என் மலர்
நீங்கள் தேடியது "அயதுல்லா அலி கமேனி"
- தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.
- காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்தியாவுடனான மோதலை தொடர்ந்து பாகிஸ்தான் உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. சமீபத்தில் துருக்கி சென்று அந்நாட்டு அதிபர் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்தார்.
இந்த சூழலில் அவரின் ஈரான் பயணம் நிகழ்ந்துள்ளது. இந்த பயணத்தில் தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.
அவரிடம் இந்தியா மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை பிரச்சினையை ஷெபாஸ் ஷெரீப் எடுத்துரைத்தார்.
ஆனால் காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

அதாவது, இந்த சந்திப்பின் பின் காமேனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று மட்டுமே பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம் ஈரான் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
மே 7 அன்று, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா தாக்கியது. இதன்பின் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து மே 10 அன்று மோதல் முடிவுக்கு வந்தது.
- ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
- அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை
கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.
போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.
சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.
"ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
- ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
- ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற தலைவரை சந்தித்த பின், வீட்டிற்கு சென்ற நிலையில் படுகொலை.
ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
நேற்று ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்கு காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது.
இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறுகையில் "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல் தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது.
எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என காமெனி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹனியே எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
காசா மீதான தாக்குதலுக்குப்பின் ஒருமுறை ஈரான் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஈரான் கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அப்போது அமெரிக்கா உதவியுடன் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஈரான் தாக்குதலை முறியடித்தது.
தற்போது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.
- இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது.
- மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
இந்தியா, காசா, மியான்மர் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை முஸ்லிம்களாக கருத முடியாது என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் ஈரானிய தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதற்கு இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கமேனி கூறிய கருத்துக்களை நிராகரித்து, தவறான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.
சிறுபான்மையினர் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் நாடுகள், இதனை சொல்வதற்கு முன் தங்கள் சொந்த மனித உரிமைகள் பதிவுகளை முதலில் ஆராயுமாறு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியது.
இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது. சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் எதுவும் இல்லை.
முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் உத்தியோகபூர்வ விழாவில் கலந்து கொள்வதற்காக மே மாதம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஈரானுக்கு பயணம் செய்தார்.
ஜூலை மாதம் கூட, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.






