என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அயதுல்லா அலி கமேனி"

    • அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும்.
    • அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது.

    போராட்டம்-வன்முறையில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.

    போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் அரசை எச்சரித்தார். மேலும் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா உதவும் என்றும் தெரிவித்தார்.

    இதற்கிடையே ஈரானை நோக்கி மிகப்பெரிய அமெரிக்க கடற்படையான ஆர்மடா செல்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதனால் ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவுவதால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலையும் எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போர் என்று கருதுவோம். இந்த முறை எந்தவொரு தாக்கு தலையும் வரையறுக்கப்பட்ட, வரையறுக்கப்படாத, துல்லியமான, இயக்கவியல் ரீதியான என்று அதை அவர்கள் எப்படி அழைத்தாலும் சரி எங்களுக்கு எதிரான ஒரு முழு அளவிலான போராகவே நாங்கள் கருதுவோம்.

    அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்த்து போராடுவதற்கு அயதுல்லா கமேனி ஆட்சி தனது வசம் உள்ள அனைத்தையும் பயன்படுத்தும். எங்களை தாக்கினால் அதிகபட்ச பலத்துடன் கடுமையான பதிலடியை கொடுப்போம்.

    மேலும் இதை முடிவுக்குக் கொண்டுவர சாத்தியமான மிகக் கடுமையான முறையில் நாங்கள் பதிலடி கொடுப்போம். அமெரிக்காவின் ராணுவக் குவிப்பு உண்மையான மோதலுக்காக அல்ல என்று நாங்கள் நம்புகிறோம்.

    ஆனால் எங்கள் ராணுவம் மோசமான சூழ்நிலைக்கும் தயாராக உள்ளது. இதனால்தான் ஈரானில் அனைத்தும் உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப் பட்டு உள்ளன என்றார்.

    அதேபோல் ஈரான் ஆயுதப் படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும். 

    அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலடியாக ஈரான் தாக்குதல் நடத்த ஒரு பொத்தானில் விரல் வைத்துள்ளது என்றார்.  

    • போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
    • நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம் என டிரம்ப் தூண்டிவிட்டார்.

    ஈரானிய நாணயமான ரியால், அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.

    பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த ஈரான் மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். நிலைமை மோசமானதால் மத்திய வங்கி ஆளுநரான முகமது ரெசா ஃபர்சின் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    அமெரிக்காவின் பொருளாதாரத்தடை, பணவீக்கம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் ஆகியவையே இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகும். பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையிருக்கும் இடையே பல இடங்களில் மோதல் வெடித்ததை தொடர்ந்து வன்முறையாக மாறியது. வன்முறைகளில் பலியானோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஈரான் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரானுக்கு எதிராக தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த நிலையில் ஈரான் ஏற்பட்ட வன்முறை மற்றும் அதன்மூலம் ஏற்பட்ட உயிரிழப்புக்கு காரணமாக போராட்டத்தை ஆதரித்ததற்காக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என ஈரான் உச்சதலைவர் அபயதுல்லா அலி கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

    ஈரான் டெலிவிசனில் பேசிய கமேனி "போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியின்போது, அமெரிக்க அதிபர் நேரடியாகப் பேசி, கிளர்ச்சியாளர்களை தூண்டிவிட்டு, "நாங்கள் உங்களுக்கு ஆதரவளிக்கிறோம், நாங்கள் உங்களுக்கு ராணுவ ரீதியாகவும் ஆதரவளிக்கிறோம்" என்று கூறினார்.

    அமெரிக்கா ஈரானின் பொருளாதார மற்றும் அரசியல் வளங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாகவும், ஈரானிய தேசத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் காரணமாகவும், நாங்கள் அமெரிக்க ஜனாதிபதியை ஒரு குற்றவாளியாகவே கருதுகிறோம்.

    போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் காலாட்படை வீரர்கள். அவர்கள் மசூதிகளையும் கல்வி மையங்களையும் அழித்துவிட்டனர். மக்களைத் துன்புறுத்துவதன் மூலம் அவர்கள் ஆயிரக்கணக்கானோரைக் கொன்றனர்.

    இவ்வாறு கமேனி குற்றம்சாட்டியுள்ளார்.

    • அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார்.
    • சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதில் போராட்டக்காரர்கள் - பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 62 பேர் பலியாகி உள்ளனர். அங்கு போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது.

    ஈரானில் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினால் அமெரிக்கா தலையிடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

    இந்த நிலையில் டிரம்ப்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    முழு உலகத்தைப் பற்றியும் ஆணவத்துடன் தீர்ப்பளிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். உலகின் சர்வாதிகாரிகளும் ஆணவ ஆட்சியாளர்களும் தங்கள் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தபோது தங்கள் வீழ்ச்சியைக் கண்டனர். அதேபோல் டிரம்ப்பும் வீழ்ச்சி அடைவார். ஆணவத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்கள் தவிர்க்க முடியாத வீழ்ச்சியைச் சந்திப்பார்கள்.

    ஈரானில் போராட்டத்தை அமெரிக்கா தூண்டிவிட்டு அமைதியின்மையை ஏற்படுத்தி வருகிறது.

    சில போராட்டக்காரர்கள் அமெரிக்காவின் தயவைப் பெறுவதற்காகவே செயல்படுகிறார்கள். ஒரு சில நாசகாரர்கள் சொந்த நாட்டின் அரசு கட்டிடத்தை அழித்தனர். இத்தகைய நடவடிக்கைகள் அமெரிக்க அதிபரை மகிழ்விப்பதற்காகவே செய்யப்பட்டன.

    நீங்கள் யாராக இருந்தாலும் சரி ஒருமுறை நீங்கள் ஒரு வெளிநாட்டினருக்குக் கூலிக்கு வேலை செய்யத் தொடங்கிவிட்டால் அந்த தேசம் உங்களை நிராகரிக்கப்பட்டவராகக் கருதும். டிரம்பின் கைகள் ஈரானியர்களின் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது. இவ்விவகாரத்தில் ஈரான் ஒருபோதும் பின்வாங்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஈரானில் பொருளாதார நெருக்கடியால் போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால், ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தும் என டிரம்ப் எச்சரிக்கை.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த 10 நாட்களாக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    இதில் போராட்டக்காரர்கள்- பாதுகாப்பு படையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இதில் 45 பேர் பலியாகி உள்ளனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை. ஈரான் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து உள்ளன.

    இந்த நிலையில் ஈரானின் நாடு கடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஒரு மாபெரும் போராட்டத்திற்காக ஈரான் மக்களுக்கு அழைப்பு விடுத்தார். இரவு 8 மணிக்கு அனைவரும் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

    இதற்கிடையே நேற்று இரவு தலைநகர் தெஹ்ரானில் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் நாட்டின் மற்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. அப்போது அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல சந்தைகளும் கடைகளும் மூடப்பட்டன.

    தெஹ்ரானில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் பொருட்களை போட்டு எரித்தனர். சில இடங்களில் பாதுகாப்பு படையினருடன் மோதல்கள் ஏற்பட்டன. இதையடுத்து ஈரான் முழுவதும் இணையம் மற்றும் செல்போன் சேவைகள் முடக்கப்பட்டன.

    இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசுகையில் "டிரம்பை மகிழ்விப்பதற்காக போராட்டக்காரர்கள் தங்களுடைய சொந்த தெருக்களை நாசப்படுத்துகின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டை அயதுல்லாவிடம் இருந்து மீட்டெடுங்கள்.
    • அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் அதிபர் மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டினார்.

    ஈரானில் நிலவி வரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு அரசு வன்முறையைக் கையாண்டால், அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உச்ச தலைவரைக் கொல்லவும் தயங்கமாட்டார் என்று அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் எச்சரித்துள்ளார்.

    பாக்ஸ் நியூஸ் நேர்காணலில் பேசிய கிரஹாம், "அயதுல்லாவுக்கு  நான் சொல்வது இதுதான். சிறந்த வாழ்க்கைக்காகப் போராடும் உங்கள் சொந்த மக்களையே நீங்கள் தொடர்ந்து கொன்று கொண்டிருந்தால், டொனால்ட் டிரம்ப் உங்களைக் கொன்றுவிடுவார்" என்று மிகக் தெரிவித்தார்.  

    தன் சொந்த மக்களையே கொன்று உலகை அச்சுறுத்தும் அயதுல்லா ஒரு மதவாத நாஜி ஆவார். உதவி வந்து கொண்டிருக்கிறது, உங்கள் நாட்டை அயதுல்லாவிடம் இருந்து மீட்டெடுங்கள் என்று ஈரான் மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்கா, வெனிசுலாவிற்குள் புகுந்து அதன் அதிபர் மதுரோவைக் கைது செய்ததைச் சுட்டிக்காட்டிய கிரஹாம், டிரம்ப் வெறும் எச்சரிக்கையோடு நின்றுவிட மாட்டார் என்பதை ஈரான் உணர வேண்டும் என்றார்.

    டாலருக்கு எதிரான ரியால் மதிப்பு குறைவால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு மற்றும் விலைவாசி உயர்வை எதிர்த்து ஈரானில் கடந்த சில வாரங்களாக மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ளன.

    இதில் இதுவரை 36-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "ஈரான் அரசு அமைதியான போராட்டக்காரர்களைக் கொன்றால், அமெரிக்கா அவர்களைக் காப்பாற்ற களமிறங்கும்" என்று பதிவிட்டிருந்தார்.

    இந்த மிரட்டல்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஈரான் ராணுவம், "அமெரிக்கா ஏதாவது தவறு செய்தால், எங்களின் பதில் மிகவும் தீர்க்கமானதாக இருக்கும்; ஆக்கிரமிப்பாளர்களின் கைகளை நாங்கள் வெட்டுவோம்" என்று எச்சரித்தது.

    • தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.
    • காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர் ஆகியோர் ஈரானுக்கு விஜயம் செய்துள்ளனர்.

    இந்தியாவுடனான மோதலை தொடர்ந்து பாகிஸ்தான் உலக நாடுகளிடம் உதவி கேட்டு வருகிறது. சமீபத்தில் துருக்கி சென்று அந்நாட்டு அதிபர் எர்டோகனை பாகிஸ்தான் பிரதமர் சந்தித்தார்.

    இந்த சூழலில் அவரின் ஈரான் பயணம் நிகழ்ந்துள்ளது. இந்த பயணத்தில் தெஹ்ரானில் வைத்து ஷெபாஸ் ஷெரீப் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா சையத் அலி கமேனியை சந்தித்தார்.

    அவரிடம் இந்தியா மோதல் மற்றும் காஷ்மீர் பிரச்சனையை பிரச்சினையை ஷெபாஸ் ஷெரீப்  எடுத்துரைத்தார்.

    ஆனால் காமேனியின் கருத்துக்கள் பாகிஸ்தான் பிரதமரின் வார்த்தைகளுக்கு அவர் எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை தெளிவுபடுத்தின.

    அதாவது, இந்த சந்திப்பின் பின் காமேனி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான மோதல் முடிவுக்கு வந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தீர்க்கப்படும் என்று நம்புகிறோம்" என்று மட்டுமே பதிவிட்டுள்ளார்.

    இதன் மூலம் ஈரான் இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என்று சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

    மே 7 அன்று, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) பயங்கரவாத மறைவிடங்களை இந்தியா தாக்கியது. இதன்பின் இரு நாட்டு ராணுவமும் மோதிக்கொண்டது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதை அடுத்து மே 10 அன்று மோதல் முடிவுக்கு வந்தது. 

    • ஹமாஸ் அமைப்பிற்கு ஈரான் பல வருடங்களாக ஆதரவு அளித்து வருகிறது
    • அக்டோபர் 7 தாக்குதல் குறித்து ஈரானுக்கு ஹமாஸ் முன்னரே தெரிவிக்கவில்லை

    கடந்த அக்டோபர் 7 அன்று பாலஸ்தீனத்தை மையமாக கொண்ட ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி 1200க்கும் மேற்பட்டவர்களை கொன்று, 200க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக கடத்தி சென்றனர். இதை தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழிக்க போவதாக உறுதி எடுத்துள்ள இஸ்ரேல், அவர்கள் ஒளிந்திருக்கும் பாலஸ்தீன காசா பகுதி மீது தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

    ஈரான், கத்தார் உள்ளிட்ட சில அரபு நாடுகள் ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.

    போர் 40 நாட்களை தொடர்ந்து நாளுக்கு நாள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், ஈரான் ஹமாஸ் அமைப்பிற்கு ஆதரவாக நேரடியாக போர்க்களத்தில் இறங்கினால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களம் இறங்கும் என்றும் அதன் மூலம் போர் பிற நாடுகளுக்கு பரவலாம் என உலக நாடுகள் கவலை தெரிவித்து வந்தன.

    சில தினங்களுக்கு முன்பு ஈரான் அதிபர் அயதுல்லா அலி கமேனிக்கும், ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவிற்கும் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

    "ஹமாஸ் அமைப்பிற்கு தார்மீக மற்றும் அரசியல் ரீதியாக ஆதரவை ஈரான், தொடர்ந்து வழங்குமே தவிர நேரடியாக இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஈரான் ஈடுபடாது என்றும் ஈரானின் ஆதரவை கோரி வெளிப்படையாக பாலஸ்தீனத்தில் எழுப்பப்படும் கோரிக்கைகளுக்கு ஹமாஸ் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்றும் அச்சந்திப்பின் போது ஈரான் அதிபர் அலி கமேனி திட்டவட்டமாக ஹமாஸ் தலைவரிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து முன்கூட்டியே ஈரானுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பதுதான் ஈரானின் இந்த நிலைப்பாட்டிற்கு முக்கிய காரணம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஈரான் இந்த முக்கிய முடிவில் உறுதியாக இருந்தால், போர் பரவல் குறித்த அச்சம் குறைந்து விடும் என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    • ஈரான் அதிபர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
    • ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற தலைவரை சந்தித்த பின், வீட்டிற்கு சென்ற நிலையில் படுகொலை.

    ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே ஈரானில் உள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது பாதுகாவலர் ஒருவரும் கொல்லப்பட்டார்.

    நேற்று ஈரான் நாட்டின் புதிய அதிபராக மசூத் பெசேஷ்கியான் பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் இஸ்மாயில் ஹனியே கலந்து கொண்டார். அத்துடன் ஈரானின் உச்ச அதிகாரம் பெற்ற அயதுல்லா அலி கமேனியையும் சந்தித்து பேசினார்.

    இந்த நிலையில்தான் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல்தான் இந்த படுகொலைக்கு காரணம் என ஹமாஸ் மற்றும் ஈரான் நம்புகிறது.

    இந்த நிலையில் ஈரானுக்கு எதிராக பழிக்குப்பழி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஈரான் உச்ச தலைவரான அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அயதுல்லா அலி கமேனி கூறுகையில் "ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வான்வழி தாக்குதல் மூலம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்குப்பின், இஸ்ரேல் தனக்குத்தானே கடுமையான தண்டனைக்கு தயார்படுத்தியுள்ளது.

    எங்களுடைய பணியான பழிக்குப்பழி குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம் என காமெனி தனது அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹனியே எங்களுடைய நாட்டின் மதிப்பிற்குரிய விருந்தாளி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    காசா மீதான தாக்குதலுக்குப்பின் ஒருமுறை ஈரான் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக லெபனான் மற்றும் ஈரானில் இருந்து ஈரான் கடுமையான வான்தாக்குதலை நடத்தியது. அப்போது அமெரிக்கா உதவியுடன் வான்பாதுகாப்பு சிஸ்டம் மூலம் ஈரான் தாக்குதலை முறியடித்தது.

    தற்போது இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட நிலையில் இஸ்ரேல்- ஈரான் இடையே நேரடி போர் நடைபெறலாம் என அஞ்சப்படுகிறது.

    • இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது.
    • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இந்தியா, காசா, மியான்மர் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை முஸ்லிம்களாக கருத முடியாது என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் ஈரானிய தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கமேனி கூறிய கருத்துக்களை நிராகரித்து, தவறான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

    சிறுபான்மையினர் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் நாடுகள், இதனை சொல்வதற்கு முன் தங்கள் சொந்த மனித உரிமைகள் பதிவுகளை முதலில் ஆராயுமாறு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியது.

    இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது. சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் எதுவும் இல்லை.

    முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் உத்தியோகபூர்வ விழாவில் கலந்து கொள்வதற்காக மே மாதம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஈரானுக்கு பயணம் செய்தார்.

    ஜூலை மாதம் கூட, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    ×