search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "world record"

    • மெக்லாலின்-லெவ்ரோன் ஐந்து முறை உலக சாதனைகளை படைத்துள்ளார்,
    • ஷமியர் லிட்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

    ஒலிம்பிக் சாம்பியனான சிட்னி மெக்லாலின்-லெவ்ரோன், யூஜினில் நடந்த அமெரிக்க ட்ரையல்ஸ் போட்டியில் 50.65 வினாடிகளில் வென்று 400 மீட்டர் தடை ஓட்டத்தில் மற்றொரு உலக சாதனை படைத்தார்.

    ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியில் நான்கு பெண்கள் 53 வினாடிகளுக்குள் முடித்ததன் மூலம், மெக்லாலின்-லெவ்ரோன் இன்னும் கிட்டத்தட்ட இரண்டு வினாடிகளில் வெற்றி பெற முடிந்தது. அன்னா காக்ரெல் தனிப்பட்ட சிறந்த 52.64 இல் இரண்டாவது இடத்தைப் பிடித்தார், அதே நேரத்தில் ஜாஸ்மின் ஜோன்ஸ் 52.77, 0.21 என்ற தனி சிறப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார், ஷமியர் லிட்டில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.

    மெக்லாலின்-லெவ்ரோன் ஐந்து முறை உலக சாதனைகளை படைத்துள்ளார், 24 வயதான அவர் 2021 இல் 51.90 உடன் உலக சாதனை படைத்தார். டோக்கியோவில் ஒலிம்பிக் பட்டத்தை வெல்வதற்காக அவர் தனது முந்தைய குறியிலிருந்து கிட்டத்தட்ட அரை வினாடியில் குறைத்து கொண்டு 51.46 என்ற வேகத்தில் சென்றார். ஒரு வருடம் கழித்து, 2022 ஆம் ஆண்டு ஓரிகானில் நடந்த உலக பட்டத்தை 50.68 இல் வெல்வதற்கு முன்பு, அவர் மீண்டும் 51.41 உடன் உலக சாதனை படைத்தார்.

    வியத்தகு முறையில், அவரது ஐந்து உலக சாதனைகளில் நான்கு இப்போது ஓரிகானின் யூஜினில் உள்ள ஹேவர்ட் ஃபீல்டில் அமைக்கப்பட்டுள்ளன.

    • ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.
    • இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

    இங்கிலாந்தில் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.

    அதில், சசெக்ஸ் - லீசெஸ்டர்ஷையர் அணிகள் மோதின. அப்போட்டியில் , லீசெஸ்டர்ஷையர் வீரர் லூயிஸ் கிம்பர், ஆலி ராபின்சன் வீசிய ஒரே ஓவரில் 5 சிக்ஸர், 3 பவுண்டரி, ஒரு சிங்கிள் உடன் 43 ரன்கள் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.

    ஆலி ராபின்சன் நோ பால் ஆக வீசிய மூன்று பந்துகளிலும் லூயிஸ் கிம்பர் சிக்ஸர் விளாசியுள்ளார்.

    லீசெஸ்டர்ஷையரின் இரண்டாவது இன்னிங்ஸில் எட்டாவதாக இறங்கிய 27 வயதான கிம்பர் 62 பந்துகளில் தனது இரண்டாவது கவுண்டி சாம்பியன்ஷிப் சதத்தை எட்டினார். 18 பவுண்டரிகள் மற்றும் 16 சிக்ஸர்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 191 ரன்கள் எடுத்துள்ளார்.

    இதன்மூலம் கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிக ரன்களை விட்டு கொடுத்த வீரர் என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆலி ராபின்சன் படைத்தார்.

    இங்கிலாந்து அணிக்காக விளையாடியுள்ள ராபின்சன் 76 டெஸ்ட் விக்கெட்டுக்களை எடுத்துள்ளார்.

    2 நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் வொர்செஸ்டர்ஷயர் அணிக்காக ஒரு ஓவரில் 38 ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது.
    • கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரூபிக்ஸ் நிறங்களை ரோபோ ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது.

    ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்ப்பது எப்போதும் தலைவலியான விஷயமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் இந்த விளையாட்டின் மீது அனைவருக்கும் வசீகரமான ஒரு ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவு சீக்கிரம் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்க்கமுடியும் என்று உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சளைக்காமல் முயற்சி செய்த வண்ணம் இருக்கின்றனர்.

     

    அந்த முயற்சியில் பல உலக சாதனைகளும் படைக்கப்பட்டுள்ளது.10 வினாடிகளுக்குள் ரூபிக்ஸ் கியூப் நிறங்களை ஒன்று சேர்த்தவர்களும் இருக்கின்றனர்.அந்த வகையில் கடந்த மே 21 ஆம் தேதி ரோபோ ஒன்று ௧ நொடிக்கும் குறைவான நேரத்தில் ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை ஒன்று சேர்த்து இதுவரை மனிதர்கள் படைத்த உலக சாதனையை முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

    டோக்கியோவில் உள்ள மிட்சுபிஷி எலெக்ட்ரிக் கார்ப்பரேஷனின் கீழ் இயங்கும் மின்சாதன உபகரணங்களை உற்பத்தி செய்யும் பொறியியல் மையத்தில் வடிவமைக்கப்பட்ட ரோபோ, 3x3x3 ரூபிக்ஸ் கியூபாவின் நிறங்களை வெறும் 0.305 வினாடிகளில் ஒன்று சேர்த்துள்ளது.

    இது மனிதக் கண்களால் பார்க்க முடிவதை விட வேகமானது ஆகும். கேமரா மூலம் படம் பிடிக்கப்பட்டு ஸ்லோ மோஷனில் பார்க்கும்பொழுதே ரோபோ,ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்ப்பதை பார்க்க முடிகிறது. கின்னஸ் அமைப்பு வெளியிட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலாகி வருகிறது.

    முன்னதாக 3x3x3 ரூபிக்ஸ் கியூபின் நிறங்களை 4.48 வினாடிகளில் சீனாவைச் சேர்ந்த யிஹெங் வாங் ஒன்று சேர்த்ததே ரூபிக்ஸ் நிறங்களை ஒன்று சேர்க்கும் அதிக பட்ச வேகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

     

    • மே 17 ஆம் தேதி துவங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
    • தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. மே 17 ஆம் தேதி துவங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்றார். இவரைத் தொடர்ந்து ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இவர்கள் வரிசையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் "எதிர்காலத்தில் மிகப்பெரிய வெற்றியடைய மாரியப்பன் தங்கவேலுவை வாழ்த்துகிறேன்" வெளியிட்டுள்ளார்.

    அதே போல் மாரியப்பன் தங்கவேலுவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெறும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்-ல் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை புரிந்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இன்னும் பல உச்சங்களைத் தொட்டு நாட்டிற்கு மேன்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
    • இந்தியா மொத்தம் பத்து பதக்கங்களை வென்றுள்ளது.

    மாற்று திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடைபெற்று வருகின்றன. மே 17 ஆம் தேதி துவங்கிய பாரா ஒலிம்பிக் போட்டிகள் மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் இந்தியா சார்பில் ஏராளமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

    பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கத்தை வென்றார். இவரைத் தொடர்ந்து ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால், உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

    இவர்கள் வரிசையில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

    இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகள் அடிப்படையில் இந்தியா நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம் என மொத்தம் பத்து பதக்கங்களுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

    • டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.
    • உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார்.

    அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்த டேவிட் ரஷ் என்பவர் 13.64 வினாடிகளில் ஒரு லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.இதற்கு முன்பு 16.5 வினாடிகளில் 1 லிட்டர் (4.2 கப்) லெமன் ஜூஸை 16.5 வினாடிகளில் வேகமாகக் குடித்தவர் என்ற பட்டத்தை டேவிட் தன்வசம் வைத்திருந்தார்.

    ஆனால் இடைப்பட்ட காலத்தில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொடர் சாதனையாளர் ஆண்ட்ரே ஆர்டோல்ஃப் 16 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜுஸை குடித்து டேவிட்டின் பட்டதைத் தட்டிச் சென்றார். அதை முறியடிக்கும் முயற்சியில் இறங்கிய டேவிட் தற்போது இந்த சாதனையைப் படைத்துள்ளார். 13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸ் அருந்திய அனுபவம் குறித்து டேவிட் கூறுகையில், இந்த அனுபவம் இனிமையானதாக இல்லை என்றும் இதனால் கடுமையான வயிற்றுவலிக்கு ஆளானதாகவும் தெரிவித்தார்.

    எப்போதும் புதுமையான விஷயங்களை முயற்சி டேவிட் பார்க்கும் இதுவரை 250க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் தற்போது அவர் நிகழ்த்திக்காட்டியுள்ள சாதனையையும் சேர்ந்து 165 பட்டங்களை டேவிட் ரஷ் தன்வசம் வைத்துள்ளார். உலகில் உள்ள எந்தவொருவரையும் விட அதிக சாதனைகளைச் செய்ய வேண்டும் என்பதையே டேவிட் தனது வாழ்நாள் இலக்காகக் கொண்டுள்ளார். 

    • 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது.
    • பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் நடந்து வருகிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்ற பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி உலக சாதனை படைத்து இந்த வருடம் இந்தியாவிற்கான முதல் தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

     

    பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி, 55.06 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து முந்தைய உலக சாதனையை முறியடித்துதுள்ளார். இந்தப் போட்டியில், 59.00 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து தாய்லாந்து வீராங்கனை ஓரவன் கைசிங்கை வெள்ளிப் பதக்ககமும், ஜப்பான் வீராங்கனை நினா கன்னோ 59.73 வினாடிகளில் 400 மீட்டர் கடந்து வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

    கோபே யுனிவர்சியேட் மெமோரியல் ஸ்டேடியத்தில் 17 முதல் 25 மே 2024 வரை நடைபெறும் இந்த போட்டிகளில் நேற்று (மே 19) போட்டியின் மூன்றாவது நாளில் ஓட்டப்பந்தய வீராங்கனை ப்ரீத்தி பால் மற்றும் உயரம் தாண்டுதல் வீரர் நிஷாத் குமார் ஆகியோர் முறையே வெண்கலம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர். உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024ல் இந்தியா இதுவரை மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.

     

    கடந்த பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியா மூன்று தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்கள் உட்பட 10 பதக்கங்களை வென்றிருந்ததது. முன்னதாக, தீப்தி ஜீவன்ஜி 2024 பாரிஸ் பாராலிம்பிக்ஸ் பெண்கள் 400 மீட்டர் பிரிவில் 56.18 வினாடிகளில் 400 மீட்டர் எட்டி ஆசிய அளவில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. 

    • காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது.
    • மாபெரும் கருத்தரங்குகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

    சுற்றுச்சூழல் வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனையாக, காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 1.12 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு உலக சாதனை படைத்துள்ளது.

    இதையடுத்து, இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணிக்கை 10.9 கோடியாக உயர்ந்துள்ளது.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால், ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான கடந்த நிதியாண்டில் 48,748 விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சுமார் 28,000 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோடியே 12 லட்சத்து 47 ஆயிரத்து 630 மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் நட்டுள்ளனர்.

    உலக பூமி தினமான இன்று (ஏப்ரல் 22) இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் இவ்வியக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் பங்கேற்று கூறியதாவது:-

    காவேரி கூக்குரல் இயக்கம் என்பது சத்குரு அவர்களால் 26 ஆண்டுகளுக்கு முன்பு விதைக்கப்பட்ட விதையாகும். 1998-ம் ஆண்டு முதல் ஈஷா பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளை வெவ்வேறு பெயர்களில் 25 ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறது.

    அதில் ஒரு அங்கமாக, தமிழகத்தின் பசுமைப்பரப்பை அதிகரித்தல், நதிகளுக்கு புத்துயிர் அளித்தல், விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நோக்கங்களுக்காக காவேரி கூக்குரல் இயக்கம், மரம் சார்ந்த விவசாய முறையை விவசாயிகளிடம் ஊக்குவித்து வருகிறது.

    விவசாயிகளுக்கு தரமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பது, மரம்சார்ந்த விவசாயம் செய்வதற்கு பயிற்சி அளிப்பது, முன்னோடி விவசாயிகளின் நிலங்களில் மாபெரும் கருத்தரங்குகளை நடத்துவது உள்ளிட்ட பணிகளை காவேரி கூக்குரல் இயக்கம் செய்து வருகிறது.

    இதற்காக, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடங்களில் நாங்கள் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும் விநியோகித்து வருகிறோம். கடலூரில் உள்ள ஈஷா நர்சரியானது உலகின் மிகப்பெரிய நர்சரிகளில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஒரு ஆண்டில் 85 லட்சம் மரக்கன்றுகள் வரை உற்பத்தி செய்ய முடியும். இதுதவிர 39 இடங்களில் விநியோக நர்சரிகளை நடத்தி வருகிறோம். இங்கு தேக்கு, செம்மரம், சந்தனம், ரோஸ்வுட் உட்பட 29 வகையான விலை உயர்ந்த டிம்பர் மரக்கன்றுகளை ரூ.3 என்ற மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம்.

    மேலும், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் அளிக்கும் விதமாக, அவர்களே மரக்கன்றுகளை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வாய்ப்பையும் நாங்கள் வழங்கி வருகிறோம். அந்த வகையில், கடந்தாண்டு 30 விவசாயிகள் சுமார் 50 லட்சம் மரக்கன்றுகளை தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்து வழங்கி உள்ளனர். இதில் சுமார் 25 சதவீதம் விவசாயிகள் 25 முதல் 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், 12 விவசாயிகள் 12 மாவட்டங்களில் ஈஷா விநியோக நர்சரிகள் மூலம் சுமார் 14 லட்சம் மரக்கன்றுகளை விநியோகம் செய்து அதன்மூலம் கூடுதல் வருமானம் ஈட்டியுள்ளனர்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தில் மொத்தம் 130 களப் பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் தமிழ்நாடு முழுவதும் கடந்தாண்டு 31,400 விவசாய நிலங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து உள்ளனர். அங்குள்ள நிலத்தின் மண் மற்றும் நீரின் தன்மையை ஆராய்ந்து அதற்கேற்ப மர விவசாயம் செய்வதற்கு விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் 29,800 விவசாயிகளுக்கு இலவச ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர, கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் 3 மிகப்பெரிய கருத்தரங்குகளையும், 12 மண்டல அளவிலான கருத்தரங்குகளை நடத்தினோம். இதில் சுமார் 6,000 விவசாயிகள் நேரில் பங்கேற்று பயன்பெற்றனர். சத்குருவின் பிறந்த நாள், நம்மாழ்வார், நெல் ஜெயராமன், மரம் தங்கசாமி ஆகியோரின் பிறந்த நாட்கள் மற்றும் நினைவு நாட்களில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நடும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. இதுபோன்ற பல்வேறு வகையான செயல்பாடுகளால் தான் எங்களுடைய 1.12 கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கு பூர்த்தி ஆகியுள்ளது.

    இந்த மாதம் தொடங்கியுள்ள நடப்பு நிதியாண்டில் (2024 - 25) காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 1.21 கோடி மரக்கன்றுகள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் செய்த 'பேய் கொட்டு
    • பேய் கொட்டு' எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான S லாவண்யா.

    தமிழ் திரையுலகில் முதன்முறையாக 31 கிராஃப்ட்களையும் செய்து 'பேய் கொட்டு'(PEI KOTTU) திரைப்படத்தை உருவாக்கி 10 வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் பல உலக நாடுகளில் இருந்து வாங்கி குவித்துள்ளார். இயக்குனர் S.லாவண்யா 

    தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. ஆனால் திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, மேலும் கூடுதலாக ஏழு டிபார்ட்மெண்ட்ஸ் சேர்த்து சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங், உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து மொத்தம் 31 துறைகளில் உருவாக்கி

    பேய் கொட்டு'(PEI KOTTU) எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான S லாவண்யா.

    அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பேய் கொட்டு' எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

    எஸ். லாவண்யா- பி. வசந்த் -ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார்.

    ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் (OM SAI PRODUCTIONS) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா தயாரித்திருக்கிறார்.

    இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' இண்டிபெண்டண்ட்  திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன்... ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, 'பேய் கொட்டு' எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன்.

    'பேய் கொட்டு' என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா... அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. '' என்றார்.

     

    இதனிடையே சுயாதீன திரைப்பட கலைஞர் ஒருவர் திரையுலகின் 31 கிராஃப்ட்டுகளையும் கற்றுக்கொண்டு, ஒற்றை ஆளாக முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் முதன்முறை என்பதும், இத்தகைய முயற்சி திரையுலகினரையும், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்பதும்,

    'பேய் கொட்டு' எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு லாவண்யா எனும் பெண்மணியின் சாதனை முயற்சியாக பார்ப்பதால் இதற்கான வெற்றி உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    1. BOOK OF WORLD RECORDS USA (USA, UK , CANADA, PHILIPPINES, INDIA)

    2. WORLD WIDE BOOK OF RECORDS, (UK)

    3. WORLD ACHIEVERS BOOK (UK)

    4. INFLUENCER BOOK OF WORLD RECORDS (UK)

    5. INDIA'S WORLD RECORDS (INDIA)

    6. UNICORN WORLD RECORDS (UK)

    7. KALAM'S WORLD RECORD

    8. SIGARAM AWARDS 2023 from Director K.Bhagyaraj sir

    9. LONDON BOOK OF WORLD RECORDS for covering 31 departments

    (3 Awards)(LONDON)

    10. LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR

    11. LONDON BOOK OF WORLD

    RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK சிங்கர்

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.
    • கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    சுவிட்சர்லாந்தை சேர்ந்த ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரெயில் 2 நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரெயிலை முதன் முதலில் பெர்லினில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் வர்த்தக கண்காட்சியில் அறிமுகப்படுத்தியது.

    அதன் பிறகு பல முறை சோதனை நடத்தியது. இந்த சோதனைகளுக்கு பிறகு ஒரு முழு ஹைட்ரஜன் டேங்க் மூலம் 1,741 மைல்கள் (2,803 கிலோ மீட்டர்) பயணம் செய்துள்ளது. கடந்த 20-ந்தேதி மாலை தொடங்கிய இந்த பயணம் இரவு மற்றும் அடுத்த நாள் முழுவதும் என தொடர்ந்து 46 மணி நேரம் இயங்கியது.

    இதுகுறித்து ஸ்டாட்லர் நிறுவன துணைத் தலைவர் டாக்டர். அன்ஸ்கர் ப்ரோக்மேயர் கூறுகையில், இந்த உலக சாதனையானது எங்கள் ஹைட்ரஜன் ரெயிலின் சிறந்த செயல் திறனை காட்டுகிறது. இது மகத்தான சாதனை ஆகும். மற்றொரு உலக சாதனை படைத்ததில் நாங்கள் பெருமை அடைகிறோம் என்றார்.

    • நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன.
    • பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    திருப்பதி:

    ஆந்திராவில் ஓங்கோல் மற்றும் நெல்லுரை சேர்ந்த சில வகை இன மாடுகள் உலக அளவில் பிரபலமாக உள்ளது.

    நெல்லூர் இன வகையான பாஸ் இண்டிகஸ் என்ற இன பசு வெளிப்புறத் தோற்றத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும். இந்த வகை பசு பிரேசில் நாட்டில் நடந்த ஏலத்தில் 4.8 மில்லியன் டாலருக்கு விற்பனையானது.

    இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.40 கோடி ஆகும். ரூ.40 கோடிக்கு விற்பனையாகி உலக சாதனை படைத்தது.

    நெல்லூர் இன பசுக்கள் கடந்த 1868-ம் ஆண்டு பிரேசிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு இந்த வகை பசுக்கள் அதிக அளவில் இனவிருத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அதன்படி பிரேசில் நாட்டில் 1.60 கோடி நெல்லூர் இன பசுக்கள் உள்ளன.

    இந்த வகை பசுக்கள் அதிக வெப்பத்தை தாங்கக் கூடியவை. எளிதில் நோய்கள் தாக்க முடியாத அளவுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவையாகும். 

    • 3 முன்னணி மராத்தான் பந்தயங்களில் பட்டம் வென்றவர் கிப்டம்
    • சிகாகோ மராத்தானில் 02:00:35 மணிக்குள் ஓடி சாதனை படைத்தார் கிப்டம்

    "லாங் டிஸ்டன்ஸ் ரன்னிங்" எனப்படும் நீண்ட தூர ஓட்ட பந்தயங்கள் (3 கிலோமீட்டர்) மற்றும் மராத்தான் (42 கிலோமீட்டர்) பந்தயங்களில் உலகின் முன்னணி வீரர், கென்யாவை சேர்ந்த கெல்வின் கிப்டம் செருயோ (Kelvin Kiptum Cheruiyot).

    உலகின் முன்னணியான 3 மராத்தான் பந்தயங்களில் முதலிடம் பிடித்தவர் கிப்டம்.

    கடந்த 2023 அக்டோபர் மாதம், உலக ஓட்ட பந்தய வரலாற்றிலேயே 02 மணி நேரம் 01 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் சிகாகோ மராத்தான் போட்டியை வென்று சாதனை புரிந்தார் கிப்டம்.

    நேற்று இரவு, மேற்கு கென்யாவின் எல்டொரெட் பகுதியில் தனது டொயோட்டா ப்ரீமியோ காரில், பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஹகிசிமானா (Gervais Hakizimana) மற்றும் வேறொரு நபருடன் கிப்டம் பயணித்தார்.

    காரை கிப்டம் ஓட்டினார்.

    ரிஃப்ட் வேலி எனும் டவுனுக்கு அருகே சென்று கொண்டிருந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையிலிருந்து தாறுமாறாக ஓடி, 200 அடி தொலைவில் இருந்த ஒரு பள்ளத்தில் இறங்கி, ஒரு பெரிய மரத்தில் மோதி நின்றது.

    இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே கிப்டம் மற்றும் அவரது பயிற்சியாளர் கெர்வய்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர்.

    உடன் பயணித்த மற்றொரு பயணி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இளம் வயதிலேயே பல உலக சாதனைகளை புரிந்து, மேலும் பல உச்சங்களை தொடுவார் என எதிர்பார்க்கப்பட்ட கிப்டம், 24 வயதில் உயிரிழந்ததற்கு உலக அளவில் தட-கள (track and field) பந்தயங்களை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ×