 30 சதவீத பணிகளை விரைந்து முடிக்கப்படும்.
இதற்காக அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டிகளை நேரில் ஆய்வு செய்ய உள்ளேன். வருகிற 21-ந்தேதி திண்டுக்கல், தேனி, அடுத்த மாதம் 1-ந்தேதி திருவள்ளூர், 8-ந்தேதி தென்காசி, விருதுநகர், 14-ந்தேதி கன்னியாகுமரி, 28-ந்தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி தொகுதிகளில் ஆய்வு கூட்டங்கள் நடைபெறுகிறது.
காலியாக இருக்கும் பூத் கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும்.
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி பங்கீடுகள் தொடர்பாக வலைத்தளங்களில் உலா வரும் தகவல்கள் உண்மைக்கு மாறானவை.
இது பற்றி எங்கள் கட்சி தலைமையும், தி.மு.க. தலைமையும் உரிய நேரத்தில் பேசி முடிவு செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பலமான அணியை உருவாக்க பாரதிய ஜனதா கட்சி காய் நகர்த்தி வருகிறது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று உள்ள பாரதிய ஜனதா கட்சி வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இது தொடர்பான பணிகளை அந்தக் கட்சி ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இதன் எதிரொலியாகவே தமிழகத்தில் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தலைமை பதவியில் முழுமையாக அமர்ந்த பிறகு முதல் முறையாக பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதால் தனது செல்வாக்கு என்ன? என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
மதுரையில் பிரமாண்டமான முறையில் அ.தி.மு.க. மாநாட்டை நடத்திக் காட்டிய எடப்பாடி பழனிசாமி அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். பாரதிய ஜனதாவுடன் இணைந்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி என்ற முறையில் கூடுதல் இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் கூடுதல் இடங்களில் போட்டியிட முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லி சென்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான அமித்ஷாவை தனியாக சந்தித்து பேசினார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்தும், கூட்டணி தொடர்பாகவும் விவாதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க.வுக்கு இணையான இடங்களில் போட்டியிட காய் நகர்த்தியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் நடைபெற்ற அமித்ஷா-எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியிடம் பாராளுமன்றத் தேர்தலில் நீங்கள் (அ.தி.மு.க.) 20 இடங்களில் போட்டியிடுங்கள்.
எங்களுக்கு 20 தொகுதிகளை கொடுத்து விடுங்கள். இந்த இடங்களில் நாங்களும் போட்டியிட்டுக் கொண்டு கூட்டணி கட்சிகளுக்கும் பிரித்து கொடுத்து விடுகிறோம் என்று கேட்டதாக தெரிகிறது.
அமித்ஷாவின் இந்த கூட்டணி வியூகத்துக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவிக்காமல், கூட்டணியில் யார்-யாருக்கு எத்தனை இடங்கள்? என்பது பற்றி பின்னர் பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணியில் ஏற்கனவே இடம் பெற்றிருந்த கட்சிகளை அப்படியே மீண்டும் கூட்டணியில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார்.
குறிப்பாக தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தியதாக தெரிகிறது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி தே.மு.தி.க.வை மீண்டும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எங்களுக்கு எந்த சங்கடமும் இல்லை என்று கூறியதாகவும் தெரிகிறது.
இதன் மூலம் கூட்டணியை பலப்படுத்த அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி இருவருமே வரும் நாட்களில் தீவிரம் காட்ட களம் இறங்க உள்ளனர்.
இதன்படி அமித்ஷா அடுத்த மாதம் இறுதியில் அல்லது நவம்பரில் தமிழகத்துக்கு வருகை தர திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்போது அவர் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்ய முடிவு செய்துள்ளார். இதன் மூலம் அடுத்தடுத்த மாதங்களில் தமிழகத்தில் கூட்டணி தொடர்பான காய் நகர்த்தல்கள் வேகம் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாகவும் பேசியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கொடநாடு கொலை-கொள்ளை விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் தனது பெயர் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் தன்னை களங்கப்படுத்த சிலர் திட்டமிட்டுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி எண்ணுகிறார்.
இதை தொடர்ந்து வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அவர் ஏற்கனவே கூறியிருக்கிறார். இது தொடர்பாகவும் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவிடம் பேசியிருப்பதாக கூறப்படுகிறது.
பாராளுமன்றத் தேர்தல் நேரத்தில் கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் தனது மீதான விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுப்பதை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.
இதன் காரணமாகவே அவர் தன் மீது களங்கம் கற்பிப்பவர்கள் மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷாவுடனான சந்திப்பின் போது கொடநாடு விவகாரம் பற்றியும் பேசி இருப்பதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
- அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும்.
- பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ராமதாஸ் முடிவு செய்வார்.
கடலூர்:
கடலூர் பாராளுமன்ற தொகுதி கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி களப்பணியாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் கடலூர் வன்னியர் திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ம.க. மாநில தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது:-
பா.ம.க. கட்சி தொடங்கி 35 ஆண்டு காலம் ஆகிய நிலையில் எத்தனையோ போராட்டங்கள், மக்கள் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். பா.ம.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே பல்வேறு பிரச்சனைகளுக்கும், கொள்கை முடிவுகளுக்கும் தீர்வு கண்டு அதிகாரத்திற்கு வந்து செய்வதை விட அதிகாரம் வருவதற்கு முன்பே முதலமைச்சரை கையெழுத்து போட வைப்பது தான் சாதனை. அதை தான் பா.ம.க. செய்து வருகிறது.
வருகிற 2026-ம் ஆண்டு பா.ம.க. ஆட்சிக்கு கண்டிப்பாக வரும். அதற்கு முன்னோட்டம் தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ஆகும். தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகின்றேன். அனைத்து தரப்பு மக்களும் அடுத்தடுத்து பா.ம.க. தான் ஆட்சிக்கு வரும் என்கிறார்கள்.
ஆகவே வருகிற பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்றாக வேண்டும். அரையிறுதி போட்டியான பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் தான் இறுதிப் போட்டியான 2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு செல்ல முடியும். பாராளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு குறித்து டாக்டர் ராமதாஸ் முடிவு செய்வார். நீங்கள் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். மேலும் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் பா.ம.க. மிகப்பெரிய வெற்றி பெற போகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் கூட்டம் தொடங்கியது.
- இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டாக பிரசாரம் செய்வது உள்ளிட்டவை குறித்து ஆலேசனை என தகவல்
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளனர்.
இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.
இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் தொடங்கியது.
இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டாக பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தெரிகிறது.
- பாராளுமன்ற தேர்தலிலே ஒரு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள்.
- செப்டம்பர் 15-ந்தேதி 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றக் கூடிய திட்டமாகத்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது.
சென்னை:
ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கப்பாண்டியன் இல்லத் திருமணம் சென்னை ஆர்.ஏ.புரம் கபாலீசுவரர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. மணமக்கள் ராமன்-அக்ஷயசெல்வி திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து வாழ்த்தினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தி.மு.க. மக்கள் பணியை எப்போதும் தொய்வின்றி செய்து வருகிறது. தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்கும் போதும் மக்கள் பணியை எந்த அளவுக்கு ஆற்றி உள்ளதற்கு ஒரே உதாரணம், கொரோனா காலத்திலேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்க கூடிய வகையிலே, "ஒன்றிணைவோம் வா" என்ற ஒரு திட்டத்தை உருவாக்கி, அதன்மூலமாக மக்களுக்கு என்னென்ன தேவைகள் ஏற்படுகிறதோ, அவை அத்தனையும் செய்து கொடுத்த ஒரு கட்சி தான் இன்றைக்கு ஆட்சி பொறுப்பில் இருக்கக் கூடிய தி.மு.க. என்பதை பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
அதில் முடிந்த அளவுக்கு வெற்றி பெற்றோம் என்று சொன்னால், தங்கப்பாண்டியன் போன்றவர்கள், அவரது தொகுதியிலே உள்ள மக்களுக்கு அவர் ஆற்றிய பணிகள் தலைமை கழகம் மூலமாக நானும் அறிந்தவன்.
தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களைப் பற்றி கவலைப்படுகிற கட்சி தான் தி.மு.க. அதனால் தான் தொடர்ந்து நாம் வெற்றியை பெற்று வருகிறோம்.
பாராளுமன்ற தேர்தலிலே ஒரு மிகப்பெரிய வெற்றியை தமிழ்நாட்டு மக்கள் நமக்கு தேடித் தந்தார்கள்.
அதற்கு பின்னால் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலே 6-வது முறையாக நம்முடைய தி.மு.க. ஆட்சி வருவதற்கு மக்கள் சிறப்பான ஆதரவை தந்தார்கள்.
ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதிலும் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றிருக்கிறோம்.
அதற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றோம்.
இப்படி தொடர்ந்து வெற்றி பெறுவதற்கு என்ன காரணம் என்றால், நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, நாம் ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை, என்னென்ன பணிகளை மக்களுக்கு செய்யப்போகிறோம் என்று வாக்குறுதிகளை, உறுதி மொழிகளை தந்தோம். அதை நம்பி தமிழ்நாட்டு மக்கள் நமக்கு ஆதரவு தந்தார்கள். நாம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு, வாக்குறுதிகளை இன்றைக்கு படிப்படியாக நிறைவேற்றி காட்டி இருக்கிறோம்.
இன்னும் சொல்கிறேன் 100-க்கு 99 சதவீதம் இதுவரையிலே நாம் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறோம். மிச்சம் இருக்கக்கூடிய 1 சதவீதம் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி 100-க்கு 100 சதவீதம் நிறைவேற்றக் கூடிய திட்டமாகத்தான் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படி எத்தனையோ திட்டங்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டமல்ல, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்வதற்கு விடியல் திட்டம் என்ற பெயரில் அதை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
அதற்கு பிறகு புதுமைப் பெண், பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் திட்டம். அதையும் நிறைவேற்றி இருக்கிறோம். நான் முதல்வன் திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தரும் அளவுக்கு பயிற்சி தரும் அளவுக்கு இந்த திட்டம் செயலாற்றி கொண்டிருக்கிறது.
வருகிற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளன்று கலைஞர் பெயரால் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை காஞ்சிபுரத்தில் நான் தான் தொடங்கி வைக்க போகிறேன்.
அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் அமைச்சர்கள் கலந்து கொண்டு அந்த திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்கள். இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் இந்த தொகையை பெற உள்ளனர். இதில் மாதம் 1000 ரூபாய் வழங்கப்பட உள்ளது என்பதை தெரிவிக்கிறேன்.
அதேபோல் எப்படி தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை உருவாக்கி தந்தீர்களோ அதேபோல் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தல் குறித்த நேரத்தில் வரப்போகிறதா? அல்லது அதற்கு முன்பே வந்து விடுமா? என்ற ஒரு எண்ணம், சந்தேகம் வந்து கொண்டிருக்கிறது.
ஆக முன்கூட்டியே வந்தாலும் தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறோம். அதிலும் தி.மு.க.தான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழு இறுதி செய்யப்பட்டது.
- இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.
புதுடெல்லி:
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்வதற்காக 28 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை அமைத்துள்ளனர். இந்தக் கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவிலும், 2-வது கூட்டம் பெங்களூருவிலும், 3-வது கூட்டம் கடந்த 1-ம் தேதி மும்பையிலும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தி.மு.க., ராஷ்டிரீய ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட 28 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இதில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் இறுதி செய்வது என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
மேலும், இந்தியா கூட்டணியில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவும் இறுதி செய்யப்பட்டது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பாராளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் டெல்லியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டில் இன்று நடைபெறுகிறது.
