search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jdu"

    • தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அளித்திருந்த ஆதரவை திரும்பப் பெற்றது.
    • தற்போது நிதிஷ் குமார் கட்சி ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது.

    மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக-வுக்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளித்து வந்தது. இந்த நிலையில் நிதிஷ் குமார் கட்சி பாஜக-வுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றது.

    மணிப்பூரில் நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரேயொரு எம்.எல்.ஏ பதவிதான் உள்ளது. ஒரு எம்.எல்.ஏ. ஆதரவை இழந்த போதிலும் பைரேன் சிங் ஆட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை.

    மத்தியிலும், பீகார் மாநிலத்தில் பா.ஜ.க.-வின் முக்கிய கூட்டணி கட்சியாக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் விளங்கி வருகிறது. பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. ஆதரவுடன் நிதிஷ் குமார் ஆட்சி அமைத்துள்ளார். மத்தியில் நிதிஷ் குமார் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.

    மேகாலயா மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் தேசிய மக்கள் கட்சி ஏற்கனவே பாஜக ஆட்சிக்கு அதரவு அளித்திருந்த நிலையில், அதை திரும்பப் பெற்றது. இந்த நிலையில் நிதிஷ் குமார் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

    2022-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் 6 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் ஐந்து எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு தாவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது 60 இடங்களை கொண்ட பாஜக-வுக்கு 37 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். நாகா மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏ.-க்கள், மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ.-க்கள் பாஜக-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர்.

    ஐக்கிய ஜனதா தளம் கடசியின் மணிப்பூர் மாநில தலைவர்தான் இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது. இதனால் அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் நிதிஷ் குமார்.

    • வடகிழக்கு பகுதியியல் இருந்து வாபஸ் பெறுவதற்கான டிரென்ட் தொடங்கியுள்ளது.
    • ஒருநாள் ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது என்ற செய்தி வரும்.

    மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. ஆனால் பா.ஜ.க. வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான உறுதியான முடிவை எடுக்காமல் இருந்து வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசிய மக்கள் கட்சி பா.ஜ.க.-வுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன என காங்கிரஸ் தலைவர் கன்வார் தனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் கன்வார் தனிஷ் அலி கூறியதாவது:-

    கீழக்கே சூரியன் உதிக்கின்றது. பா.ஜ.க.வின் நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. வடகிழக்கு பகுதியியல் இருந்து வாபஸ் பெறுவதற்கான டிரென்ட் தொடங்கியுள்ளது. மணிப்பூர் அரசுக்கு வழங்கி ஆதரவு வழங்கி வந்த அவர்களின் கூட்டணி கட்சி ஒன்று தற்போது வாபஸ் பெற்றுள்ளது.

    ஒருநாள் ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் ஆதரவை திரும்ப பெற்றதாக சொல்வதை நீங்கள் கேட்பீர்கள். மோடி அரசு கவிழும்.

    அவர்கள் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து, அதிகாரத்திற்கு வந்துள்ளனர். ஆனால் இந்த நாள் வரை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மணிப்பூர் நிலை ஒவ்வொருவரின் முன்பும் இருக்கிறது. அவர்கள் எதுவும் செய்யவில்லை 'baanto' and 'kaato' என்ற அரசியலோடு அவர்கள் பிசியாக உள்ளனர்.

    ஒருநாள் காலை நீங்கள் எழுந்திருக்கும்போது, யாருடைய ஊன்றுகோளில் பா.ஜ.க. அரசு நடந்து கொண்டிருக்கிறதோ, அந்த ஐக்கிய ஜனதா தளம் அல்லது தெலுங்குதேசம் பா.ஜ.க.வுக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளது என்ற செய்தியை கேட்பீர்கள்.

    இவ்வாறு கன்வார் தனிஷ் அலி தெரிவித்துள்ளார்.

    • பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து கடும் விவாதம் நடந்து வருகிறது.
    • பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து சமீபத்தில் விலகியவர் கே.சி.தியாகி. ஆனாலும் கட்சியில் நீடிப்பேன் என அவர் கடந்த வாரம் தெரிவித்தார்.

    இதற்கிடையே, கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து நாட்டில் கடுமையான விவாதம் நடந்து வருகிறது.

    இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கே.சி. தியாகி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பலாத்கார வழக்குகளில் ஒரு மாதத்துக்குள் விரைந்து நீதி வழங்கப்பட வேண்டும்.

    குற்றவாளிகளின் ஆண்மை நீக்கப்பட வேண்டும். கற்பழிப்பாளர்களின் வீரியம் ஒழிக்கப்பட வேண்டும்.

    பெண்களின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதை விட பெரிய கொடுமை வேறு எதுவும் இருக்கமுடியாது.

    கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இதுபோன்ற தீவிரமான தண்டனை, அவர் தனது கடைசி மூச்சு வரை தனது குற்றத்திற்காக அவதிப்படுவதை உறுதி செய்யும். மேலும், இதுபோன்ற குற்றத்தை யாரும் செய்யத் துணிய மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

    • மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்- ஜேடியு தலைவர்.
    • அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது- தெலுங்கு தேசம் எம்.பி.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள முக்கியமான இரு கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார்), தெலுங்குதேசம் கட்சி (சந்திரபாபு நாயுடு) ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

    வக்பு வாரிய செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதுதான் இதன் நோக்கம். மசூதிகளை நடத்துவதில் தலையீட முயற்சி இல்லை எனத் தெரிவித்துள்ளன.

    மக்களவையில் ஆளுங்கட்சியால் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ரஞ்சன் சிங், இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என உறுதியளித்தார்.

    மேலும், "வக்பு வாரிய சட்டத் திருத்தம் முஸ்லீம்களுக்கு எதிரானது என பல உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது?. இங்கே அயோத்தியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலையும் ஸ்தாபனத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதா?. இது மசூதிகளில் தலையிடும் முயற்சி அல்ல.

    வக்ஃப் வாரியம் எப்படி உருவாக்கப்பட்டது? அது ஒரு சட்டத்தின் மூலம். சட்டத்தின் மூலம் நிறுவப்படும் எந்த நிறுவனமும் எதேச்சதிகாரமாகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. இதில் வகுப்புவாத பிளவு இல்லை. எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றனர். மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்" என்றார்.

    தெலுங்குதேசம் கட்சி எம்.பி. ஜி.எம். ஹரிஷ் பாலயோகி "நன்கொடையாளர்களின் நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். நோக்கமும் அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

    அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது. அதற்காக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். நாட்டின் ஏழை முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு உதவும் என்றும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

    விரிவான ஆலோசனைகள் தேவைப்பட்டால், அதைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.

    வக்பு வாரியம்

    நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துக்கள் 'வக்பு சொத்துக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த சொத்துக்களை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.

    நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 8 லட்சத்து 72 ஆயி ரத்து 292 சொத்துகள் இருக்கின்றன. அந்த சொத்துக்களை வக்பு வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வக்பு வாரியத்தின் கீழ் மாவட்ட வக்பு குழுக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக வக்பு சொத்துக்கள் சுமார் 200 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வக்பு வாரியங்களை கண்காணிக்க, வக்பு சட்டத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது.

    மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில், வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுனர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

    மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய மந்திரி, 3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டு), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர்.

    இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பீகார் மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் நிதிஷ் குமார்தான் காரணம் என்றார்.

    புதுடெல்லி:

    ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செயற்குழுக் கூட்டம் புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. பீகார் முதல் மந்திரியும், கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், மூத்த தலைவர்கள் லாலன் சிங், அசோக் சவுத்ரி, தேவேஷ் சந்திர தாகூர் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செயல் தலைவராக சஞ்சய் ஜா நியமனம் செய்யப்பட்டார். சஞ்சய் ஜா தற்போது மாநிலங்களவை ஐக்கிய ஜனதா தள குழு தலைவராக உள்ளார்.

    இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ஜா, கட்சியின் செயல் தலைவராக நியமித்ததன் மூலம் கட்சித் தலைவர் நிதிஷ் குமார் என்னிடம் மிகப் பெரிய பொறுப்பை ஒப்படைத்துள்ளார். நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி கட்சியான பா.ஜ.க.வுடன் இணைந்து மேலும் ஒருங்கிணைப்புடன் செயல்பட முயல்வோம். நிதிஷ் குமார் பீகாரில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார். பீகார் மாநிலம் அடைந்துள்ள அனைத்து நன்மைகளுக்கும் அவர்தான் காரணம்.

    வரும் 2025-ல் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். 19 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தபோதிலும் நிதிஷ் குமாருக்கு எதிராக மாநிலத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் அதை உணர்த்தி உள்ளன என தெரிவித்தார்.

    இந்நிலையில், பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதித்தொகுப்பை மத்திய அரசு வழங்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு அளிப்பதால் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    • ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டார்.
    • 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி.யாகியுள்ளார்.

    மக்களவை தேர்தலில் பீகார் மாநிலத்தில் பாஜக- நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.

    சித்தாமர்ஹி என்ற தொகுதியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிட்ட தேவேஷ் சந்திர தாகூர் வெற்றி பெற்றார். இவர் 51 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர் அர்ஜூன் ராய் வீழ்த்தியிருந்தார்.

    இந்த நிலையில் முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயத்தினரின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்கு பணி செய்ய மாட்டேன் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    தேவேஷ் சந்திர தாகூர் பேசியதாக வெளியான வீடியோவில் "முஸ்லிம் மற்றும் யாதவ் சமுதாயானத்தினர் இங்கு வர விரும்பினால் அவர்களால் வர முடியும். வந்து டீ குடித்து, ஸ்நாக்ஸ் சாப்பிடலாம். பின்னர் சென்று விடலாம். ஆனால் எந்வொரு உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஐக்கிய ஜனதா தளத்தின் சின்னமான அம்புவில் (arrow) நரேந்திர மோடி படத்தை பார்க்கும்போது, நான் ஏன் அரிக்கேன் லைட் (ராஷ்டிரிய ஜனதா தளம் சின்னம்) மற்றும் லாலு யாதவின் முகத்தை உங்களிடம் பார்க்கக் கூடாது?" என்பது போல் பேசியுள்ளார்.

    மேலும் தன்னிடம் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் முன்னதாக உதவி கேட்டு வந்தபோது, நடந்த விசயத்தை அவர் பகிர்ந்து கொண்டார். இது தொடர்பாக கூறுகையில் "ஒரு வேலைக்காக முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நபர் ஒருவர் என்னிடம் வந்தார். முதன்முறையாக என்னிடம் வந்துள்ளதால் நான் அதிகமாக பேசமாட்டேன் என்று அவரிடம் தெளிவாக கூறினேன். மற்றபடி நான் எளிதில் விடமாட்டேன்.

    நான் அவரிடம் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வாக்கு அளித்தீர்களா? என்று கேட்டேன். அவரும் ஆமாம் என்று ஒப்புக்கொண்டார். அவரிடம் டீ அருந்திவிட்டு கிளம்பும்படி சொல்லிவிட்டேன். உங்களுடைய வேலையை நான் செய்யமாட்டேன்" இவ்வாறு அவர் தெரிவித்ததாக கூறினார்.

    • சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் கட்சி முக்கிய துறைகளை கேட்பதாக தகவல்.
    • சபாநாயகர் மற்றும் முக்கிய இலாகாக்களை விட்டுக்கொடுக்க பாஜக விரும்பாது.

    மக்களவை தேர்தல் வாக்குகள் கடந்த 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) எண்ணப்பட்டன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியது போல பாஜக-வுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கூட்டணியாக 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தனிக்கட்சியாக 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.

    ஆட்சி அமைப்பதற்கு 272 இடங்கள் தேவை. இதனால் 32 இடங்களுக்கு கூட்டணி கட்சிகளை நம்பி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தெலுங்குதேசம் (16), ஐக்கிய ஜனதா தளம் (12), ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (7), சிராக் பஸ்வான் கட்சி (5) முக்கிய பங்கு வகிக்கின்றன.

    இந்த நான்கு கட்சிகளும் 40 இடங்களை பெற்றுள்ளது. 40 இடங்களை தவிர்த்தால் பாஜக கூட்டணியில் 253 இடங்கள்தான் இருக்கும் ஆட்சி அமைக்க முடியாது. கடந்த இரண்டு முறை தனி மெஜாரிட்டி பெற்றதால் பாஜக கொடுத்த இலாகாக்களை கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொண்டன.

    தற்போது இந்த நான்கு கட்சிகளில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கிங் மேக்கராக திகழ்கின்றன. இருவரையும் பகைத்தால் பாஜக ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதனால் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை இரண்டு கட்சிகளும் குறிவைத்துள்ளன. நிதி, ரெயில்வே, உள்துறை, வெளியுறவுத்துறை என தாங்கள் விரும்பிய இலாகாக்களை பெற விரும்புகின்றன. அதுவும் கேபினட் அந்தஸ்து இலாகாக்களை கேட்கிறது. அதனுடன் சபாநாயகர் பதவி மேலும் கண் வைத்துள்ளன.

    ஆனால் 2040 ஆண்டில் வளர்ச்சி இந்தியா என்பதை நோக்கி நகர பாஜக திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த துறைகளை கொடுத்தால் சரிபட்டடு வராது என நினைக்கிறது.

    சபாநாயகர் பதவி

    இரு கட்சிகளும் சபாநாயகர் பதவிக்கு அடி போடுகின்றன. தற்போது மெஜாரிட்டி இல்லாத நிலையில் சபாநாயகர் பதவியை கூட்டணி கட்சிக்கு வழங்கினால் அது பேராபத்தாக முடியும் என நினைக்கிறது. இதனால் சபாநாயகர் பதவி கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும்.

    போக்குவரத்து, நெடுஞ்சாலை அல்லது நலத்திட்டம் தொடர்பான இலாகாக்களை கொடுத்தால் கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என நினைக்கிறது. அதனால் இதுபோன்ற இலாக்களையும் கொடுக்க பாஜகவுக்கு விருப்பம் இல்லை.

    தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி ஏழை, பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய நான்கும்தான் ஜாதிகள் என குறிப்பிட்டார். இதனால் இது தொடர்பான துறைகளை கையில் வைத்துக் கொள்ள முயற்சிக்கும்.

    நிதின் கட்கரி வசம் உள்ள சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை மூலமாக நாட்டின் பல்வேறு இடங்களில் சாலை கட்டமைப்புகளை வலுப்படுத்தியுள்ளது. இதனால் கிடைத்த பெருமையை கூட்டணி கட்சிக்கு விட்டுக்கொடுக்க விரும்பாது.

    ரெயில்வே துறை

    ஐக்கிய ஜனதா தளம் ரெயில்வே துறையை கேட்கிறது. வந்தே பாரத், புல்லெட் ரெயில் போன்ற திட்டத்தை பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதையும் கூட்டணியிடம் கொடுத்தால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என நினைக்கிறது.

    கடந்த இரண்டு முறையும் கூட்டணி கட்சிகளுக்கு உணவுத்துறை, கனரக தொழில்துறை போன்ற துறைகளை ஒதுக்கியது. ஆனால் தற்போது கூட்டணி ஆட்சி என்பதால் சில துறைகளை கொடுக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

    இருந்த போதிலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பஞ்சாயத்து, கிராமப்புற வளர்ச்சி போன்ற துறைகளை அளிக்க முன்வரலாம்.

    இணை அமைச்சர் பதவிகள்

    தெலுங்குதேசம் கட்சிக்கு விமானத்துறை, ஸ்டீல் துறை போன்ற இலாகாக்கள் வழங்க முன்வரலாம். அதேவேளையில் நிதி மற்றும் பாதுகாப்பு துறையில் இணை அமைச்சர் பதவியை பெற கூட்டணி கட்சிகள் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

    சுற்றுலா, திறன் வளர்ச்சி, அறிவியல் மற்றும் புவியியல் துறைகளை ஒதுக்க பாஜக முன்வரும். இதனால் இலாகாக்கள் தொடர்பான விசயத்தில் ஒருமித்த கருத்து நிலவுவதில் இன்னும் சஸ்பென்ஸ் நீடித்து வருகிறது.

    • சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கிங் மேக்கராக உள்ளனர்.
    • இருவரும் அவரவர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து பெற முயற்சிப்பார்கள்.

    மக்களவை தேர்தல் முடிவு நேற்று வெளியானது. பா.ஜனதா தனித்து பெரும்பான்மை பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தமாக 296 இடங்களைத்தான் பிடித்துள்ளார்.

    பாஜக-வுக்கு 240 இடங்கள்தான் கிடைத்துள்ளது. ஆட்சி அமைக்க இன்னும் 32 இடங்கள் தேவை. என்டிஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு (16), நிதிஷ் குமார் (12) ஆகியோரின் உதவி பிரதமர் மோடிக்கு தேவைப்படுகிறது.

    இதனால் இருவரும் கிங் மேக்கர்களாக திகழ்கிறார்கள். இருவரும் பிரதமர் மோடி வீட்டில் இன்று நடைபெற்ற என்டிஏ தலைவர்கள் கூட்டணியில் கலந்து கொண்டார்கள்.

    மோடி மீண்டும் பிரதமராக 3-வது முறையாக பதவி ஏற்க இருவரும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பார்கள் எனக் கூறப்படுகிறது. அதேவேளையில் மந்திரி சபையில் முக்கியமான இலாகாக்களை பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

    நிதிஷ் குமாரின் எதிர்பார்ப்பு

    நிதிஷ் குமார் கட்சியின் மூத்த தலைவரான கேசி தியாகி, மந்திரி சபையை நீட்டிக்க விரும்பி அழைப்பு விடுத்தால் அது தொடர்பாக பரிசீலனை செய்வோம். புதிதாக அமையும் அரசாங்கத்திடம் நாங்கள் எதிர்பார்ப்பது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து, நாடு தழுவிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவைதான். இருந்தபோதிலும் எந்த கண்டிசனும் போடமாட்டோம். நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம். பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதற்கு முயற்சி இருக்கும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    பாஜக நாடு தழுவிய சாதி வாரிய கணக்கெடுப்பை விரும்பவில்லை. இந்தியா கூட்டணியின் முக்கிய வாக்குறுதியில் இது ஒன்று.

    பீகாரில் வேலையாப்பின்மை மிகப்பெரியதாக உள்ளது. இதனால் சிறப்பு அந்தஸ்துதான் ஒரு வழி என நிதிஷ் குமார் நினைக்கிறார். இதனால் இந்த இரண்டையும் பா.ஜனதாவுடன் வலியுறுத்தும்.

    சந்திரபாபு நாயுடுவின் எதிர்பார்ப்பு

    சந்திர பாபு நாயுடு கட்சி சார்பில் மத்திய அமைச்சரவையில் அதிகமான இடங்களை கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து என்பது பிரதான கோரிக்கையாக இருக்கும். இந்த விவகாரத்தில்தான் கடந்த 2016-ல் சந்திரபாபு நாயுடன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆந்திர மாநிலத்தை மீண்டும் சிறந்த மாநிலமாக கொண்டு வருவேன். மாநிலத்தின் தலைநகரை சிறந்த நகராக உருவாக்குவேன் என்பதை வாக்குறுதியாக அளித்து பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளார். தற்போது ஐதராபாத் ஆந்திராவின் மாநிலம் அல்ல. தெலுங்கானா மாநிலமாகிவிட்டது. இதனால் புதிய தலைநகரை உருவாக்க வேண்டும். இதனால் சிறப்பு அந்தஸ்து முக்கியமானதாக தெலுங்குதேசம் கருதும்.

    இதனால் நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம். நாட்டின் வளர்ச்சியல் அரசியல் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால் தற்போது இருவரின் உதவி இருந்தால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்பதால் என்ன விலை கொடுக்கப் போகிறதோ? தெரியவில்லை.

    தற்போது என்டிஏ-வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் கிங் மேங்கராக இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது எந்த வாய்ப்பையும் நிராகரிக்க முடியாது என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    • யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
    • விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்தியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டசபைக்கு வந்தார். அப்போது லாலுவும், நிதிஷ் குமாரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்.

    அப்போது ஆர்.ஜே.டி.- ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமையுமா? என்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு லாலு பதில் அளிக்கும்போது, "அவர் (நிதிஷ்குமார்) திரும்பி வரட்டும். பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும்" என்றார்.

    இதற்கிடையே லாலுவின் கோரிக்கையை நிதிஷ்குமார் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    இந்தியா கூட்டணியில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். வேறு ஏதோ மனதில் இருந்ததால் கூட்டணிக்கு இந்த பெயரை கூட நான் ஆதரிக்கவில்லை. கூட்டணி முறிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது பீகார் மக்களுக்காக உழைக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறி உள்ளார்.

    • நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பாஜக 78, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
    • நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை.

    பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதிஷ் குமார் தலைமையில் மெகா கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து அவர் ஆட்சி நடத்தி வந்தார். துணை முதல்-மந்திரியாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி இருந்தார்.

    இந்த நிலையில் சமீபத்தில் நிதிஷ் குமார் ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் அமைந்திருந்த மெகா கூட்டணியை முறித்துக் கொண்டார். அங்கிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார்.

    மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நிதிஷ்குமார் சட்டசபையில் தனக்கு இருக்கும் பெரும்பான்மை பலத்தை நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பீகார் சட்டசபையில் நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெற உள்ளது.

    பீகார் சட்டசபையில் மொத்தம் 243 எம்.எல். ஏ.க்கள் உள்ளனர். தனித்து ஆட்சி அமைக்க 122 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. தற்போதைய நிலையில் 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.

    நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணியில் பா.ஜனதாவுக்கு 78 எம்.எல்.ஏ.க்கள், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 45 எம்.எல்.ஏ.க்கள், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிக்கு 4 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 127 எம்.எல்.ஏ.க்கள் பலம் உள்ளது. பெரும்பான்மை பலத்தை விட இந்த கூட்டணிக்கு கூடுதலாக 6 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள்.

    எதிர்க்கட்சிகள் வரிசையில் உள்ள லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 77 எம்.எல்.ஏ.க்கள், லெனின் கம்யூனிஸ்டுக்கு 12 எம்.எல்.ஏ.க்கள், இந்திய கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல். ஏ.க்கள், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கு 2 எம்.எல்.ஏ.க்கள் என 93 எம்.எல்.ஏ.க்கள் பலமே உள்ளது. இந்த நிலையில் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் ஆளும் கட்சி வரிசையில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியானது.

    இதையடுத்து பா.ஜனதா கட்சி தனது எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் பாதுகாப்பான ஒரு இடத்தில் தங்க வைத்துள்ளது. அதுபோல நிதிஷ்குமாரும் தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை கண்காணித்து வருகிறார். அவர்களும் தனி இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் நேற்று மதியம் நடந்த விருந்துக்கு வரவில்லை. அவர்கள் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகாரில் குதிரை பேரம் நடப்பதாக குற்றச் சாட்டுகள் உள்ளன. இதனைத் தொடர்ந்து ஓட்டெடுப்பின்போது அனைத்து எம்.எல்.ஏ.-க்களும் சட்டமன்றத்தில் இருக்க வேண்டும்.

    நிதிஷ் குமார் தொடர்பான விசயங்களுக்க ஆதரவு அளிக்க வேண்டும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி செயல்பட்டார் எம்.எல்.ஏ. பதவியை இழக்க நேரிடும் என கட்சியின் மூத்த தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் ஐந்து பேரில் இருவரும் நாங்கள் பீகார் மாநிலத்திற்கு வெளியில் இருப்பதாகவும், ஒருவர் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக தேஜஸ்வி கூறுகையில், "நாங்கள் விளையாட்டை இன்னும் தொடங்கவில்லை. ஆனால் விளையாட்டை நாங்கள்தான் முடித்து வைப்போம்" என்றார். இதனால் அவர் நாளைய நம்பிக்கை ஓட்டெடுப்பின்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் பா.ஜ.க. கூட்டணியில் உள்ள இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியின் தலைவர் நிஜன்ராம் மாஞ்சியை இந்திய கம்யூனிஸ்டு தலைவர் ரகசியமாக சந்தித்து பேசினார். இதனால் நிதிஷ் குமாருக்கு பெரும்பான்மை பலம் கிடைக்குமா? என்பதில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆனால் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவின் 4 எம்.எல்.ஏ.க்களும் நிதிஷ் குமாருக்கு ஆதரவாகதான் வாக்களிப்பார்கள் என்று மாஞ்சி உறுதி அளித்துள்ளார். என்றாலும் பீகார் அரசியலில் கடைசி நிமிட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    நாளை காலை பீகார் சட்டசபையில் ஓட்டெடுப்பு நடக்கும்போது நிதிஷ்குமாருக்கு இருக்கும் பெரும்பான்மை பலம் எவ்வளவு என்பது தெரிந்து விடும்.

    • நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உரிமைக்கோரினால் தடுக்க லாலு திட்டம்.
    • நிதிஷ் குமார், லாலு கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

    நிதிஷ் குமார் எப்போது வேண்டுமென்றாலும் பா.ஜனதாவுடன் கைக்கோர்க்க வாய்ப்புள்ளது. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 9-வது முறையாக மீண்டும் முதல்வராக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜனதா கட்சியின் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.

    கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுங்கள் என நிதிஷ்குமாருக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒருவேளை லாலு கட்சி உடனான கூட்டணி முடிந்தது. பா.ஜனதா உடன் இணைந்து ஆட்சியமைக்க போகிறேன் என நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து லாலு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    ஒருவேளை நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றாலும், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எண்ணிக்கை தேவை.

    பா.ஜனதா மற்றும் நிதிஷ் குமார் கட்சி உறுப்பினர்கள் முறையே 78 மற்றும் 45 உள்ளனர். மொத்தம் 123 எண்ணிக்கை உள்ளது. ஒரு எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஜித்தன் ராம் மஞ்ச் ஆதரித்தால் எண்ணிக்கை 127 ஆக அதிரிக்கும்.

    தற்போது சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 79 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 இடங்கள் உள்ளன. காங்கிரஸ்க்கு 19 இடங்கள் உள்ளன. சிபிஐ-எம்எல்-12, சிபிஐ-2, சிபிஐ-எம்- 2, ஒரு சுயேட்சை என்ற அளவில் உறுப்பினர்கள் உள்ளனர். ஜித்தன் ராம் மஞ்சிக்கு 4 இடங்களும் உள்ளன.

    ஒருவேளை நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்தால், தனிப்பட்ட எண்ணிக்கையில் லாலு கட்சிதான் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்களைத்தான் முதலில் ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.

    அப்படி அழைத்தால் பா.ஜனதாவுடன் இணைந்து நிதிஷ் குமார் கட்சி இணைந்து எதிர்த்து வாக்களிக்கும். இதனால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளவிடாமல் பார்த்துக் கொண்டால் லாலு கட்சியின் வாக்கெடுப்பில் தப்பித்துக் கொள்ளும்.

    மாறாக நிதிஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தால், அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அப்போது அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து லாலு கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தால் போதுமானது. இதற்கான வேலைகளை லாலு பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அதேவேளையில் நிதிஷ் குமார் கட்சியும், பா.ஜனதாவும் குதிரை பேரத்தில் ஈடுபடும். இதனால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.

    • குடும்ப அரசியல் குறித்து நிதிஷ் குமார் பேசியதால் லாலு மகள் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
    • இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்.

    பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    இன்று காலை தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.

    இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைத்தள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

    நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் 22 ஐ.ஏ.எஸ்., 79 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    அதேவேளையில் சட்டமன்றம் கலைக்கப்படாது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறாது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் எந்த கட்சிகளும் பெரும்பாலும் அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.

    நேற்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்து சலசலப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

    அதேவேளையில், நிதிஷ் குமார் அவரின் நிலை என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும். அவர் இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது வெளியேறுகிறாரா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என லாலு கட்சியை சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.

    ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ஷிவானந்த் திவாரி, நிதிஷ் குமார் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின் வாங்க வேண்டும். நேற்று நிதிஷ் குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதே தவறை மீண்டும் நிதிஷ் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை" என்றார்.

    ×