என் மலர்
நீங்கள் தேடியது "INDIA Bloc"
- பீகாரில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
- பீகார் சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு 2 கட்டமாக அடுத்த மாதம் 6 மற்றும் 11-ம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தீவிரமாக பணியாற்றி வருகிறது.
ஆட்சியைக் கைப்பற்றும் வேட்கையில் எதிர்க்கட்சியான தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி-காங்கிரசின் மகாபந்தன் கூட்டணி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதற்கிடையே, பீகார் மாநிலத்தின் சரன் மாவட்டத்தில் உள்ள பர்சா பகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடந்தது. இதில் ஆர்.ஜே.டி. தலைவர் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸ் தலைவர் பவன் கெரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சட்டசபைக்கான தேர்தல் வாக்குறுதிகளை இந்தியா கூட்டணி இன்று வெளியிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்.
ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவசம்
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு அரசு வேலைவாய்ப்பு வழங்குவோம்.
மகளிருக்கு மாதம் தோறும் 2,500 ரூபாய் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளது.
- இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது.
- கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
பீகார் மாநிலத்தில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணிக்கும், லாலு பிரசாத்தின் ஆர்ஜேடி-காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதனிடையே, இந்தியா கூட்டணியில் அதிருப்தியில் இருந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா பீகார் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்தது. கூட்டணியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் ஜே.எம்.எம். இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில், பீகார் தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதல்-மந்திரி வேட்பாளராக தேஜஸ்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பாட்னாவில் நடைபெற்ற இந்தியா கூட்டணி செய்தியாளர்கள் சந்திப்பில் காங்கிரஸ்- ஆர்ஜேடி தரப்பில் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்- ஆர்ஜேடி இடையிலான சர்ச்சைகளுக்கு மத்தியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி முதல்-மந்திரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன்.
- தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியில் ஏற்பட்ட குழப்பம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியும் கடைசி வரை தொகுதி பங்கீடு செய்யவில்லை.
இதனால் குறிப்பிட்ட தொகுதிகளில் அவர்களுக்கு இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை மேலும் விரிசலை ஏற்படுத்தாமல் இருப்பதற்காக ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
சந்திப்புக்குப்பின் அசோக் கெலாட் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
லாலு பிரசாத் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் நல்ல விதமான ஆலோசனையில் ஈடுபட்டேன். தற்போதுள்ள சூழ்நிலை குறித்து மீடியாக்களுக்கு தெரிவிக்க நாளை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்துவோம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக இந்தியா கூடடணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக போட்டியிடும்.
இந்தியா கூட்டணியில் எல்லாம் நன்றாக உள்ளது. மீடியாக்களில் என்னவெல்லாம் சொல்லப்படுகிறதோ, அது சரியானது அல்ல. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் நட்பு ரீதியிலான போட்டி ஐந்து முதல் ஏழு தொகுதிகளில் ஏற்பட்டுள்ளது. இதை வேறுவிதமான எடுத்துக் கொள்ளக் கூடாது.
ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் விரைவில் தேர்தல் பிரசாரத்தை இணைந்து தொடங்குவார்கள். பீகாரில் 243 இடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களிலும் நட்பு ரீதியிலான போட்டி நிகழ்ந்துள்ளது. மகாகூட்டணி உறுதியாக உள்ளது. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக ஒன்றுமையாக போட்டியிடும்.
இவ்வாறு அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
- பீகார் மாநிலத்தில் வாக்காளர்கள் உரிமை என்ற பெயரில் ராகுல் காந்தி பேரணி.
- ராகுல் காந்தி பேரணியில் தேஜஸ்வி யாதவ் கலந்து கொண்டார்.
பீகார் மாநிலத்தில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகாளர்கள் பெயரை நீக்கிவிட்டது.
இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி "வாக்காளர்கள் உரிமை" என்ற பெயரில் பேரணி நடத்தி வருகிறார். இந்த பேரணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவும் கலந்து கொண்டார்.
அப்போது தேஜஸ்வி யாதவ் கூறுகையில் "அடுத்த முறை, நாம் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம். எதிர்க்கட்சிகள் இதற்காக பணியாற்ற வேண்டும்" எனத் தெரிவித்தார். இது, 2029 தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் (இந்தியா கூட்டணி) பிரதமர் வேட்பாளராக பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டுவதாக உள்ளது என்று கூறப்படுகிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளில் ஒன்றான ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ் இவ்வாறு கூறிய நிலையில், மற்ற தலைவர்கள் இதை ஏற்றுக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை.
நடந்து முடிந்த 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளரான மோடியை வீழ்த்துவதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லியார்ஜூன கார்கே செயல்பட்டார். இந்த கூட்டணி பிரதமர் வேட்பாளர் இல்லாமல் தேர்தல் சந்தித்தது.
திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்த விரும்பவில்லை. கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தலாம் என பரிந்துரை செய்தன. இதற்கு முக்கிய காரணம் 2019 தேர்தலில் காங்கிரஸ் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை அடைந்தது. பாஜக கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பிடித்தது.
மம்தா, கெஜ்ரிவால் பரிந்துரையை கார்கே ஏற்கவில்லை. இதனால் வேட்பாளர் இல்லாமல் தேர்தலை சந்தித்தது.
இந்த நிலையில்தான் தேஜஸ்வி யாதவின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் ராகுல் காந்தியை 2029 தேர்தலின்போது பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளுமா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
- துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.
- துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள்.
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த மாதம் 21-ந்தேதி, மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அவர் பதவி விலகியது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.
புதிய துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்கிறது. இதற்கான அறிவிப்பாணை கடந்த 7-ந் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கிடையே, துணை ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்படுகிறார்.
இதுகுறித்து அக்கூட்டணி வட்டாரங்கள் கூறியதாவது:-
துணை ஜனாதிபதி தேர்தல் முடிவு எப்படி வரும் என்றாலும், அந்த தேர்தலை கண்டு பயந்து ஓடாமல் போட்டியிட வேண்டும் என்று 'இந்தியா' கூட்டணி கட்சிகளிடையே பலமான கருத்து நிலவுகிறது. வலிமையான அரசியல் செய்தியை அளிக்க போட்டியிடுவது அவசியம் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக முறையான விவாதம் நடக்கவில்லை. இருப்பினும், திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஒரு தரப்பினர், பா.ஜ.க. தனது வேட்பாளரை அறிவித்த பிறகு, நாம் வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்த பலரும் ஆர்வம் தெரிவித்துள்ளனர். ஒரு சில பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
கருத்தொற்றுமையுடன் வேட்பாளரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எதிர்க்கட்சிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் உள்ளிட்ட விவகாரங்களில், பாராளுமன்றத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக போராடி வருகின்றன. இந்த பின்னணியில், பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
கடந்த 7-ந் தேதி, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இல்லத்தில் 'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதுபோல், மல்லிகார்ஜூன கார்கே இன்று 'இந்தியா' கூட்டணி எம்.பி.க்களுக்கு விருந்து அளிக்கிறார்.
துணை ஜனாதிபதி தேர்தலில், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். தேர்தல் நடத்தும் அதிகாரியாக மாநிலங்களவை செயலாளர் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுவரை 3 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவை முறையாக இல்லாததால் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கலுக்கு 21-ந் தேதி கடைசிநாள். 22-ந்தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற 25-ந் தேதி கடைசிநாள்.
மக்களவை, மாநிலங்களவையின் மொத்த பலம் 781. அவற்றில், துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற குறைந்தபட்சம் 391 எம்.பி.க்களின் வாக்குகளை பெற வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 422 எம்.பி.க்கள் உள்ளனர்.
இது இடைத்தேர்தலாக இருந்தபோதிலும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுபவர் முழு பதவிக்காலமான 5 ஆண்டுகளும் பதவி வகிக்கலாம்.
துணை ஜனாதிபதிக்கு போட்டியிடுபவர் இந்திய குடிமகனாகவும், 35 வயது நிரம்பியவராகவும், மாநிலங்களவை எம்.பி. ஆக தகுதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் ஆதாயம் தரும் பதவி எதையும் வகிக்கக்கூடாது.
- இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம், எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை.
- வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் துறையூரில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவரும், சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான, தொல். திருமாவளவன் திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருச்சியில் 31-ந் தேதி நடைபெற இருந்த மத சார்பின் காப்போம் பேரணி ஜூன் மாதம் 14-ந்தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மட்டுமின்றி, சட்டத்தின் மீதும், மதசார்பின்மை, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைவரும் இந்த பேரணியில் கலந்து கொள்ள வேண்டும். பல்கலைக்கழக விவாகரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் குடியரசு தலைவரை கொண்டு பா.ஜ.க. அரசு 14 கேள்விகளை கேட்க வைத்துள்ளது.
