search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ODI"

    • விதிமுறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்தது.
    • கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடிகாரத்தை (Stop Clock) பயன்படுத்தும் முறையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி. சோதனை அடிப்படையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. 2024 ஏப்ரல் மாதம் வரை இந்த முறையை சோதனை செய்ய ஐ.சி.சி. முடிவு செய்திருந்தது.

    எனினும், இது தொடர்பாக போட்டிகள் முன்கூட்டியே முடிவடைந்துள்ளதாக போட்டிகளை நடத்தும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பந்து வீசும் அணியினர் இரு ஓவர்களுக்கு இடையில் 60 நொடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை சரிபார்க்கவே கடிகாரத்தை பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படுகிறது.

    இந்த சோதனையின் கீழ் போட்டிகளின் இடையில் ஓவர்களுக்கு இடையில் வீரர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்கிறார்களா என்று கண்காணிக்கப்படும். அதாவது ஒரு ஓவர் பந்து வீசியதும், அடுத்த ஓவரில் பந்து வீசுவதற்கு அந்த அணி 60 நொடிகளுக்குள் தயாராக வேண்டும்.

    இதற்கு உடன்பட மறுக்கும் வகையில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பந்துவீசும் அணிக்கு இரண்டு முறை எச்சரிக்கை வழங்கப்படும். தொடர்ந்து பந்து வீச தாமதமாக்கும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட்டு விடும். சோதனை முறையில், இது போட்டிகளை விரைந்து முடிக்க உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதன் காரணமாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறும் ஐ.சி.சி. டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் இருந்தே கடிகாரத்தை பயன்படுத்தும் புதிய வழிமுறை அமலுக்கு வரும் என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து நடைபெறும் ஐ.சி.சி.யின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அனைத்திலும் இந்த விதிமுறை பின்பற்றப்பட இருக்கிறது.

    புதிய விதிமுறை அமலுக்கு வரும் போது, மைதானத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் கடிகாரம் ஒளிபரப்பப்படும். அதில் ஓவர்களின் இடையில் 60 நொடிகள் தலைகீழாக செல்லும் காட்சிகள் இடம்பெறும். இவ்வாறு செய்யும் போது இரு அணி வீரர்களும் ஓவர்களின் இடையில் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறோம் என்று பார்க்க முடியும். 

    • முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 202 ரன்னில் சுருண்டது.
    • இங்கிலாந்து 32.5 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 2-வது போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியால் 39.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 202 ரன்னில் சுருண்டது. கேப்டனும், விக்கெட் கீப்பருமான ஷாய் ஹோப் 68 ரன்களும், ரூதர்போர்டு 63 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.

    பின்னர் 203 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து வில் ஜேக்ஸ் (73), ஹாரி ப்ரூக் (43 அவுட் இல்லை), ஜோஸ் பட்லர் (58 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 32.5 ஓவரிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றி மூலம் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதி (நாளைமறுதினம்) நடைபெற இருக்கிறது. இதில் வெற்றிபெறும் அணி தொடரை கைப்பற்றும்.

    அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் 13-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    • இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது.
    • தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது.

    இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் முதலில் மளமள என விக்கெட்டுகளை இழந்தது இலங்கை அணி.

    அந்த அணி 54 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

    நிஷான் மதுஷ்கா 4 ரன்னிலும், குஷால் மெண்டிஸ் 12 ரன்னிலும், கருணா ரத்னே 29 ரன்னிலும், ஷாஹீன் அப்ரிடி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர்.

    சண்டிமல் ஒரு ரன் எடுத்த நிலையில் நசீம் ஷா பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார்.

    ஐந்தாவது விக்கெட்டிற்கு மேத்யூஸ் உடன் தனஞ்செயா டி சில்வா ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் அரை சதம் அடித்து சிறப்பாக விளையாடினர்.

    மேத்யூஸ் 64 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி ஐந்தாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

    ஆறாவது விக்கெட்டுக்கு தனஞ்ஜெயா டி சில்வாவுடன் சமாராவிக்ரமா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இலங்கை அணி 58.2 ஓவரில் 226 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் ஆட்டம் வெகு நேரத்திற்கு பின் தொடங்கியது.

