என் மலர்tooltip icon

    உலகம்

    கியூபாவை முற்றுகையிடுவதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்காவுக்கு ரஷியா வலியுறுத்தல்
    X

    கியூபாவை முற்றுகையிடுவதை தவிர்க்க வேண்டும்: அமெரிக்காவுக்கு ரஷியா வலியுறுத்தல்

    • வெனிசுலா மற்றும் மெக்சிகோவி கச்சா என்னை சப்ளையை நிறுத்தியுள்ளார்.
    • எரிபொருள் தட்டுப்பாட்டால் கியூபாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    கியூபாவுக்கு வெனிசுலா மிகப்பெரிய அளவில் கச்சா எண்ணெய் சப்ளை செய்து வந்தது. வெனிசுலாவை முற்றுகையிட்ட அமெரிக்கா, அதன் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்து அதன் நாட்டிற்கு கொண்டு சென்றுவிட்டது. இதனால் ஜனவரி மாதத்தில் இருந்து வெனிசுலா கியூபாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளையை நிறுத்தியது.

    வெனிசுலாவிற்கு அடுத்தப்படியாக மெக்சிகோ அதிக அளவில் கியூபாவிற்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்தது. கியூபாவிற்கு எண்ணெய் சப்ளை செய்தால், கடுமையான வரி விதிப்போம் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால் மெக்சிகோவும் எண்ணெய் சப்ளையை நிறுத்தியது. இதனால் கியூபாவில் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருளாதா நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    விமானங்களுக்கு எரிபொருள் வழங்க இயலாது என்று கியூபா அரசு தெரிவித்துள்ளது. இதனால் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஷியாவின் சுற்றுலா நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில்தான் கியூபா வெளியுறவுத்துறை மந்திரி ப்ரூனோ ரோட்ரிக்ஸ், ரஷியாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்கெய் லாவ்ரோவை சந்தித்தார்.

    அப்போது செர்கெய் லாவ்ரோவ் "உலகளாவிய சமூகத்தின் பெரும்பாலான உறுப்பினர்களுடன் சேர்ந்து, அமெரிக்கா பொது அறிவைக் காட்டவும், பொறுப்பான அணுகுமுறையை எடுக்கவும், கடல் முற்றுகைத் திட்டங்களிலிருந்து விலகி இருக்கவும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

    நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பைப் பாதுகாப்பதில் கியூபாவிற்கும் அதன் மக்களுக்கும் ரஷியா தொடர்ந்து ஆதரவளிக்கும்" என்றார்.

    ரஷிய அதிபர் மாளிகை செய்தி தொடர்பானர் "பல நாடுகளைப் போலவே, ரஷியாவும் கியூபாவின் முற்றுகைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது" என்றார்.

    கியூபா வெளியுறவுத்துறை மந்திரி ப்ரூனோ ரோட்ரிக்ஸ் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச இருக்கிறார்.

    Next Story
    ×