இந்தியா கூட்டணி வலிமையாக இல்லை என ப.சிதம்பரம், எதன் அடிப்படையில் கூறினார் என்று தெரியவில்லை. ஆனால் இந்தியா கூட்டணி நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் சந்தித்து ஒரு வருடம் ஆகிறது. தேவைப்படும் போது ஒன்றிணைந்து செயல்படும்.
தி.மு.க. இந்திய கூட்டணியில் முக்கியமாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி தான் கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது. வேறு எந்த கூட்டணியும் கூட்டணி என்கிற வடிவத்தோடு இல்லை.
அ.தி.மு.க., பா.ஜ.க. இணைந்து தேர்தலை சந்திப்போம் என கூறியுள்ளார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி தொடருமா என்பது தெரியவில்லை.
அவர்கள் கூட்டணியில் அங்கம் வகித்த பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்டவர்கள் கூட்டணி குறித்து எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை.
தற்போது எதிர்க்கட்சிகள் ஐக்கியமாக போதிய முகாந்திரங்கள் இல்லை.
தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வலுவாக உள்ளது. வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் ஆலோசனை கூட்டம்.
- ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.-வை எதிர்கொள்ளும் நோக்கில் எதிர் கட்சிகள் சார்பில் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் 17 கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்தியா கூட்டணியின் தலைவர்கள் மற்றும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் மற்றொரு ஆலோசனை கூட்டம் இந்த மாதத்தின் மூன்றாவது வாரத்தில் நடைபெற இருக்கிறது. இன்றைய ஆலோசனை கூட்டம் மல்லிகார்ஜூன கார்கே இல்லத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி, கே.சி. வேனுகோபால் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர, ஜெ.எம்.எம். கட்சியின் மஹூவா மஜி, ம.தி.மு.க. சார்பில் வைகோ, ஆர்.எஸ்.பி. கட்சியின் என்.கே. பிரேமசந்திரன், சி.பி.ஐ. சார்பில் பினோய் விஸ்வம், ஜெ.டி.யு. சார்பில் லாலன் சிங், எஸ்.பி. கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ் மற்றும் எஸ்.டி. ஹாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இத்துடன் ஆர்.எல்.டி. சார்பில் ஜெயந்த் சவுத்ரி, என்.சி.பி. கட்சியின் வந்தனா சாவன், ஆம் ஆத்மி கட்சி சார்பில் ராகவ் சத்தா, தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, காங்கிரஸ் கட்சியின் சவுரவ் கோகோய், நசீர் ஹூசைன் மற்றும் ராஜானி பாட்டீல், சி.பி.ஐ.எம். சார்பில் எலமரம் கரீம், ஆர்.ஜே.டி. சார்பில் ஃபயாஸ் அகமது, கேரளா காங்கிரஸ் சார்பில் ஜோஸ் கே மணி, என்.சி. சார்பில் ஹஸ்னைன் மசூதி, ஐ.யு.எம்.எல். சார்பில் முகமது பஷீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஐந்து மாநில தேர்தலில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
- யாருக்கு வாக்களித்தோம் என்பதை விவிபாட் எந்திரம் மூலம் வாக்காளர்களுக்கு காட்டப்படும்.
- இந்த ரசீது மக்களிடம் காண்பிக்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும்.
இந்திய கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் 28 கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல்வேறு விசயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் பல்வேறு விசயங்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாடுகளில் ஏராளமான சந்தேகம் இருக்கிறது. இதனால் புதிய நடைமுறையை தேவை. விவி பேட் (வாக்கு அளித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரம்) ரசீது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு பின் சேமிக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வாக்கு எந்திரம் அறிமுகப்படுத்திய காலத்தில் இருந்தே அதன் செயல்பாட்டில் சந்தேகம் இருந்து வருகிறது. வல்லுனர்கள் உள்ளிட்ட பலர் இதுகுறித்து சந்தேகம் எழுப்பியுள்ளனர். நாங்கள் பலமுறை தேர்தல் ஆணையத்திற்கு விரிவாக குறிப்புகளை கொடுத்துள்ளோம். ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்தவொரு பதிலும் அளிக்கவில்லை. பல கேள்விகளை எழுப்பி நாங்கள் தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளோம். ஆனால் இந்தியா கூட்டணி பிரதிநிதிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுகிறது.
எங்களுடைய பரிந்துரை எளிதானது. வாக்காளர்கள் வாக்கு அளிக்கும்போது விவிபாட் எந்திரத்தில் ஒரு ஸ்லிப் தோன்றி யாருக்கு வாக்களிக்கப்பட்டது என்பது காட்டுகிறது. ஆனால் அந்த ஸ்லிப் வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு, பின்னர் ஒரு பாக்சில் சேகரிக்கப்பட வேண்டும். 100 சதவீதம் இந்த ஸ்லிப்களை எண்ண வேண்டும். இது வாக்காளர்களுக்கு தேர்தல் நேர்மையாக நடத்தப்படும் என்ற நம்பிக்கை கொடுக்கும் இவ்வாறு தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒரு தொகுதியின் முடிவு வெளியிடுவதற்கு முன்பாக, ஐந்து வாக்கு மையத்தில் உள்ள விவிபாட் எந்திரத்தில் உள்ள ரசீதுகள் எடுத்து எண்ணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா கூட்டணி எனப் பெயர் வைக்கும்போது நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார்.
- மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்மொழிந்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் பா.ஜனதா இரண்டு முறை தொடர்ச்சியாக மத்தியில் ஆட்சியமைத்துள்ளது. அடுத்த வருடம் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் 3-வது முறையாக மோடி தலைமையில் ஆட்சியை பிடித்துவிட்டால் இந்தியாவில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை ஏற்பட்டு விடும் என முக்கிய எதிர்க்கட்சிகள் தலைவர்களின் கணிப்பாக உள்ளது.
காங்கிரஸ் தற்போது மிகப்பெரிய அளவில் பா.ஜனதாவை எதிர்க்கும் வல்லமையோடு இருப்பதாக தெரியவில்லை. இதனால் 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்க பீகார் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் அச்சாரம்போட்டார்.
இதற்கு லாலு பிரசாத்தின் மகனும், பீகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆதரவு அளித்தார். உத்தர பிரதேசத்தின் அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் ஆதரவு தெரிவிக்க பீகாரில் முதல் கூட்டம் நடைபெற்றது.
பின்னர் 2-வது கூட்டம் கர்நாடகாவில் இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைமை ஏற்றது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு இந்தியா கூட்டணி (INDIA Bloc) எனப் பெயர் வைக்கப்பட்டது. அப்போதுதான் இந்தியா கூட்டணியில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

இந்த கூட்டணிக்கு வித்திட்ட நிதிஷ் குமார், இந்தியா எனப் பெயர் வைக்க தனது எதிர்ப்பை தெரிவித்தார். பின்னர் மகாராஷ்டிரா மாநிலத்தில் 3-வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு இந்தியா கூட்டணியின் வேகம் அதிகமாக இருந்தது. கூட்டணி கட்சிகளுக்கு இடையில் தொகுதிகளை பிரிப்பது மட்டும்தான் மீதமுள்ளது போன்று தோன்றின.
அப்போதுதான் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதனால் இந்தியா கூட்டணி வேலைகளை அப்படியே விட்டுவிட்டு காங்கிரஸ் கட்சி ஐந்து மாநில தேர்தலில் கவனம் செலுத்தியது.
ஐந்து மாநிலங்களில் தெலுங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகியவற்றில் எப்படியும் ஆட்சியை பிடித்து விடலாம் என காங்கிரஸ் நினைத்தது. இதனால் அகிலேஷ் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்ட தலைவர்களிடம் ஆலோசிக்காமலும், கூட்டணி தேவையில்லை எனவும் தனியாக களம் இறங்கியது.
இந்த ஐந்து மாநிலங்களில் ஆதிக்கம் செலுத்தி இந்தியா கூட்டணியில் நாங்கள்தான முதன்மையான கட்சி என்பதை காண்பிக்க திட்டமிட்டிருந்தது. தேர்தல் நடந்து கொண்டிருக்கும்போது நிதிஷ் குமார், ஆகிலேஷ் யாதவ் ஆகியோர் வெளிப்படையாக காங்கிரஸ் கட்சி மீது குற்றம்சுமத்தினர்.
ஏற்கனவே வெவ்வேறு கருத்துகளை கொண்ட கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், இந்த கூட்டணி நீடிக்காது என பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்ய ஆரம்பித்தன.
இந்த நிலையில்தான் தற்போது 4-வது கூட்டணி டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால் உள்ளிட்டவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
இது நிதிஷ் குமாருக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. மேலும், அவரது கட்சியினர் தேர்தலுக்கு பிறகு நிதிஷ் குமார் பிரதமர் வேட்பாளர் போட்டியில் முன்னணி வகிப்பார் என நினைத்திருந்தனர்.

இந்த கூட்டத்தின்போது நிதிஷ் குமார் இந்தியில் பேசியதை திமுக தலைவருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் மனோஜ் ஷா மொழிமாற்றம் செய்து விளக்கியுள்ளார். திமுக தலைவரிடம் இருந்து ஆதாயம் பெற இவ்வாறு செய்வதாக மனோஜ் ஷா மீது கோபம் அடைந்துள்ளார்.
மேலும், கூட்டத்தின் பாதியிலேயே நிதிஷ் குமார் வெளியேறியதாக கூறப்படுகிறது. நான்கு மாநில தேர்தல் முடிவு பா.ஜனதாவுக்கு ஆதாயத்தை கொடுத்துள்ள நிலையில், இந்தியா கூட்டணியில் மாறுப்பட்ட கருத்து நிலவி வருவதால் கூட்டணி முழுமையடைந்து தேர்தலை சந்திக்காது என வெளிப்படையாக எதிர்க்கட்சிகள் பேசத் தொடங்கியுள்ளனர்.
நிதிஷ் குமார் போன்ற தலைவர்கள் வெளியேறினால் அது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் அதிருப்தியில் உள்ள நிதிஷ் குமார் சமாதானம் செய்ய காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதன் முயற்சியாக ராகுல் காந்தி நிதிஷ் குமாரிடம் போன் மூலம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் என்ன பேசினார்கள் என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. ஆனால், ராகுல் காந்தி இணைந்து செயல்படுவோம் என்பது குறித்து பேசி அவரை சமாதானப்படுத்தியிருக்கலாம் எனத் தெரிகிறது.
- பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து கேள்வி பாராளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
- இதனால் இரு அவைகளில் இருந்தும் 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
பாராளுமன்ற மக்களவையில் இருவர் புகுந்து வண்ண புகை குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது மிகப்பெரிய பாராளுமன்ற பாதுகாப்பு குறைபாடு என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமித் ஷா அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் 146 எம்.பி.க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய பாராளுமன்ற வரலாற்றில் இவ்வளவு எண்ணிக்கையில் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
இந்த நடவடிக்கையை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் "ஜனநாயகத்தை பாதுகாப்போம்" என்ற தலைப்பில் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கம்யூனிஸ்ட் தலைவர்கள் டி. ராசா, சீத்தாரம் யெச்சூரி, மல்லிகார்ஜூன கார்கே, திருச்சி சிவா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் "ஜனநாயகத்தை காப்பாற்ற எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்" என்றார்.
#WATCH | At the INDIA bloc protest at Jantar Mantar in Delhi, NCP chief Sharad Pawar says, "We are ready to pay any price to save the democracy..." pic.twitter.com/SPmsuTshcN
— ANI (@ANI) December 22, 2023
உலக ஜனநாயக வரலாற்றில் 146 எம்.பி.க்கள் இதுவரை சஸ்பெண்ட் செய்யப்பட்டது கிடையாது. ஜனநாயகம் அபாயகரமான நிலையில் உள்ளது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டம் மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகத்தான் என சசி தரூர் தெரிவித்தார்.
"உள்துறை அமைச்சரிடம் அறிக்கை கேட்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் எங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காமல் பிடிவாதமாக இருந்தது. அதனால் பாராளுமன்றத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு எதிர்வினையாக 146 எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்துள்ளனர்" என கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
#WATCH | On INDIA bloc protest against mass suspension of MPs, Congress MP Karti Chidambaram says, "It was only natural on the part of the opposition to ask for a statement by the home minister... But the government was adamant in not heeding our request. So there were protests… pic.twitter.com/rWQOL7fOee
— ANI (@ANI) December 22, 2023
இரண்டு இளைஞர்கள் பாராளுமன்ற மக்களவையில் நுழைந்து புகை குண்டுகளை வீசினர். அப்போது பா.ஜனதா எம்.பி.க்கள் ஓட்டம் பிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பாதுகாப்பு குளறுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இந்த வழியில் போராட்டம் நடத்துகிறார்கள் என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை இல்லாதது என்பதுதான்" என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
#WATCH | At INDIA bloc protest at Jantar Mantar, Congress' Rahul Gandhi says, "2-3 youth entered Parliament and released smoke. At this BJP MPs ran away. In this incident, there is the question of security breach, but there is another question of why they protested this way. The… pic.twitter.com/ll5K8Sp3gp
— ANI (@ANI) December 22, 2023
#WATCH | Congress President Mallikarjun Kharge and NCP chief Sharad Pawar and leaders of INDIA parties take part in 'Save Democracy' protest against mass suspension of MPs, at Jantar Mantar in Delhi pic.twitter.com/nxslPhTB1V
— ANI (@ANI) December 22, 2023
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.
லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.
- கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும்,
- தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
2014 மற்றும் 2015-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில் பா.ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. குஜராத் மாநில முதல்வராக இருந்த மோடி, பிரதமாக பதவி ஏற்றார். தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக இருந்து வருகிறார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் இவர்தான் பா.ஜனதா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட இருக்கிறார். 2014-ல் கூட்டணியுடன் ஆட்சி அமைத்த பா.ஜனதா, 2019-ல் தனிப்பெரும்பான்மை பெற்றது.
2024-ல் கூடுதல் இடங்களை பிடித்து வெற்றிபெற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது. அதேவேளையில் மோடி தலைமையிலான மத்திய அரசை இந்த முறை வீழ்த்தவில்லை என்றால், பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்றுவது மிகவும் கடினம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.
இதனால் சுமார் 28 கட்சிகள் சேர்ந்து "இந்தியா கூட்டணி" என்பதை அமைத்துள்ளன. இருந்தபோதிலும் இன்னும் ஒருமித்த கருத்து ஏற்படாமல் கூட்டணிக்குள் தனித்தனியே பிரச்சனை இருந்துதான் வருகிறது.
இதற்கிடையே மக்களவை தேர்தல் குறித்த கருத்து கணிப்புகள் பா.ஜனதாவுக்கு சாதகமாக இருந்து வருகின்றன. தற்போது ஐந்து மாநில தேர்தல் பா.ஜனதாவுக்கு மேலும் பலம் சேர்ப்பதாக உள்ளது.
இந்த நிலையில் ஏபிபி நியூஸ் மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பில் பா.ஜனதா தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணி 295 முதல் 335 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்தியா கூட்டணி 165 முதல் 205 இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் பீகார், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை விட ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இந்தியாவில் இந்தியா கூட்டணிதான் ஆதிக்கம் செலுத்தும். பா.ஜனதாவுக்கு கடும் சவாலாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 18 வயதிற்கு மேற்பட்டோரிடம் மாநில அளவில் கருத்து கேட்கப்பட்டு இந்த கணிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது. கருத்துக் கணிப்பு நடத்தப்பட்ட அனைவரும் வாக்காளர்கள் எனவும், 543 இடங்களிலும் 13,115 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது.
கிழக்கு மண்டலத்தில் உள்ள 153 இடங்களில் 80 முதல் 90 இடங்களை பா.ஜனதா கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், வடக்கு மண்டலத்தில் 180 இடங்களில் 150 முதல் 180 இடங்களை கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும், மேற்கு மண்டலத்தில் 78 இடங்களில் 45 முதல் 55 இடங்களை கைப்பற்றும் எனவும், தெற்கு மண்டலத்தில் 132 இடங்களில் 20 முதல் 30 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேசம் (27-29), சத்தீஸ்கர் (9-11), ராஜஸ்தான் (23-25), உத்தர பிரதேசம் (73-75) பா.ஜனதா கூட்டணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகாவில் கூட பா.ஜனதா கை ஓங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 23 முதல் 25 இடங்களையும், பா.ஜனதா 16 முதல் 18 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடியின் பணி திருப்பிகரமாக இருப்பதாக 47.2 பேர் ஆதரவு அளித்துள்ளனர். 30.2 சதவீதம் பேர் மிகவும் திருப்தி, 21.3 சதவீதம் பேர் திருப்தியில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலானோர் 2024 தேர்தல் வரை இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செல்லாது எனவும் தெரிவித்துள்ளனர்.






