search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ashok Gehlot"

    • பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது.
    • ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    ராஜஸ்தான் மாநிலம், கோட்புல்லு என்ற நகரில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி ராஜேந்திர யாதவ் என்பவர் 25 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதானார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர யாதவ், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தன் மீதான வழக்கை திரும்ப பெற கோரி மிரட்டி உள்ளார். வழக்கை திரும்ப பெற முடியாது என்று அப்பெண் உறுதியாக இருந்திருக்கிறார்.

    இதனால் கோபமடைந்த ராஜேந்திர யாதவ் தனது கூட்டாளிகளான மஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகியோருடன் இணைந்து, தனது சகோதரருடன் வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அப்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். மேலும் கூர்மையான ஆயுதங்களை கொண்டும் அவரையும், அவரது சகோதரரையும் சரமாரியாக தாக்கியுள்ளார்.

    விவரம் அறிந்த காவல்துறையினர், ஹிபால் குர்ஜார், ராகுல் குர்ஜார் ஆகிய இருவரை கைது செய்யப்பட்டனர். ராஜேந்திர யாதவ் இன்னும் கிடைக்கவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

    இந்நிலையில் காயமடைந்த அப்பெண்ணுக்கு உள்ளூர் மருத்துவமனையில் தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அப்பெண்ணின் சகோதரருக்கும் அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து முக்கிய குற்றவாளியான ராஜேந்திர யாதவை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்ணைச் சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் எனது இதயத்தை உலுக்கியது. மருத்துவர்கள் தங்களால் இயன்றவரை அவரது உயிரை காப்பாற்றுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். ஏஎஸ்ஐயை சஸ்பெண்ட் செய்வது போதாது, இந்த சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

    • தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
    • சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் கடந்த சில நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். உடனே அவர் ஜெய்ப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். பரிசோதனையில் அசோக்கெலாட்டுக்கு கொரோனா மற்றும் பன்றிக்காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

    அவரது உடல்நிலை சீராக தற்போது சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வருவதாவும் மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக அசோக் கெலாட் எக்ஸ் வலை தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், டாக்டர்கள் மருத்துவ பரிசோதனையில் எனக்கு கொரோனா மற்றும் பன்றி காய்ச்சல் இருப்பது தெரியவந்ததால் அடுத்த 7 நாட்கள் யாரையும் சந்திக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன். சீதோசன நிலை மாறி இருப்பதால் அனைவரும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். 

    • ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.
    • அன்று பதிவான வாக்குகள் வரும் 3-ம் தேதி எண்ணப்படுகிறது.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளைக் கொண்ட சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 25-ம் தேதி விறுவிறுப்பாக நடைபெற்றது. ஸ்ரீகங்கா நகர் கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் மரணம் அடைந்ததால் அங்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

    வாக்காளர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக வாக்களித்து வந்தனர். ராஜஸ்தானில் 74 சதவீத வாக்குகள் பதிவானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராஜஸ்தான் முதல் மந்திரி அசோக் கெலாட் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், 5 மாநில தேர்தலில் பாஜகவால் எங்கும் ஆட்சி அமைக்க முடியாது. வாக்குப்பதிவுக்கு பிந்தைய எக்சிட் போல் முடிவுகள் எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

    5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.

    • காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும்.
    • பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள்.

    ராஜஸ்தானில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல்வர் அசோக் கெலாட் சர்தார்புரா தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி சென்று வாக்களித்தார்.

    பின்னர் அசோக் கெலாட் கூறியதாவது:-

    ராஜஸ்தானில் ஆளுங்கட்சிக்கு எதிராக எதிர்ப்பு அலை இல்லை. காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும். பா.ஜனதா தலைவர்கள் மாநிலத்திற்கு வெளியில் இருந்து பிரசாரத்திற்காக வந்தவர்கள். அடுத்த ஐந்தாண்டுக்கு அவர்களை இங்கு பார்க்க முடியாது. இது மோடிக்கான தேர்தல் இல்லை. இது மாநில சட்டசபை தேர்தல். அவர்களை மீண்டும் ஐந்தாண்டு இங்கே பார்க்க முடியாது. நாங்கள் இங்கேதான் இருப்போம். அதோடு மக்களோடு இருப்போம்" என்றார்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 14-ந்தேதி நிறைவு பெறுகிறது. இதையடுத்து ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடத்தும் அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் அட்டவணைப்படி அங்கு 200 சட்டசபை தொகுதிகளிலும் கடந்த மாதம் 30-ந்தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பித்தது.

    கடந்த 6-ந்தேதி மனுதாக்கல் முடிந்தது. மறுநாள் 7-ந்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்பட்ட பிறகு 200 தொகுதிகளிலும் 1875 பேர் களத்தில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வேட்பாளர்களில் 183 பேர் பெண் வேட்பாளர்கள்.

    இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு 200 தொகுதிகளிலும் அனல் பறக்கும் பிரசாரம் தொடங்கியது. ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 5 கோடியே 25 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை குறி வைத்து அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி வீசின.

    ராஜஸ்தான் மாநில தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல கட்சிகள் களத்தில் நின்றாலும் உண்மையான போட்டி பாரதீய ஜனதாவுக்கும் காங்கிரசுக்கும் இடையேதான் நிலவுகிறது. ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரசும், ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதாவும் மிக, மிக தீவிரமாக பிரசாரம் செய்தன.

    ராஜஸ்தான் மாநில மக்களை கவரும் வகையில் 7 முக்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை, ரூ.500 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர், பழைய ஓய்வூதிய திட்டம் ஆகியவை காங்கிரஸ் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளாகும்.

    மேலும் விவசாயிகள் கடன் தள்ளுபடி, அரசு பஸ்சில் பெண்களுக்கு இலவச பயணம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி திட்டங்களையும் ராஜஸ்தான் காங்கிரஸ் அறிவித்து அதிரடி காட்டியது. பாரதிய ஜனதாவும் சில அறிவிப்புகளை வெளியிட்டது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு மிக, மிக வலுவான தலைவர் இல்லா விட்டாலும் மிக வலுவான அடி மட்டம் வரையிலான பூத் கமிட்டி அமைப்புள்ளது. அடுத்தப்படியாக பிரதமர் மோடியை மட்டுமே அந்த கட்சி நம்பி இருப்பது இந்த தேர்தலில் தெரிகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் பிரதமர் மோடி ராஜஸ்தானில் பல சுற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    பா.ஜ.க. பிரசாரங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல், பிரியங்கா இருவரும் ராஜஸ்தான் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து தீவிரமாக ஆதரவு திரட்டினார்கள். இந்த வார தொடக்கத்தில் உச்சக்கட்ட பிரசாரம் நடந்தது. நேற்று முன்தினம் மாலையுடன் தேர்தல் பிரசாரம் நிறைவு பெற்றது.

    இதையடுத்து ஓட்டுப் பதிவுக்கு நேற்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டது. கரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குர்மித்சிங் சமீபத்தில் மரணம் அடைந்ததால் 199 தொகுதிகளில் மட்டும் இன்று தேர்தல் நடத்தப்படுகிறது. ஓட்டுப் பதிவுக்காக மாநிலம் முழுவதும் 51 ஆயிரத்து 756 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

    இந்த வாக்குச்சாவடிகளில் இன்று (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கியது. ஆண்களும், பெண்களும் அதிகாலை முதலே வாக்குச் சாவடிகளுக்கு ஆர்வமுடன் திரண்டு வந்தனர். இதனால் ராஜஸ்தானில் பெரும்பாலான தொகுதிகளில் தொடக்கம் முதலே நல்ல விறுவிறுப்பு இருந்ததை காண முடிந்தது.

    காலை 9 மணி வரை முதல் 2 மணி நேரத்தில் சுமார் 10 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

    ஓட்டுப்பதிவை சுமூகமாக நடத்தி முடிக்க துணை நிலை ராணுவ வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீசார் ஓட்டுச்சாவடிகளில் 2 அடுக்கு பாதுகாப்பை வழங்கினார்கள். பதற்றம் ஏற்படலாம் என்று கருதப்படும் வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தம் 1 லட்சத்து 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இன்று மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். அதன் பிறகு மின்னணு எந்திரங்கள் அனைத்தும் 'சீல்' வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.

    கடந்த 2018-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின்போது 74.72 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இந்த தடவை அதைவிட சற்று அதிகம் வாக்குகள் பதிவாக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக ராஜஸ்தானில் ஆட்சியை கைப்பற்றப் போவது காங்கிரசா? அல்லது பாரதீய ஜனதாவா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 101 இடங்கள் தேவை. கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 100 இடங்களிலும், பாரதிய ஜனதா 73 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன.

    இந்த ஆண்டு இந்த எண்ணிக்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன. சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் காங்கிரஸ், பாரதீய ஜனதா இரு கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி ஏற்படலாம் என்று கூறப்பட்டு இருந்தது.

    என்றாலும் காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் கடந்த 30 ஆண்டுக்கு தேர்தல் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருப்பது தெரியும்.

    ஒரு தடவை ஆட்சி அமைத்த கட்சி அடுத்த தேர்தலில் ஆட்சி அமைப்பதில்லை. எனவே இந்த தடவை தங்களுக்கே வெற்றி கிடைக்கும் என்று பா.ஜ.க. தலைவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். அவர்களது நம்பிக்கையும் ஆசையும் பலிக்குமா? என்பது டிசம்பர் 3-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையின் போது தெரிந்துவிடும்.

    • தேசிய கட்சிகளான காங்கிரஸ், பா.ஜ.க. தீவிரமாக களம் இறங்கியுள்ளன
    • காங்கிரசார் ஏதோ மன வியாதியில் உள்ளனர் என பிரதமர் மோடி விமர்சித்தார்

    ராஜஸ்தான் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு நவம்பர் 25 அன்று அம்மாநில சட்டசபையில் உள்ள 200 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3 அன்று வெளியிடப்படும்.

    இத்தேர்தலில் வெற்றி பெற தேசிய கட்சிகளான காங்கிரசும், பா.ஜ.க.வும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

    முன்னதாக, மத்திய பிரதேசத்தில் ஒரு பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்கள் அனைவரும் சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல்களையே பயன்படுத்துகின்றனர் என்றும் இதனை மாற்றி மத்திய பிரதேசத்திலேயே மொபைல் தயாரிப்பை ஊக்குவித்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்பதையே காங்கிரஸ் விரும்புகிறது என்றும் அறிவித்திருந்தார்.

    நேற்று இது குறித்து தனது பிரசாரத்தில் பிரதமர் மோடி பதிலளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    ஒரு காங்கிரஸ் தலைவர் (ராகுல் காந்தி) சீனாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை மட்டுமே மக்கள் வைத்துள்ளதாக கூறுகிறார். அட அறிவில்லாதவர்களின் தலைவரே, எந்த உலகில் இருக்கிறீர்கள்? இந்தியாவின் வளர்ச்சியை மறைக்கும் அளவு எந்த வெளிநாட்டு கண்ணாடியை அணிந்து கொண்டு நிலைமையை பார்க்கிறீர்கள்? இந்தியாவின் சாதனைகளை புறக்கணிக்கும் அளவிற்கு ஏதோ மன வியாதியில் காங்கிரசார் உள்ளனர்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மறைமுகமாக "அறிவில்லாதவர்களின் தலைவன்" என விமர்சித்திருப்பதற்கு ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    அவர் இது குறித்து தெரிவித்ததாவது:

    "இது வருந்தத்தக்க செயல். பிரதமர் பதவிக்கு என்று ஒரு மரியாதை (dignity) உள்ளது. பிரதமரை அதிகம் விமர்சிக்கும் போது, அப்பதவிக்கான மரியாதை குறைந்து விடும். ஆனால், அத்தகைய ஒரு மரியாதைக்குரிய பதவியை வகிக்கும் ஒருவரே (மோடி) இவ்வாறு பேச தொடங்கினால், அவரிடமிருந்து வேறு எதனை எதிர்பார்க்க முடியும்?"

    இவ்வாறு அசோக் கெலாட் கருத்து தெரிவித்தார்.

