என் மலர்
நீங்கள் தேடியது "Iran"
- ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
- ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோம்
அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, ஈரான் என்னைக் படுகொலை செய்தால் அதை அழிக்க வேண்டும் என்று எனது ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால் அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
அங்கு எதுவும் மிஞ்சாது. அணு ஆயுதங்களை உருவாக்கும் விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக அதிகபட்ச அழுத்தம் கொள்கையை மீண்டும் அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளேன்.
ஈரானுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகள் கொள்கையை மீண்டும் அமல்படுத்தும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இது எனக்கு மிகவும் எரிச்சலூட்டும் ஒன்று.
எல்லோரும் நான் கையெழுத்திட வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது ஈரானுக்கு மிகவும் கடினமானது. இதை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை என்று நம்புகிறேன்.
நான் அதை செய்வதில் மகிழ்ச்சியடையவில்லை. ஆனால் நாம் வலுவாக இருக்க வேண்டும். ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவோம், அனைவரும் ஒன்றாக வாழலாம் என்றார்.
- காசா என்ற இந்த ட்ரோன் 22 மீட்டர் இறக்கைகள் மற்றும் 3,100 கிலோகிராம் எடை கொண்டது.
- இந்த டிரோனின் 13 குண்டுகள் வரை எடுத்துச் செல்ல முடியும்
ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையின் (IRGC) கீழ் இயங்கும் வான்படை, காசா என்ற அதி கனரக ஆளில்லா விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேற்று [ஞாயிற்றுக்கிழமை] நடந்த இராணுவப் பயிற்சியின் போது இந்த ஆளில்லா விமானத்தை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஷஹீத்-149 காசா என்ற இந்த ட்ரோன் 22 மீட்டர் இறக்கைகள் மற்றும் 3,100 கிலோகிராம் எடை கொண்டது. 35 மணி நேரம் பறக்கும் திறன் கொண்ட 'காசா' மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

காசா டிரோனின் பேலோட் திறன் குறைந்தது 500 கிலோகிராம் ஆகும். இந்த டிரோனின் 13 மிஸைல் குண்டுகள் வரை செல்ல முடியும். இது 1,000 கிலோமீட்டர் தூரம் மற்றும் 4,000 கிலோமீட்டர் ரேடியஸ்[ஆரம்] வரை இயங்கும் திறன் உடையது.
நேற்று நடந்த பயிற்சியின் போது முதன்முறையாகக் காசா ட்ரோனைப் பயன்படுத்தி எட்டு இலக்குகளை IRGC வான்படை வெற்றிகரமாக அழித்தது. காசா என்பது கடந்த 13 மாதங்களாக இஸ்ரேல் குண்டுகளால் துளைக்கப்பட்டு 37,400 பேர் உயிரிழந்த பாலஸ்தீனிய நகரம் ஆகும்.
Iran's new 'Gaza' drone makes debut, packs a PUNCHIran unveiled its superheavy 'Gaza' drone during military drills, obliterating eight targets. It signals Tehran's growing firepower with a 1,000km range and 500kg payload. pic.twitter.com/H4TdSYoF7H
— RT (@RT_com) January 27, 2025
- கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளான்.
- கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தியவர்கள்.
ஈரான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் இன்று [சனிக்கிழமை] காலை மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இரண்டு நீதிபதிகள் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கைத்துப்பாக்கியுடன் உச்சநீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் நீதிபதிகள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பலியானவர்கள் அல் ரஜினி மற்றும் அல் மொகிஸ்சே என அடையாளம் காணப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் தன்னைதானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தாக்குதலில் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட நீதிபதிகள் இருவரும் தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் போன்ற முக்கிய வழக்குகளில் விசாரணை நடத்தி வந்தவர்கள் என ஈரானின் நீதித்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்களின் நோக்கம் தெரியாத நிலையில் அவர் மீது இதற்குமுன் எந்த வழக்கும் இல்லை என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
- பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்
- க ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
இஸ்ரேல் - லெபனான் - ஹிஸ்புல்லா
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து அண்டை நாடான லெபனானில் இருந்து ஹமாஸ் அமைப்பின் நட்பில் உள்ள ஹிஸ்புல்லா ஆயுதக்குழு எல்லையில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வந்தது.
இதன் விளைவாக ஆண்டில் இடைப்பகுதி முதல் இஸ்ரேல் லெபனான் முழுவதும் பலகட்டங்களாக தாக்குதல் நடத்தி தாக்கி 3,500 பேர் வரை கொன்றது.தலைநகர் பெய்ரூட் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. லெபனான் மீதான இஸ்ரேலின் தரைப்படை ஆக்கிரமிப்பு மற்றும் குண்டுவீச்சுகளால் 1.4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐநா மதிப்பிட்டுள்ளது.

பெய்ரூட் பதுங்குகுழியில் இருந்த ஹிஸ்புல்லாவின் 32 வருடகால தலைவரான ஹசன் நஸ்ரல்லா செப்டம்பர் இஸ்ரேல் குண்டுகளை வீசியபோது படுகொலை செய்யப்பட்டார்.

இதற்கு ஒரு வாரம் முன்னர் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் மீது இஸ்ரேல் அதிநவீன தாக்குதல் ஒன்றை முன்னெடுத்தது. லெபனான் முழுவதிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜ்ர்கள் திடீரென வெடித்துச் சிதறின.
இதில் 35 பேர் வரை கொல்லப்பட்டனர். ஆயிரக்கனோர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாக்கிடாக்கிகள் உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்களும் வெடிக்கத் தொடங்கின. தாய்லாந்தில் வெடி மருந்து வைத்து தயாரிக்கப்பட்ட பேஜர்களை இஸ்ரேல் உளவுத்துறை ஹிஸ்புல்லாவுக்கு ஏமாற்றி விற்றது பின்னர் தெரியவந்தது.

தொடர்ந்து அக்டோபர் மற்றும் நவம்பரில் இஸ்ரேலின் தாக்குதல்கள் லெபனானில் தீவிரமடைந்த நிலையில் நவம்பர் இறுதியில் உலக நாடுகள் முயற்சியால் போர் நிறுத்தம் வந்தது. ஆனால் ஹிஸ்புல்லா இயக்கம் அதற்குள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
இஸ்ரேல் - ஈரான்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து மற்றொரு இஸ்லாமிய நாடான ஈரான் நேரடி தாக்குதல் மூலம் உலகை அசர வைத்தது.
இது மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போர் ஏற்படும் அபாயத்தை உருவாக்கியது. ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா செப்டம்பர் 27 இல் கொல்லப்பட்டதற்கும், ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஜூலை 31 அன்று ஈரானில் சீர்த்திருத்த கட்சியை சேர்ந்த புதிய அதிபர் மசூத் பெசஸ்கியான் பதவியேற்பில் கலந்துகொள்ள வந்தபோது தெஹ்ரானில் அவரது தங்குமிடத்தில் வெடிகுண்டு தாக்குதல் மூலம் இஸ்ரேலால் கொல்லப்பட்டார்.
இவை அனைத்துக்கும் பதிலடியாக அக்டோபர் 1 ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 200 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ஈரான் தாக்கியது.
இதில் பெரிய பாதிப்புகள் இல்லாத போதிலும், ஒரு மத்திய கிழக்கு நாடு திருப்பி அடிப்பதை மேற்கு நாடுகள் கடுமையாக கண்டித்தன.

தொடர்ந்து சுமார் 25 நாட்கள் கழித்து அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின.
ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள இடங்களிலும், மேற்கு மாகாணமான இலாம் மற்றும் தென்மேற்கு குசெஸ்தானிலும் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் 4 வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது. ஈரானின் முக்கிய அணு சக்தி தளத்தை அளித்ததாக இஸ்ரேல் பின்னர் தெரிவித்தது.

இஸ்ரேல் - ஏமன் - ஹவுதி கிளர்ச்சியாளர்கள்
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலை எதிர்த்து ஏமன் நாட்டில் இருந்து செயல்படும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
அரபு நாடுகளிலேயே ஏழ்மையான நாடான ஏமன் தலைநகர் சனா மற்றும் நாட்டின் வடக்கின் பெரும்பகுதியை ஈரான் ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துகின்றனர்.
இவர்களுக்கும் தெற்கில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கப் படைகளுக்கும் இடையே 10 ஆண்டுகால உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. செங்கடலில் வரும் கப்பல்களைத் தாக்கி, உலகின் முக்கிய கடல்வழிப் பாதைகளில் அவர்களின் ஆதிக்கத்தால் அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் சரிக்குக்கப்பல்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
மேலும் ஹவுதிகள் இஸ்ரேல் மீதும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளனர். இதற்கு பதில் தாக்குதலாக ஏமனில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்கள் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
சமீபத்தில் சனா விமான நிலையத்தில் இஸ்ரேல் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உலக சுகாதர அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் நூலிழையில் உயிர்பிழைத்தார். முன்னதாக ஹவுதிகள் ஏவிய ஏவுகணைகளை தடுக்க அமெரிக்கா வழங்கிய தாட் ஏவுகணை எதிர்ப்பு தொழில்நுட்பத்தை முதல் முறையாக பயன்படுத்தியது.
சிரியாவின் உள்நாட்டு போர் வெற்றி
மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் அதிபர் பஷர் அல் ஆசாத் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 50 ஆண்டுகளாக அவரது குடும்பமே சிரியாவில் ஆட்சியில் இருந்தது.

இதற்கிடையே அதிபர் பஷர் அல் ஆசாத் நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார பிரச்சனைகள், சர்வாதிகாரப் போக்கு ஆகியவற்றை எதிர்த்து கடந்த 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் தொடங்கியது. ரஷியாவின் உதவியுடன் அப்போது தனது ஆட்சியை ஆசாத் காப்பற்றிக்கொண்டார்.

உலக சக்தியான ரஷியாவின் உதவியுடன் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை தொடரவே செய்தது. அதன் விளைவாக ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையில், பல கிளர்ச்சிப் குழுக்கள் கடந்த டிசம்பரில் ஒரே வாரத்தில் அலெப்போ, ஹமா, தாரா உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் கடைசியாக டிசம்பர் 8 ஆம் தேதி தலைநகர் டமாஸ்கஸ் ஐ கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். அதிபர் ஆசாத் ரஷியாவுக்கு தப்பியோடினார்.

- இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம்.
- ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இந்த ஆண்டு கொன்றது குறித்த ஒப்புதல் இஸ்ரேலின் வெட்கக்கேடான செயல் என்று ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது.
"இந்த கொடூரமான குற்றத்திற்கு இஸ்ரேலிய ஆட்சி தனது பொறுப்பை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது வெட்கக்கேடான செயல்" என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.
முன்னதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹனியே கொலைக்கு தனது நாடு தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்டார். கொன்று குவித்தது தொடர்பாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.
காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய ஹனியே, ஜூலை 31ம் தேதி தெஹ்ரானில் உள்ள விருந்தினர் மாளிகையில் கொல்லப்பட்டார்.
- நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது.
- நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாது.
ஈரானில் பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் ஈரான் பாடகியான பரஸ்டூ அஹமதி (வயது27) ஆன் லைனில் இசை நிகழ்ச்சி நடத்தினார்.
இதில் அவர் நீண்ட கருப்பு ஸ்லீவ்லெஸ் மற்றும் காலர் இல்லாத ஆடையை அணிந்து இருந்தார். அவருடன் 4 பேர் கொண்ட இசைக்குழு இந்த நிகழ்ச்சியை நடத்தியது.

முன்னதாக அந்த வீடியோவில், அவர், எனக்கு பாடல்கள் பாடுவதில் ஆர்வம் அதிகம். ஆனால் நாட்டில் பாட்டு பாட முடியாத நிலை உள்ளது. இருப்பினும் நாட்டுக்காக என் ஆசையை கைவிட முடியாத பெண்ணாக இந்த கச்சேரியை நடத்துகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இசை நிகழ்ச்சியில் ஹிஜாப் அணியாத தால் பாடகி பரஸ்டூ அஹமதியை போலீசார் கைது செய்து உள்ளனர். வடக்கு மாகாணமான மஸந்தரானின் தலை நகர்சாரி சிட்டியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இசைக்குழுவில் உள்ள இசொஹைல் பாகி நசிரி, எஹ்சான் பெய்ராக்தார் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
- நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார்
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்ப்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி [52 வயது] கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் நோபல் பரிசு பெற்ற பின்னர் முதல் முறையாக சிறையில் இருந்து மருத்துவ விடுப்பில் வெளியே வந்துள்ளார் நர்கிஸ் முகமதி. எலும்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவ காரணங்களுக்காக மூன்று வாரங்கள் சிறையில் இருந்து கடந்த புதன்கிழமை விடுவிக்கப்பட்டார்.
அவரை நோபல் பரிசுக் குழு நேற்று [ஞாயிற்றுக்கிழமை] தொடர்பு கொண்டு பேசியுள்ளது. இந்த உரையாடலில் வீடியோவை நோபல் பரிசு குழு பொதுவெளியில் வெளியிட்டுள்ளது.

