search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nitish Kumar"

    • வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு - பிரதமர் மோடி
    • 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் - நிதிஷ்குமார்

    வரும் பாராளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் மோடி கூறி வருகிறார்.

    வரும் தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று நேற்று நிதிஷ்குமார் பேசியது கிண்டலுக்கு உள்ளானது.

    இந்நிலையில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பாஜகவின் முழக்கம் தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையர் குரோஷி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், அதில்,

    "இப்போது 400 என்கிறார்கள். மே இறுதி வரை காத்திருங்கள், அது 250 ஆக குறையும். ஜூன் முதல் வாரத்தில் 175-லிருந்து 200 என்றளவில் இருக்கும். நான் அல்போன்சா மாம்பழத்தின் விலையை குறிப்பிடுகிறேன். ஒவ்வொரு செய்தியும் அரசியலைப் பற்றியதாக இருக்க வேண்டியதில்லை என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
    • வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வருகிறார்

    பீகார் மாநிலத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில், அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமாரும் கலந்து கொண்டார்.

    அங்கு பேசிய நிதிஷ்குமார், வரும் பாராளுமன்ற தேர்தலில், 4000 எம்.பி.க்களுடன் மீண்டும் பிரதமராகும் மோடிக்கே மக்கள் தங்கள் வாக்குகள் அனைத்தையும் அளிப்பார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    வரும் தேர்தலில் 400 இடங்களில் வெல்வதே பாஜகவின் இலக்கு என்று பிரதமர் கூறி வரும் நிலையில், 4000 எம்.பிக்கள் என்று நிதிஷ்குமார் பேசியது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார்.
    • இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார்.

    பீகார் மாநிலம் ஜமுய்-ல் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வரும், பிரதமர் மோடியும் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசும்போது கூறியதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசில் பிரதமர் மோடி இருந்து வருகிறார். இந்த 10 வருடத்தில் அவர் பீகார் மாநிலத்திற்காக மிகப்பெரிய அளவில் பணியாற்றியுள்ளார். நாட்டிற்காகவும் பணியாற்றியுள்ளார். எங்களுடைய பதவி காலத்தில் இந்து-முஸ்லிம் கலவரம் நிறுத்தப்பட்டுள்ளது.

    தவறுதலாக கூட எதிர்க்கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்தால், மீண்டும் அந்த கலவரங்கள் தொடங்கிவிடும் என்பதை இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    பிரதமர் மோடி பேசும்போது "முழு அக்கறையுடன் ராம் விலாஸ் பஸ்வானின் சிந்தனைகளை என்னுடைய இளைய சகோதரர் முன்னெடுத்துச் செல்வதில் முழு திருப்தி அடைகிறேன். ஒட்டுமொத்த நாட்டிற்கும் பீகார் வழிகாட்டியது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு 5-6 பீகார் தலைமுறையினருக்கு நீதி கிடைக்கவில்லை" என்றார்.

    • பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது.
    • பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமென்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

    அதில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜக தேர்தல் நிதியாக ரூ.6,986 கோடி பெற்றுள்ளது. அதிகபட்சமாக 2019- 20ம் ஆண்டில் மட்டும் பாஜகவிற்கு ரூ.2,555 கோடி தேர்தல் நிதியாக வந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட மொத்த நிதியில் கிட்டத்தட்ட 50% பாஜகவுக்கே சென்றுள்ளது.

    பீகாரில் ஆட்சி செய்யும் ஜனதா தளம் கட்சி தேர்தல் பத்திரம் மூலம் ₹24.4 கோடியை பெற்றுள்ளது. பாரதி ஏர்டெல் நிறுவும் ₹1 கோடியும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனம் ₹2 கோடியும் நன்கொடை கொடுத்துள்ளது.

    இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை குறித்து தேர்தல் ஆணையத்திடம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் கட்சி வித்தியாசமான விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

    2019 ஆம் ஆண்டில் எங்கள் அலுவலகத்துக்கு திடீரென வந்த சிலர் சீலிடப்பட்ட கவரை வைத்துவிட்டு சென்றனர். அதனை திறந்துபார்த்தபோது அதில் 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பத்திரங்கள் இருந்தன. அதனால் யார் எங்களுக்கு நன்கொடை கொடுத்தார்கள் என்ற தகவல் தெரியவில்லை என்று ஜனதா தள கட்சி தெரிவித்துள்ளது.

    அதே போல் சமாஜ்வாதி கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் 10.84 கோடி ரூபாய் பெற்றுள்ளது. ஆனால் அதில், 10 கோடி மதிப்பிலான 10 தேர்தல் பாத்திரங்கள் எங்களுக்கு தபால் மூலமாக வந்தது. ஆதலால் நன்கொடை கொடுத்தவர்களின் விவரங்கள் தெரியவில்லை என சமாஜ்வாதி கட்சி தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.

    • நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார்
    • இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார்

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பாஜக நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் நிதிஷ்குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வரானார்.

    பாஜகவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ்குமார், 2024 மக்களை தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் பாஜக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்நிலையில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் காலித் அன்வர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "13 கோடி பீகார் மக்களும், பீகாரிகள் என்பதால் எங்கள் மாநிலத்தில் குடியுரிமை திருத்தச்சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR) போன்ற எதுவும் தேவைப்படாது என நிதிஷ்குமார் ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

    பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்நிலையில் பீகாரில் குடியுரிமை திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019-ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

    2014 டிசம்பர் 31-க்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து இந்தியாவில் புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்த மதத்தினர், பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச் சட்டம் வகை செய்கிறது.

    குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதன் காரணமாக இந்த சட்டம் அப்போது அமலுக்கு வரவில்லை.

    • கடந்த முறை பா.ஜனதா- ஐக்கிய ஜனதா தளம் தலா 17 இடங்களில் போட்டி.
    • இந்த முறை பா.ஜனதா அதே 17 இடங்களில் போட்டியிடுகிறது. நிதிஷ் குமார் கட்சிக்கு ஒரு இடம் குறைக்கப்பட்டுள்ளது.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் செல்வாக்கு மிக்க கட்சியாக திகழ்ந்து வருகிறது. மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலுடன் தேசிய கட்சிகள் நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொள்ள விரும்பும்.

    கடந்த 2019 மக்களவை தேர்தலில் பா.ஜனதா நிதிஷ் குமார் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மறைந்த ராம் விலாஸ் பஸ்வான் கட்சியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.

    மக்களவை தேர்தலுக்குப் பிறகு பா.ஜனதாவுடன் நிதிஷ் குமாருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் என்டிஏ கூட்டணியில் இருந்து விலகி, லாலு கட்சியுடன் இணைந்து முதல்வராக இருந்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக கடும் விமர்சனங்களை வைத்த நிதிஷ் குமார், 2024 மக்களை தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க இந்தியா கூட்டணியை உருவாக்க நடவடிக்கை மேற்கொண்டார். இந்தியா கூட்டணி உருவாகி தொகுதி பங்கீடு நடைபெறும் நேரத்தில் இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பா.ஜனதா உடன் கூட்டணி அமைத்தார். மோடி முன்னிலையில் இனிமேல் ஒருபோதும் என்டிஏ கூட்டணியில் இருந்து விலக மாட்டேன் எனத் தெரிவித்தார்.

    இந்த நிலையில் 40 இடங்களை கொண்ட பீகாரில் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு இடையில் தொகுதி பங்கீடு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

    பா.ஜனதாவுக்கு 17 இடங்களும், ஐக்கிய ஜனதா தளத்திற்கு 16 இடங்களும், சிராக் பஸ்வானின் (மறைந்த ராம் விலாஸ் பஸ்வான்) எல்ஜேபி கட்சிக்கு ஐந்து இடங்களும், உபேந்த்ரா குஷ்வாஹா மற்றும் ஜித்தன் ராம் மஞ்ஜி ஆகியோருக்கு தலா ஒரு இடங்களும் வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை பீகாரில் நிதிஷ் குமார் கட்சி பா.ஜனதாவை விட குறைவான இடங்களில் போட்டியிட்டதில்லை. முதன்முறையாக ஒரு இடம் குறைவாக பெற்றுள்ளது. இதன்மூலம் அரசியல் களத்தை பா.ஜனதா மாற்றி அமைத்துள்ளதாக கருதப்படுகிறது.

    கடந்த 2019-ல் பாஜனதா, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டியிட்டன. சிராக் பஸ்வானின் தந்தை ராம் விலாஸ் பஸ்வான் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 40-ல் 39 இடங்களில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    • நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது
    • பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பா.ஜனதா கூட்டணியில் தொகுதி பங்கீடு இன்றும் இறுதி செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் நிதிஷ் குமார் அணியை உடைக்கும் முயற்சியில் இந்தியா கூட்டணி ஈடுபட்டுள்ளது. சிராக் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு பீகாரில் 8 எம்.பி. தொகுதியும், உத்தர பிரதேசத்தில் 2 தொகுதியும் தருவதாக கூறியுள்ளது. பா.ஜனதா கூட்டணியில் இந்த கட்சிக்கு 6 இடங்கள் மட்டும் தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பா.ஜனதா கூட்டணியில் இருக்கும் சிராக் பஸ்வான் வெளியேறுவார் என்று சொல்லப்படுகிறது.

    • இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என உறுதி அளிக்கிறேன்.
    • நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ரூ.21,400 கோடி மதிப்பிலான பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில் முதல் மந்திரி நிதிஷ்குமார் பங்கேற்றுப் பேசுகையில், வரும் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இனி எப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருப்பேன் என்று பிரதமருக்கு உறுதியளிக்கிறேன் என தெரிவித்தார்.

    நிதிஷ்குமாரின் இந்த உறுதியை கேட்ட பிரதமர் மோடி குலுங்கி குலுங்கி சிரித்தார்.

    பீகாரின் முதல் மந்திரியாக பதவி வகிக்கும் நிதிஷ்குமார் கடந்த 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், நிதிஷ்குமார் கருத்துக்கு ராஷ்டிரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் கூறுகையில், நிதிஷ்குமாருக்கு நல்வாழ்த்துக்கள். இந்த முறை தான் இருக்கும் இடத்திலேயே இருப்பேன் என்றார். குறைந்தபட்சம் இந்த முறையாவது அவர் சொன்ன வார்த்தையில் உறுதியாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டார்.

    • பீகாரில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்தார்.

    பாட்னா:

    பீகார் மாநிலம் கைமூர் மாவட்டம் மோகனியா நகரில் உள்ள நெடுஞ்சாலையில் நேற்று மாலை ஒரு ஜீப் சென்றுகொண்டிருந்தது. அதில் 2 பெண்கள் உள்பட 8 பேர் பயணித்தனர்.

    தேவ்காளி என்ற கிராமம் அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் முன்னே சென்று கொண்டிருந்த பைக் மீது மோதியது. அதன்பின் ஜீப்பும், பைக்கும் சாலையின் எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது மோதின.

    இந்த கோர விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகாரில் நடந்த கோர விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு முதல் மந்திரி நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
    • தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும்.

    பீகார் மாநிலத்தில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். தற்போது பீகார் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.

    சட்டமன்றத்தில் பேசும்போது இலவச மின்சாரம் வழங்கமாட்டோம் என நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-

    மின்சாரம் இலவசமாக வழங்கப்படமாட்டாது என்பதை நான் தொடக்கத்தில் இருந்தே தெரிவித்து வருகிறேன். நாங்கள் எவ்வளவு குறைந்த விலைக்கு வழங்க முடியுமோ, அந்த அளவிற்கு வழங்குவோம். இது தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும்.

    சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், நாங்கள் இலவசமாக வழங்கமாட்டோம். தேர்தல் வரவிருக்கும் நேரத்தில் கூட, இது ஒவ்வொருவருடைய பாதுகாப்பாக இருக்கும். ஆகவே, இலவசமாக வழங்கப்படமாட்டாது" என்றார்.

    பீகார் எரிசக்தி மந்திரி பிஜேந்திர யாதவ் கூறுகையில் "மற்ற மாநிலங்களை காட்டிலும் பீகாரில் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால், நிச்சயமாக நாங்கள் அதைவிட குறைவான விலைவில் வழங்குவோம். எவ்வளவு காலம் இந்த இலவச மின்சாரம் மூலம் இழப்பை சந்திக்க முடியும்?. பணம் எங்கிருந்து வரும்?. 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மானியம் வழங்குகிறோம். புறநகர் பகுதிகளில் அதிக அளவில் வழங்குகிறோம். தற்போது இதைவிட அதிக வாய்ப்பு தேவைப்படுகிறா?" என்றார்.

    • யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.
    • விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம்- ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி.) கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் ஆர்.ஜே.டி. கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகி மீண்டும் பா.ஜனதாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

    இந்தியா கூட்டணியை வலிமையாக்க தான் எடுத்த முயற்சிகளுக்கு உரிய ஒத்துழைப்பு இல்லை என்பதால் அதில் இருந்து விலகியதாக நிதிஷ்குமார் தெரிவித்தார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு ஆர்.ஜே.டி. நிறுவனர் லாலு பிரசாத் யாதவ் பீகார் சட்டசபைக்கு வந்தார். அப்போது லாலுவும், நிதிஷ் குமாரும் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்து கை குலுக்கி கொண்டனர்.

    அப்போது ஆர்.ஜே.டி.- ஐக்கிய ஜனதா தளம் மீண்டும் கூட்டணி அமையுமா? என்று லாலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு லாலு பதில் அளிக்கும்போது, "அவர் (நிதிஷ்குமார்) திரும்பி வரட்டும். பிறகு பார்ப்போம். அவருக்காக எங்கள் கதவுகள் எப்போதுமே திறந்து இருக்கும்" என்றார்.

    இதற்கிடையே லாலுவின் கோரிக்கையை நிதிஷ்குமார் நிராகரித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    யார் என்ன சொல்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். விஷயங்கள் சரியாக நடக்கவில்லை. அதனால்தான் நான் அவர்களை (ஆர்.ஜே.டி.) விட்டு வெளியே வந்தேன்.

    இந்தியா கூட்டணியில் என்னால் முடிந்தவரை முயற்சித்தேன். வேறு ஏதோ மனதில் இருந்ததால் கூட்டணிக்கு இந்த பெயரை கூட நான் ஆதரிக்கவில்லை. கூட்டணி முறிந்து நீண்ட நாட்களாகிவிட்டது. தற்போது பீகார் மக்களுக்காக உழைக்கிறேன். அதை தொடர்ந்து செய்வேன்.

    இவ்வாறு நிதிஷ்குமார் கூறி உள்ளார்.

    • 2023ல் உருவான இந்தியா கூட்டணியில் ஆர்ஜேடி, ஜேடி(யூ) கட்சிகள் இணைந்திருந்தன
    • நிதிஷ் குமாருக்காக கதவு திறந்தே உள்ளது என்றார் லாலு

    வரும் ஏப்ரல்-மே மாதங்களில் மக்களவைக்கான 543 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

    பா.ஜ.க.வை தலைமையாக கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் கட்சியை உள்ளடக்கி இந்தியா கூட்டணியும், தேர்தலை எதிர்கொள்ள மும்முரமாக வியூகங்களை அமைத்து வருகின்றன.

    கடந்த வருடம் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணியில் பீகார் மாநில ராஷ்டிரிய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் இணைந்திருந்தன.

    பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தள ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தள தலைவர், நிதிஷ் குமார் முதல்வராக பதவி வகித்தார்.

    ஆனால், 2024 ஜனவரி மாத இறுதியில், நிதிஷ் குமார், ராஷ்டிரிய ஜனதா கட்சியின் கூட்டணியிலிருந்து விலகி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, பா.ஜ.க.வை தலைமையாக கொண்ட தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இணைந்து, மீண்டும் முதல்வராகி, அவர்கள் ஆதரவுடன் பீகார் சட்டமன்றத்தில் பெரும்பான்மையையும் நிருபித்தார்.

    இந்நிலையில், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், முன்னாள் பீகார் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் பேட்டியளித்தார். அவரிடம் நிதிஷ் குமார், ராகுல் காந்தி உட்பட பலரை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

    அப்போது லாலு கூறியதாவது:

    நிதிஷ் குமார் மீண்டும் எங்கள் கூட்டணியில் இணைய விரும்பினால் இணையலாம். அவருக்காக கதவு திறந்தே உள்ளது.

    இந்திய பிரதமராவதற்கு ராகுலிடம் என்ன குறை உள்ளது? அவரிடம் எந்த குறையும் இல்லை.

    இவ்வாறு லாலு தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத கட்சி தலைவர்கள் மற்றும் எதிர்பார்த்த எண்ணிக்கையில் இடங்கள் கிடைக்காத கட்சிகள், எதிரெதிர் கூட்டணிகளுக்கு மாறுவது தொடரலாம் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ×