என் மலர்

    நீங்கள் தேடியது "usa"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் ரஷியா போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது.
    • ஜெர்மனி, அமெரிக்காவின் முடிவுகளை ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.

    வாஷிங்டன் :

    கிரீமியாவைத் தொடர்ந்து உக்ரைனின் கிழக்கு பகுதியையும் ஆக்கிரமிக்க ரஷியா திட்டமிட்டபோது, அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு தேட உக்ரைன் முடிவு எடுத்தது. ஆனால் இதில் கொந்தளித்துப்போன ரஷியா, உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி போர் தொடுத்தது.

    உலகமே எதிர்பார்க்காத நிலையில், இந்தப் போர் 11 மாதங்களைக் கடந்து விட்டது. இன்னும் நீளுகிறது. வல்லரசு நாடான ரஷியாவை போரில் சமாளிக்க உக்ரைனுக்கு அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் பக்க பலமாக இருக்கின்றன. இதனால் எதிர்பார்த்தபடி உக்ரைனை ரஷியாவால் வாரிச்சுருட்டிக்கொள்ள முடியாமல் போனது.

    தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவியை வழங்க வேண்டும் என்று உக்ரைன் வலியுறுத்தி வந்தது.

    இந்த நிலையில் உக்ரைனுக்கு அதிநவீனமான 'லெப்பேர்டு-2' ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு எடுத்துள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் நேற்று முன்தினம் அறிவித்தார்.

    இதுகுறித்து அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் அவர் பேசும்போது, "உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பி வைக்க முடிவு செய்திருப்பது சரியான கொள்கை ஆகும். நாங்கள் மிகவும் பயனுள்ள ஆயுத அமைப்புகளை கையாள்கிறோம். எப்போதும் நெருக்கமான ஒத்துழைப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்" என தெரிவித்தார்.

    உக்ரைனுக்கு லெப்பேர்டு-2 ரக பீரங்கிகள் 14-ஐ அனுப்பும் முடிவை ஜெர்மனி பிரதமர் ஒலாப் ஸ்கோல்ஸ் வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது அவர், உக்ரைனுக்கு அதிநவீன 'எம்-1 ஆப்ராம்ஸ்' ரக பீரங்கிகள் 31-ஐ அனுப்பும் முடிவை வெளியிட்டார்.

    வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் மற்றும் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஆகியோரை உடன் வைத்துக்கொண்டு இந்த முடிவை ஜோ பைடன் அறிவித்தபோது, "உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள் அதிகரிப்பதை ரஷியா மீதான தாக்குதலாக பார்க்கக்கூடாது. இது உக்ரைன் மண்ணைப் பாதுகாக்க அந்த நாட்டுக்கு உதவுவதுதான். இது ரஷியாவுக்கு அச்சுறுத்தல் ஆகாது. ரஷியாவுக்கு எந்தவிதமான தாக்குதல் அச்சுறுத்தலும் இல்லை" என்று கூறினார்.

    ஜெர்மனியும், அமெரிக்காவும் உக்ரைனுக்கு அதிநவீன பீரங்கிகளை அனுப்பும் நிலையில், பிற மேற்கத்திய நாடுகளும் அந்த நாட்டுக்கு உதவிக்கரம் நீட்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவுகளை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வரவேற்றுள்ளார்.

    இதுபற்றி அவர் கருத்து தெரிவிக்கையில், "இது வெற்றியின் பாதைக்கு மிக முக்கியமான படியாக அமைகிறது. இன்று சுதந்திர உலகம், ஒரு பொதுவான குறிக்கோளுக்காக உக்ரைனின் விடுதலைக்காக முன் எப்போதும் இல்லாத வகையில் ஒன்றுபட்டுள்ளன" என குறிப்பிட்டார்.

    ரஷியா எதிர்ப்பு

    ஆனால் ஜெர்மனி மற்றும் அமெரிக்காவின் முடிவை ரஷியா எதிர்த்துள்ளது.

    இதுபற்றி அமெரிக்காவுக்கான ரஷிய தூதர் அனட்டாலி ஆன்டனோவ் கருத்து கூறுகையில், "ஆப்ராம்ஸ் பீரங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பி வைக்கும் அமெரிக்காவின் முடிவு, ரஷிய கூட்டமைப்புக்கு எதிரான மற்றொரு அப்பட்டமான ஆத்திரமூட்டும் நடவடிக்கையாக இருக்கும்" என தெரிவித்தார்.

    ஜெர்மனிக்கான ரஷிய தூதர் செர்ஜி நெச்சேவ் கருத்து தெரிவிக்கையில், "மிகவும் ஆபத்தான இந்த முடிவு, மோதலை ஒரு புதிய நிலை மோதலுக்கு கொண்டு செல்கிறது" என குறிப்பிட்டார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஆறு , நதி , குளம் என எங்கும் எவரும் நேராய் போய் மீன் பிடித்து விட முடியாது.
    • மான்களோ, காட்டுப் பன்றிகளோ பெருத்து விட்டால் அரசாங்கமே போய் வேட்டையாடுங்கள்...! என அனுமதிக்கும்.

    அமெரிக்காவின் சட்ட திட்டங்கள் கடுமை என்றாலும் கூட, அவற்றில் சில சட்டங்கள் வினோதமும் கூட! அதில் ஒன்று முடி திருத்தம்!

    நம்மூரில் எளிதாய் நடப்பவைகள் கூட அங்கு விலை அதிகம். காய்கறி, மளிகை, துணிகள் முதல் காலனிகள் வரை யம்மாடி! மருத்துவத்துக்கு.. யம்மம்மா! கார் வாஷுக்கு எவ்ளோ தெரியுமா... 24 ஆயிரம் ரூபாய்!

    பணம் ஒரு பக்கமிருக்க, ஒவ்வொன்றிற்கும் அப்பாயின்மென்ட் என்பது மகா ரோதனை !

    அதனால் அமெரிக்கா செல்பவர்கள் உடல்நலம் பரிசோதித்து, வேண்டிய மருந்துகள், உபயோகிக்கும் பொருட்கள் என கையோடு எடுத்துச் செல்வர்.

    முடிவெட்ட அங்கு ரூபாய் 2000 என்பதால் இங்கேயே (ஒட்ட) வெட்டிக் கொண்டு செல்பவர்களும் உண்டு. (ஹி..ஹி-அடியேனும்!)

    இம்முறை அதையும் மீறி முடி வளர்ந்துவிட யோகிபாபுவுக்கு போட்டி வேண்டாம். காசு போனாலும் பரவாயில்லை என்று ஒரு வழியாய் மனதை தேற்றிக் கொண்டேன். ஆனால் அப்பாயின்மென்ட் இழுத்தடித்தது.

    அப்புறம் எங்கள் மாப்பிள்ளை வசிக்கும் காலனியிலேயே வீட்டில் வைத்து வெட்டுகிறார்கள் என்று கேள்விப்பட்டு, அப்பாயின்மென்ட் வாங்கிவிட்டேன்!

    அவர் ரஷ்ய பெண்ணாம். வீட்டில் அனைத்து வசதிகளும் வைத்து மிகச் சிறப்பாக மிக நேர்த்தியாக வெட்டிவிட்டார். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் , பணிவாக பக்குவமாக!

    இதுவே அப்பாயின்மென்ட் எடுத்து கடைக்கு சென்றால் கூட படுத்தி எடுத்து விடுவர். மனிதாபிமானமே இல்லாத வகையில் புல் வெட்டுவது போல மிஷின் போட்டு விரட்டியடிப்பர்.

    இந்த ரஷ்ய அக்காவிடம் பேச்சு கொடுக்க (முடி திருத்தர்கள் பேச சளைப்பதில்லையே!) சில விஷயங்களை சொல்லி விசனப்பட்டார்!

    பாஷை பிரச்சினையில் அது புரியாமல் போக நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த பியூட்டிஷின்களான ரோஷினி மற்றும் ரம்யாவிடம் விசாரித்த போது அம்மாடியோவ்!

    ஒரு முடிவெட்டும் தொழிலுக்கு இம்புட்டா என்கிற மலைப்பு!

    அமெரிக்கர்களின் தோல் ரொம்ப மிருதுவானதாம். சின்னச் சின்ன செதுக்கங்கள் கூட நச்சு பண்ணி விடக் கூடுமாம்.

    அதனால் ஏகப்பட்ட கெடுபிடியாம். பியூட்டிஷினுக்கு ஒரு வருட படிப்பு! முடி திருத்தத்திற்கு 8 மாதம்! அதுவும் நேராய் வகுப்புகளுக்குச் செல்ல வேண்டும். படிப்போடு பிராக்டிகல் கிளாஸ்களும் உண்டு!

    அதன் பின் ஒன்று எழுத்து அடுத்து பிராக்டிகல் என இரண்டு பரீட்சைகள்! அவைகள் கடுமையாக இருக்கும். எந்த சால்சாப்புக்கும் அங்கே இடம் கிடையாது.

    அவற்றில் பாஸ் செய்தால் தான் லைசன்ஸ்! லைசன்ஸ் பெற்றாலும் கூட யாரும் உடனே சொந்தமாய் தொழிலில் இறங்கிவிட முடியாது.

    அனுமதி பெற்றுள்ள சலூனில் குறிப்பிட்ட காலம் பணிபுரிந்தாக வேண்டும். நம்ம ஊரு போல ஒரு கத்திரிக்கோலை தொடர்ந்து பலருக்கும் உபயோகிக்க முடியாது. சானிடைஸ் செய்யணும். தரமான கிரீம்களை பயன்படுத்தனும்.

    இந்த லைசன்ஸ் எடுக்க செலவு எவ்வளவு ஆகும் தெரியுமா...? ரூபாய் 25 லட்சம்!

    இந்த தொகைக்கு நம்மூர் அரசு கல்லூரியில் மருத்துவம் அல்லது பொறியியல் பட்டமே பெற்று விடலாமே!

    கையோடு அங்குள்ள இன்னொரு லைசன்ஸ் சமாச்சாரத்தையும் சொல்லத் தோன்றுகிறது. அது மீன்பிடிப்பு !

    ஆறு , நதி , குளம் என எங்கும் எவரும் நேராய் போய் மீன் பிடித்து விட முடியாது. அதற்கும் இங்கு லைசென்ஸ் வேண்டும். மீன்பிடிப்பதற்கென்று ஒரு இதம் பதம் இருக்கின்றது. இங்கிதம்! சட்ட திட்டம்! கட்டுப்பாடுகள்!

    அவைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். மீன்களின் அளவு , சீதோஷ்ண நிலை இவற்றை பொறுத்து அது வேறுபடும்.

    கடல் மீன்களை பிடிக்கமட்டும் பிரச்சனை இல்லை. படகுகளுக்கு தனி வரைமுறைகள் உண்டு. மீன்பிடிப்பு என்பது அங்கு விலை உயர்ந்த பொழுதுபோக்கு.

    ஆமாம்.. இதற்காக லைசன்ஸ்க்கு மனு தாக்கல் செய்யணும். அதற்கு குறைந்தபட்சம் ரூபாய் 5 ஆயிரம். ஒரு மாதம் , வருடம் என அந்த கட்டணம் எகிறும்.

    வெயில் நேரங்களில் மீன்கள் தண்ணீருக்கு அடியில் சென்று விடும். அதனால் மீன்பிடிக்க உகந்த நேரம் மாலை தான். மீன் பிடிக்க வேண்டி பிரத்யேக தூண்டில்கள் உள்ளன. இதற்கான கடைகளுக்கு சென்றால் அவர்களே பயிற்சி தருவார்கள். லைசன்ஸ் எடுத்தும் தருவார்கள். தூண்டில் புழுக்களும் அங்கேயே கிடைக்கும்.

    அப்புறம் லைசன்ஸ் எடுத்துவிட்டால் போதும் என மீன்பிடித்துவிட முடியாது. அதற்காக அனுமதிக்கப்பட்ட இடங்களில் முன்பதிவு அடிப்படையிலேயே போகவேண்டும்.

    பிடிக்கும் மீன்களையும் கூட நாம் எடுத்து வர முடியாது. ஆசை தீர பிடித்து பிடித்து திரும்ப நீரிலேயே விட்டுவிட்டு ஆசையை தீர்த்துக்கொள்ள வேண்டும்.!

    மீன்கள் அதிகரிக்கும் போது அரசாங்கம் தெரிவிக்கும். அப்போது மீன்களை பிடித்து எடுத்துச் செல்லலாம்.

    அதுவும் கூட எத்தனை மீன்கள்-என்ன வகையான மீன்களை பிடிக்கிறோம்-எடுத்துச் செல்கிறோம் என கணக்கு கொடுக்க வேண்டும். அது கெட்டது போ!

    அதுபோல வேட்டையாடுவதிலும் கட்டுப்பாடுகள் உள்ளன.

    ஆதி காலத்தில் அமெரிக்காவிற்கு மனிதர்கள் வந்தபோது சாப்பாடு எதுவும் கிடையாது. மீன் மற்றும் மிருகங்களை வேட்டையாடி சுட்டுத் தான் சாப்பிட்டார்கள்.

    அந்த பழக்கம் இப்போது பொழுதுபோக்காக நடக்கிறது. இதற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்.

    பறவைகள் மிருகங்கள் என ஒவ்வொன்றிற்கும் தனித்தனி துப்பாக்கிகள்!

    வேட்டையையும் எந்த நேரத்திலும் செய்து விட முடியாது. இதற்காக காடுகளை பகுதி பகுதியாய் பிரித்து வைத்துள்ளனர். விடுமுறையிலோ வார இறுதி நாட்களிலோ அவர்கள்.... வேட்டையாடு...விளையாடு!

    துணைக்கு நாய்களை வைத்துக்கொண்டு கிளம்பிவிடுவர். காட்டிலேயே தங்குவதற்கு குடில்கள் உண்டு. மிருகங்களை சுடுவதற்கு பயிற்சி வேண்டும்.

    அவற்றை காலில் சுட்டுக் காயப்படுத்த கூடாது. சுட்டால் அவை சாக வேண்டும். அவற்றை எடுத்து வந்து புட்சரிடம் (வெட்டி தருபவர்கள்) கொடுத்து கூறு போடுவர். பிறகு பதப்படுத்துபவரிடம் (டாக்சி டெர்மிஸ்ட்) கொடுத்து வாங்கி வந்து குளிர்சாதனத்தில் வைத்து மாத கணக்கில் சாப்பிடுபவர்களும் உண்டு.

    மான் வேட்டை என்பது அங்கு மிகப் பிரபலம்!

    சமயத்தில் சாலைகளுக்கு குறுக்கே மான் வந்துவிட்டால் ஆபத்து. காரையே அது பதம் பார்த்து விடும்.

    அப்படி மானை தட்டி விட்டால்-உடன் அதிகாரிகளுக்கு தெரிவித்தாக வேண்டும். ஒரு வேளை தெரிவிக்காமல், அடுத்து வரும் கார் நபர் புகார் அளித்தால் போச்சு... தண்டனை தான்.

    அங்கே மான் வேட்டை பொதுவாக கூடாது. ஆனால் மான்களோ, காட்டுப் பன்றிகளோ பெருத்து விட்டால் அரசாங்கமே போய் வேட்டையாடுங்கள்...! என அனுமதிக்கும்.

    என்ன ஒரு வினோதம்!

    தொடர்புக்கு:-ncmohandoss@yahoo.com

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது.
    • வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    வாஷிங்டன் :

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை சோதித்து அடாவடி போக்கை கையாண்டு வருகிறது. அந்த வகையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் மட்டும் வடகொரியா 60-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகளை சோதித்துள்ளது. இதில் கண்டம் விட்டு கண்டம் பாயும் சில ஏவுகணைகளும் அடங்கும்.

    அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியில் வடகொரியா இத்தகைய ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில் வடகொரியாவின் தொடர் அடாவடி போக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை வித்துள்ளது.

    அதே போல் தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும் வடகொரியாவுக்கு எதிராக பொருளாதார தடைகளை அறிவித்துள்ளன. வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய 3 மூத்த ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் பல தனிநபர்கள் மீது இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து வடகொரியா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்காவில் ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது.
    • தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இது உலகின் மிகப்பெரிய எரிமலை ஆகும்.

    38 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இந்த எரிமைலையில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. பெரிய அளவிலான நிலநடுக்கங்களை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு எரிமலை வெடிப்பு தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வெடிப்பை தொடர்ந்து எரிமலையில் இருந்து நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. எனினும் அது தற்போது எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன என்றும், எனவே அது குறித்து அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதே சமயம் எரிமலை வெடிப்பு மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்றும் நெருப்பு குழம்பின் ஓட்டம் விரைவாக மாறக்கூடும் என்றும் எச்சரித்து ஆய்வு மையம், எரிமலைக் குழம்பு குடியிருப்பு பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்கினால் அங்கிருந்து வெளியேற தயாராக இருக்குமாறு தீவில் வசிக்கும் சுமார் 2 லட்சம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

    கடந்த 1843ம் ஆண்டில் இருந்து இப்போது வரை 33 முறை சீற்றம் கண்ட மவுனா லோவா கடைசியாக கடந்த 1984-ம் ஆண்டில் வெடித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உக்ரைன் ரஷியா போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • போர் தொடங்கியதில் இருந்து அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

    வாஷிங்டன் :

    உக்ரைன் நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் சின்னபின்னமாகியுள்ளன. பல நகரங்களை ரஷியா தன்வசப்படுத்தியுள்ளது.

    ஆனாலும் உக்ரைன் ராணுவம் துணிச்சலுடன் தொடர்ந்து ரஷிய படைகளை எதிர்த்து சண்டையிட்டு வருகின்றன. உக்ரைனுக்கு உதவியாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவம் மற்றும் பொருளாதார ரீதியான உதவிகளை செய்து வருகின்றன.

    அந்த வகையில், போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைனுக்கு அமெரிக்கா பல ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உதவிகளை வழங்கியுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 400 மில்லியன் டாலர் (சுமார் ரூ.3,238 கோடி) மதிப்புடைய ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் இதனை தெரிவித்தார்.

    புதிதாக வழங்கப்படும் இந்த ராணுவ உதவி தொகுப்பில் முதல் முறையாக அதிநவீன வான்பாதுகாப்பு அமைப்பு, ரஷியாவுக்கு எதிரான தனது பதில் தாக்குதலில் உக்ரைன் வெற்றிகரமாக பயன்படுத்தி வரும் ஹிமார்ஸ் எனப்படும் அதீத சக்தி கொண்ட பீரங்கி ராக்கெட் அமைப்பு உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே உக்ரைனுக்கு வழங்குவதற்காக தென்கொரியாவிடம் இருந்து சுமார் 1 லட்சம் ஹோவிட்சர் பீரங்கி குண்டுகளை அமெரிக்க வாங்க இருப்பதாகவும், இது தொடர்பாக அமெரிக்கா-தென்கொரியா அரசுகள் சிலகாலமாக ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அமெரிக்கா, தென்கொரியா படைகள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    • வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது.

    பியாங்யாங் :

    வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கொரிய எல்லையில் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணைகளை ஏவி சோதித்து வருகிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் தென்கொரியா இதனை பொருட்படுத்தாமல் கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

    அந்த வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் மிகப்பெரிய கூட்டுப்பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கின. இருநாட்டு விமானப்படைகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான விமானங்கள் 24 மணி நேரமும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

    இந்த நிலையில் தென்கொரியாவுடனான கூட்டுப்போர் பயிற்சியை நிறுத்தாவிட்டால் அமெரிக்காவுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து வடகொரியா வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்கா தனது பாதுகாப்பு நலன்களுக்குப் பொருந்தாத எந்தவொரு தீவிரமான முன்னேற்றங்களையும் விரும்பவில்லை என்றால், அது பயனற்ற போர் பயிற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லை என்றால், அது அனைத்து விளைவுகளுக்கும் முற்றிலும் பழியை ஏற்க வேண்டியிருக்கும். கடுமையான ராணுவ ஆத்திரமூட்டல்களில் அமெரிக்கா தொடர்ந்து நீடித்தால் வடகொரியா மிகவும் கடுமையான பதிலடி நடவடிக்கைகளை கையில் எடுக்கும்" என கூறப்பட்டுள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வெள்ளை மாளிகையில் 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவியுடன் தீபாவளி கொண்டாட உள்ளார்.
    • கமலா ஹாரீஸ், டிரம்ப் வீடுகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.

    வாஷிங்டன் :

    இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி இந்தியாவில் வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதைப்போல பல நாடுகளிலும் வாழும் இந்தியர்கள் இந்த பண்டிகையை விமரிசையாக கொண்டாட உள்ளனர்.

    அந்தவகையில் அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி விட்டது. நாட்டின் பல மாகாணங்களின் தலைநகர், கவர்னர் மாளிகைகளில் தீபாவளி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    தலைநகர் வாஷிங்டனில் அரசு சார்பில் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இதில் கலந்துகொள்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இந்திய-அமெரிக்க பிரபலங்கள் தலைநகரில் குவிந்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அமெரிக்க துணை ஜனாதிபதியும், இந்திய வம்சாவளியுமான கமலா ஹாரீஸ், தனது வீட்டில் நேற்று பண்டிகையை கொண்டாடினார். இதற்காக பிரபலமான இந்திய-அமெரிக்கர்கள், இந்திய தூதரக அதிகாரிகள் என ஏராளமானோருக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    மேலும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் புளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று தீபாவளி கொண்டாடினார். இதில் பங்கேற்பதற்காக சுமார் 200 இந்திய-அமெரிக்கர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

    இதில் இந்திய நடன நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும், பங்கேற்றவர்களுக்கு இந்திய உணவுகளும் பரிமாறப்பட்டன.

    இதைப்போல வெள்ளை மாளிகையில் வருகிற 24-ந்தேதி ஜனாதிபதி ஜோபைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் தீபாவளி கொண்டாட உள்ளார். இதில் ஏராளமான இந்தியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்நது 26-ந்தேதி வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன், தனது அமைச்சகத்தில் தீபாவளி விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதில் ஏராளமான தூதரக அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    முன்னதாக நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் கடந்த 15-ந்தேதி தீபாவளி கொண்டாட்டம் தொடங்கியது. இதில் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், செனட்டர் சக் சியூமர், இந்திய துணை தூதர் ரந்திர் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பேசிய நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், அடுத்த ஆண்டு (2023) முதல் தீபாவளி பண்டிகைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவித்தார். இது தீபங்களின் திருவிழா குறித்து அறிய குழந்தைகளை ஊக்குவிக்கும் என்றும் அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் பேசிய செனட்டர் சியூமர், 'நாங்கள் எங்கள் சமூகத்தையும், எங்கள் இந்திய சமூகத்தையும் நேசிக்கிறோம், நாங்கள் அனைவரும் இங்கு நியூயார்க்கில் எங்கள் பன்முகத்தன்மையுடன் ஒன்றிணைவதை நாங்கள் விரும்புகிறோம்' என்று தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    • டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் கற்பழிப்பு புகார் தெரிவித்துள்ளார். பெண் எழுத்தாளரான ஜூன் கரோல் கூறும்போது, ''1995-ம் ஆண்டின் பிற்பகுதி அல்லது 1996-ம் ஆண்டின் முற்பகுதியில் மிட்டவுன் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு கடையின் உடைமாற்றும் அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்தார்" என்று கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக கரோலின் வக்கீல் ராபர்ட்டா கப்லன் கூறும்போது, "டிரம்ப் மீது வருகிற நவம்பர் 24-ந்தேதி வழக்கு தொடர திட்டமிட்டுள்ளதாகவும், இவ்வழக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விசாரிக்கப்படலாம்" என்றும் தெரிவித்தார். பெண் எழுத்தாளரின் குற்றச்சாட்டை டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்.

    அவர் கூறும்போது, "கரோல் தனது புத்தகத்தை விற்பதற்காக கற்பழிப்பு குற்றச்சாட்டை கூறி உள்ளார்" என்றார். ஏற்கனவே டிரம்ப் மீது மாடல் அழகி ஒருவர் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு எனது மகன் சிலம்பரசன்தான் காரணம்.
    • முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி நம்பிக்கை ஊட்டியது மறக்க முடியாதது

    திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தருக்கு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மருத்துவர்கள் அறிவுரைப்படி, தனது தந்தைக்கு உயர்சிகிச்சை அளிக்க இருப்பதாகவும், டி ராஜேந்தர் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும் அவரது மகன் நடிகர் சிம்பு அறிவித்திருந்தார்.