    சில தினங்களுக்கு முன் மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியான சிவசேனா (உத்தவ் தாக்கரே பிரிவு) தலைவர் சஞ்சய் ராவத், "அடுத்த வருட பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆக போவது உறுதி என்பதால் மோடி ராகுலை கண்டு அஞ்சுகிறார்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • ராஜஸ்தானில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
    • பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம் என்றார்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ராஜஸ்தானில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் அரசு பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. வெற்றி பெற்றால் ராஜஸ்தானில் உள்ள குண்டர்கள் ராஜ்ஜியத்தை அடியோடு ஒழிப்போம் என தெரிவித்தார்.

    இந்நிலையில், ஜெய்ப்பூரில் முதல் மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பிரதமரை யாரோ தவறாக வழிநடத்தி விட்டனர் அல்லது அவருக்கு சரியாக விளக்கமளிக்கவில்லை.

    ஜனநாயகத்தில் நேற்று அவர் பயன்படுத்திய மொழி ஆட்சேபணைக்குரியது. ராஜஸ்தானில் நிலவும் சூழல் காரணமாக அவர் பதற்றமடைந்து இதுபோன்ற அறிக்கைகளை வெளியிட்டு இருக்கலாம்.

    இதுபோன்ற மொழியைப் பயன்படுத்த வேண்டாம் என்று பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் சித்தாந்தத்தின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்கிறோம் என தெரிவித்தார்.

    • ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை
    • அசோக் கெலாட் மகன் வைபவ் கெலாட், விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன்

    ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த மாதம் 25-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா வீடு மற்றும் அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், FEMA வழக்கு தொடர்பாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட்டின் மகன் வைபவ் கெலாட் நாளை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் வழங்கியுள்ளது.

    இதுதொடர்பான அசோக் கெலாட் கூறியதாவது:-

    நேற்று, காங்கிரஸ் ராஜஸ்தான் பெண்களுக்கான உத்தரவாதத்தை வெளியிட்டது. இன்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை, எனது மகனுக்கு ஆஜராகும்படி சம்மன் நடவடிக்கை.

    ராஜஸ்தானில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏனென்றால், பெண்கள், விவசாயிகள், ஏழை மக்கள் காங்கிரஸின் உத்தரவாதத்தின் பலன்களை பெறுவதை பா.ஜனதா விரும்பவில்லை. நான் என் சொல்வதை உங்களால் புரிந்து கொள்ள முடியும்'' என்றார்.

    நேற்று நடைபெற்ற பேரணியின்போது, அசோக் கெலாட் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 1.05 கோடி குடும்பங்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரூபாய் தவணை முறையில் வழங்கப்படும்'' என வாக்குறுதி அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சச்சின் பைலட்டின் தந்தை குறித்து பா.ஜனதாவின் மால்வியா விமர்சனம்
    • ஒட்டு மொத்த நாடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என கெலாட் வலியுறுத்தல்

    ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில் அசோக் கெலாட், சச்சின் பைலட் இருவரும் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டனர். இளம் வயதுடைய சச்சின் பைலட் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கட்சி மேலிடம் அசோக் கெலாட்டை முதல்வராக தேர்வு செய்தது.

    இதனால் இருவருக்கும் இடையில் ஒரு மோதல் போக்கு ஏற்பட்டது. இந்த மோதல் போக்கு சில வருடங்களுக்கு முன் வெளிப்படையாக வெடிக்க, சச்சின் பைலட் காங்கிரசில் தனதுக்கு ஆதரவான எம்.எல்.ஏ.-க்களை திரட்டி கெலாட்டிற்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், கெலாட் திறம்பட செயல்பட்டு தனது ஆதரவை நிலைநிறுத்திக்கொண்டார்.

    பின்னர், மேலிடம் தலையிட்டு சமரசம் செய்து வைத்தது. அதன்பின் அடிக்கடி மோதல் ஏற்பட்ட போதிலும், இந்த வருட இறுதியில் ராஜஸ்தான் மாநில சட்டபை தேர்தலும், அடுத்த ஆண்டு மத்தியில மக்களவை தேர்தல் வருவதாலும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர்.

    சமீப காலமாக வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வன்முறை குறித்து அரசியல் எதிர்க்கட்சி தலைவர்கள் தங்களது விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர். பா.ஜனதவினர் அதற்கு பதில் கொடுத்து வருகின்றனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியையும், சச்சின் பைலட் தந்தையையும் பற்றி பா.ஜனதா சமூக வலைத்தள பிரிவு தலைவர் அமித் மால்வியா ஒரு கருத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

    அதில் மால்வியா, ''ராஜேஷ் பைலட் (சச்சின் பைலட் தந்தை), சுரேஷ் கல்மாடி ஆகியோர் இந்திய போர் விமானம் மூலம் கடந்த 1966-ல் மிசோரம் தலைநகர் ஐஸ்வாலில் வெடிகுண்டுகளை வீசினர். பின்னர், இருவரும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாகி, மந்திரி சபையில் இடம் பிடித்தனர். வடகிழக்கு மாநிலத்தின் சொந்த மக்கள் மீது குண்டுகள் வீசியதற்கு பரிசாக இந்திரா காந்தி அரசியலில் இடம் வழங்கினார் என்பது தெளிவாக தெரிகிறது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்த சச்சின் பைலட் ''நீங்கள் தவறான தேதி மற்றும் தவறான சம்பவத்தை சொல்கிறீர்கள். ஆமாம். இந்திய விமானப்படை விமானியான எனது தந்தை குண்டுகளை வீசினார். ஆனால், இந்தியா- பாகிஸ்தான் போரின்போது, கிழக்கு பாகிஸ்தானில் வீசினார். நீங்கள் சொல்வதுபோல் 1966-ம் ஆண்டு மார்ச் 5-ந்தேதி மிசோரமில் அல்ல. எனது தந்தை 1966-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 29-ந்தேதிதான் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். ஜெய் ஹிந்த்'' என பதிவிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் அசோக் கெலாட், ''இந்திய விமானப்படையில் காங்கிரஸ் தலைவரான ராஜேஷ் பைலட் தைரியமான விமானியாக திகழ்ந்தார். அவர்களை இழிவுப்படுத்துவது, பா.ஜனதா இந்திய விமானப்படையில் தியாகம் செய்தவர்களை இழிவுப்படுத்துவதாகும். ஒட்டுமொத்த நாடும் இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • பிரதமர் மோடி இன்று ராஜஸ்தான் செல்கிறார்
    • பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில், கெலாட் பேசக்கூடிய கருத்துகள் நீக்கம்

    ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மத்திய பிரதேச மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை பா.ஜனதா தொடங்கியுள்ளது.

    தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி மத்திய பிரதேச மாநிலம் சிகர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், பல்வேறு பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    ராஜஸ்தான் மாநிலம் வரும் பிரதமர் மோடியை, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் வரவேற்பதாக இருந்தது. ஆனால், மோடி கலந்து கொள்ளும் விழாவில் அசோக் கெலாட் பேசுவதாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி அலுவலகம் அவரது பேச்சை நீக்கிவிட்டது. இதனால் தன்னால் உங்களை வரவேற்று பேச முடியாது. டுவிட்டர் மூலம் வரவேற்கிறேன் என அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

    பொதுவாக பிரதமர் மோடி கலந்து கொள்ளும் விழாவில், இடம்பெறக் கூடிய பேச்சுகள் குறித்த ஆவணங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் அனுப்பி வைத்ததில் அசோக் கெலாட் பேச்சு நீக்கப்பட்டுள்ளது.

    அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் ''மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நீங்கள் இன்று ராஜஸ்தான் வருகிறீர்கள். நிகழ்ச்சி நிரலுக்கான என்னுடைய பேச்சை பிரதமர் அலுவலகம் நீக்கியுள்ளது. ஆகவே, பேச்சு மூலம் தங்களை வரவேற்க முடியாது. இந்த டுவிட்டர் மூலம் தங்களை மனதார வரவேற்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், தன்னுடைய பேச்சால் பல கருத்துகளை முன் வைத்திருப்பேன் என்ற கெலாட், ஆறு மாதங்களில் 7-வது முறையாக ராஜஸ்தான் வரும் பிரதமர் மோடி, அதை நிறைவேற்றுவார் என நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    • ராஜஸ்தான் பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்ததால் மந்திரி பதவி பறிப்பு
    • ரெட் டைரி குறித்து தன்னிடம் அசோக் கெலாட் தெரிவித்தது குறித்து தகவல்

    ராஜஸ்தான் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் ராஜேந்திர குத்தா. மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அசோக் கெலாட் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.

    இந்த நிலையில் நான் இல்லை என்றால், முதலமைச்சர் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜேந்தி குத்தா கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைவர் தர்மேந்திர ரதோருக்கு எதிராக அமலாக்கத்துறை மற்றும் வரிமான வரித்துறை சோதனை நடத்தியபோது, முதலமைச்சர் அசோக் கெலாட், தன்னிடம் எந்தவொரு விலை கொடுத்தாவது 'ரெட் டைரி'யை மீட்க வேண்டும் எனக் கூறினார். தொடர்ந்து என்னிடம் அந்த டைரி எரிக்கப்பட்டு விட்டதா? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குற்றம் ஏதும் இல்லை என்றால், அவர் அவ்வாறு தொடர்ந்து கேட்டிருக்கமாட்டார். நான் இல்லை என்றால் முதலமைச்சர் சிறையில் இருந்திருப்பார்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    அசோக் கெலாட் அரசின் மோசடி செயல்கள் குறித்த ரெட் டைரி குறித்து முக்கியமான தகவலை ராஜேந்திரா குத்தா குறிப்பிட்டுள்ளார். உண்மை தெரிந்தவர்கள் தற்போது இதற்கு பதில் சொல்வார்களா? என பா.ஜனதா செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

    தனது பதவி நீக்கம் குறித்து ராஜேந்திர குத்தா கூறுகையில் ''என்னை ராஜினாமா செய்யும்படி நீங்கள் கேட்டிருந்தால், நான் செய்திருப்பேன். என்னை அழைத்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும்'' என்றார்.

    ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் வெற்றி பெற்ற ஆறு பேர், பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 2021 நவம்பர் மாதம் அதில் ஒருவரான ராஜேந்திர குத்தா மந்திரி சபையில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சச்சின் பைலட்- கெலாட் இடையே மோதல் ஏற்பட்டபோது அசோக் கெலாட்டிற்கு ஆதரவு நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம்.
    • முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை.

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது.

    பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், உண்மையில் ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அம்மாநில மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ராஜேந்திர சிங் ஹதுடா விமர்சித்து பேசினார்.

    தனது சொந்த மாநில அரசையே ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா விமர்சித்து பேசியதை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • கடந்த 54 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 2 லட்சம் குற்றவழக்குகள்
    • 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் வெட்கப்படுகிறார்கள். மனித இனத்திற்கே வெட்கக்கேடானவை. இதுபோன்று ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் என எங்கு நடந்தாலும் அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட நாட்கள் மவுனம் சாதித்த பிரதமர் மோடி, தற்போது குறுகிய நேரம் பேசிய நிலையில், மற்ற மாநிலங்களை குறிப்பிட்டது அரசியல் நாடகம் எனத் தெரிவித்துள்ளது.

    மோடியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே, ராஜஸ்தானில்தான் இந்தியாவில் நடைபெற்ற பலாத்கார சம்பவங்களில் 22 சதவீதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வசுந்தரா ராஜே கூறியதாவது:-

    பெண்கள், குழந்தைகள், தலித்கள் மற்றும் தொழில்அதிபர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குலைந்துள்ளது. ராஜஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான குற்றவழக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 54 மாதங்களில் 10 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 7500-க்கும் அதிகமானனோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பெண்களுக்கு எதிராக மட்டும் 2 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற மொத்த சம்பவங்களில் 22 சதவீதம் ஆகும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவம் நடந்தாலும், அவர்கள் மவுனம் காக்கிறார்கள்.

    மீடியாக்கள் தரவுகளின்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 18 முதல் 19 பலாத்கார சம்பவங்களும், 5 முதல் 7 கொலைகளும் நடைபெற்ற வருகின்றன.

    அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர். அவர்கள் அரசில் இருந்து யாரும் இதுகுறித்து பேசுவதோ, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோ கிடையாது.

    இவ்வாறு வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

    ×