என் மலர்
நீங்கள் தேடியது "Iran"
- அணு ஆயுத திட்டத்தை நிறுத்த ஈரானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்.
- நெருக்கடி கொடுக்கும் வகையில் போர்க் கப்பல்களை மத்திய கிழக்குப் பகுதிக்கு அமெரிக்கா நகர்த்தியுள்ளது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதற்காக யூரேனியத்தை செறிவூட்டி வருகிறது. யூரேனியத்தை செறியூட்டும் பணியை 60 சதவீதம் முடித்து விட்டது. யூரேனியத்தை 90 சதவீதம் செறியூட்டிவிட்டால், ஈரான் அணு ஆயுதம் கொண்ட நாடாக மாறிவிடும்.
இதனால் இஸ்ரேல், அமெரிக்கா நாடுகள் ஈரான் அணுஆயுத திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஈரான் அமெரிக்கா கூறியதை கேட்கவில்லை. இதனால் கடந்த வருடம் அணுஆயுத இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
அதில் இருந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா உடன் ஈரான் அணுஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தி வருகிறார். இதன் தொடர்பாக ஈரானுக்கு அழுத்த கொடுக்க போர் விமானம் மற்றும் போர்க்கப்பல்களை அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதிக்கு நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில் ஜெனீவா நகரில் அமெரிக்கா மற்றும் ஈரான் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே 2 கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில் இன்று 3-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த பேச்சுவார்த்தை முடிவில் அணுஆயுத ஒப்பந்தம் ஏற்படுமா? என உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன.
ஈரானில் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டம் நடைபெற்ற நிலையில், இந்த வாய்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டிரம்ப் நினைக்கிறார்.
அதேவேளையில் அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளாகி அணுஆயுத திட்டம் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் நிலையிலும் ஈரான் அதை தொடர விரும்புகிறது.
அமெரிக்கா தாக்குதலை நிகழ்த்தினால், மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைப்போம் என ஈரான் தெரிவித்துள்ளது. இந்த தளங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர். மேலும், மத்திய கிழக்கு பகுதிகள் முழுவதும் போர் பரவும் எனத் தெரிவித்துள்ளது.
- குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
- ஈரானில் ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது விபத்து ஆகும்.
மத்திய ஈரானில் உள்ள ஒரு பழம் மற்றும் காய்கறி சந்தையில் ஈரானிய இராணுவ ஹெலிகாப்டர் மோதியதில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில், நாட்டின் இஸ்பஹான் மாகாணத்தில் இந்த விபத்து நடந்ததாக ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ஜூன் மாதம் ஈரான்-இஸ்ரேல் போரின் போது அமெரிக்காவால் தாக்கப்பட்ட அணுசக்தி தளம் இஸ்பஹானில் உள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் பயிற்சியில் ஈடுபட்டு இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. விமானி மற்றும் துணை விமானி விபத்தில் இறந்தனர். விபத்து காரணமாக சந்தையில் இருந்த குப்பைகள் மற்றும் புகை எழும் காட்சிகளைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
ஈரானின் ஃபார்ஸ் செய்தி நிறுவனம், விபத்தில் சந்தையில் இருந்த இரண்டு பேர் விபத்தில் இறந்ததாக கூறியது. ஈரானில் ஒரு வாரத்திற்குள் இது இரண்டாவது விபத்து ஆகும். ஈரானின் மேற்கு நகரமான ஹமேடான் அருகே ஒரு F-4 போர் விமானம் விபத்துக்குள்ளானது, அந்த விபத்தின் போது விமானிகளில் ஒருவர் கொல்லப்பட்டார்.
- டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்துள்ளது.
- இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் ஜெனீவாவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்நிலையில், அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில் ஈரான் - அமெரிக்கா இடையே ஜெனீவாவில் பிப்.26ம் தேதி 3ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பேச்சுவார்த்தைகளுக்கு இடையே ஈரான் மீது எந்நேரமும் அமெரிக்கா தாக்குதல் நடத்த தயாராக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது.
- இந்தியர்கள் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும்.
- ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் அமெரிக்க தாக்குதல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், இந்தியர்களை வெளியேற அறிவுறுத்தியுள்ளது.
இந்திய மாணவர்கள், யாத்ரீகர்கள், வணிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வணிக விமானங்கள் உட்பட கிடைக்கக்கூடிய போக்குவரத்து வழிகள் மூலம் ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் போராட்டங்கள் அல்லது ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் பகுதிகளை தவிர்க்கவும், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்கவும், ஏதேனும் முன்னேற்றங்கள் ஏற்பட்டால் உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும் வலியுறுத்தியுள்ளது.
"ஈரானில் உள்ள அனைத்து இந்தியர்களும் பாஸ்போர்ட் மற்றும் அடையாள சான்றுகள் உள்ளிட்ட தங்கள் பயண மற்றும் குடியேற்ற ஆவணங்களை வைத்திருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பாக ஏதேனும் உதவிக்கு இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது.
"ஈரானில் இணையத் தடங்கல்கள் காரணமாக எந்தவொரு இந்திய நாட்டவரும் பதிவு செய்ய முடியாவிட்டால், இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது.
- ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும்
ஈரான் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொள்ள வேண்டும் இல்லையேல் மோஷமான விஷயங்கள் நடக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனில் நடைபெற்ற "அமைதி வாரிய" கூட்டத்தில் பேசிய டிரம்ப்,
"நாம் ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும். நல்ல பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானுடன் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்வது எளிதல்ல என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரு அர்த்தமுள்ள ஒப்பந்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் மோசமான விஷயங்கள் நடக்கும்" என தெரிவித்தார். மேலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகளில் அடுத்த 10 நாட்களுக்குள் முன்னேற்றம் ஏற்பட வேண்டும், இல்லையெனில் அமெரிக்கா அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் இராணுவ பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஓமன் நாடு மத்தியஸ்தம் செய்கிறது.
ஒருபக்கம் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றாலும் மறுபுறம் ஈரான் பகுதிகளில் அமெரிக்க ராணுவம் நிறைந்துவருகிறது. சமீப நாட்களில் F-22, F-35 மற்றும் F-16 உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட மேம்பட்ட போர் விமானங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பியுள்ளது அமெரிக்கா. இதனுடன் கூடுதல் கடற்படை கப்பல்களும், வான் பாதுகாப்பு அமைப்புகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இந்த ராணுவ குவிப்பை தடுப்பு நடவடிக்கை என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அதேசமயம் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானும் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது, மறுபுறம் வெளிப்படையான ராணுவ அழுத்தத்தைத் தொடர்வது என ட்ரம்ப் அரசு இருவியூகத்தை வகுத்துவருகிறது. கடந்த காலங்களில் திட்டங்கள் பலனளிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போதைய அணுகுமுறை, சமரசம் செய்யமறுக்கும் ஈரானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சூழல் வழக்கத்திற்கு மாறாக மிகவும் பலவீனமாக இருப்பதாக சமூக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரு தரப்புமே ஒரு முழு அளவிலான போரை விரும்புவதாகத் தெரியவில்லை என்றாலும், தீவிரமடைந்துள்ள ராணுவக் குவிப்புகளும், சமரசமற்ற பேச்சுக்களும் தவறு நடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளன என தெரிவிக்கின்றனர். கடலிலோ, வான்வெளியிலோ அல்லது பிராந்திய பினாமிப் படைகள் மூலமாகவோ ஏற்படும் ஒரு சிறிய தவறான கணக்கீடு கூட, நிலைமையை மிக வேகமாகப் போராக மாற்றக்கூடும் எனவும் எச்சரிக்கின்றனர்.
- தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
- அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
ஈரான் அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை ஓமன் மத்யஸ்தத்தில் நடந்து வருகிறது.
இதற்கிடையே நிபந்தனைகளை ஏற்காவிட்டால் ஈரான் மீது ராணுவ தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டி வருகிறார்.
ஈரானை நோக்கி அமெரிக்க கடற்படை கப்பல் பிரிவு அனுப்பப்பட்டுள்ளது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இந்த சூழலில் ஈரான் மற்றும் ரஷியா ஆகிய இரு நாட்டு கடற்படைகளும் இணைந்து ஓமன் கடலில் கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளன.

பிராந்திய நாடுகளுக்கு அமைதியின் செய்தியை வழங்குவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று ஈரானிய அட்மிரல் ஹசன் மக்சூத்லு தெரிவித்துள்ளார்.
எண்ணெய் கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் ஒருதலைப்பட்சமான ராணுவ நடவடிக்கைகளை தடுத்தல் ஆகியவை இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே தாக்குதல்களை எதிர்கொள்ள, ஈரான் தனது அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகிறது.
தலைநகர் தெஹ்ரானில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள பார்க்கின் ராணுவ மையத்தில், கான்கிரீட் சுவர்கள் எழுப்பப்பட்டும் பணிகள் நடக்கின்றன. நதான்ஸ் அணுமின் நிலையத்திற்கு அருகிலுள்ள மலைப்பாதை நுழைவாயில்கள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
அண்மையில் வெளியான செயற்கை கோள் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்தி உள்ளன.

தாக்குதல்களை முறியடிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளையும் ஈரான் நவீனப்படுத்தியுள்ளது.
பார்க்கின் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த விமான எதிர்ப்புப் பீரங்கிகள் ஜூலை 2025 முதல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடுதலாக இரண்டு இடங்களில் புதிய வான் பாதுகாப்புப் பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் ஈரான் தனது அணுசக்தி மற்றும் ராணுவக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறது.
- அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
- அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
மேலும், ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே ஹார்முஸ் ஜலசந்தியை தற்காலிகமாக மூடுவதாக அறிவித்த ஈரான் அங்கு ராணுவ பயிற்சி மேற்கொண்டது. பயிற்சிகளின் போது நீர்வழியில் செல்லும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
தெக்ரானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அயதுல்லா அலி கமெனி பேசியதாவது:-
அமெரிக்க அதிபர் டிரம்ப் தாங்கள் உலகின் வலிமையான ராணுவப் படையை கொண்டுள்ளோம் என்று தொடர்ந்து கூறி வருகிறார். உலகின் வலிமையான ராணுவ படை சில சமயங்களில் மீண்டும் எழுந்திருக்க முடியாத அளவுக்கு கடுமையாகத் தாக்கப்படலாம்.
அமெரிக்கர்கள் ஈரானை நோக்கி ஒரு போர்க்கப்பலை அனுப்பியதாக தொடர்ந்து கூறுகிறார்கள். நிச்சயமாக ஒரு போர்க்கப்பல் ஒரு ஆபத்தான ராணுவ இருப்பு ஆகும். ஆனால் அந்த போர்க்கப்பலை விட ஆபத் தானது ஒன்று உள்ளது.
அது போர்க்கப்பலுக்கு கடலின் அடிப்பகுதிக்கு அனுப்பக் கூடிய ஆயுதம் ஆகும். ஈரான் அரசாங்கத்தை அகற்ற அமெரிக்கா பல ஆண்டுகளாக முயன்று அதில் தோற்றது. அதை நீங்களும் (டிரம்ப்) செய்ய முடியாது என்றார்.
இதற்கிடையே அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறும்போது, அணு சக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையில் அதிபர் டிரம்ப் நிர்ணயித்த முக்கிய நிபந்தனைகளுக்கு ஈரான் இன்னும் உடன்படவில்லை.
டிரம்ப் கூறியது போல் இதை ஒரு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நாங்கள் மிகவும் விரும்புகிறோம்.
பேச்சுவார்த்தைகளை எவ்வளவு காலம் தொடர வேண்டும் என்பதை டிரம்ப் இறுதியில் முடிவு செய்வார் என்றார்.
- மீண்டும் சந்திக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
- சில வழிகாட்டுதல் கொள்கைகளில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
ஓமன் மத்யஸ்தத்தில் அமெரிக்கா ஈரான் இடையில் அணுசக்தி தொடர்பாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நேற்று நடந்தது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைக்கு பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதவாது, "பேச்சுவார்த்தை சில வழிகளில் நன்றாகவே சென்றது. மீண்டும் சந்திக்க அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், அதிபர் டிரம்ப் வகுத்துள்ள சில எல்லைக்கோடுகளுக்கு ஈரான் இன்னும் அங்கீகரிக்கத் தயாராக இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா கொண்டுள்ள கவலைகளுக்கு ஈரான் தீர்வு காணாவிட்டால், ராணுவ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று டிரம்ப் எச்சரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி பேசுகையில், இரு நாடுகளும் மோதலைத் தவிர்ப்பதற்கான சில வழிகாட்டுதல் கொள்கைகளில் உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும், விரைவில் ஒரு வரைவு ஒப்பந்தத்தை தயாரிக்கும் பணி தொடங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த பேச்சுவார்த்தையில், ஈரானின் எண்ணெய் விற்பனை மீதான தடைகளை நீக்க வேண்டும் என்பது ஈரானின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
- அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா- ஈரான் இடையே பேச்சுவார்த்தை.
- முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், தற்போது 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
அணுசக்தி திட்டம் தொடர்பாக அமெரிக்கா உடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
டொனால்டு டிரம்பின் மிரட்டலை சந்திக்க தயார் என்று ஈரான் தெரிவித்தபோதிலும், பேச்சுவார்த்தைக்கும் தயார் என்று தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று ஜெனீவாவில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நடைபெற்றது.
அமெரிக்கா மத்திய கிழக்குப் பகுதியில் ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. அதேவேளையில் ஹார்மஸ் ஜலசந்தியை ராணுவ துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாக பல நேரம் மூடப்போவதாக ஈரான் அறிவித்தது. இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
- இந்தக் கப்பல்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஈரானின் தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
- கப்பல்கள் விசாரணைக்காக மும்பை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
அமெரிக்காவால் தடைசெய்யப்பட்ட மற்றும் ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய் கப்பல்களை இந்திய கடலோர காவல்படை மும்பை அருகே கைப்பற்றியுள்ளது. ஆனால் ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனம், மூன்று டேங்கர் கப்பல்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.
ஸ்டெல்லர் ரூபி, அஸ்பால்ட் ஸ்டார் மற்றும் அல் ஜாஃப்சியா என பெயரிடப்பட்ட மூன்று கப்பல்களும் மும்பைக்கு மேற்கே சுமார் 100 கடல் மைல் தொலைவில் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கப்பல்கள் சட்டவிரோத எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும், எண்ணெய் எடுக்கப்படும் இடத்தை மறைப்பதற்காக கடலில் ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலுக்கு எண்ணெய்யை மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது இந்தக் கப்பல்கள் விசாரணைக்காக மும்பை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு மேம்பட்டு வரும் சூழலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்த ஒப்புக்கொண்ட பிறகு, இந்தியப் பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா 50%-லிருந்து 18%-ஆக குறைப்பதாக அறிவித்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது இந்திய கடலோர காவல்படை தனது கடல்சார் மண்டலங்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது. சுமார் 55 கப்பல்களும், 10 முதல் 12 விமானங்களும் இப்போது இந்தியாவின் கடல் மண்டலங்கள் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- அணுசக்தி தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
- மிக விரைவில் அமெரிக்காவின் 2-வது போர்க்கப்பல் ஈரானை நோக்கி புறப்படும்.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் இருந்து வருகிறது. ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
மேலும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அந்நாட்டு அருகே அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டு யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அணுசக்தி தொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை.
இதைத் தொடர்ந்து ஈரானை நோக்கி மேலும் ஒரு அமெரிக்க போர்க்கப்பலை (யு.எஸ்.எஸ் ஜெரால்ட் ஆர் போர்டு) அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனி ஆட்சியை அகற்ற அழுத்தம் கொடுப்பது தொடர்பாக நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு டிரம்ப் பதில் அளித்து கூறியதாவது:-
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும் போது, ஈரானில் அதிகார-ஆட்சி மாற்றம் ஒரு சிறந்த விஷயமாக இருக்கும். அது நடக்கக்கூடிய சிறந்த விஷயமாகத் தெரிகிறது.
அவர்கள் 47 ஆண்டுகளாக பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறார்கள். நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்டவில்லை என்றால் அது எங்களுக்கு தேவைப்படும் என்பதால் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மிக விரைவில் அமெரிக்காவின் 2-வது போர்க்கப்பல் ஈரானை நோக்கி புறப்படும் என்றார். இதன்மூலம் ஈரான் ஆட்சியாளர்களுக்கு டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
- அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 2-வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது.
ஈரானில் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமெனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. போராட்டத்தை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்ததில் வன்முறை வெடித்தது.
போராட்டம்-வன்முறையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஈரானில் போராட்டக்காரர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
மேலும், ஈரானை நோக்கி அமெரிக்காவின் மிகப்பெரிய கடற்படை அனுப்பப்பட்டது. அதன்படி ஈரான் அருகே யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தினர். இதுதொடர்பாக இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்தநிலையில் ஈரானை நோக்கி மேலும் ஒரு அமெரிக்க போர்க்கப்பல் செல்ல உத்தரவிடப்பட்டு உள்ளது. கரீபியன் கடல் பகுதியில் உள்ள அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பலான ஜெரால்ட் ஆர் போர்டு, மத்திய கிழக்கு பகுதிக்கு புறப்பட உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து அந்த போர்க்கப்பல் ஈரானை நோக்கி தனது பயணத்தை தொடங்கி உள்ளது.
ஈரானுடனான பதட்டங்களுக்கு மத்தியில், அமெரிக்கா மேற்கு ஆசியாவிற்கு 2-வது விமானம் தாங்கிக் கப்பலை அனுப்புகிறது.
ஈரானின் தலைவர்களுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்து வரும் நிலையில் பாரசீக வளைகுடாவில் உள்ள யு.எஸ்.எஸ். ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் ஜெரால்ட் ஆர் போர்டு போர்க்கப்பல் இணைய உள்ளது.






