என் மலர்
நீங்கள் தேடியது "world record"
- 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்த தற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர்.
- பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ள எம்.எம். வித்யாஸ்ரம் சி.பி.எஸ்.இ. பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா மற்றும் திருக்குறளில் உலக சாதனை புரிந்த பள்ளி மாணவருக்கு பாராட்டு விழா பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்றது.
பள்ளி முதல்வர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியர் ராஜசேகர், சிப்பிப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழ் ஆசிரியை ஜான்சி ராணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தமிழ் குறித்தான சிறப்புகளை குறித்து சிறப்புரையாற்றினர்.
விழாவில் 8-ம் வகுப்பு மாணவன் பிரசாத் ஒரு நிமிடத்தில் 50 திருக்குறள் கூறி உலக சாதனை புரிந்ததற்காக அவருக்கு நினைவு பரிசும், கேடயமும் வழங்கி பாராட்டினர். மேலும் விழாவில் நம்பிக்கை ஊட்டும் தமிழ் கவிதைகள், தமிழ் மொழியின் தொன்மை, மற்றும் மேன்மை, குறித்த வேடம் புனைந்த சிந்தனைக்குரிய உரையாடல் ஆகியவற்றை பள்ளி மாணவ, மாணவிகள் நிகழ்த்திக் காட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் தலைமையில் தமிழ் துறையுடன் இணைந்து அனைத்து ஆசிரியர்களும், மாணவர்களும், செய்திருந்தனர்.
- உலக சாதனை செய்வதற்கு மன தைரியம் அவசியம் என்றும், உனக்கு உடல் தைரியம் மன தைரியத்தோடு தலைமுடியும் உறுதியாக இருக்கிறது.
- 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 செகண்டில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருபவர் சம்யுத்தா. வயது 12. இவர் நேற்று தனது தலைமுடியில் 1410 கிலோ எடையுள்ள காரை கட்டி 110 மீட்டர் தூரத்தை, ஒரு நிமிடம் 10 செகண்டில் இழுத்துச் சென்று வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் அபிஷியல் ரெக்கார்டு உலக சாதனை படைத்தார். இதற்கு முன்பும் சில உலக சாதனை படைத்துள்ளார், தற்போதைய சாதனையை இந்திய அளவில் இவர் ஒருவர் மட்டுமே செய்துள்ளார்.
இந்நிலையில் நேற்று உலக சாதனை புரிந்த மாணவி சம்யுத்தாவை நேரில் வரவழைத்து வாழ்த்திய தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன். மேலும் மாணவியிடம் பேசும் பொழுது இது போன்ற உலக சாதனை செய்வதற்கு மன தைரியம் அவசியம் என்றும், உனக்கு உடல் தைரியம் மன தைரியத்தோடு தலைமுடியும் உறுதியாக இருக்கிறது என்று பாராட்டி பொன்னாடை போர்த்தி காசோலை கொடுத்து வாழ்த்தி அனுப்பினார்.
இதல் மாணவியுடன் அவரது பெற்றோர் வெங்கடேஷ் மற்றும் ஆஷா தம்பதியினர், கராத்தே மாஸ்டரும் இந்த உலக சாதனை பயிற்சியாளருமான இளையராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர். பயிற்சியாளர் இளையராஜாவின் கோரிக்கையை ஏற்று விரைவில் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெறுவதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.
- எம்.ஐ.டி. கல்லூரியில் கர்லா கட்டை சுழற்றி மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
- மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி
புதுச்சேரி:
எம்.ஐ.டி. கல்லூரியில் கர்லா கட்டை சுழற்றி மாணவிகள் உலக சாதனை படைத்தனர்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி நிறுவனத்தில், சர்வதேச யோகா தினத்தையொட்டி கர்லாக் கட்டை யோகா சாதனை நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர் கண், உடல்நலம் மற்றும் ஆரோக்கியத்திற்கான இந்திய பெண்கள் நெட்வொர்க் ஒருங்கிணைப் பாளர் வித்யாஸ்ரீ, இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சிறப்பு மேற்பார்வையாளர் விவேக் நாயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில், 52 பெண்கள் கலந்து கொண்டு கர்லாக் கட்டையின் மூலம் அரை மணி நேரத்தின் 1400 சுற்றுகள் வீதம் சுழற்றி சாதனை புரிந்தனர்.
இச்சாதனையே, உலக அளவில் முதல் முறையாக பெண்கள் அனைவரும் ஒன்றிணைந்து கர்லாக்கட்டை யோகா செய்த நிகழ்ச்சியாகும் இச்சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளது.
நிகழ்ச்சியை, பெண்கள் அதிகார அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஒருங்கிணைப்பாளர் வள்ளி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். பரமாத்மம் நிறுவனர் விஜயபிரசாத் நன்றி கூறினார்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் பெண்களுக்கான அதிகார அமைப்பு, யோகா குழுமம், பரமாத்மம் மரபு, இந்தியன் உடற்பயிற்சி மற்றும் தற்காப்பு கலை கூடம் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
துபாய் ஜபீல் பூங்கா அருகே செவ்வக வடிவிலான பிரமாண்ட புகைப்பட சட்டம்போல ‘துபாய் பிரேம்’ என்ற கட்டுமானம் உள்ளது. 25 கோடி திர்ஹாம் செலவில் 492 அடி உயரமும், 305 அடி அகலமும் கொண்டதாக உருவாக்கப்பட்டது.
தொலைவில் இருந்து பார்த்தால் ஒரு புகைப்பட சட்டத்திற்குள் துபாய் நகரம் உள்ளதுபோல தெரியும். இது இரும்பு தளவாடங்கள் மற்றும் கான்கிரீட் போன்றவற்றால் முப்பரிமாண பிரதியெடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டது.
மேற்புறத்தில் தங்கநிற உலோக தகடுகளால் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் உட்புறம் மற்றும் மேற்புறம் மூடப்பட்டு குளிரூட்டப்பட்ட கண்ணாடிகளால் சூழப்பட்ட நடைமேடையும், இருபுறங்களில் ‘லிப்ட்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இதன் உச்சியில் நின்று 360 டிகிரி கோணத்தில் துபாய் நகரின் அழகை ரசிக்க முடியும். கடந்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் 1-ந் தேதி திறக்கப்பட்ட துபாய் பிரேமை ஒரே நேரத்தில் 200 பேர் பார்வையிடலாம். ‘துபாய் பிரேம்’ கட்டுமானம் போல உலகில் பிரமாண்டமான பிரேம் எங்கும் உருவாக்கப்படவில்லை. எனவே உலகின் மிகப்பெரிய பிரேமாக ‘துபாய் பிரேம்’ தேர்வு செய்யப்பட்டு கின்னஸ் சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
‘துபாய் பிரேம்’ கட்டுமானத்திற்குள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கின்னஸ் நிறுவன அதிகாரி தலால் ஒமர் பங்கேற்று, துபாய் மாநகராட்சி பொது இயக்குனர் தாவூத் அல் ஹாஜிரியிடம் கின்னஸ் சான்றிதழ் வழங்கினார்.
12-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் (ஏர்கன்) சாம்பியன்ஷிப் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது. இதில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவின் இறுதி சுற்றில் இந்தியாவின் மானுபாகெர்-சவுரப் சவுத்ரி ஜோடி 484.8 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது.

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்தது. முகமது நபி 81 ரன்கள் (36 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசினார். அடுத்து களம் இறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் ‘ஹாட்ரிக்’ உள்பட தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்தியதும் அடங்கும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ந்து 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். இந்த தொடரை ஆப்கானிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. #RashidKhan #WorldRecord
குஜராத் மாநிலம் மோடசா பகுதியைச் சேர்ந்தவர் நிலன்ஷி படேல்.
16 வயதாகும் இவர் தலைமுடியை நீளமாக வளர்ப்பதில் சிறுவயதில் இருந்தே ஆர்வமுடன் இருந்தார்.
தலைமுடியை பராமரிப்பதற்காக பிரத்யேகமாக அவர் நேரத்தை செலவிட்டார். மேலும் தலைமுடி நீளமாக வளர்வதற்கான முயற்சிகளையும் செய்தார்.
இதன் காரணமாக அவரது தலைமுடி நீளமாக வளர்ந்தது. தற்போது அவரது தலைமுடியின் நீளம் 170.5 சென்டி மீட்டர் (5 அடி 7 அங்கலம்) ஆகும்.
170 செ.மீட்டர் நீளமுள்ள தலைமுடியை வளர்த்து இருப்பதால் நிலன்ஷி புதிய சாதனையை படைத்து உள்ளார். அவரது இந்த சாதனை 2019-ம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற உள்ளது.

நிலன்ஷியின் இந்த சாதனையை கின்னஸ் சாதனை புத்தக தயாரிப்பாளர்கள் அங்கீகரித்து உள்ளனர். இதற்காக சமீபத்தில் நிலன்ஷி இத்தாலி சென்று அங்கீகார கடிதத்தை பெற்று வந்தார்.
பிளஸ்-1 படிக்கும் நிலன்ஷி பெற்றோருக்கு ஒரே மகள் ஆவார். இதனால் அவளை மகன் போல அவரது பெற்றோர்கள் வளர்த்து வந்தனர். 6 வயதுக்கு பிறகுதான் நிலன்ஷி தனது தலைமுடியை வளர்க்க தொடங்கினார்.
11 ஆண்டுக்குள் நிலன்ஷி தனது தலைமுடியை மிக நீளமாக வளர்த்து உலக சாதனை படைத்து உள்ளார். #NilanshiPatel
மதுரை விராட்டிபத்து பகுதியைச் சேர்ந்தவர் நஜிமுதீன். இவரது மனைவி சுலைகா பானு (வயது 45). இவர் மதுரை அரசரடியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சுலைகா பானு பாடம் நடத்துவதில் உலக சாதனை படைக்க விரும்பினார்.
இது தொடர்பாக உலக சாதனையாளர் பட்டியலில் இடம் பெற தேவையான முயற்சியையும் எடுத்த சுலைகாபானு தொடர்ந்து 40 மணி நேரம் பாடம் நடத்தி சாதனை படைக்க திட்டமிட்டார்.
அதன்படி இன்று காலை 8 மணிக்கு அவரது சாதனை முயற்சியை தொடங்கினார். மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் உள்ள வகுப்பறையில் சுலைகா பானு பாடம் நடத்தி வருகிறார்.
இதன் தொடக்க நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் இஸ்மாயில், ஜனதா தள மாநில பொதுச்செயலாளர் ஜான் மோசஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர், மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.
உலக சாதனையாளர் போட்டிக்கான பார்வையாளர்கள் நக்சத்திரா, விஷ்வநாத் ஆகியோர் முன்னிலையில் இந்த தொடர் கற்பித்தல் நிகழ்ச்சி நடந்து வருகிறது.
பார்வையாளர்களாக மாணவ-மாணவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்று வருகிறார்கள். ஆசிரியை சுலைகா பானுவின் முயற்சியை மாணவர்களும், பொதுமக்களும் வியந்து பாராட்டினர்.
இன்று தொடங்கிய சுலைகாபானு வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 40 மணி நேரம் பாடம் நடத்தி சாதனை படைக்க திட்டமிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #MaduraiTeacher
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.

இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு இதே பெர்லினில் நடந்த போட்டியில் கென்யாவின் டென்னிஸ் கிமெட்டோ 2 மணி 2 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. அதை 33 வயதான கிப்சோஜ் முறியடித்துள்ளார். ‘சாதனைக்குரிய இந்த நாளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. உலக சாதனை நிகழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கிப்சோஜ் குறிப்பிட்டார். #Marathon #WorldRecord #EliudKipchoges
பிரிட்டனில் வாழும் இந்திய வம்சாவளி சீக்கியர் ரக்பிர் சிங் சங்கோரா. இவர் கடந்த 1991-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தார். தற்போது பிரிட்டனின் டெர்பி நகரில் உள்ள ஒரு சீக்கிய கோவிலில் மத குருவாகவும், பண்ணை தொழிலும் செய்து வருகிறார்.
மிகச்சாதாரணமான இவர் தற்போது உலகின் மிக நீளமான வெள்ளரிக்காயை வளர்த்ததற்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க உள்ளார். 51 இன்ச் நீளம் வளர்ந்துள்ள இந்த வெள்ளரிக்காய் இதற்கு முன்னதாக உலக சாதனையாக கருதப்பட்ட 42 இஞ்ச் நீளத்தை முறியடித்துள்ளது.
இதுகுறித்து ரக்பிர் சிங் கூறுகையில், இந்த வெள்ளரிக்காய் வளர தினமும் கடவுளை வேண்டி வந்ததாகவும், வளரும் பருவத்தில் அருகில் நாற்காலியிட்டு அமர்ந்து பார்த்து பார்த்து வளர்த்ததாகவும் பெருமிதமாக கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு 39 இஞ்ச் நீளமுள்ள வெள்ளரிக்காயை தாம் வளர்த்ததாகவும், அதில் திருப்தி அடையாததால் தொடர்ந்து முயற்சித்து தற்போது சாதனை படைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெள்ளரிக்காய் இன்னும் தனது நீளத்திலும் அகலத்திலும் வளர்ந்துகொண்டே இருக்கிறது இதில் ஆச்சரியமான விஷயமாக கருதப்படுகிறது. #LongestCucumber #UK