    இதன்படி நேற்று விமானம் மூலம் டி ராஜேந்தர் அமெரிக்கா சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:

    நான் உயர் சிகிச்சைக்கு அமெரிக்கா செல்கிறேன். நான் வாழ்க்கையில் எதையும் மறைத்தவன் கிடையாது. அதற்குள் அமெரிக்கா சென்றுவிட்டேன் என பல கதைகளை எழுதி விட்டனர். யார் என்ன எழுதினாலும் விதியை மீறி எதுவும் நடக்காது.

    என்னை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஜி.கே.வாசன், பச்சமுத்து, நடிகர் கமலஹாசன், ஐசரி கணேஷ் உள்பட பலருக்கும் நன்றி. முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னை சந்தித்து ஆறுதல் கூறி அன்பை காட்டி பாசம் காட்டி தோள் தட்டி நம்பிக்கை ஊட்டியதை மறுக்க முடியாது.

    இரு முறை தனது குடும்பத்துடன் வந்து சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். என்னை பற்றி எந்த வதந்திகள் வந்தாலும் நம்ப வேண்டாம். நான் மேல் சிகிச்சைக்காக சென்று மீண்டும் உங்களை வந்து சந்திப்பேன்.

    நான் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு எனது மகன் சிலம்பரசன்தான் காரணம். அவன் கேட்டுக்கொண்டதன் பேரில்தான் நான் ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்புகளை ரத்து செய்து விட்டு 12 நாட்களாக அமெரிக்காவில் அவர் தங்கி ஏற்பாடுகள் செய்து வருகிறான்.

    இவ்வாறு டி.ராஜேந்தர் தெரிவித்தார். இந்த பேட்டியின்போது அவரது மனைவி உஷா உடன் இருந்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    எப். 21 விமானங்களை இந்தியா வாங்கினால் வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது.
    அமெரிக்காவில் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனமான லாக்ஹீட் மார்டின் நிறுவனம், புதியதாக வெளியாகியுள்ள எப் 21 ரக விமானத்தில் 114 விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டால், நாங்கள் வேறு யாருக்கும் இவ்வகை விமானங்களை விற்பனை செய்ய மாட்டோம் எனக் கூறியுள்ளது.

    இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை வாங்க இந்திய விமானப்படை டெண்டர் கோரியுள்ளது. 18 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஒப்பந்தம் சமீப காலங்களில் மேற்கொள்ளப்படும் மிகவும் அதிகமான தொகையில் மேற்கொள்ளப்படுவதாகும். இந்த ஒப்பந்தத்தை வாங்க அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய நாடுகள் போட்டியிடுகிறது. 

    போட்டியில் முன்வரிசையில் இருப்பது லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் எப் 21 விமானங்கள், போயிங் நிறுவனத்தின்  F/A-18 விமானங்கள், பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன்ஸ் நிறுவனத்தின் ரபேல், யூரோபைட்டர்  டைப்யூன், ரஷியாவின் மிக் 35 மற்றும் சுவீடனின் சாப் 35 கிரிப்பன் விமானங்கள் உள்ளது. இந்நிலையில் புதிய அறிவிப்புடன் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் நிறுவனம் முன்வந்துள்ளது. அதாவது இந்தியாவிற்கு விற்பனை செய்தால் அந்த தொழில்நுட்பத்தையும், விமானத்தையும் வேறு நாடுகளுக்கு விற்பனை செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளது.

    லாக்ஹீட் மார்டின் நிறுவனத்தின் வியாபார வியூக மற்றும் அபிவிருத்தி துறையின் துணைத் தலைவர் விவேக் லால் பேசுகையில், இந்தியாவில் 60 விமான நிலையங்களில் செயல்படும் வகையில் புதிய போர் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்களில் உயர்தர எந்திரம், மின்னணு போர்திறன் கட்டமைப்பு, ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் ஆகியவை அடங்கும். இந்தியா எங்களிடம் வாங்க ஒப்பந்தம் செய்தால் விமானத்தின் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை உலகில் யாருக்கும் வழங்கமாட்டோம்.  இது இந்தியாவின் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் தனித்துவமான தேவையின் முக்கியத்துவத்தை காட்டுகிறது எனக் கூறியுள்ளார். மேலும் இந்தியா வாங்கினால் விலையும் குறைவாக கிடைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp