என் மலர்
நீங்கள் தேடியது "Ayatollah Khamenei"
- போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
- சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.
அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.
சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார்.
- போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
- அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி னால் ஈரான் விவகாரத்தில் தலையிடுவோம் என்றும் ராணுவ நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா தெரிவித்தது. மேலும் ஈரானில் போராட்டக்காரர்களுக்கு உதவ தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த நிலையில் ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் அந்நாட்டுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து உள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
உடனடியாக அமலுக்கு வரும் வகையில் ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடன் செய்யப்படும் அனைத்து வர்த்தகத்திற்கும் 25 சதவீத வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது என்று தெரிவித்து உள்ளார்.
ஈரானுடன் சீனா மிக அதிகளவில் வர்த்தகம் செய்து வருகிறது. இதனால் இந்த வரி அமலுக்கு வரும்போது சீனா அதிகம் பாதிக்கப்படும்.
அதேபோல் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி போன்ற நாடுகளும் ஈரானுடன் கணிசமான அளவுக்கு வர்த்தகம் செய்கின்றன. இதனால் டிரம்ப்பின் இந்த உத்தரவால் இந்தியா உள்பட இந்த நாடுகளும் பாதிக்கப்படக் கூடும்.
ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி அப்பாஸ் அராக்சி கூறும்போது, அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டோம். எங்கள் உரிமைகளை பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாராக இருக்கிறோம்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம். அதேவேளையில் தேவை ஏற்பட்டால் போரிடவும் தயாராக இருக்கிறோம் என்றார்.
ஏற்க்கனவே ஈரான் மீது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் விதித்த பொருளாதார தடைகளே, ஈரானின் தற்போது நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார்.
- சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள்.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.
இதில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 62 பேர் பலியாகி உள்ளனர். அங்கு போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.
ஈரானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முழு உலகத்தைப் பற்றியும் ஆணவத்துடன் தீர்ப்பளிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சர்வாதிகாரிகளும் ஆணவ ஆட்சியாளர்களும் தங்கள் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தபோது தங்கள் வீழ்ச்சியைக் கண்டனர். அதேபோல் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார். ஆணவத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்கள் தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்திப்பார்கள்.
ஈரானில் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது.
சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாசகாரர்கள் சொந்த நாட்டின் அரசு கட்டிடத்தை அழித்தனர். இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்காகவே செய்யப்பட்டன.
நீங்கள் யாராக இருந்தாலும் சரி ஒருமுறை நீங்கள் ஒரு வெளிநாட்டினருக்குக் கூலிக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டால் அந்த தேசம் உங்களை நிராகரிக்கப்பட்டவராகக் கருதும். டிரம்பின் கைகள் ஈரானியர்களின் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஈரான் ஒருபோதும் பின்வாங்காது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டை அயதுல்லாவிடம் இருந்து மீட்டெடுங்கள்.
- அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் அதிபர் மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டினார்.
ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.
பாக்ஸ் நியூஸ் நேர்காணலில் பேசிய கிரஹாம், "அயதுல்லாவுக்கு நான் சொல்வது இதுதான். சிறந்த வாழ்க்கைக்காகப் போராடும் உங்கள் சொந்த மக்களையே நீங்கள் தொடர்ந்து கொன்று கொண்டிருந்தால், டொனால்ட் டிரம்ப் உங்களைக் கொன்றுவிடுவார்" என்று மிகக் தெரிவித்தார்.
தன் சொந்த மக்களையே கொன்று உலகை அச்சுறுத்தும் அயதுல்லா ஒரு மதவாத நாஜி ஆவார். உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டை அயதுல்லாவிடம் இருந்து மீட்டெடுங்கள் என்று ஈரான் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் அதிபர் மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டிய கிரஹாம், டிரம்ப் வெறும் எச்சரிக்கையோடு நின்றுவிட மாட்டார் என்பதை ஈரான் உணர வேண்டும் என்றார்.
டாலருக்கு எதிரான ரியால் மதிப்பு குறைவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து ஈரானில் கடந்த சில வாரங்களாக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதில் இதுவரை 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஈரான் அரசு அமைதியான போராட்டக்காரர்களைக் கொன்றால், அமெரிக்கா அவர்களைக் காப்பாற்ற களமிறங்கும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்த மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவம், "அமெரிக்கா ஏதாவது தவறு செய்தால், எங்களின் பதில் மிகவும் தீர்க்கமானதாக இருக்கும்; ஆக்கிரமிப்பாளர்களின் கைகளை நாங்கள் வெட்டுவோம்" என்று எச்சரித்தது.
- ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
- "ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது
கடந்த 2023 அக்டோபர் முதல் பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் போர் நிறுத்தம் ஏற்பட்டபோதும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 70,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே காசா மீதான இஸ்ரேல் தாக்குதலை மற்ற அரபு நாடுகள் வேடிக்கை பார்த்த நிலையில் ஈரான் அதற்கு எதிராக செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில்தான் கடந்த ஜூன் 13 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் நேரடி தாக்குதலை நடத்தியது. இது மத்திய கிழக்கில் போருக்கு வித்திட்டது.
சுமார் 12 நாட்கள் நீடித்த இந்த மோதலில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர், மேலும் பல கட்டமைப்புகள் சேதமடைந்தன.
போர்.. ஆமாம் போர்!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை இஸ்ரேல், தனது இருப்புக்கே நேரடி அச்சுறுத்தலாகக் கருதுகிறது. இதனை சீர்குலைக்க இஸ்ரேல் மீது சைபர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் அது போதாது என்று முடிவெடுத்தது. எனவே ஈரான் மீது ராணுவ நடவடிக்கைக்கு திட்டமிட்ட இஸ்ரேல் அதற்கு 'ஆபரேஷன் ரைசிங் லயன்' (Operation Rising Lion) என்று பெயரிட்டது.
சரியாக ஜூன் 13 அன்று ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள அணுசக்தி நிலையங்களையும் ராணுவ வசதிகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. 200-க்கும் மேற்பட்ட விமானங்கள், டிரோன்களைக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் பல போதும்மக்களும், ஈரான் புரட்சி படை தளபதி உசைன் சலாமி மற்றும் அணு விஞ்ஞானி பெரேதூன் அப்பாஸி உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகள் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து மத்திய கிழக்கில் வேறெந்த நாட்டையும் விட வலுவான ராணுவ கட்டமைப்பை கொண்ட ஈரான், இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதலை தொடங்கியது.
"ஆபரேஷன் ஹானஸ்ட் ப்ராமிஸ் 3" என இந்த நடவடிக்கைக்கு பெயரிட்ட ஈரான் FATTAH உட்பட தங்கள் அதிநவீன ஹைப்பர்சானிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது சரமாரியாக பாய்ச்சியது. இதனால் போர் மூண்டது. இதில் இஸ்ரேலுக்கு உதவியாக அமெரிக்கா களமிறங்கியது.
இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் வீசியது. மேலும் ஈரான், காத்ர், இமாத், கெய்பர் ஷேகன், பட்டா-1 ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது.

இஸ்ரேலை பாதுகாக்க அமெரிக்கா மிகப்பெரிய அளவில் ஆயுத உதவி செய்து வந்தது. ஏவுகணைகளை இடைமறித்து அளிக்கும் THAAD (Terminal High Altitude Area Defense) சிஸ்டம் என்ற மேம்படுத்தப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தை இஸ்ரேலில் குவித்தது.

இதற்கிடையே இஸ்ரேலும் ஈரானும் இணைந்து தன்னை குறிவைப்பதை உணர்ந்த ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனி தலைமறைவானார்.
ரகசியான நிலத்தடி மறைவிடத்தில் அவர் தஞ்சமடைந்தார். தான் ஒரு வேலை மரணித்தால் தனது உச்ச தலைவர் பொறுப்புக்கு 3 பேரின் பெயர்களை அவர் முன்மொழித்ததாகவும் தகவல் உள்ளது.

இஸ்ரேல் மீது மழையாக பொழிந்த ஈரான் ஏவுகணைகளை THAAD அமைப்பு இடைமறித்த அதே வேலையில், பாதுகாப்பு வழங்குவது மட்டுமின்றி டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தது.
நிலத்தடியில் உள்ள ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களான ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் மீது அமெரிக்காவில் இருந்து ராணுவ விமானங்களை அனுப்பி 'பங்கர் பஸ்டர்' என்ற நிலத்தடி இலக்குகளை தாக்கும் சக்திவாய்ந்த குண்டுகளைவீச செய்தார் டிரம்ப்.
இதில் ஈரானின் அணுசக்தி தளங்கள் மூன்றும் முற்றிலும் அழிக்கப்பட்டதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால் ஈரான் இதுநாள் வரை இதை மறுத்து வருகிறது.
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது, ஆனால் அவற்றை முழுமையாக அழிக்கவில்லை என்று சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) தலைவர் க்ரோஸி கூறியதே இதற்கு சான்று.
உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக இஸ்ரேல் அறிவித்தது.
ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. இதனால் இந்தியா, சீனா உட்பட ஆசிய நாடுகள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டது.

ஈரான் மீதான தாக்குதலுக்கு சீனா, ரஷியா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அதேநேரம் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேல் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தன.
அமெரிக்கா, ஈரான் மீது தாக்குதல் நடத்தியதுடன், இந்த மோதல் உச்சகட்டத்தை எட்டியபோது, கத்தார் போன்ற நாடுகளின் சமரச முயற்சியுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன.
மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததால், கச்சா எண்ணெய் விலைகள் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன.
ஜூன் 23 அன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக அறிவித்தார்.

இருப்பினும், ஆரம்பத்தில் போர் நிறுத்த மீறல்கள் இருந்தன. ஜூன் 25 அன்று இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் தெரிவித்தன. எனவே 12 நாட்கள் மோதலுக்கு பிறகு இந்த போரானது முடிவுக்கு வந்தது.
12 நாள் மோதலில் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் தோராயமாக 1,190 பேர் வரை ஈரானில் பலியாகினர். அவர்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் சரிசமமாக அடங்குவர்.
ஈரான் தாக்குதலால் இஸ்ரேலில் உயிரிழப்புகள் மிக குறைவு என்றபோதும் இஸ்ரேலில் பல உள்கட்டமைப்புகள் கடும் சேதத்தை சந்தித்தன. குறிப்பாக இஸ்ரேலின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையமான வெய்ஸ்மேன் அறிவியல் நிறுவனம் அழிக்கப்பட்டது.
போர் நிறுத்தத்தை தொடர்ந்து வார்த்தை மோதல்கள் தொடர்ந்தன. அயத்துல்லா காமேனியை இஸ்ரேல் தாக்க தயாராக இருந்ததாவதும், அவரை அசிங்கமான மரணத்திலிருந்து தான் காப்பாற்றியதாகவும் அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டார்.

அதேநேரம், போர் நிறுத்தத்திற்கு பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அயத்துல்லா காமேனி, அமெரிக்காவின் செல்ல நாய் இஸ்ரேல், வேரிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் என்றும் அது ஈரானை தாக்கி பெரிய தவறுசெய்துவிட்டதாகவும் அதன் விளைவை அது அனுபவிக்கும் என்றும் எச்சரித்தார். மேலும் எங்களை தொட நினைத்த அமெரிக்காவுக்கு பாடம் புகட்டியுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மொத்தத்தில் மத்திய கிழக்கு தொடங்கி மூன்றாம் உலகப் போராக உருவாக வாய்ப்புகள் அதிகம் கொண்ட இந்த மோதல் முடிவடைத்திருந்தாலும், இந்த அமைதி தாற்காலிகமே என புவிசார் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
- அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது.
- அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை
அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஈரான் அடிபணியாது என்று அந்நாட்டின் உச்சத் தலைவர் காமேனி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "அமெரிக்கா கொடுக்கும் அழுத்தம் பலன் தராது. ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய 12 நாள் தாக்குதலால் அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர முடியாது. அணு சக்தித் திட்டம், தீர்க்க முடியாத பிரச்சனை" என்று தெரிவித்தார்.
கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.
இடையில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இருப்பினும் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- செல்ல நாய் போல இருப்பதாகவும், அதன் உத்தரவுகளின்படி விளையாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
- இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமெனி மீண்டும் இஸ்ரேலை கடுமையாக சாடியுள்ளார். இஸ்ரேல் அதன் வேர்களிலிருந்து அழிக்கப்பட வேண்டிய புற்றுநோய் கட்டி போன்றது என்று காமேனி கூறினார்.
இஸ்ரேல் அமெரிக்காவின் செல்ல நாய் போல இருப்பதாகவும், அதன் உத்தரவுகளின்படி விளையாடுவதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், "ஈரானில் ஸ்திரமின்மையை ஏற்படுத்துவதே இஸ்ரேலின் குறிக்கோள். போர் நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும் இஸ்ரேலை நம்ப முடியாது. எந்த நேரத்திலும் ஈரான் தாக்கப்படலாம். அவ்வாறு நடந்தால், கடந்த மாதத்தை போல கடுமையாக பதிலடி கொடுப்போம்.
அமெரிக்காவும் அதன் செல்லப்பிராணி இஸ்ரேலும் சண்டைக்கு வந்தாலும், ஈரானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் ஒரு அடி பின்வாங்க வேண்டும்.
பாலஸ்தீனியர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடர்ந்தால், இஸ்ரேல் இன்னும் கடுமையான அடிகளைச் சந்திக்கும். மத்திய கிழக்கில் அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து வருகிறது. இஸ்ரேலின் செயல்களுக்கு அமெரிக்கா முழுப் பொறுப்பேற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
கடந்த மாதம், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே 12 நாட்கள் கடுமையான மோதல் நிகழ்ந்தது. ஈரானில் அணு விஞ்ஞானிகளையும் ஈரானில் நூற்றுக்கணக்கான மக்களையும் இஸ்ரேல் குண்டுவீசி கொன்றது. பதிலுக்கு ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலிலும் கடும் சேதங்கள் ஏற்பட்டன.
இடையில் அமெரிக்காவும் ஈரானின் 3 அணுசக்தி நிலையங்களை தாக்கியது. இதன் பாதிப்புகள் இன்னும் மதிப்பிடப்படவில்லை. இருப்பினும் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் அழித்ததாக அமெரிக்கா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது எனக்குத் தெரியும்.
- எரிந்து போன, வெடித்த நாடு, எதிர்காலம் இல்லாத, ஒரு சீரழிந்த இராணுவம், ஒரு பயங்கரமான பொருளாதாரம் மற்றும் அவர்களைச் சுற்றி மரணம்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலுடனான மோதலின் போது ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி எங்கு தஞ்சம் புகுந்திருந்தார் என்பது தனக்குத் தெரியும் என்றும், மிகவும் அசிங்கமான மரணத்திலிருந்து அவரது உயிரைக் காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்று கூறி கடந்த ஜூன் 13 அன்று இஸ்ரேல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல்களை தொடுத்தது. ஈரான் விஞ்ஞானிகள், ராணுவ தளபதிகள் சிலர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டின் அதி உயர் தலைவர் அயத்துல்லா காமேனி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்தார். இதற்கிடையே ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க ராணுவம் குண்டு வீசியது. இதில் அத்தளங்கள் முழுமையாக அழிந்ததாக டிரம்ப் அறிவித்தார்.
தொடர்ந்து கத்தாரில் உள்ள அமெரிக்க விமான படைத்தளத்தை ஈரான் தாக்கியது. இதைதொடர்ந்து பின்வாங்கிய டிரம்ப், ஈரான்- இஸ்ரேல் இடையே 12 நாள் போர் முடிவடைந்ததாக அறிவித்தார். இதை இரு நாடுகளும் தாமதமாக ஏற்றன. மோதல் குறித்து பேசிய காமேனி, ஈரான் இந்த போரில் வெற்றி பெற்றதாகவும், அமெரிக்காவின் கன்னத்தில் ஈரான் அறைந்துவிட்டதாகவும் பொதுமக்களுக்கு உரையாற்றினார்.
இந்நிலையில் இதுகுறித்து நதனது ட்ரூத் சோஷியல் தளத்தில் பதிவிட்ட டிரம்ப், " போரினால் பாதிக்கப்பட்ட ஈரான் நாட்டின் "உச்ச தலைவர்" என்று அழைக்கப்படும் ஆயத்துல்லா அலி கமேனி, இஸ்ரேலுடனான போரை வென்றதாக இவ்வளவு வெளிப்படையாகவும் முட்டாள்தனமாகவும் ஏன் கூறுகிறார். அவரது கூற்று பொய் என்று அவருக்குத் தெரியும். மிகுந்த நம்பிக்கை கொண்ட மனிதராக, அவர் பொய் சொல்லக்கூடாது.
அவரது நாடு அழிக்கப்பட்டது, அவரது மூன்று தீய அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன, மேலும் அவர் எங்கு அடைக்கலம் புகுந்தார் என்பது எனக்குத் தெரியும், மேலும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்திவாய்ந்த இஸ்ரேல் அல்லது அமெரிக்க ஆயுதப் படைகள் அவரது உயிரை முடிவுக்குக் கொண்டுவர அனுமதிக்கவில்லை.
நான் அவரை மிகவும் அசிங்கமான மற்றும் இழிவான மரணத்திலிருந்து காப்பாற்றினேன், அதற்காக அவர் "நன்றி, அதிபர் டிரம்ப்!" என்று சொல்ல வேண்டியதில்லை. உண்மையில், போரின் இறுதிச் கட்டத்தில் , இஸ்ரேல் விமானங்கள் நேரடியாக தெஹ்ரானுக்குச் சென்று கொண்டிருந்தன, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டிருக்கும், மேலும் பல ஈரானியர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.
இதுவரை நடந்த போரின் மிகப்பெரிய தாக்குதலாக இது இருந்திருக்கும். ஆனால் அவ்விமானகளை மீண்டும் இஸ்ரேலுக்கே திருப்ப நான் கோரினேன். கடந்த சில நாட்களாக, ஈரான் பொருளாதாரத் தடைகளை நீக்குவது மற்றும் பிற விஷயங்களைப் பற்றி நான் ஆலோசித்து செய்து கொண்டிருந்தேன். இது ஈரானுக்கு முழுமையான, விரைவான மீட்சியைப் பெறுவதற்கு மிகச் சிறந்த வாய்ப்பை அளித்திருக்கும். ஆனால் வெறுப்பு அறிக்கையால் நான் உடனடியாக நிவாரணம் மற்றும் பலவற்றைக் கைவிட்டேன்.
ஈரான் உலக ஒழுங்கு ஓட்டத்தில் மீண்டும் இறங்க வேண்டும், இல்லையெனில் விஷயங்கள் அவர்களுக்கு மோசமாகிவிடும். அவர்கள் எப்போதும் மிகவும் கோபமாகவும், விரோதமாகவும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருக்கிறார்கள், அது அவர்களுக்கு என்ன கொடுத்தது என்பதைப் பாருங்கள் - எரிந்து போன, வெடித்த நாடு, எதிர்காலம் இல்லாத, ஒரு சீரழிந்த இராணுவம், ஒரு பயங்கரமான பொருளாதாரம் மற்றும் அவர்களைச் சுற்றி மரணம்.
அவர்களுக்கு எந்த நம்பிக்கையும் இல்லை, அது இன்னும் மோசமாகிவிடும்! வினிகரை விட தேன் மூலம் நீங்கள் அதிகம் பெற முடியும் என்பதை ஈரானின் தலைமை உணர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- காமேனியை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார்.
- ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.
ஈரானுடனான 12 நாள் போரின் போது, அந்நாட்டின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொலை செய்ய குறிவைத்ததாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.
இஸ்ரேலின் 'சேனல் 13' உடனான சமீபத்திய நேர்காணலில் பேசிய காட்ஸ், "நாங்கள் காமேனியை ஒழிக்க விரும்பினோம். ஆனால் எங்களுக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதை உணர்ந்த காமேனி, மிகவும் ஆழமான நிலத்தடிக்குச் சென்றார். ஆரம்பகட்ட இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தளபதிகளுக்கு பதில் புதிதாக வந்தவர்களுடனும் தொடர்புகளை அவர் துண்டித்துவிட்டார்" என்று காட்ஸ் கூறினார்.
மேலும் காமேனியினயை கொலைக்கு அமெரிக்காவின் அனுமதி தேவையில்லை என்று காட்ஸ் கருத்து தெரிவித்தார். காமேனியை கொல்லும் யோசனையை அமெரிக்கா வீட்டோ செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை அவர் மறுத்தார்.
கூடுதலாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் புதுப்பிக்க முயன்றால் மீண்டும் தாக்குவதற்கு பச்சை கொடி காட்டியதாக காட்ஸ் கூறினார்.
இந்த தாக்குதலுக்குப் பிறகு ஈரான் அதன் அணுசக்தி நிலையங்களை மீண்டும் புதுப்பிக்கும் நிலையில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
- விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
- மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அந்நாட்டின் உயர் தலைவர் அயதுல்லா காமேனி பாதுகாப்பாக ஒரு ரகசிய நிலத்தடி பதுங்கு குழிக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அனைத்து வகையான மின்னணு தகவல்தொடர்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நம்பகமான உதவியாளர் மூலம் மட்டுமே இராணுவத் தளபதிகளுக்கு செய்திகள் அனுப்பப்படுவதாகவும் தெரிகிறது.
காமேனி இன்னும் இந்த உலகில் இருக்க கூடாது என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் சமீபத்தில் கூறியிருந்தார். மேலும் இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் சில விஞ்ஞானிகள் மற்றும் ராணுவ தலைவர்களும் கொல்லப்பட்ட சூழலில் காமேனி பதுங்கு குழியில் தஞ்சம் அடைந்துள்ளார்.
இந்த சூழலில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் தனக்குப் பின் உயர் தலைவர் பதவிக்கு மூன்று மூத்த மதத் தலைவர்களின் பெயர்களை காமேனி பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் அந்த பட்டியலில் அவரின் மகன் பெயர் இடம்பெறவில்லை. கடந்த காலத்தில், மறைந்த அதிபர் இப்ராஹிம் ரைசி கமேனியின் வாரிசு என்று கூறப்பட்டது. ஆனால் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் இறந்தது அந்த ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போது, காமெனியின் சொந்த மகன், திரைக்குப் பின்னால் ஒரு முக்கிய நபராகக் கருதப்படும் மோஜ்தபாவும் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- காமேனியின் முற்றிலும் மாறுபட்ட பிம்பத்தை இந்த பதிவுகள் முன்வைக்கின்றன.
- இந்தியா இத்தனை முக்கியமான முன்னேற்றங்களுக்கு உள்ளானது என்று எனக்குத் தெரியாது.
கடந்த ஜூன் 13 தேதி அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதலை நடத்தியது. ஈரான் அணு ஆயுதங்கள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்பதால் முன்கூட்டியே தாக்கியதாக இஸ்ரேல் சொன்னது.
ஆனால் தங்கள் அணு ஆயுதங்கள் வளர்ச்சி மற்றும் அமைதியின் நிமித்தமே என்று கூறிய ஈரான் கூறியது. இதைத்தொடர்ந்து இரு நாடுகளும் ஒன்றையொன்று ஒரு வாரத்திற்கும் மேலாக தாக்கி வருகின்றன.
இதற்க்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியில் பழைய சமூக பழைய சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
இந்தப் பதிவுகளில் காமேனி, பெண் உரிமை, கவிதைகள் மீதான விருப்பம், பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு, இந்தியப் பிரதமரின் புத்தகத்தைப் படித்தது, மற்றும் சிறுவயதில் தான் எப்படி குறும்புக்காரராக இருந்தார் என்று பலவற்றை குறித்துப் பேசியுள்ளார்.
வைரலானவற்றில் சில பதிவுகள் 10 வருடங்களுக்கும் பழையவை. தற்போது போரை முன்னெடுத்து செல்லும் காமேனியின் முற்றிலும் மாறுபட்ட பிம்பத்தை இந்த பதிவுகள் முன்வைக்கின்றன.
86 வயதான இந்த தலைவரை தீவிர இஸ்லாமிய குடியரசின் மூத்த மதகுரு மட்டுமே என்று தாங்கள் தவறாக மதிப்பிட்டுவிட்டதாகக் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பெண்கள் தொடர்பான பல பதிவுகளில், காமேனி பெண்களுக்காக குரல் கொடுத்ததுடன், காதல் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். "ஒரு மனிதன் பெண்ணின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள பொறுப்புள்ளவன், அவளது உணர்ச்சிபூர்வமான நிலையை புறக்கணிக்கக் கூடாது" என்று அவர் எழுதியுள்ளார்.
இதற்கு எக்ஸ் பயனர் ஒருவர், "காதலனாகப் பிறந்தவர், உச்ச தலைவராக மாற கட்டாயப்படுத்தப்பட்டவர்" என்று தற்போது கமெண்ட் செய்துள்ளார்.
" பெண் ஒரு மென்மையான மலர், வீட்டு வேலைக்காரி அல்ல. ஒரு பெண்ணை வீட்டில் ஒரு பூவைப் போல நடத்த வேண்டும். ஒரு பூவைப் பராமரிக்க வேண்டும்" என்று கமேனி கூறினார். ஆனால் இஸ்லாமிய குடியரசான ஈரானில் பெண் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதே கள யதார்த்தமாக உள்ளத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.
2013 ஆம் ஆண்டு ஒரு பதிவில், காமேனி தனது பள்ளிக் காலங்களை நினைவு கூர்ந்துள்ளார். "முதல் நாளில் இருந்தே நான் பள்ளியில் ஒரு சிறப்பு மேலங்கியுடன் சென்றேன். மற்ற குழந்தைகளுக்கும் முன்பாக அதை அணிவது சங்கடமாக இருந்தது, ஆனால் குறும்புத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பதன் மூலம் அதை ஈடுகட்ட முயற்சித்தேன்" என்று எழுதியுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புத்தகத்தைப் படித்து நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொண்டதாகவும் காமேனி கருத்து தெரிவித்துள்ளார். "நேருவின் 'உலக வரலாற்றின் காட்சிகள்' புத்தகத்தைப் படிக்கும் முன், காலனித்துவத்திற்கு முன் இந்தியா இத்தனை முக்கியமான முன்னேற்றங்களுக்கு உள்ளானது என்று எனக்குத் தெரியாது" என்று காமேனி பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்தாலும் ஈரான் ஒருபோதும் சரணடையாது என்று காமேனி சபதம் செய்துள்ள நேரத்தில் இந்தப் பதிவுகள் மீண்டும் கவனம் பெற்று வருகின்றன.
அமெரிக்கா மோதலில் ஈடுபட்டால், அவர்களுக்கு ஈடுசெய்ய முடியாத சேதத்தை ஏற்ப்படுத்துவோம் என்று என்று காமேனி சமீபத்தில் எச்சரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஈரான் உச்சபட்ச தலைவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது தெரியும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
- ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தல்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குவதில் 90 சதவீதத்தை எட்டி விட்டதாகவும், இது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் கூறி இஸ்ரேல், ஈரான் மீது கடந்த 13-ந்தேதி கடும் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.
இரு தரப்பும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள், ராணுவ கட்டமைப்புகள் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறி வைத்து இஸ்ரேல் தாக்குகிறது. அதேபோல் இஸ்ரேலின் டெல்அவிவ், ஹைபா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுகின்றன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்தார்.
இது தொடர்பாக டிரம்ப் தனது 'Truth Social' சமூக வலைத்தள பதிவில், "ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை கொல்லப் போவதில்லை. குறைந்தபட்சம் இப்போதைக்கு இல்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது. ஈரான் நிபந்தனையற்று சரணடைய வேண்டும்" என்று தெரிவித்தார்.
அதேபோல் சதாம் உசே னுக்கு ஏற்பட்ட நிலைமை அயதுல்லா அலி காமெனிக்கு ஏற்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் டிரம்பின் மிரட்டலுக்கு அடியபணிய மாட்டோம் என்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "போர் தொடங்கிவிட்டது. பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேல்) நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இஸ்ரேல்-ஈரான் 6-வது நாளாக பரஸ்பர தாக்குதல்களில் ஈடுபட்டன. ஈரான் தலைநகர் டெக்ரானை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. டெக்ரானுக்கு அருகில் உள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த ஏவுகணை உற்பத்தி நிலையம் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணை உள்கட்டமைப்பிற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேபோல் டெக்ரானிலும், தலைநகருக்கு மேற்கே உள்ள கராஜ் நகரத்திலும் வெடிச் சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே டெக்ரானின் 18-வது மாவட்டத்தில் உள்ள ஈரானின் ராணுவ உள்கட்டமைப்பு மீது தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அப்பகுதியில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேறுமாறும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
அதேபோல் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தியது. டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
இதையடுத்து ஈரான் ஏவுகணைகளை நடுவானில் தடுக்க இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தீவிரமாக செயல்பட்டது. தாக்குதல் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு இஸ்ரேல் ராணுவம் கேட்டு கொண்டது.
இந்த நிலையில் இஸ்ரேலைத் தாக்க ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக ஈரான் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் டெக்ரான் மீதான தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தளங்களை குறிவைத்து தாக்கியதாக ஈரான் புரட்சிகர காவல்படை அறிவித்து உள்ளது.
ஈரானின் ராணுவத் தலைவர் மேஜர் ஜெனரல் அப்துல்ரஹிம் மௌசவி கூறும்போது, "இதுவரை எங்கள் ராணுவ நட வடிக்கைகள் வெறும் எச்சரிக்கைகள்தான். மேலும் கடுமையான, தண்டனைக்குரிய தாக்குதல்கள் தொடரக்கூடும். எனவே இஸ்ரேலியர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள டெல் அவிவ் மற்றும் ஹைபாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று எச்சரிக்கை விடுத்தார்.
மோதல் காரணமாக ஜெருசலேமில் உள்ள தூதரகத்தை 3 நாட்களுக்கு மூடுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் தாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






