என் மலர்
நீங்கள் தேடியது "ஐக்கிய ஜனதா தளம்"
- நிதிஷ் குமார் 20-ந்தேதி முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.
- இலாகா தொடர்பாக பாஜக- ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 243 இடங்களில் 202 இடங்களை கைப்பற்றியது. பாஜக 89 இடங்களிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 85 இடங்களிலும் வெற்றி பெற்றன.
நிதிஷ் குமார்தான் முதலமைச்சர் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது. இதனால் 20-ந்தேதி அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பாஜக-வுக்கு துணை முதல்வர் பதவி வழங்க நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் அமைச்சராக தேர்வு செய்யக் கூடியவர்களும் பதவி ஏற்க உள்ளனர்.
யார் யாருக்கு எந்த இலாகா என்பதை முடிவு செய்ய பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இரு கட்சிகளுக்கும் இடையில் பெரும்பாலான இலாகாக்களை பிரிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், உள்துறை அமைச்சர் இலாகாவை பாஜக-வுக்கு வழங்க ஐக்கிய ஜனதா தளம் விரும்பவில்லை. அதேபோல், சபாநாயகர் பதவியை ஐக்கிய ஜனதா தளத்திற்கு வழங்க பாஜக விரும்பவில்லை எனத் தெரிகிறது.
இரண்டு கட்சிகளும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. மற்ற கட்சிகள் ஆதரவுடன்தான் செயல்பட வேண்டிய நிலை. ஒருவேளை மோதல் ஏற்பட்டால் ஆட்சி மற்றும் பெரும்பான்மையை தக்கவைக்க இரண்டு பதவிகளும்தான் முக்கியமானவை. இதனால் இந்த பதவிகளை தக்கவைக்க இரண்டு கட்சிகளும் தீவிரம் காட்டு வருகின்றனர்.
- பீகார் சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
- தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்படுகின்றன.
பாட்னா:
பீகார் மாநில சட்டசபைக்கு நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 121 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 14-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
ஜன் சுராஜ் கட்சியைச் சேர்ந்த பிரியதர்ஷி பியூஷ் மொகமா தொகுதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவருக்காக வாக்குகள் சேகரிக்க பிரசாரத்தில் ஈடுபடும் பணியில் துலார்சந்த் யாதவ் (75) ஈடுபட்டார். இவர் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தொண்டர் மற்றும் உள்ளூர் தலைவராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில், அரசியல் குழுக்கள் இடையே நடந்த மோதலில் துலார்சந்த் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.
விசாரணையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் வேட்பாளர் ஆனந்த் குமார் சிங் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். மேலும், அவருடைய உதவியாளர்கள் மணிகாந்த் தாக்குர் மற்றும் ரஞ்சித் ராம் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய பாட்னா போலீஸ் அதிகாரி கார்த்திகேய சர்மா, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.
- வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் 2 பேர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேறியது.
இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.க்கள் முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.
இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பிய அவர்கள், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தனர்.
- பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம்.
- தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.
மண்டியா :
மண்டியாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் மக்கள் குரல் பொதுக்கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது, மண்டியாவில் உள்ள 7 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரசை வெற்றி பெற வைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் ஜனதா தளம் (எஸ்) கட்சியையே வெற்றி பெற வைத்தீர்கள். சூரியன் கிழக்கில் உதிப்பது எவ்வளவு உண்மையோ அதே போல் கர்நாடகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வருவதும் உண்மையே. மக்களின் மனநிலையை அறிந்து நான் இதை கூறுகிறேன்.
காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்போது, அதில் உங்களின் பங்கும் இருக்க வேண்டும் இல்லையா?. அதனால் இந்த மாவட்டத்தில் இருந்து குறைந்தது இடங்களில் ஆவது காங்கிரசை வெற்றி பெற வையுங்கள். மண்டியா விவசாயிகளுடன் நாங்கள் உள்ளோம். உங்களுக்காக நாங்கள் பணியாற்றுவோம். தயவு செய்து நீங்கள் எங்களை நம்பி வாக்களிக்க வேண்டும்.
பா.ஜனதா, ஜனதா தளம் (எஸ்) கட்சிகளை நம்ப வேண்டாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு இடையே தான் போட்டி. 123 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று ஜனதா தளம் (எஸ்) சொல்கிறது. நான் அந்த கட்சியில் இருந்தபேது அந்த எண்ணிக்கையை தொட முடியவில்லை. 59 தொகுதிகளில் தான் வெற்றி பெற்றோம். அதனால் அந்த கட்சி ஆட்சிக்கு வராது. அதற்கான வாய்ப்பும் இல்லை.
இந்த முறை அந்த கட்சி அதிகபட்சமாக 20 தொகுதிகளில் வெற்றி பெறலாம். இதுவே அதிகம். இதை வைத்து கொண்டு அக்கட்சி ஆட்சிக்கு வர முடியுமா?. மதவாத கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காகவே ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு நாங்கள் கடந்த முறை வாய்ப்பு அளித்தோம். குமாரசாமியை முதல்-மந்திரி ஆக்கினோம். ஆனால் எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கையை தக்க வைத்து கொள்ளாமல், அவர் வெஸ்ட் என்ட் ஓட்டலில் இருந்தபடி ஆட்சி செய்தார். அதனால் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு சென்றனர். கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.
ஆனால் கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததற்கு நான் தான் காரணம் என்று குமாரசாமி அடிக்கடி சொல்கிறார். அப்படி என்றால் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் விலகினார்களே, அதற்கு யார் பொறுப்பு?. நாங்கள் இலவச மின்சாரம், பெண்களுக்கு ரூ.2,000 வழங்குவதாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். இதை கண்டு பா.ஜனதா மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் பயந்துபோய் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மண்டியா சர்க்கரை ஆலையை நவீனமயம் ஆக்குவோம். அதை அரசே தொடர்ந்து நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
- பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?
- பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது
பா.ஜனதா தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால், ''பீகாரில் சட்டம்- ஒழுங்கு பாகிஸ்தானை விட மோசமாகியுள்ளது'' எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் நீரஜ் குமார் கூறுகையில் ''பா.ஜனதா தலைவர் பீகாரின் சட்டம்- ஒழுங்கு சூழ்நிலையை எப்படி பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் ஒப்பிட முடியும்?. பாகிஸ்தானை விட சட்டம் ஒழுங்கு பீகாரில் மோசமாக இருப்பதாக அவர்கள் எப்படி சொல்ல முடியும்?. அவர்கள் பாகிஸ்தானின் ஏஜென்டா?. பல்வேறு காரணிகளில் இந்தியா பாகிஸ்தானை விட பின்னால் உள்ளது என்று நான் சொல்லுவேன்.
ஜனநாயக பூமியான பீகாரை, ஜனநாயகம் இல்லாத பாகிஸ்தானுடன் ஒப்பிட்டு, அவமதித்து விட்டார்கள். இந்தியாவின் வளர்ச்சி குறித்து இந்திய தரவரிசை அமைப்புகள் பாராட்டியதை பிரதமர் மோடி சுதந்திர தின விழாவின் போது சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால், பா.ஜனதா தலைவர்களுக்கு நான் கண்ணாடியை காட்டுகிறேன்.
பத்திரிகை சுதந்திரம், உலக மகிழ்ச்சி குறியீடு, உலகளாவிய பசி குறியீடு, உலகளாவிய போட்டித்திறன் குறியீடு போன்றவற்றில் பாகிஸ்தானை விட இந்தியா மோசமான நிலையில் உள்ளது. மேலும், நீங்கள் சட்டம்- ஒழுங்கு குறித்து பேசுகிறீர்கள். 2021 கால்அப் (Gallup) குறியீட்டின்படி, பாகிஸ்தானை விட இந்தியாவின் நிலை மோசமாக இருந்தது'' என்றார்.
- இந்தியா கூட்டணியின் நான்காவது சந்திப்பு புது டெல்லியில் நடைபெற்றது
- கடந்த முறை டீ, பிஸ்கட், சமோசா வழங்கினர் என்றார் பின்டு
அடுத்த வருடம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய ஆளும் பா.ஜ.க.வை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் காங்கிரஸ் உள்ளிட்ட பல மாநிலங்களின் முக்கிய கட்சிகளை உள்ளடக்கிய 25 கட்சிகளுக்கும் மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு கூட்டணியை உருவாக்கினர்.
இக்கூட்டணியின் முதல் சந்திப்பு பாட்னாவிலும், இரண்டாவது சந்திப்பு பெங்களூரூவிலும், 3-வது சந்திப்பு மும்பையிலும் நடந்தது.
நான்காவது சந்திப்பு இரு தினங்களுக்கு முன் புது டெல்லியில் நடைபெற்றது.
இச்சந்திப்பில், தேர்தலில் கூட்டணி கட்சிகளின் இட பங்கீடு, பேரணிகள், பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட பல முக்கிய விஷயங்கள் விவாதிப்பதாக இருந்தது.
பிரதமர் வேட்பாளர் பெயரில் இந்த சந்திப்பில் எந்த ஒருமித்த கருத்தும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், இச்சந்திப்பில் பங்கேற்ற பீகார் மாநில ஐக்கிய ஜனதா தள எம்.பி. சுனில் குமார் பின்டு இந்த கூட்டம் குறித்து தெரிவித்ததாவது:
பல பெரிய தலைவர்கள் பங்கேற்றனர். சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் நிதி நெருக்கடியில் இருப்பதனால் மக்களிடம் நன்கொடை கேட்டது.
கடந்த சில சந்திப்புகளில் டீ, பிஸ்கட், சமோசா அளித்து உபசரித்தனர்.
ஆனால், இந்த முறை சமோசா இல்லை; டீ, பிஸ்கட் மட்டும்தான்.
இடப்பங்கீடு, பிரதமர் வேட்பாளர் என எந்த விஷயத்திலும் முடிவும் எட்டப்படாமல்தான் சந்திப்பு நிறைவடைந்தது.
இவ்வாறு பின்டு கூறினார்.
- ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பீகார் முதல்வராக நிதிஷ் குமார் உள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
பீகார் மாநில முதல்வராக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவராக உள்ளார். வருகிற 29-ந்தேதி இந்த கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்த முடிவு எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. கட்சியின் பெரும்பாலான மூத்த தலைவர்கள் இதே கருத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதேவேளையில் வேறு ஒருவர் தலைவராக நியமிக்கபடலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன. ஆனால், அது கட்சியில் உள்ள தலைவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் எனவும் கருதுகின்றனர்.
லாலன் சிங்- பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இடையிலான நட்பு தற்போது சிறப்பான முறையில் வளர்ந்து வருவது நிதிஷ் குமாரை அப்செட்டில் ஆழ்த்தியதாக தெரிகிறது.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா கூட்டணி நிதிஷ் குமார் அந்த கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் என அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும், அதனால் அவர் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இருந்து பாதிலேயே வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச் செயலாளர் மறுத்துள்ளார்.
- இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் நிதிஷ் குமார்.
- நிதிஷ் குமார் பீகார் முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார்.
புதுடெல்லி:
ஐக்கிய ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று தலைநகர் டெல்லியில் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவராக இருந்த ராஜிவ் ரஞ்சன் சிங் என்ற லாலன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரியாக இருக்கும் நிதிஷ் குமார், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் பதவியை இன்று ஏற்றுக் கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் ஜனவரி மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதியை பங்கீட்டை முடிக்க வேண்டும் என நிதிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
- குடும்ப அரசியல் குறித்து நிதிஷ் குமார் பேசியதால் லாலு மகள் கடும் விமர்சனம் செய்திருந்தார்.
- இந்தியா கூட்டணியில் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்.
பீகார் மாநில முதல்வரான நிதிஷ் குமார் பா.ஜனதா கூட்டணியில் இணையப் போவதாக நேற்று முன்தினம் செய்தி பரவியது. அதில் இருந்து தற்போது வரை பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இந்தக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என கருதப்படுகிறது.
இந்தியா கூட்டணியின் மீதான அதிருப்தி, லாலு யாதவ் மகளின் காட்டமான சமூக வலைத்தள பதிவுகள், ராகுல் காந்தி நடைபயணத்தில் கலந்து கொள்ள மறுத்தது போன்ற காரணங்கள் அவர் பா.ஜனதா கூட்டணியில் இணைய முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து 9-வது முறையாக மீண்டும் பீகார் முதல்வராக பதவி ஏற்க இருப்பதாகவும், பா.ஜனதா சார்பில் இரண்டு பேர் துணை முதல்வராக பதவி ஏற்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்னோட்டமாகத்தான் அவர் 22 ஐ.ஏ.எஸ்., 79 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதேவேளையில் சட்டமன்றம் கலைக்கப்படாது. பீகார் சட்டமன்ற தேர்தல் நடைபெறாது எனவும் தகவல் தெரிவிக்கின்றன. அடுத்த வருடம் தேர்தல் நடைபெற இருப்பதால் எந்த கட்சிகளும் பெரும்பாலும் அவசரம் காட்டாது எனத் தெரிகிறது.

நேற்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை தேனீர் விருந்து நிகழ்ச்சியின்போது பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.-க்கள் சந்தித்து சலசலப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதேவேளையில், நிதிஷ் குமார் அவரின் நிலை என்ன? என்பது குறித்து விளக்க வேண்டும். அவர் இந்தியா கூட்டணியில் இருக்கிறாரா? அல்லது வெளியேறுகிறாரா? என்பதை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என லாலு கட்சியை சேர்ந்த மனோஜ் ஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவரான ஷிவானந்த் திவாரி, நிதிஷ் குமார் பா.ஜனதாவில் இணைய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து பின் வாங்க வேண்டும். நேற்று நிதிஷ் குமாரை சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். அவர் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. அதே தவறை மீண்டும் நிதிஷ் செய்வார் என்று நாங்கள் நம்பவில்லை" என்றார்.
- நிதிஷ் குமார் ஆட்சியமைக்க உரிமைக்கோரினால் தடுக்க லாலு திட்டம்.
- நிதிஷ் குமார், லாலு கட்சிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
நிதிஷ் குமார் எப்போது வேண்டுமென்றாலும் பா.ஜனதாவுடன் கைக்கோர்க்க வாய்ப்புள்ளது. இதனால் பீகார் அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து 9-வது முறையாக மீண்டும் முதல்வராக திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பா.ஜனதா கட்சியின் இருவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் பேசப்படுகிறது.
கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுங்கள் என நிதிஷ்குமாருக்கு லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் இரண்டு கட்சிகளும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருவேளை லாலு கட்சி உடனான கூட்டணி முடிந்தது. பா.ஜனதா உடன் இணைந்து ஆட்சியமைக்க போகிறேன் என நிதிஷ் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து லாலு ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஒருவேளை நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்றாலும், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க வேண்டும். மொத்தம் 243 இடங்களை கொண்ட பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 122 எண்ணிக்கை தேவை.
பா.ஜனதா மற்றும் நிதிஷ் குமார் கட்சி உறுப்பினர்கள் முறையே 78 மற்றும் 45 உள்ளனர். மொத்தம் 123 எண்ணிக்கை உள்ளது. ஒரு எண்ணிக்கை அதிகமாகத்தான் உள்ளது. ஜித்தன் ராம் மஞ்ச் ஆதரித்தால் எண்ணிக்கை 127 ஆக அதிரிக்கும்.
தற்போது சட்டசபையில் ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு 79 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். ஐக்கிய ஜனதா தளத்திற்கு 45 இடங்கள் உள்ளன. காங்கிரஸ்க்கு 19 இடங்கள் உள்ளன. சிபிஐ-எம்எல்-12, சிபிஐ-2, சிபிஐ-எம்- 2, ஒரு சுயேட்சை என்ற அளவில் உறுப்பினர்கள் உள்ளனர். ஜித்தன் ராம் மஞ்சிக்கு 4 இடங்களும் உள்ளன.
ஒருவேளை நிதிஷ் குமார் மந்திரி சபையை கலைத்தால், தனிப்பட்ட எண்ணிக்கையில் லாலு கட்சிதான் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளது. அவர்களைத்தான் முதலில் ஆட்சியமைக்க கவர்னர் அழைக்க வேண்டும்.
அப்படி அழைத்தால் பா.ஜனதாவுடன் இணைந்து நிதிஷ் குமார் கட்சி இணைந்து எதிர்த்து வாக்களிக்கும். இதனால் நிதிஷ் குமார் கட்சியில் இருந்து 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்தில் கலந்து கொள்ளவிடாமல் பார்த்துக் கொண்டால் லாலு கட்சியின் வாக்கெடுப்பில் தப்பித்துக் கொள்ளும்.
மாறாக நிதிஷ் குமாரை ஆட்சியமைக்க அழைத்தால், அவர் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும். அப்போது அனைத்து கட்சிகளுடன் சேர்ந்து லாலு கட்சி எதிர்த்து வாக்களிக்கும். அப்போது ஐக்கிய ஜனதா தளத்தின் 10 எம்.எல்.ஏ.-க்கள் சட்டமன்றத்திற்கு வராமல் இருந்தால் போதுமானது. இதற்கான வேலைகளை லாலு பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளையில் நிதிஷ் குமார் கட்சியும், பா.ஜனதாவும் குதிரை பேரத்தில் ஈடுபடும். இதனால் பீகாரில் பரபரப்பான அரசியல் சூழ்நிலை நிலவி வருகிறது.
- இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
- இதையடுத்து, பீகாரில் முதல் மந்திரி பதவியை நிதிஷ்குமார் ராஜினாமா செய்ய உள்ளார்.
பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம் இணைந்து மகாகட்பந்தன் என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமார் முதல் மந்திரியாகவும், லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல் மந்திரியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியில் நிதிஷ்குமார் ஈடுபட்டு வந்தார். ஆனால், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநிலத்தில் கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் நிதிஷ்குமாருக்கு முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரி பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், பீகார் மாநில ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று காலை நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ள நிதிஷ்குமார், அதன்பின் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியானது.
- முதல் மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
பாட்னா:
எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிதிஷ்குமாருக்கு, இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மாநில கூட்டணியில் உள்ள ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சிகளுடன் முரண்பாடு ஏற்பட்டது. இதனால் இந்தியா கூட்டணியில் இருந்து விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளார் என தகவல் வெளியானது.
அதேபோல், மாநிலத்திலும் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் உள்ள கூட்டணியில் இருந்தும் விலக நிதிஷ்குமார் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியது. இந்தக் கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வுடன் மீண்டும் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷ்டிரீய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து விலகி முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல் மந்திரி பதவியேற்க நிதிஷ்குமார் திட்டமிட்டுள்ளார். இதற்காக நிதிஷ்குமார் முதல் மந்திரி பதவியை இன்று ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கிடையே, பீகார் மாநில ஆளுநரைச் சந்திக்க முதல் மந்திரி நிதிஷ்குமார் இன்று காலை நேரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பீகார் மாநில ஆளுநர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