    66-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் சமரவிக்ரமா 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    இலங்கை முதல் நாள் ஆட்டம் முடிவில் 6 விக்கெட்டு இழப்பிற்கு242 ரன்கள் எடுத்துள்ளது.

    தனஞ்செயா டி சில்வா 94 ரன்கள் உடன் களத்தில் உள்ளார்.

    • சர்வதேச ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் 500 வெற்றி கண்டுள்ளது.
    • 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலிய அணி முதல் இடத்தில் உள்ளது.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது.

    இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.

    தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 48.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் 500 வெற்றி கண்ட மூன்றாவது அணி என்ற பெருமையை பாகிஸ்தான் பெற்றது.

    இந்த வரிசையில் 594 வெற்றிகளுடன் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், 539 வெற்றிகளுடன் இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.

    • இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது.
    • இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் சலிப்பை ஏற்படுத்துவதாகவும், அதில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் எனவும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சில பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

    தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நவீன கிரிக்கெட் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அதன்படி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் 3 நாட்களுக்கு எல்லாம் முடிந்து விடுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு சச்சின் அளித்த பதில்கள்:-

    டெஸ்ட் கிரிக்கெட் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் வெவ்வேறு விதமான மைதானங்களில் விளையாட வேண்டி உள்ளது. அது பவுன்சர் டிராக், வேகமான டிராக், மெதுவான டிராக், டர்னிங் டிராக் மற்றும் ஸ்விங் டிராக் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

    வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அணிகள் தங்களுக்கு சாதகமான சூழல் கிடைக்கும் என கருதுவதை விட, அனைத்து சூழலுக்கும் தயார் ஆவதே சிறந்த முடிவாக இருக்கும். என்னை பொருத்தவரை எந்த மாதிரியான மைதானங்களில் விளையாடுகிறோம் என்பதே முக்கியம். சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை சிறந்த பொழுதுபோக்கு மற்றும் நம்பர் ஒன் விளையாட்டாக மாற்ற முயற்சிக்கும்போது போட்டிகள் 3 நாட்களில் முடிவடைவதில் எந்த பாதிப்பும் இல்லை.

    ஐ.சி.சி., எம்.சி.சி. உள்ளிட்ட கிரிக்கெட் சம்மேளனங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை எப்படி நம்பர்-1 வடிவமாக தொடர்வது என்பது குறித்து ஆலோசிக்கின்றன. அதற்கு முதலில் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான சூழல் ஏதாவது இருக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் ஒவ்வொரு பந்திலும் நெருக்கடியான சூழலை ஏற்படுத்த வேண்டும். அதனை பேட்ஸ்மேன்கள் சமாளித்து விளையாடினால் தான் போட்டி சுவாரஸ்யமாக இருக்கும்.

    தற்போது விளையாடப்பட்டு வரும் ஒருநாள் கிரிக்கெட் வடிவமானது சலிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இன்னிங்சிற்கும் ஒரு புதிய பந்தை பயன்படுத்துவதால், போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதையே நீக்கிவிட்டோம். போட்டியில் 40-வது ஓவரை வீசினாலும் அந்த பந்திற்கு அது 20-வது ஓவர் தான். ஆனால், பந்து 30-வது ஓவரில் தான் ஸ்விங் ஆகவே தொடங்கும். ஆனால், இரண்டு பந்துகள் பயன்படுத்தப்படுவதால் போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் என்பதே தற்போது இல்லை.

    இன்றைய கால போட்டிகள் மிகவும் கணிக்கக்கூடிய வகையில் இருப்பதோடு, பந்துவீச்சாளர்களுக்கு அதிக சுமையையும் தருகிறது. 15-வது ஓவர் முதல் 40 ஓவர் வரையில் ஆட்டம் தனது போக்கையே இழந்து சலிப்பை ஏற்படுத்துகிறது.

    50 ஓவர் போட்டியை தக்கவைத்துக்கொள்வதில் எந்தத் தீங்கும் இல்லை என்றாலும், ஒவ்வொரு 25 ஓவர்களுக்குப் பிறகும் அணிகள் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையில் மாறி மாறி விளையாட வேண்டும். அதன்மூலம் டாஸ், பணி மற்றும் பிற நிலைமைகளில் எதிரணிக்கும் சம வாய்ப்புகள் கிடைக்கும். .

    அதன்படி, முதல் 25 ஓவர்கள் பேட்டிங் செய்யும் அணி அடுத்த 25 ஓவர்கள் பந்து வீச வேண்டும். அதைதொடர்ந்து, மீண்டும் 25 ஓவர்கள் பேட்டிங் செய்து விட்டு மீண்டும் எதிரணிக்கு பேட்டிங் வாய்ப்பை வழங்க வேண்டும். இதன் மூலம், இரு அணிகளும் முதல் மற்றும் இரண்டாவது பாதியில் பந்து வீசுகின்றன. வணிக ரீதியாகவும் இது மிகவும் சாத்தியமானது. ஏனெனில் இரண்டு இன்னிங்ஸ் இடைவெளிகளுக்கு பதிலாக மூன்று இன்னிங்ஸ் இடைவெளிகள் இருக்கும்.

    என சச்சின் கூறினார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியின் கேப்டனாக டாம்லாதமும், 20 ஓவர் தொடருக்கு சான்ட்னரும் கேப்டனாக செயல்படுகிறார்கள்.

    இந்தியா- நியூசிலாந்துக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் நாளை (18-ந் தேதி) நடக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போதுதான் இலங்கையை 3 ஒருநாள் போட்டிகளிலும் வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி 'ஒயிட் வாஷ்' செய்தது.

    அதுவும் திருவனந்தபுரத்தில் நடந்த 3-வது போட்டியில் 317 ரன் வித்தியாசத்தில் வென்று புதிய உலக சாதனை படைத்தது. விராட் கோலியும் சதத்துடன் பல சாதனைகள் புரிந்தார்.

    இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சொந்த மண்ணில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதனால் இந்த தொடரிலும் முத்திரை பதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, சுப்மன் கில், சூர்ய குமார் யாதவ், ஹர்த்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் பேட்டிங்கிலும், முகமது சிராஜ், முகமது ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணியில் பின் ஆலன், கான்வே, பெர்குசன், பிலிப்ஸ், மைக்கேல், பிரேஸ்வெல் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    நியூசிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தான் மண்ணில் 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக நம்பிக்கையுடன் விளையாடும்.

    இரு அணிகளும் நாளை மோதுவது 114-வது ஒரு நாள் போட்டியாகும். இதுவரை நடந்த 113 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி 'டை' ஆனது. 7 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணி வீரர்கள் விவரம்:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்த்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், சூர்ய குமார் யாதவ், ஷபாஸ் அகமது, முகமது சிராஜ், முகமது ஷமி, உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், குல்தீப் யாதவ், யசுவேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஸ்ரீகர் பரத்.

    நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), பின் ஆலன், பிலிப்ஸ்,ஹென்றி நிக்கோலஸ், கான்வே, மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சேப்மேன், டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டபி, பெர்குசன், ஆடம் மில்னே, மிச்சேல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லே, சோதி ஹென்றி.

    இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது. #EngvsPak
    லண்டன்:

    சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கார்டிப்பில் நடந்த ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லண்டனில் இன்று நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த போட்டியில் தொடரை வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால் இந்த போட்டி தொடரை 3-2 என்ற கணக்கில் வெல்ல வேண்டியது அவசியமானதாகும்.

    இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இதுவரை 82 ஒரு நாள் போட்டியில் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி இருக்கின்றன. இதில் இங்கிலாந்து அணி 49 முறையும், பாகிஸ்தான் அணி 31 முறையும் வென்று இருக்கின்றன. 2 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது. #EngvsPak
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சதம் அடித்தும் 6 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது. #PAKvsAUS
    துபாய்:

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதிய 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி துபாயில் பகல்- இரவாக நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 277 ரன் குவித்தது.

    மேக்ஸ்வெல் 82 பந்தில் 98 ரன்னும் (9 பவுண்டரி, 3 சிக்சர்), உஸ்மான் கவாஜா 62 ரன்னும், அலெக்ஸ் கேரி 55 ரன்னும் எடுத்தனர். இமாத்வாசிம், முகமது ஹஸ்னர், யாஷீர்ஷா தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.

    278 ரன் இலக்குடன் பாகிஸ்தான் ஆடியது.

    16.3 ஓவர்களில் 74 ரன்னில் அந்த அணி 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டான ஆபித் அலி- முகமது ரிஸ்வான் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அபாரமாக ஆடி சதம் அடித்தனர்.

    ஆபித் அலி 112 ரன் எடுத்தார். ஆட்டத்தின் கடைசி ஓவரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 22 ரன் தேவைப்பட்டது. 2-வது பந்தில் 104 ரன் எடுத்த முகமது ரிஸ்வான் ஆட்டம் இழந்தார்.

    பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 271 ரன்னே எடுத்தது. இதனால் அந்த அணி 6 ரன்னில் தோற்றது.

    ஆபித் அலி, முகமது ரிஸ்வான் அடித்த சதம் பலன் இல்லாமல் போனது. நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், ஸ்டோனிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலியா 4-வது போட்டியிலும் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் ஆட்டம் நாளை நடக்கிறது. #PAKvsAUS
    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை நடக்கிறது. #INDvsAUS
    புதுடெல்லி:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    5 ஒருநாள் தொடரில் இதுவரை நடந்த 4 ஆட்டத்தின் முடிவில் 2-2 என்ற சமநிலை ஏற்பட்டுள்ளது. ஐதராபாத்தில் நடந்த முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்திலும், நாக்பூரில் நடந்த 2-வது ஆட்டத்தில் 8 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றிபெற்றது. ராஞ்சியில் நடந்த 3-வது போட்டியில் 32 ரன் வித்தியாசத்திலும், மொகாலியில் நடைபெற்ற 4-வது ஆட்டத்தில் 4 விக்கெட்டிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது.

    இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் ஒருநாள் தொடரை வெல்வது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த ஆட்டத்தில் வென்று இந்திய அணி தொடரை வெல்ல நல்ல வாய்ப்பு இருந்தது. மோசமான பீல்டிங்கால் வாய்ப்பு பறிபோனது. 358 ரன் குவித்தும் தோற்றது மிகுந்த ஏமாற்றமே. இதை சரி செய்யும் வகையில் இந்திய வீரர்கள் நாளை முழு திறமையை வெளிப்படுத்தி தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளனர்.

    தொடக்க வீரர் தவான் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி இருப்பது சாதகமானதே. கடந்த பேட்டிங்கில் அவர் 143 ரன்கள் குவித்தார். ஆனால் அது பலன் இல்லாமல் போனது. இதேபோல ரோகித்சர்மா, கேப்டன் விராட்கோலி, விஜய்சங்கர் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

    கடந்த ஆட்டத்தில் அணியில் மாற்றம் செய்தும் பலன் இல்லை. இதனால் நாளைய ஆட்டத்தில் பந்துவீச்சில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2 பேட்டிங்கிலும் பனிப்பொழிவு வெற்றி- தோல்வியை முடிவு செய்தது. கேப்டன் கோலி இதை சரியாக கணிக்காமல் தவறான முடிவை எடுத்தார். இதனால் டெல்லி போட்டியில் அவர் ஆடுகளத்தின் தன்மையை சரியாக கணிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.

    20 ஓவர் தொடரை வென்றது போல ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் வேட்கையில் ஆஸ்திரேலியா உள்ளது.

    கடந்த பேட்டிங்கில் டர்னரின் அபாரமான ஆட்டம் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. மேலும் உஸ்மான் கவாஜா, ஹேண்ட்ஸ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்துவீச்சில் கம்மின்ஸ், ரிச்சர்ட்சன் சிறப்பாக உள்ளனர். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் திகழும் ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்கு பழிதீர்க்கும் வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 136-வது போட்டி ஆகும் இதுவரை நடந்த 135 பேட்டிங்கில் இந்தியா 49-ல் ஆஸ்திரேலியா 76-ல் வெற்றிபெற்று உள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. #INDvAUS
    மோசமான பீல்டிங்கால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்ததாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvAUS #ViratKholi
    மொகாலி:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒரு நாள் போட்டியில் 358 ரன் குவித்தும் இந்தியா தோல்வி அடைந்தது.

    மொகாலியில் நடந்த இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது.

    தொடக்க வீரர் தவான் சதம் அடித்தார். 115 பந்தில் 18 பவுண்டரி, 3 சிக்சருடன் அவர் 143 ரன்கள் குவித்தார். ஒரு நாள் போட்டியில் தவானின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும். இதற்கு முன்பு 2015-ல் மெல்போர்னில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 137 ரன் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    மற்றொரு தொடக்க வீரர் ரோகித்சர்மா 92 பந்தில் 95 ரன் (7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். கம்மின்ஸ் 5 விக்கெட்டும், ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    ஆஸ்திரேலிய அணி 359 ரன் இலக்கை எளிதில் எடுத்து இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. ஆஸ்டன் டர்னரின் அதிரடியால் அந்த அணிக்கு எளிதான வெற்றி கிடைத்தது.

    ஆஸ்திரேலிய அணி 47.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 359 ரன் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீட்டர் ஹேண்ட்ஸ் ஹோம் சதம் அடித்தார். அவர் 105 பந்தில் 117 ரன்னும் (8பவுண்டரி, 3 சிக்சர்) தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 99 பந்தில் 91 ரன்னும் (7 பவுண்டரி) டர்னர் 43 பந்தில் 84 ரன்னும் (5 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். பும்ரா 3 விக்கெட் கைப்பற்றினார்.

    இந்தியாவின் பீல்டிங் மிக மோசமாக இருந்தது. பல கேட்சுகளை தவற விட்டனர். டர்னரை விக்கெட் கீப்பர் ரிசப்பண்ட், ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை தவற விட்டார்.

    இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறியதாவது:-

    எங்களது பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் நாங்கள் வெற்றி வாய்ப்பை தவற விட்டோம். ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும் போது பனி பொழிவு முக்கிய பங்கு வகித்தது. பனி பொழிவு குறித்து 2-வது முறையாக தவறாக கணித்து விட்டோம். இதனால் பந்து வீசுவது சவாலாக இருந்தது. பனி பொழிவு பந்து வீச்சை சேதப்படுத்தி விட்டது.

    டர்னர் சிறப்பாக விளையாடி ஆட்டத்தின போக்கை மாற்றிவிட்டார். இதே போல ஹேண்ட்ஸ் ஹோம், உஸ்மான் கவாஜாவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வெற்றிக்கு அந்த அணி தகுதியானது. அவர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். சாதனையான இந்த சேசிங்கை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

    இன்னும் கடினமாக உழைத்து அடுத்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற முயற்சிப்போம்.

    நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை சீரற்றதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆட்டத்திலும் டி.ஆர்.எஸ். பற்றி விவாதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த வெற்றி முலம் ஆஸ்திரேலியா 5 போட்டிக் கொண்ட தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி ஆட்டம் டெல்லியில் வருகிற 13-ந்தேதி நடக்கிறது. #INDvsAUS #ViratKholi
    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் 24 சிக்சர் அடித்து இங்கிலாந்து அணி உலக சாதனை படைத்துள்ளது. #ENGvWI
    செயின்ட் ஜார்ஜ்:

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி செயின்ட் ஜார்ஜில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 418 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இங்கிலாந்தின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். கேப்டன் மோர்கன் (103 ரன், 88 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (150 ரன், 77 பந்து, 13 பவுண்டரி, 12 சிக்சர்) சதமும், பேர்ஸ்டோ (56 ரன்), அலெக்ஸ் ஹாலெஸ் (82 ரன்) அரைசதமும் அடித்தனர். இங்கிலாந்து தரப்பில் மொத்தம் 24 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. ஒரு நாள் போட்டி வரலாற்றில் ஒரு இன்னிங்சில் விளாசப்பட்ட அதிகபட்ச சிக்சர் இது தான். இதற்கு முன்பு இதே தொடரில் முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 23 சிக்சர் அடித்ததே சாதனையாக இருந்தது.

    பின்னர் 419 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. #ENGvWI
    இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை நடக்கிறது. #INDvsENG
    மும்பை:

    ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி நடக்கிறது.

    இந்த போட்டி குறித்து இந்திய கேப்டன் மிதாலி ராஜ் அளித்த பேட்டியில், ‘உலக சாம்பியனான இங்கிலாந்து அணி மிகவும் வலுவானதாகும். எனவே நாம் நம்பிக்கையுடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும். 2021-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதற்கு இந்த போட்டி முடிவு எங்களுக்கு மிகவும் முக்கியமானதாகும். எனவே இந்த போட்டி தொடரில் இருந்து முடிந்த வரை அதிக புள்ளிகள் பெற முயற்சிப்போம்’ என்றார்.
    ×