என் மலர்
நீங்கள் தேடியது "tamilnadu visit"
- அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
- பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
சென்னை:
தமிழகத்தில் பாஜக கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியை பெற்று வருகிறது. குறிப்பாக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை ஏற்று பணியாற்றிய போது தமிழக பா.ஜ.க.வுக்கு மக்கள் மத்தியில் தனி அந்தஸ்து கிடைத்தது.
அண்ணாமலை பொறுப்பு ஏற்றபோது அதன் வளர்ச்சி இரட்டிப்பாக மாறியது. குறிப்பாக கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக வாங்கிய வாக்குகள் எண்ணிக்கை மற்ற கட்சிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்து இருந்தது.
இந்த நிலையில் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து கணிசமான வெற்றியை அறுவடை செய்ய வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இதற்காக தமிழக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராம அளவில் கிளை அமைப்புகளை உருவாக்க பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டுகின்றனர். மேலும் பூத் கமிட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பா.ஜ.க. அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரியும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா தனது நேரடியாக கண்காணிப்பில் தமிழக பா.ஜ.க. விவகாரங்களை கவனிக்க தொடங்கி உள்ளார்.
2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வை தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக மாற்ற வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு சமீபத்தில் அமித்ஷா சென்னை வந்து அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார்.
இதைத் தொடர்ந்து கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் மதுரையில் முகாமிட்டு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக பா.ஜ.க. உயர்மட்ட உறுப்பினர்களுடன் அவர் பேசும்போது, "தமிழகத்தில் பா.ஜ.க.வை மிக பிரமாண்டமாக வளர்க்க வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆய்வு செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் நான் தமிழகம் வருவேன்" என்று கூறியிருந்தார்.
அதன்படி மத்திய மந்திரி அமித்ஷா அடுத்த மாதம் (ஜூலை) 8-ந்தேதி தமிழகம் வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது பாஜகவை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுப்படுத்துவதற்கான ஆய்வுகளை அவர் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக கிராமப் பகுதிகளில் பா.ஜ.க.வை வலுப்படுத்த செய்துள்ள பணிகளை அமித்ஷா ஆவணங்கள் அடிப்படையில் பார்வையிட்டு ஆய்வு செய்வார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் தொகுதி வாரியான ஆய்வு பணிகளையும் அமித்ஷா மேற்கொள்ள இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர். ஜூலை 8-ந்தேதி தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் மற்றும் உயர்மட்ட குழு உறுப்பினர்களையும் அமித்ஷா சந்தித்து பேச இருப்பதாக தெரியவந்துள்ளது.
மதுரையில் நடத்தப்பட்டது போல சென்னையிலும் சில தலைவர்களுடன் அமித்ஷா தனி அறையில் சந்தித்து கருத்துக்களை கேட்டறிவார் என்று கூறப்படுகிறது.
தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடித்த பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா சந்தித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. அதுபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசையும் சந்தித்து அவர் பேசுவார் என்று தெரிய வந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் டாக்டர் ராமதாசுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அமித்ஷா மேற்கொள்வார் என்று தெரிகிறது. குறிப்பாக 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் தேர்தல் பணிகளை கூட்டணி கட்சிகள் எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்று அவர்கள் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே அடுத்த மாதம் சென்னை வரும் அமித்ஷாவை சந்திக்க அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் அனுமதி கேட்டுள்ளனர். இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை.
அமித்ஷாவின் சென்னை பயண நிகழ்ச்சிகளை பொறுத்து அவர்கள் இருவரையும் அவர் சந்திப்பாரா? என்பது தெரிய வரும். அமித்ஷாவின் வருகையால் தமிழக பா.ஜ.க.வில் அடுத்தடுத்து புத்துணர்ச்சி ஏற்படுவதாக தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்தனர்.
அடுத்த மாதம் அமித்ஷா வரும்போது சில முக்கிய வியூகங்களை எடப்பாடி பழனிசாமி, டாக்டர் ராமதாஸ் மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் ஜூலை மாத தமிழகம் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- மத்திய அமித்ஷா முதல் முறையாக தமிழகம் வந்ததால் அவர் முன்னிலையில் மையக்குழு கூட்டம் நடந்தது.
- எல்லா இடங்களிலும் ஆளும்கட்சி மீது அதிருப்தி இருப்பதையும் விளக்கி பேசினார்கள்.
தமிழக பாஜக கட்சியின் மையக்குழு கூட்டம் மதுரை சிந்தாமணியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது.
பா.ஜனதாவை பொறுத்த வரை மையக்குழுதான் உயரிய அதிகாரம் படைத்தது. மிக முக்கியமான முடிவுகள் எடுப்பது, செயல் திட்டங்கள் வகுப்பது எல்லாம் இந்த கூட்டத்தில்தான் நடைபெறும்.
அந்த வகையில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்த பிறகு மத்திய அமித்ஷா முதல் முறையாக தமிழகம் வந்ததால் அவர் முன்னிலையில் மையக்குழு கூட்டம் நடந்தது.
இந்தக் கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், அண்ணா மலை, முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், வானதிசீனிவாசன், எச்.ராஜா, சக்கரவர்த்தி, வினோஜ்செல்வம், கரு.நாகராஜன், ராமசுப்பிரமணியன், கருப்பு முருகானந்தம்,
கார்த்தியாயினி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்பட 22 உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.
சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களிடமும் நமது கூட்டணி மற்றும் களநிலவரம் பற்றி கேட்டார். ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை கூறினார்கள். பேசியவர்கள் அனைவருமே பலமான கூட்டணியை அமைத்து தந்திருப்பதை வரவேற்றனர். எல்லா இடங்களிலும் ஆளும்கட்சி மீது அதிருப்தி இருப்பதையும் விளக்கி பேசினார்கள்.
எல்லோருடைய கருத்துக்களையும் கேட்ட பிறகு, அமித்ஷா அவர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பலமான கூட்டணி அமைத்து உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான சூழல் நிலவுகிறது. இந்த சூழலில் மக்களிடம் செல்லுங்கள்.
பா.ஜனதா அரசு நாட்டை முன்னேற்ற செய்து வரும் மகத்தான சாதனைகளை எடுத்து சொல்லுங்கள். அதன் மூலம் அவர்களை கவருங்கள். இந்த பணிகள் பூத் அளவில் இருந்து தொடங்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள்தான் இருக்கிறது. இந்த கால கட்டத்தில் திட்டமிட்டு நீங்கள் செய்யும் பணிகள்தான் வெற்றியை தேடி தரும். மற்ற மாநி லங்களைப் போல் தமிழ்நாட்டிலும், இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். மீண்டும் அடுத்த மாதம் (ஜூலை) தமிழ் நாட்டுக்கு வருவேன் என்றார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன்.
- ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறேன்.
புனிதமான ராமநவமி நாளில் தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு தனது வருகை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
நாளை, ஏப்ரல் 6-ம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
புதிய பாம்பன் ரெயில் பாலம் திறந்து வைக்க உள்ளேன். ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