இக்கூட்டத்தில் தொகுதி பங்கீடு, கூட்டாக பிரசாரம் செய்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடைபெறலாம் என தெரிகிறது.
- கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றதில் ஒரு சில தொகுதிகள் மாறலாம் என்று கூறப்படுகிறது.
- பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
சென்னை:
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலையில் சத்தியமூர்த்தி பவனில் நடக்கிறது. மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்குகிறார்.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், முன்னாள் மத்திய மந்திரிகள், சட்டமன்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், செயல் தலைவர்கள், பாராளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இந்த முறையும் 9 தொகுதிகள் குறையாமல் தி.மு.க.விடம் கேட்டு பெற தீர்மானித்துள்ளார்கள்.
கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்றதில் ஒரு சில தொகுதிகள் மாறலாம் என்று கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும், வைகோ மகன் விருதுநகர் தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் கூறப்படுகிறது.
எனவே ஓரிரு தொகுதி மாறலாம் என்று கூறப்படுகிறது. அவ்வாறு மாறினால் வேறு எந்த தொகுதியை கேட்பது என்றும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
கட்சி வலுவிழந்து இருப்பதால் தான் தி.மு.க.விடம் சீட்டுக்கு போராட வேண்டி உள்ளது. எனவே பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி கட்சியையும் பலப்படுத்த வேண்டும் என்று நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
மேலும் தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிர்வாகிகளிடம் எழுந்துள்ளது. ஆனால் ஏற்கனவே எம்.பி.க்களாக இருப்பவர்கள் விட்டுக் கொடுப்பார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ளன.
- மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன்.
- இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரனின் இல்லத் திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தி காணொலிக் காட்சி வாயிலாக ஆற்றிய உரை வருமாறு:-
தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா. ராசேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மலட்டாறு திட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதனால், அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னோட பேச்சின் இறுதியில், நான் ரெண்டு கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை.
ராசேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன்.
நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 பாராளுமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும்.
ஆகவே, வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து அமையப்போகிற ஒன்றிய ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும்.
நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொண்டு, "நாற்பதும் நமதே நாடும் நமதே" என்ற முழக்கத்துடன் விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
- பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதே தயாராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் அ.தி.மு.க.வும் தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி வருகிறது. பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க எடப்பாடி பழனிசாமி வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து தனது பலத்தை காட்டும் வகையில் மதுரையில் பிரமாண்டமான முறையில் எழுச்சி மாநாட்டையும் அவர் நடத்தி காட்டினார்.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என லட்சக்கணக்கானோர் திரண்டனர். இது எடப்பாடி பழனிசாமியை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டிருப்பதால் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.
இந்த நிலையில் மாநாட்டை சிறப்பாக நடத்தி காட்டிய நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு வியூகம் வகுப்பது தொடர்பாக அ.தி.மு.க. முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திடவும் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். இதன்படி ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக காலை 10 மணி அளவில் வருகை தந்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நிர்வாகிகள் உற்சாகத்தோடு வரவேற்றனர். பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மதுரை மாநாட்டை சிறப்பாக நடத்தி வெற்றி மாநாடாக மாற்றிக் காட்டிய அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துக் கொண்டார். பாராளுமன்ற தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் இப்போதே தயாராக வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.
தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி சுறுசுறுப்புடன் பணியாற்றக் கூடிய நிர்வாகிகளை அதில் நியமிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளிடம் தெரிவித்து உள்ளார். 1000 வாக்காளர்களுக்கு 25 பேர் கொண்ட கமிட்டி என்கிற அடிப்படையில் திட்டமிட வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது. இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்படி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுடன் அமல்படுத்தப்பட்டால் தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்படலாம் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.
இதுதொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளவும் கட்சியினர் தயாராக வேண்டும் எனவும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிற