என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரஷியா"

    • நேற்றி இரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் தாக்குதல்.
    • பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலமாகவும் தாக்குதல்.

    ரஷியா நேற்றிரவு முதல் இன்று காலை வரை இடைவிடாமல் டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.

    479 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில், 20-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்துள்ளது.

    இரவு நேரங்களில் டிரோன்களை கண்டுபிடித்து அழிப்பது சிரமம் என்பதால், மாலை நேரத்தில் இருந்து காலை வரை டிரோன் தாக்குதலை நடத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

    ஷாஹேத் வகை டிரோன்கள் மூலம் மக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து ரஷியா டிரோன் தாக்குதல் நடத்திய வருகிறது. கடந்த 3 வருடத்திற்கு மேலாக ரஷியா நடத்திய தாக்குதலில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

    கடந்த வாரம் ரஷியா விமானப்படை தளத்தை குறிவைத்து உக்ரைன் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் 20-க்கும் மேற்பட்ட ரஷிய விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் இருந்து ரஷியா தாக்குதலை அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே ரஷியா- உக்ரைன் இடையே நேரடி அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் ஆயிரக்கணக்கான கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    • கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
    • உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

    ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.

    இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) ரஷிய படைகள் உக்ரைனின் ஒன்பது பிராந்தியங்களில் இந்த தாக்குதலை நடத்தியது. கீவ், லிவிவ் மற்றும் சுமி போன்ற முக்கிய நகரங்கள் இந்தத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.

    இந்த தாக்குதல்களில் கியேவில் மூன்று தீயணைப்பு வீரர்கள், லுட்ஸ்கில் இரண்டு பொதுமக்கள் மற்றும் செர்னிஹிவில் ஒருவர் இறந்ததை உக்ரைனின் அவசர சேவைகள் உறுதிப்படுத்தின. இதன் மூலம் பலி எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

    இந்தத் தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி "இன்று, நாட்டின் பல பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ரஷியா ஏவிய 400 ட்ரோன்கள் மற்றும் 40க்கும் மேற்பட்ட ஏவுகணைகளால் 80 பேர் காயமடைந்தனர். இன்னும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம்" என்று கூறினார்.

    மேலும், "துரதிர்ஷ்டவசமாக, உலகில் உள்ள அனைவரும் இந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கவில்லை. புதின் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொள்கிறார். போரைத் தொடர அவர் நேரத்தை வாங்குகிறார்" என்று ஜெலன்ஸ்கி கூறினார்.

    மறுபுறம், உக்ரைனின் 'ஆபரேஷன் ஸ்பைடர்வெப்'-க்கு பழிவாங்கும் விதமாக இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

    • ரஷியா- உக்ரைன் இடையே 3 வருடத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.
    • இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.

    உக்ரைனின் வடக்குப் பகுதியில் உள்ள பிரைலுகி நகர் மீது ரஷியா நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்ததாக வியாசெஸ்லாவ் சாஸ் கவர்னர் தெரிவித்துள்ளார். 5 பேர் உயிரிழந்த நிலையில் 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    6 டிரோன்கள் பிரைலுகி பகுதியில் இன்று அதிகாலை தாக்கியது. இதில் பல குடியிறுப்பு கட்டிடங்கள் சேதமடைந்தன.

    இந்த தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்தில் கிழக்கு உக்ரைன் நகரான கார்கீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கர்ப்பிணி பெண், குழந்தைகள் உள்பட 17 பேர் காயம் அடைந்துள்ளனர். இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகளை டிரோன் தாக்கியது. இதில் பல வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து நாசமாகின.

    சில தினங்களுக்கு முன் உக்ரைன் ரஷியாவின் விமானத் தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பல விமானங்கள் சேதடைந்தன.

    • சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
    • படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    மூன்று வருட போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவும் உக்ரைனும் துருக்கியில் மீண்டும் நேற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன.

    சுமார் இரண்டு வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நேற்று இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

    ரஷியாவின் போர் விமானத் தளங்கள் மீது உக்ரைன் ஒரு பெரிய டிரோன் தாக்குதலை நடத்திய மறுநாளே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது.

    இந்த பேச்சுவார்த்தை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதில் போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் உக்ரைன் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹிரோனிமி டைக்வி வெளியிட்ட தகவலின்படி, கூட்டத்திற்குப் பிறகு, போர்க் கைதிகள் (POW) பரிமாற்றம் குறித்து ஒரு புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக படுகாயமடைந்தவர்கள் மற்றும் இளைஞர்களை விடுவிப்பதில் கவனம் செலுத்துவதாகவும் உமெரோவ் கூறினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, " போர்க் கைதிகளை விடுவிப்பதற்கு நாங்கள் மீண்டும் தயாராகி வருகிறோம்" என்றார்.

    கடந்த பேச்சுவார்த்தையிலும் போர் கைதிகளை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

    • அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.
    • சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

    உக்ரைன் ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டிரோன் தாக்குதலை இன்று நடத்தியிருக்கிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய அமைதிப் பேச்சுவார்த்தைகள் நாளை (ஜூன் 2) இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த தாக்குதல் பதட்டங்களை அதிகரித்துள்ளது.

    'ஆபரேஷன் ஸ்பைடர் வெப் ' (பாவுடின்) என்ற பெயரில், உக்ரைனின் பாதுகாப்பு சேவை (SBU) இந்த மெகா நடவடிக்கையை மிகவும் ரகசியமாக திட்டமிட்டு செயல்படுத்தியதாக நம்பப்படுகிறது.

    இந்த தாக்குதல்களின் ஒரு பகுதியாக பெலாயா (கிழக்கு சைபீரியா), பின்லாந்துக்கு அருகிலுள்ள ஆர்க்டிக்கில் உள்ள ஒலென்யா மற்றும் மாஸ்கோவிற்கு அருகிலுள்ள இவானோவோ மற்றும் டியாகிலெவ் உள்ளிட்ட பல முக்கிய ரஷிய விமான தளங்கள் குறிவைக்கப்பட்டதாக உக்ரேனிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    இந்த தாக்குதல்களில் 40க்கும் மேற்பட்ட ரஷிய போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக உக்ரேனிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அழிக்கப்பட்டவற்றில் அதிநவீன Tu-95 மற்றும் Tu-22M3 அணுகுண்டு குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் ஒரு A-50 உளவு விமானம் ஆகியவை அடங்கும்.

    சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் உள்ள ஸ்ரிட்னி கிராமத்தில் உள்ள தங்கள் ராணுவ தளத்தின் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதை அந்தப் பிராந்தியத்தின் ரஷிய ஆளுநரே உறுதிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சரக்கு லாரிகளில் பொருத்தப்பட்ட கொட்டகைகளில் டிரோன்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், டிரோன்கள் ஏவுவதற்காக குறிப்பிட்ட நேரங்களில் லாரிகளின் கூரைகள் தொலைவிலிருந்து திறக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    ரஷியாவைப் போல விரிவான ஏவுகணை இருப்புக்கள் இல்லாத உக்ரைன், முக்கிய ஆயுதமாக டிரோன்களையே அதிகம் நம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.
    • 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எடுத்தார்.

    ரஷியா- உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சுவர் போல பாதுகாக்கும் மெய்க்காப்பாளர்கள் வைரலாகி வருகின்றனர்.  

    ரஷிய அரசு ஊடகமான RT இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

    உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி ஒரு புத்தகக் கண்காட்சியைப் பார்வையிட்டபோது, மெய்க்காப்பாளர்கள் அவரைப் பாதுகாப்பதைக் காட்டும் படத்தைப் RT பகிர்ந்து கேலி செய்துள்ளது.

    கண்காட்சியில் ஜெலென்ஸ்கி 'டு கில் எ டைரண்ட்' என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படிக்க எடுத்ததாகக் கூறப்படுகிறது.  

    • தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது.
    • இந்த விபத்தில் 70 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ரஷியாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் உள்ள கிளி மோவ் நகரத்தில் இருந்து தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகள் ரெயில் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அந்த ரெயில், பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பில்ஷினோ, வைகோனிச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது அங்கிருந்த ஒரு பாலம் திடீரென்று இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன.

    அப்போது தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது. இதனால் ரெயில் தடம் புரண்டு கவிழ்ந்தது. ரெயில் பெட்டிகள் ஒன்றோடு ஒன்று மோதி கவிழ்ந்தது. உடனே மீட்புக்குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    கவிழ்ந்த ரெயில் பெட்டி யில் இருந்த பயணிகளை மீட்டனர். ரெயில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 7 பேர் பலியானார்கள். 70 பேர் படுகாயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    ரஷியா-உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் இந்த ரெயில் கவிழ்ந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு சதி செயல் காரணம் என்று ரஷியா தெரிவித்துள்ளது. மேம்பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இச்சம்பவம் நடந்த பகுதி உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் இந்த சம்பவத்தில் உக்ரைன் சதிச் செயல் இருக்கலாம் என்று ரஷிய அதிகாரிகள் சந்தே கத்தை எழுப்பியுள்ளனர்.

    • யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.
    • ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.

    ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிக்க விரும்புவதாக ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

    சீனாவிற்கு எதிரான சதியில் இந்தியாவை ஈடுபடுத்த நேட்டோ கூட்டணி வெளிப்படையாக முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

    ரஷியாவில் நடைபெற்ற யூரேசியா (ஐரோப்பா மற்றும் ஆசியா) பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு சர்வதேச மாநாட்டில் லாவ்ரோ பங்கேற்றார்.

    அதில் அவர் பேசியதாவது, "முன்னாள் ரஷ்ய பிரதமர் யெவ்ஜெனி ப்ரிமகோவ் தலைமையில் பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட ரஷியா -இந்தியா-சீனா கூட்டணியின் பணிகளை விரைவில் மீண்டும் தொடங்க விரும்புகிறோம்.

    இந்தக் கூட்டணி மூன்று நாடுகளின் பொருளாதார மற்றும் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தலைவர்களுடன் 20க்கும் மேற்பட்ட சந்திப்புகளை நடத்தியுள்ளது.

    எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இந்தியாவும் சீனாவும் ஒரு உடன்பாட்டை எட்டியுள்ளன. எனவே, கூட்டணியை மீண்டும் உயிர்ப்பிப்பதற்கான நேரம் வந்துள்ளது," என்று அவர் கூறினார்.

    • துருக்கியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
    • முதற்கட்ட பேச்சுவார்த்தைக்குப்பின் மிகப்பெரிய அளவில் கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    உக்ரைன்- ரஷியா இடையில் அமைதி ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட நேரடி அமைதி பேச்சுவார்த்தை துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்றது. இதில் இருநாட்டு அதிகாரிகளும் நேருக்குநேர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் குறைவாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இருநாடுகளும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகளை பரிமாற்றிக்கொள்ள ஏற்றுக்கொண்டன. இதனைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் நடைபெற்றது.

    இந்த நிலையில் வருகிற திங்கட்கிழமை 2ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு ரஷியா பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரையை உக்ரைன் ஏற்றுக்கொள்ளுமா? என்பது தெரியவில்லை. இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் டாப் ஆலோசகர் ஆண்ட்ரிய் யெர்மக் கூறியதவாது:-

    அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் கலந்து கொள்ள உக்ரைன் தயாராக இருக்கிறது. ஆனால், நாங்கள் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறோம். இதன் அர்த்தம், ரஷியாவின் நிபந்தனையை பெறுவது முக்கியமானது. இன்னும் மூன்று நாட்கள் உள்ளது. நிபந்தனைக்கான வரைவை தயாரித்து அனுப்புவதற்கு போதுமான நேரம் உள்ளது.

    இவ்வாறு யெர்மார்க் தெரிவித்துள்ளார்.

    3 வருடத்திற்கு மேலாக நடைபெற்று வரும் ரஷியா- உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விரும்புகிறார். முதற்கட்டமாக 30 நாள் போர் நிறுத்தத்திற்கான பரிந்துரையை அமெரிக்கா வழங்கியது.

    மேற்கத்திய நாடுகளிடம் இருந்து ஆயுதங்கள் பெறுவதை உக்ரைன் நிறுத்த வேண்டும் என ரஷியா முக்கிய நிபந்தனையாக முன் வைக்கிறது. அதேவேளையில் ரஷியா போர் நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தையை தாமதப்படுத்த விரும்புகிறது. உக்ரைன் நாட்டின் பகுதிகளை மேலும் கைப்பற்ற விரும்புகிறது என மேற்கத்திய நாடுகள் ரஷியாவை குற்றம்சாட்டி வருகின்றன.

    • அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது.
    • மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றார்.

    ரஷியவாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவைத் தேடும் வகையில் ஜெலென்ஸ்கி ஜெர்மனிக்கு சென்றுள்ளார்.

    போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தலைமையில் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனாலும் ரஷியாவின் தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இந்த சூழலில் உக்ரைனுக்கு மேலும் இராணுவ ஆதரவை பெறும் வகையில் இன்று ஜெலன்ஸ்கி ஜெர்மனி சென்றார். அங்கு தலைநகர் பெர்லினில் புதிய ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸை சந்திக்கிறார்.

    அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கும் இரண்டாவது பெரிய நாடாக ஜெர்மனி உள்ளது. உக்ரைனுக்கு வழங்கப்படும் ஆயுதங்களுக்கு ஜெர்மனியும் பிற முக்கிய நட்பு நாடுகளும் இனி எந்த வரம்பு கட்டுப்பாடுகளையும் விதிக்கபோவதில்லை என்று மெர்ஸ் திங்களன்று கூறினார்.

    மூன்று வாரங்களுக்கு முன்பு ஜெர்மனியின் தலைவராக மெர்ஸ் பொறுப்பேற்றதில் இருந்து மெர்ஸ், போர்நிறுத்தத்தைப் கொண்டுவரவும், உக்ரைனுக்கு மேற்கத்திய ஆதரவை அதிகரிக்கவும் இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

    • நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும்
    • புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார்

    ரஷிய அதிபர் புதின் நெருப்போடு விளையாடுகிறார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காட்டமாக தெரிவித்துள்ளார்.

    தனது சமூக ஊடக பதவியில் டிரம்ப் கூறியதாவது, "நான் மட்டும் இல்லையென்றால் ரஷியாவிற்கு நிறையமோசமான விஷயங்கள் நடந்திருக்கும் என்பதை விளாடிமிர் புடின் உணரவில்லை. நான் சொல்வது மிகவும் மோசமானது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருப்போடு விளையாடுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

    அண்மையில், பல உக்ரேனிய நகரங்களில் ரஷிய விமானப்படை நடத்திய கடுமையான தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டதை தொடர்ந்து புதின் பைத்தியமாகி விட்டார் என்று டிரம்ப் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • உக்ரைனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரஷியாவால் மீட்கப்பட்ட குர்ஸ்க் பகுதி சுமியை ஒட்டியே அமைத்துள்ளது.
    • பாதுகாப்பு இடையக மண்டலத்தை (buffer zone) உருவாக்குமாறு உத்தரவிட்டார்.

    உக்ரைன் எல்லை கிராமங்களை ரஷியா கைப்பற்றியுள்ளது. உக்ரைனின் வடகிழக்கு சுமி பகுதியில் உள்ள நான்கு எல்லை கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளன என்று உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உக்ரைனால் கைப்பற்றப்பட்டு மீண்டும் ரஷியாவால் மீட்கப்பட்ட குர்ஸ்க் பகுதி சுமியை ஒட்டியே அமைத்துள்ளது.

    கடந்த வாரம் குர்ஸ்க் பகுதியை பார்வையிட்ட ரஷிய அதிபர் புதின், நீண்ட எல்லை உக்ரேனிய ஊடுருவல்களுக்கு ஆளாகக்கூடியதாக உள்ளது என்று கூறினார். எனவே எல்லையில் ஒரு "பாதுகாப்பு இடையக மண்டலத்தை" (buffer zone) உருவாக்குமாறு ரஷிய இராணுவத்திடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில்தான் சுமியில் உள்ள கிராமங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. கிராமங்களைக் கைப்பற்றிய பிறகு ரஷிய படைகள் உக்ரைனுக்குள் முன்னேற முயற்சிக்கின்றன என்று சுமி பிராந்திய இராணுவ நிர்வாகத்தின் தலைவர் ஓலே ஹ்ரிஹோரோவ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

    கைப்பற்றப்பட்ட கிராமங்களில் வசிப்பவர்கள் முன்னதாகவே வெளியேற்றப்பட்டனர். மேலும் பொதுமக்களுக்கு உடனடி அச்சுறுத்தல் இல்லை என்று ஹ்ரிஹோரோவ் கூறினார்.

    ரஷியா - உக்ரைன் போர் நிலவரம்

    மூன்று ஆண்டுகளில் முதல் நேரடிப் பேச்சுவார்த்தைக்காக இந்த மாத தொடக்கத்தில் துருக்கியில் ரஷிய மற்றும் உக்ரைன் பிரதிநிதிகள் சந்தித்தனர். இதில் கைதிகள் பரிமாற்றம் மட்டுமே முடிவு செய்யப்பட்டது.

    கடந்த வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடையில், ரஷியா உக்ரைனில் சுமார் 900 ட்ரோன்களை ஏவியது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு, ரஷியா உக்ரைனுக்கு எதிரான 355 டிரோன்களை ஏவி 3 ஆண்டுகாலப் போரில் மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியது

    இந்த திங்கள் முதல் செவ்வாய் வரை, ரஷியா உக்ரைனில் 60 டிரோன்களை வீசியதாக உக்ரைன் விமானப்படை இன்று தெரிவித்துள்ளது.

    அதேநிறத்தில் ஏழு ரஷிய பிராந்தியங்களில் ஒரே இரவில் அதன் வான் பாதுகாப்பு 99 உக்ரேனிய டிரோன்களை வீழ்த்தியதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    ×