search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitish Kumar"

    • ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது.
    • பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்த நிதிஷ்குமார் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.

    பீகார் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இதுவரை 37 பேர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் நிதிஷ்குமாரை எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

    தேஜஸ்வி யாதவ் அவரது எக்ஸ் பதிவில், "பூரண மதுவிலக்குதான் நிதிஷ்குமாரின் மிகப்பெரிய ஊழல். சுமார் ரூ.30,000 கோடி மதிப்புள்ள கள்ளச்சாராய பொருளாதாரம் பீகாரில் இயங்கி வருகிறது. நிதிஷ்குமாரின் கட்சியினர்தான் இதன்மூலம் அதிக பலன்களை பெற்று வருகின்றனர். தனது முதல் இரு ஆட்சிக்காலத்தில் பீகாரின் மூலை முடுக்கெங்கும் மதுக்கடைகளை திறந்தவர் தற்போது மகாத்மா வேஷம் போடுகிறார்.

    தேசிய குடும்ப சுகாதார ஆய்வு அறிக்கையின்படி, பீகாரில் மது தடை செய்யப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவை விட பீகாரில் அதிகமானோர் மது அருந்துகின்றனர்.

    தற்போது பீகாரில் 15.5 சதவீதம் பேர் மது அருந்துகின்றனர். மது விற்பனைக்கு தடை இல்லாத மகாராஷ்டிராவில் வெறும் 13.9 சதவீதம் பேர் தான் மது அருந்துகின்றனர்.

    பீகாரில் கள்ளச்சாராயம் தொடர்பாக சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 275 ரெய்டுகள் நடத்தப்படுகின்றன. அதாவது பீகார் காவல்துறையும் மதுவிலக்கு துறையும் ஒவ்வொரு மாதமும் சுமார் 2 லட்சம் இடங்களிலும், ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் இடங்களிலும் சோதனை நடத்துகின்றன. ஆனால் இதற்குப் பிறகும், சட்டவிரோத கள்ளச்சாராய விற்பனை தடையின்றி தொடர்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • நேற்று இரவே அருங்காட்சியகம் தகர தடுப்புகளால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
    • கடந்த வருடமும் ஜே.பி நாராயண் சிலைக்கு மரியாதை அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டார்

    மறைந்த சோசியலிச தலைவர் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினம் இன்று [அக்டோபர் 1] கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் அமைந்துள்ள அவரது அருங்காட்சியகத்துக்குச் செல்ல முயன்ற சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

     லக்னோவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் இன்டர்நேஷனல் சென்டரின் (ஜெபிஎன்ஐசி) அமைந்துள்ள அவரின் சிலைக்கு அகிலேஷ் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாக இருந்தது. ஆனால் நேற்று இரவே அருங்காட்சியகம் தகர தடுப்புகளால் முற்றிலுமாக மறைக்கப்பட்டு அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

     

    மேலும் சமாஜ்வாதி கட்சி அலுவலகம் முன்பும் போலீஸ் குவிக்கப்பட்டது. கடந்த வருடமும் ஜே.பி நாராயண் சிலைக்கு மரியாதை அகிலேஷ் யாதவ் மரியாதை செலுத்த முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் இந்த வருடமும் அவ்வாறு நடந்துள்ளதால் அகிலேஷ் பாஜக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து பேசியுள்ள அகிலேஷ், பாஜக எப்போதும் சுதந்திரப் போராட்ட இயக்கத்துக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும்,எதிரானது, ஜே.பி.நாராயண் சிலைக்கு மரியாதைசெலுத்த விடாமல் சமாஜ்வாதி அலுவலகம் முன்பு தடைகள் போடப்பட்டுள்ளது. காலனியவாதிகளுக்கு ஆதரவளித்து வந்ததனால் பாதைகளை எப்படித் தடுப்பது என்பதை நன்றாக கற்றுக்கொண்டுள்ளனர்.

     

    அருங்காட்சியகத்தின் முன் தகரத் தடுப்புகளை வைத்து எதை மறைப்பதற்கு இந்த அரசு முயல்கிறது. இந்த அரசு ஏன் எங்களை தடுக்கிறது? எதற்கு பயப்படுகிறது? எங்களை தடுப்பதால் ஜே.பி. நாராயணனின் சித்தாந்தத்தை வீழ்த்த முடியுமா?

    ஒவ்வொரு வருடமும் சோஷலிஸ்டுகள் இங்கு ஒன்றுசேர முடியாதபடி இதை பாஜக செய்து வருகிறது. உ.பி அரசுக்கு அவரைப் பற்றி என்ன தெரியும்?.ஜெ.பி. நாராயண் இயக்கத்தில் இருந்து வந்தவர் பீகார் முதல்வர் நிதிஷ் குமார். இந்த அவமரியாதையைக் கண்டித்து நிதிஷ் குமார் பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆதரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

     

    • மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார்.
    • புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு..

    மத்தியில் ஆளும் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜனதா தள கட்சித் தலைவரும் பீகார் முதல்வருமான நிதஷ் குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தத்தொடங்கியுள்னர்.

    கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நிதிஷ் குமார். இந்நிலையில் இன்று நடக்க ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை ஒட்டி  சோட்டு சிங் என்ற முக்கிய தலைவர் இந்த போஸ்டர்கள், கட் அவுட்கள் மூலம் நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். இவை கட்சி அலுவலகம் உட்பட வழிநெடுக வைக்கப்பட்டுள்ளன.

    அதில் நிதிஷ் குமாருடன் கட்சியை சேர்ந்த தலைவர்கள் படங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் புகழ் பெற்ற சோசியலிசவாதியும் பீகாரின் முதல்வருமான நிதிஷ் குமார் அவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்பட வேண்டும் என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் அவர் மாநிலத்துக்கு செய்தவையும் அதில் பட்டியலிடப்பட்டுள்ளது. இதன் புடைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறன.

    • தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு நிதிஷ் குமார் உணவளித்து மகிழ்ந்தார்.
    • நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை

    பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் கண்காட்சி ஒன்றை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து சென்ற அடுத்த கணமே தொட்டியில் இருந்த மீன்களை மக்கள் திருடிச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. நேற்றைய தினம் சஹர்சா பகுதியில் மா விஸ்ஹாரி கோவில் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அமரப்பூரில் அரசு சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    அப்போது பையோப்ளோக் [biofloc] தொட்டியில் காட்சிக்கு மிதக்கவிடப்பட்டிருந்த மீன்களுக்கு உணவளித்து மகிழ்ந்த நிதிஷ் குமார் கண்காட்சியில் இருந்து கிளம்பினார். அவர் கிளம்பிய கண நேரத்திலேயே தொட்டியில் இருந்த மீன்களை பிடிக்க மக்கள் தள்ளுமுள்ளுப்பட்டுள்ளனர்.

    காவலுக்கு யாரும் இல்லாமல் மீன்களை மக்கள் அள்ளும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நாங்கள் மீன் பிடிக்கத்தான் வந்தோம் நிதிஷ் குமாரை பார்க்க வரவில்லை என்று இளைஞர்கள் கத்துவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

    • இன்று ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
    • மரக்கன்றுகளை நடுவதில் பீகார் அரசு கவனம் செலுத்துகிறது.

    ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒரு மரத்திற்கு ராக்கி கயிறு கட்டினார். பின்னர் மரக்கன்றுகளை அவர் நட்டார்.

    இந்த நிகழ்வில் அவருடன் பீகார் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் இருந்தனர்.

    இதுகுறித்து முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பீகாரின் பசுமையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மாநில அரசு 2012-ம் ஆண்டு முதல் ரக்ஷா பந்தன் பண்டிகையை 'பீகார் விருக்ஷ் சுரக்ஷா திவாஸ்' ஆக கடைபிடித்து வருகிறது. நாம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும். மரக்கன்றுகளை நடுவதில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழல் சுற்றுலாவை அரசு ஊக்குவித்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்- ஜேடியு தலைவர்.
    • அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது- தெலுங்கு தேசம் எம்.பி.

    மத்திய அரசு பாராளுமன்றத்தில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இந்த மசோதாவுக்கு பாஜக-வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடித்துள்ள முக்கியமான இரு கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமார்), தெலுங்குதேசம் கட்சி (சந்திரபாபு நாயுடு) ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

    வக்பு வாரிய செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதுதான் இதன் நோக்கம். மசூதிகளை நடத்துவதில் தலையீட முயற்சி இல்லை எனத் தெரிவித்துள்ளன.

    மக்களவையில் ஆளுங்கட்சியால் மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவரும், மத்திய மந்திரியுமான ரஞ்சன் சிங், இந்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என உறுதியளித்தார்.

    மேலும், "வக்பு வாரிய சட்டத் திருத்தம் முஸ்லீம்களுக்கு எதிரானது என பல உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். இது எப்படி முஸ்லிம்களுக்கு எதிரானது?. இங்கே அயோத்தியின் உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலையும் ஸ்தாபனத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதா?. இது மசூதிகளில் தலையிடும் முயற்சி அல்ல.

    வக்ஃப் வாரியம் எப்படி உருவாக்கப்பட்டது? அது ஒரு சட்டத்தின் மூலம். சட்டத்தின் மூலம் நிறுவப்படும் எந்த நிறுவனமும் எதேச்சதிகாரமாகிறது. வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வர அரசுக்கு உரிமை உள்ளது. இதில் வகுப்புவாத பிளவு இல்லை. எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்புகின்றனர். மசோதா வர வேண்டும், வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும்" என்றார்.

    தெலுங்குதேசம் கட்சி எம்.பி. ஜி.எம். ஹரிஷ் பாலயோகி "நன்கொடையாளர்களின் நோக்கம் பாதுகாக்கப்பட வேண்டும். நோக்கமும் அதிகாரமும் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதும், வெளிப்படைத்தன்மையை அறிமுகப்படுத்துவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

    அரசிற்கு ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும் வேண்டிய தேவை உள்ளது. அதற்காக மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் அதை ஆதரிக்கிறோம். நாட்டின் ஏழை முஸ்லிம்கள் மற்றும் பெண்களுக்கு உதவும் என்றும், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

    விரிவான ஆலோசனைகள் தேவைப்பட்டால், அதைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்புவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்றார்.

    வக்பு வாரியம்

    நீண்ட காலத்துக்கு முன்பு முஸ்லிம் செல்வந்தர்களும், முஸ்லிம் மன்னர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான சொத்துக்களை இறைவனுக்கு தானமாக வழங்கினர். இத்தகைய சொத்துக்கள் 'வக்பு சொத்துக்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

    இந்த சொத்துக்களை பராமரிக்க 1954-ம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி மாநில அரசுகளால் மாநில வக்பு வாரியங்கள் நிறுவப்பட்டன. இந்த அமைப்புகள் வக்பு சொத்துக்களை நிர்வகித்து வருகின்றன.

    நாடு முழுவதும் வக்பு வாரியத்துக்கு 9.40 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு உள்ளது. அதில் 8 லட்சத்து 72 ஆயி ரத்து 292 சொத்துகள் இருக்கின்றன. அந்த சொத்துக்களை வக்பு வாரியம் பராமரித்து வருகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

    வக்பு வாரியத்தின் கீழ் மாவட்ட வக்பு குழுக்கள் செயல்படுகின்றன. குறிப்பாக வக்பு சொத்துக்கள் சுமார் 200 பேரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வக்பு வாரியங்களை கண்காணிக்க, வக்பு சட்டத்தின்படி, மத்திய வக்பு கவுன்சில் 1964-ல் தொடங்கப்பட்டது.

    மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின்கீழ் இது இயங்குகிறது. 1954-ல் இயற்றப்பட்ட வக்பு சட்டம் ரத்து செய்யப்பட்டு, கடந்த 1995-ம் ஆண்டு புதிய வக்பு சட்டம் இயற்றப்பட்டது.

    இந்நிலையில், வக்பு சட்டத்தில் சில திருத்தங்களை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் வல்லுனர்கள், பெண்கள், ஷியா மற்றும் போராஸ் உள்ளிட்ட சில பிரிவினர் கோரிக்கை வைத்திருந்தனர்.

    இதன் அடிப்படையில், இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதன்படி, வக்பு சட்டத்தில் 44 திருத்தங்களை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.

    மத்திய வக்பு கவுன்சில், மாநில வக்பு வாரியங்களில் தலா 2 பெண் உறுப்பினர்கள் இடம்பெறுவதற்கு வழிவகை செய்யப்படுகிறது. மேலும் மத்திய வக்பு கவுன்சிலில் ஒரு மத்திய மந்திரி, 3 எம்.பி.க்கள், முஸ்லிம் அமைப்புகளைச் சேர்ந்த 3 பிரதிநிதிகள், 3 முஸ்லிம் சட்ட நிபுணர்கள், 2 முன்னாள் நீதிபதிகள் (ஐகோர்ட்டு அல்லது சுப்ரீம் கோர்ட்டு), தேசிய அளவில் புகழ்பெற்றவர்கள், மூத்த மத்தியஅரசு ஊழியர்கள் 4 பேர் இடம்பெறுவர்.

    இதில் 2 பேர் கண்டிப்பாக பெண்களாக இருக்க வேண்டும் போன்ற ஷரத்துகள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    • இன்று டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
    • இந்த கூட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டது.

    தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கள் பெயர் கூட பட்ஜெட்டில் வாசிக்கப்படவில்லை. இதனால் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்ததுடன் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இன்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மாநில முதல் மந்திரிகள் கலந்துகொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல் மந்திரிகளில் பலர் புறக்கணித்துள்ளனர்

    அதே சமயம் எதிர்க்கட்சிகளில் இருந்து ஒரே முதல்வராக நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்ட மம்தா பானர்ஜியும் வெளிநடப்பு செய்தார்.

    இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

    நிதிஷ்குமாருக்கு பதிலாக பீகாரின் துணை முதலமைச்சர்கள் சாம்ராட் சௌத்ரி, விஜய் குமார் சின்ஹா ஆகியோர் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

    • இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
    • நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்தது

    பீகார் மாநில சட்டமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியுள்ள நிலையில் இன்று அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவைத் தடுக்க சிறப்பு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே நடந்த சாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதம் நடந்தது. 

    அப்போது லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த பெண்  எம்.எல்.ஏ ரேகா தேவி, ஆளும் ஜனதா தள அரசின் பெண்கள் தொடர்பான கொள்கைகள் குறித்து விமர்சித்துப் பேசிக்கொண்டிருந்தார். திடீரென கோபமடைந்த முதல்வர் நிதிஷ் குமார், நீங்கள் ஏன் பேசுகிறீர்கள், நீங்கள்  ஒரு பெண், உங்களுக்கு என்ன தெரியும், அமைதியாக உட்கார்ந்து கவனிங்க என்று கோபமாக கூறினார்.

    நிதிஷ் குமாரின் இந்த கருதினால் அவையில் அமளி எழுந்த நிலையில், தொடர்ந்து பேசிய நிதிஷ் குமார், 'நீங்கள் தேவையில்லாத விஷயங்களை பேசிக்கொண்டிருக்கிறீர்கள், நீங்கள்[ஆர்ஜேடி] பெண்களுக்காக என்ன செய்தீர்கள், 2005 க்கு பிறகு நாங்கள் தான் பெண்களை உயர்த்தினோம்.அதனால் தான் நான் சொல்கிறேன். அதனை அமைதியாக கவனியுங்கள், கவனிக்காவிட்டால் அது உங்களின் தவறுதான்' என்று தெரிவித்துள்ளார். 

    • மத்திய பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை.

    பாராளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பா.ஜ.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

    பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் வென்று முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக உள்ளன.

    இந்நிலையில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.

    அப்போது, மத்திய பட்ஜெட்டில் பீகாரில் புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

    பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று நேற்று தெரிவித்த மத்திய அரசு தற்போது பீகார் மாநிலதிக்ரு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இந்நிலையில், பட்ஜெட் தொடர்பாக பேசிய பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், "தேசிய ஜனநாயக கூட்டணியில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டும் என்று நான் தொடர்ச்சியாக கோரிக்கை வைத்தேன். எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அல்லது சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரினேன்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் முன்னரே அது கிடைக்காது என்று பலரும் பேசினார்கள். இப்போது பீகார் மாநிலத்திற்கு சிறப்பு நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது" என்று பேசியுள்ளார்.

    • பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
    • பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் கூறியுள்ளார்.

    இந்தியாவில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்து மோடி மூன்றாவது முறையாக பிரதமரானார். இந்த கூட்டணியில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தரவேண்டும் என்பது கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.

    இந்நிலையில், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி பாராளுமன்றத்தில் இன்று எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.

    மத்திய அரசின் இந்த முடிவை பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்துள்ளார். அதில், நிதிஷ்குமார் மற்றும் அவரது கட்சியின் தலைவர்கள் மத்திய அரசின் அதிகாரத்தை அனுபவித்து கொண்டு, சிறப்பு அந்தஸ்து கோரிக்கை தொடர்பான பாசாங்குத்தனமான அரசியலை தொடரலாம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    அருணாச்சலப் பிரதேசம், அசாம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீர், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், திரிபுரா மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 11 மாநிலங்களுக்கு இதுவரை சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

    • இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது
    • லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தின் கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களை கடை முன் பெயர்பலகையில் குறிப்பிட வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டது. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிலிருந்தும் கண்டனக்குரல்கள் எழுந்துள்ளன.

    முதலாவதாக மத்தியில் பாஜக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முக்கிய காரணமாக இருந்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஒருங்கிணைந்த ஜனதா தளம் இந்த உத்தரவு ஏற்றத்தாழ்வுகளுக்கு உதாரணமாக அமையும் என்று கண்டித்திருந்தது.

    மேலும் பாஜகவின் என்.டி.ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜனசக்தி தலைவரும் மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சருமான சிராக் பஸ்வான் இந்த உத்தரப்பிரதேச பாஜக அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ஜாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிரிவினையை ஏற்படுத்தும் எதையும் தான் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

     

    இதற்கிடையில், உ.பியில் என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் மற்றொரு கட்சியான ராஷ்டிரிய லோக் தள கட்சியின்  தலைவரும் பாராளுமன்ற எம்.பியுமான ஜெயந்த் சவுத்ரே, கன்வரை சேர்ந்தவர்கள் மற்றும் யாத்ரீகர்கள் எப்போதும் ஒருவரின் மதத்தை கேட்பதில்லை. அது முக்கியமும் இல்லை. சிந்திக்காமல் எடுத்த இந்த முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மதம் சார்ந்து பாஜக எழுப்பியுள்ள இந்த சர்ச்சைக்கு கூட்டணி கட்சித் தலைவர்களே கண்டனம் தெரிவித்து வருவது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. 

     

    • பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது.
    • சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன்.

    உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்று முசாபர் நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

    சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் பாஜக அரசின் உந்த உத்தரவிற்கு பாஜக கூட்டணியில் உள்ள 3 முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சாதி மற்றும் மதத்தின் பெயரால் பிரிவினையை உருவாக்கும் எதையும் நான் ஆதரிக்கமாட்டேன் என்று உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவிற்கு மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

    அதே போல், உத்தரபிரதேச அரசின் இந்த உத்தரவு திரும்ப பெறப்பட வேண்டும் என்று நிதிஷ்குமார் கட்சியான ஜனதா தளத்தின் தலைவர் கே.சி. தியாகி தெரிவித்துள்ளார்.

    பாஜக அரசின் இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் மாநில தலைவர் ராமஷிஸ் ராய் தெரிவித்துள்ளார்.

    உத்தரபிரதேச பாஜக அரசின் உத்தரவிற்கு பாஜக கூட்டணி கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்துள்ளது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×