search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "President Ramnath kovind"

    • 1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார்.
    • அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 5 ஆண்டுகளில் தனது பதவி காலத்தில் ராம்நாத் கோவிந்த் 6 பேரின் தூக்கு தண்டனை கருணை மனுக்களை நிராகரித்து உள்ளார்.

    பீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத்ராய். இவர் ராம்பூர் ஷியாம் சந்திரா கிராமத்தை சேர்ந்த விஜயேந்திர மகோத்தா மனைவி மற்றும் 5 குழந்தைகள் வீட்டுக்கு தீ வைத்து உயிரோடு எரித்துக்கொன்றார்.

    கடந்த 2006-ம் ஆண்டு நடந்த இச்சம்பவம் தொடர்பாக ஜகத் ராய் கைது செய்யப்பட்டார். அவருக்கு 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. இதையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பினார். இந்த கருணை மனுவை தான் முதன் முதலாக ராம்நாத் கோவிந்த் பதவிக்கு வந்ததும் நிராகரித்தார்

    இதன் தொடர்ச்சியாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் கருணை மனுக்களை கடந்த 2020-ம் ஆண்டு நிராகரித்தார்.

    2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். ஓடும் பஸ்சில் நடந்த இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக முகேஷ்சிங், வினய் சர்மா, அக்‌ஷய்குமார் சிங், பவன்குப்தா உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதில் முக்கிய குற்றவாளியாக இருந்த ராம்சிங் விரைவு கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டிருக்கும் போது திகார் ஜெயிலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் ஒருவர் சிறார் என்பதால் சிறார் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

    மற்ற 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள் 4 பேரும் தனித்தனியாக ஜனாதிபதிக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த மனுக்களையும் 2020-ம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.

    இதேபோல கடைசியாக 2006-ம் ஆண்டு தூக்கு தண்டணை பெற்ற சஞ்சய் என்பவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டது.

    கடந்த 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பதவி வகித்த பிரணாப் முகர்ஜி மொத்தம் 30 கருணை மனுக்களை நிராகரித்தார்.

    1987 முதல் 1992 வரை ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் 45 கருணை மனுக்களை நிராகரித்தார். அவருக்கு அடுத்தபடியாக பிரணாப் முகர்ஜி தான் அதிக மனுக்களை நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் 2 மனுக்களையும், இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் 5 கருணை மனுக்களையும் நிராகரித்து உள்ளனர்.

    அடுத்த மாதம் வங்காளதேசம் பயணம் மேற்கொள்ளும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 16 மற்றும் 17-ந்தேதிகளில் நடைபெற உள்ள விழாக்களில் கலந்து கொள்கிறார்.
    புதுடெல்லி:

    பாகிஸ்தானுடன் வங்காள தேசம் நடத்திய போரின் 50-வது வெற்றி தினம், நாடு உதயமான 50-வது ஆண்டு கொண்டாட்டம் ஆகியவை டாக்கா நகரில் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்க வரும்படி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு வங்காளதேசம் நாட்டில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 16 அல்லது 17-ந்தேதியில் இந்த விழா நடைபெற இருக்கிறது.

    பிரதமர் மோடி


    அழைப்பை ஏற்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வங்காளதேசம் சென்று இந்த விழாக்களில் கலந்து கொள்கிறார். வங்கதேச தந்தை முஜிபூர் ரகுமானின் 100-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்பதற்காக கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடி சென்று வந்தார்.

    அப்போது இரு நாட்டு தரப்பிலும் பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தன. அதன் தொடர்ச்சியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டாக்கா செல்கிறார்.

    அப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு, கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் தொடர்பாக ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன.


    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கிறார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. நாடு முழுவதும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு அபார வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



    பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை இன்று மாலை சந்திக்கிறார்.

    பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ள நிலையில் ஜனாதிபதியை பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாராளுமன்றத் தேர்தலில் பாஜக தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் நிலையில் இருப்பதால், பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது. மோடி மீண்டும் அடுத்தவாரம் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

    அவ்வகையில் 17-வது பாராளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

    இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்று, தனி மெஜாரிட்டியுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் நிலை உள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். இந்த இமாலய வெற்றியால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். பாஜக அலுவலகத்தில் ஏராளமான தொண்டர்கள் திரண்டு வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


    இந்நிலையில், நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்ய உள்ளார். 26-ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ராஜினாமா கடிதம் கொடுப்பார் என தெரிகிறது. அதன்பின்னர் பாஜக தலைமையில் புதிய அரசு அமைக்க உரிமை கோருகிறார். மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்துக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது. 5 கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று 6-வது கட்டமாக, 7 மாநிலங்களில் உள்ள 59 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.



    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலையிலேயே மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்தனர். தேர்தலை முன்னிட்டு அந்தந்த மாநில போலீஸ் படையுடன், மத்திய படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலின் 6-வது கட்ட தேர்தலில் டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு வந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.
    ஜனாதிபதி நியமனம் குறித்த தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளதாகவும், தான் ஜனாதிபதி பதவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குஜராத்தில் 2017-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் ஆட்சி அமைக்க முடியுமா? என பிரதமர் நரேந்திர மோடி பயந்தார். அதற்கு தீர்வாக ஜனாதிபதி தேர்தலில் ராம்நாத் கோவிந்தை நிறுத்தலாம் என பா.ஜ.க. தலைவர் அமித்ஷா யோசனை கூறினார். இதனால் ஜனாதிபதி பதவிக்கு தகுதியான அத்வானியை அவர்கள் ஒதுக்கி விட்டனர். இது பா.ஜ.க.வின் உட்கட்சி விவகாரம். ஒரு கட்டுரையில் படித்ததை கூறுகிறேன்” என்றார்.



    இதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நரசிம்ம ராவ் கூறுகையில், “அசோக் கெலாட்டின் கருத்து, தலித் சமுதாயத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்போது எதிரான மனநிலையை கொண்டுள்ளதை காட்டுகிறது. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

    இதனிடையே அசோக் கெலாட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், “ஜனாதிபதி நியமனம் குறித்த தன்னுடைய பேச்சு திரித்து கூறப்பட்டு உள்ளது. நான் ஜனாதிபதி பதவி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ராம்நாத் கோவிந்தின் எளிமை, பெருந்தன்மை என்னை மிகவும் கவர்ந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய பேச்சு சர்ச்சையானதால் அசோக் கெலாட் பல்டி அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind 
    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி உள்ளது. #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind
    புதுடெல்லி:

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தற்போதைய ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த், தலித் என்பதால் அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறினார். குஜராத்தில் மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து பாஜகவுக்கு கவலை ஏற்பட்டதாகவும், அப்போது தலித் வாக்குகளை கவனத்தில் கொண்டு தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்தை ஜனாதிபதி ஆக்கியதாகவும் கெலாட் கூறினார். இந்த தகவலை ஒரு கட்டுரையில் படித்ததாகவும் அவர் கூறினார்.

    அசோக் கெலாட்டின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அசோக் கெலாட்டுக்கு பாஜக கண்டனம் தெரிவித்ததுடன், அசோக் கெலாட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. இந்த விஷயத்தை தேர்தல் ஆணையம் தாமாக முன்வந்து கெலாட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி உள்ளது.


    “அரசியலமைப்பின் பாதுகாவலரான ஜனாதிபதிக்கு எதிராக சாதி ரீதியான கருத்தை ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த கருத்து காங்கிரஸ் கட்சியின் தலித் விரோத மனப்போக்கையே காட்டுகிறது” என பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் தெரிவித்தார். #LokSabhaElections2019 #AshokGehlot #RamNathKovind

    தேர்தல் கமி‌ஷன் செயல்பாடு முற்றிலும் சீர்குலைந்து விட்டதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு முன்னாள் நீதிபதிகள் மற்றும் ராணுவ தளபதிகள் கடிதம் எழுதியுள்ளனர். #ElectionCommission #RamnathKovind
    புதுடெல்லி:

    மத்திய தேர்தல் கமி‌ஷனின் செயல்பாடுகள் அதன் நம்பகத்தன்மையை பாதித்து இருப்பதாக ஏற்கனவே முன்னாள் உயர் அதிகாரிகள் பலர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

    இப்போது முன்னாள் உயர் அதிகாரிகள் 80 பேர் கையெழுத்திட்டு புதிதாக ஒரு கடிதம் அனுப்பி உள்ளனர். அதில் முன்னாள் டெல்லி போலீஸ் கமி‌ஷனர் ஆர்.எஸ்.குப்தா, முன்னாள் விமானப்படை துணை தளபதி ஆர்.சி.பாஜ்பாய், முன்னாள் வெளிவிவகார உயர் அதிகாரி அசோக்குமார், முன்னாள் ராணுவ துணை தளபதி ஏ.கே.ஷானி மற்றும் முன்னாள் உயர் ராணுவ அதிகாரிகள், நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என பலரும் கையெழுத்திட்டு உள்ளனர்.

    அந்த கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் கமி‌ஷன் மீது அதிருப்தி தெரிவித்து நாங்கள் ஏற்கனவே தங்களுக்கு கடிதம் அனுப்பி இருந்தோம். இதன் பிறகும் கூட தேர்தல் கமி‌ஷனின் போக்கில் மாற்றம் தென்படவில்லை.

    இப்போது தேர்தல் கமி‌ஷன் நடந்து கொள்ளும் விதத்தை பார்க்கும் போது அதன் மீதான நம்பகத்தன்மை கவலை அடைய செய்கிறது.

    தேர்தல் கமி‌ஷன் மீதான களங்கம் உச்சக்கட்டத்தை அடைந்து இருக்கிறது. இவர்களால் நேர்மையான முறையில் தேர்தல் நடத்த முடியுமா? என்ற சந்தேகம் அதிகரித்து இருக்கிறது. அதற்கான திறன் தேர்தல் கமி‌ஷனிடம் தென்படவில்லை. அதன் செயல்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்து இருக்கிறது.

    நாங்கள் நாட்டின் முக்கியமான குடிமகன்கள் என்ற முறையில் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் கவலையை உங்கள் முன் வைக்கிறோம்.

    ஜனநாயகத்தில் தேர்தல் கமி‌ஷனின் செயல்பாடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அதனை தரம் தாழ்த்த சிலர் முயற்சிக்கிறார்கள். அதற்கு தேர்தல் கமி‌ஷன் வளைந்து கொடுத்து பாரபட்சமாக நடக்கிறது.

    ஒரு குறிப்பிட்ட நபர்களின் நலனுக்கு தேர்தல் கமி‌ஷன் உதவியாக இருக்கிறது. இதன் மூலம் தேர்தல் கமி‌ஷனின் மரியாதை தரம் தாழ்த்தப்பட்டு உள்ளது. ஆளும் கட்சி தேர்தல் விதி மீறல்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை.

    இவ்வாறு அவர்கள் கடிதத்தில் கூறி உள்ளனர். #ElectionCommission #RamnathKovind
    லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பினாகி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். #Lokpal #FirstLokpalOfIndia #SCjudgeGhose
    புதுடெல்லி:

    பிரதமர், மத்திய மந்திரிகள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் என உயர் பதவி வகிப்பவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் விசாரிப்பதற்கு லோக்பால் என்ற அதிகாரம் பொருந்திய அமைப்பை உருவாக்குவதற்கான மசோதா கடந்த 2013-ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்டத்தின்படி லோக்பால் அமைப்பை உருவாக்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டது.

    இந்நிலையில், பிரதமர் தலைமையிலான தேர்வுக்குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில், லோக்பால் அமைப்புக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். நாட்டின் முதல் லோக்பால் நீதிபதியாக பினாக்கி சந்திர கோஸ் நியமனத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். அவருடன் மேலும் 8 உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர். நீதிபதிகள் திலீப் பி.போஸ்லே, பி.கே.மொஹந்தி, அபிலாஷா குமாரி, ஏ.கே.திரிபாதி மற்றும் தினேஷ் குமார் ஜெயின், அர்ச்சனா ராமசுந்தரம், மகேந்தர் சிங்,  ஐ.பி. கவுதம் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.


    இதையடுத்து லோக்பால் அமைப்பின் முதல்  தலைவராக பினாகி சந்திர கோஸ் இன்று பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஆகியோர் பங்கேற்றனர். #Lokpal #FirstLokpalOfIndia #SCjudgeGhose
    ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Holi #PMModi #RamnathKovind
    புதுடெல்லி:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்து செய்தியில், “இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் இந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்டிகை, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் வளமையை கொண்டுவரட்டும்” என்று கூறியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது வாழ்த்து செய்தியில், “தீமையை நன்மை தோற்கடித்ததை கொண்டாடும் திருநாள்தான் ஹோலி. இது, மகிழ்ச்சியையும், தோழமையையும் வெளிப்படுத்தும் திருநாள்” என்று கூறியுள்ளார்.



    பிரதமர் நரேந்திர மோடி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் ஹோலி பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த மகிழ்ச்சி திருவிழா, அனைத்து தரப்பினரையும் ஒன்று சேர்க்கும் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ‘டுவிட்டர்’ செய்தியில், “ஒட்டுமொத்த காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து ஹோலி பண்டிகை வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். இந்த திருவிழா, உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியால் ஒளிரச் செய்ய இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
    கோவையில் வருகிற 4-ந்தேதி ஈஷா யோகா மையத்தில் நடைபெற உள்ள மகாசிவராத்திரி விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்கிறார். #MahaSivarathiri #RamNathKovind
    கோவை:

    இந்திய கலாசாரத்தில் மகாசிவராத்திரி என்பது மிக முக்கியமான ஒரு நாளாகும். குறிப்பாக, ஆன்மீக பாதையில் இருப்பவர்களுக்கு அவர்கள் உள்நிலையில் வளர்வதற்கு இந்நாள் பல்வேறு சாத்தியங்களை வழங்குகிறது.

    இதன்காரணமாக, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஈஷாவில் நடக்கும் மகாசிவராத்திரி விழா உலகின் பிரமாண்டமான மகாசிவராத்திரி விழாவாக கருதப்படுகிறது.

    அதன்படி, இந்தாண்டு, 25வது ஆண்டு மகாசிவராத்திரி விழா வரும் மார்ச் 4ம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கி மறுநாள் காலை 6 மணி வரை மிக கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.

    இவ்விழாவில் பாரத குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இதையொட்டி, மகாசிவராத்திரி தினத்தன்று மாலை ஈஷா யோகா மையத்துக்கு வரும் அவர் சத்குருவுடன் தியானலிங்கத்தில் நடைபெறும் சக்திவாய்ந்த பஞ்ச பூத ஆராதனையில் கலந்துகொள்கிறார். மேலும், லிங்க பைரவி, சூர்ய குண்டம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விட்டு மஹாசிவராத்திரி விழா நடக்கும் இடத்திற்கு வருகை தருவார். அங்கு சத்குருவுடன் இணைந்து புல்வாமா தாக்குதலில் உயிர் தியாகம் செய்த நம் ராணுவ வீரர்களின் நினைவாக மரக்கன்றுகளை நட உள்ளார்.

    ஆதியோகி முன்பு நடக்கும் இவ்விழாவில் சத்குருவின் அருளுரை, சக்திவாய்ந்த நள்ளிரவு தியானம், மந்திர உச்சாடனைகள், லிங்க பைரவி மஹா யாத்திரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து வரும் தலைசிறந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள், சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரின் இசை நிகழ்ச்சிகள் என பல்வேறு அம்சங்கள் இடம் பெறுகின்றன.

    குறிப்பாக, தேசிய விருது வென்ற பிரபல இசையமைப்பாளர் அமித் திரிவேதி, மெல்லிசை வித்தகர் ஹரிஹரன், பிரபல பின்னணி பாடகர் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்று இசை விருந்து படைக்க உள்ளனர்.

    இவ்விழாவை மேலும் அழகூட்ட நூற்றுக்கணக்கான நாட்டு மாடுகள் பங்கேற்கும் நாட்டு மாடுகள் கண்காட்சி, தலைப்பாகை கட்டுதல், வீதி நாடகங்கள், பல்வகை சேலை உடுத்தும் பயிற்சி, பல மாநில உணவு அரங்கங்கள் உள்ளிட பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. இந்தாண்டு, மக்களின் கண்ணை கவரும் விதமாக ஆதியோகி குறித்த பிரத்யேகமாக ‘லேசர் ஷோ’ ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

    மகாசிவராத்திரி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த 1 லட்சத்து 8 ருத்ராட்ச மணிகள் மற்றும் சர்ப்ப சூத்திரம் பிரசாதமாக வழங்கப்படும். விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு மஹா அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.

    மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்டங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், விழா நாட்களில் கோவையில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு சிறப்பு பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    பேருந்து முன்பதிவுக்கு 83000 83111 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். #MahaSivarathiri #RamNathKovind
    நூற்றாண்டு கண்ட சென்னை தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். #RamNathKovind #MahatmaGandhiStatue
    சென்னை:

    ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒருநாள் பயணமாக தமிழகத்துக்கு இன்று வருகை தந்துள்ளார். இன்று காலை சென்னைக்கு வந்த ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மலர்ச்செண்டு கொடுத்து வரவேற்றனர். 



    அதன்பின்னர், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் இந்தி பிரசார் சபாவுக்கு சென்றார் ராம்நாத் கோவிந்த். நூற்றாண்டு கண்ட சென்னை தக்‌ஷிண பாரத் இந்தி பிரசார் சபாவில் நிறுவப்பட்ட மகாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

    எனக்கு பிடித்த மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டுக்கு வருவதில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்நாடு மிக அழகிய மொழி, செம்மையான கலாச்சாரம், திறமையுடன் கடுமையாக உழைக்கும் மக்கள், தொன்மையான வரலாறு ஆகிய சிறப்புகளை கொண்டது. காந்திஜியின் கருத்துக்கள் உலகுக்கு பொதுவானவை என குறிப்பிட்டுள்ளார். #RamNathKovind #MahatmaGandhiStatue
    ×