எனது சக கைதிகளில் ஒருவர் சிறையில் ஆண்கள் வார்டில் இருந்த தனது கணவரை தொடர்புகொண்டார். அவர்கள் மூலம் எனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்ற செய்தியை அறிந்துகொண்டோம். அது நம்பமுடியாத\தாக இருந்தது
எவின் சிறைச்சாலை முழுவதும் இந்த செய்தி பரவியபோது பெண்கள் வார்டு "பெண் வாழ்க்கை சுதந்திரம்"[Woman Life Freedom] என்ற முழக்கத்தால் நிறைந்ததை முகமதி அந்த வீடியோவில் நினைவு கூர்ந்தார். இந்த வீடியோவில் பச்சை நிற டாப்ஸ் அணிந்திருந்த முகமதி தலையில் எந்தவித உடையையும் [ஹிஜாப்] அணியாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Today, 8 December 2024, the Norwegian Nobel Committee made direct contact with Narges Mohammadi, the 2023 Nobel Peace Prize laureate, for the first time. Just days ago Mohammadi was temporarily released from the notorious Evin Prison for medical treatment, a leave limited to only… pic.twitter.com/nVHAmpjJg0
— The Nobel Prize (@NobelPrize) December 8, 2024
முகம்மதியின் நிபந்தனையற்ற நிரந்தர விடுதலைக்கு உளமெங்கிலும் இருந்து சமூக செயல்பாட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
- ஒரு நபருக்கு $300 [ 25 ஆயிரம் ரூபாய்] முதல் $400 [33 ஆயிரம் ரூபாய்] வழங்கப்படும்
- லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியவில் தஞ்சம் அடைந்தனர்
லெபனானில் இஸ்ரேலுடனான 14 மாத கால போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 மில்லியன் டாலருக்கு [சுமார் 42 கோடி ரூபாய்] மேல் ரொக்கமாக ஹிஸ்புல்லா விநியோகித்துள்ளதாக அவ்வமைப்பின் தற்போதைய தலைவர் நைம் காசிம் தெரிவித்துள்ளார்.
ஒரு நபருக்கு $300 [25 ஆயிரம் ரூபாய்] முதல் $400 [33 ஆயிரம் ரூபாய்] வரையிலான வீதத்திலும் 233,500 பதிவுசெய்யப்பட்ட குடும்பங்களுக்கு $77 மில்லியனுக்கும் [சுமார் 51 கோடியே 98 லட்சம் ரூபாய்] அதிகமான தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். தலைநகர் பெய்ரூட்டில் வசிப்பவர்களுக்கு ஆண்டு வாடகையாக $6,000 மற்றும் தலைநகருக்கு வெளியே உள்ளவர்களுக்கு $4,000, வீடுகளை இழந்தவர்களுக்கு $8,000 வீதம் ஹிஸ்புல்லா ஒதுக்கியுள்ளது.

நைம் காசிம்
இஸ்ரேல் தாக்குதலால் அதிக சேதத்தைச் சந்தித்த தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் தெற்கு மற்றும் ஷியா மக்கள் அதிகம் உள்ள கிழக்கு லெபனான் பகுதிகளுக்கு பெரும்பான்மையான நிவாரண தொகை சென்று சேர்கிறது.
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய பண ஆதாரமாக இருக்கும் ஈரான் உதவியுடன் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. காசாவுக்கு ஆதரவாக லெபனானில் இருந்து தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 3500க்கும் மேற்பட்ட லெபனானியர்கள் உயிரிழந்தனர். ஹிஸ்புல்லாவின் நீண்டகால தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார். அவருக்கு பின் நைம் காசிம் தலைவரானார்.
லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி அண்டை நாடான சிரியவில் தஞ்சம் அடைந்தனர். கடந்த மாதம் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் இணைந்து ஏற்படுத்திய போர்நிறுத்தம் அமலுக்கு வந்தபோதிலும் முந்தைய தாக்குதல்கள் லெபனான் முழுவதும் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. போர் நிறுத்தனத்தின் பின் அனைவரும் மீண்டும் தத்தமது இடங்களுக்கு திரும்பி வருகின்றனர்.

ஐநா மற்றும் உலக வங்கியின் புள்ளிவிவரங்களின்படி , 14 மாத கால சண்டையில் லெபனானில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. 3.2 பில்லியன் டாலருக்கும் அதிகமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. ஆயுதக்குழு என்பதையும் தாண்டி ஹிஸ்புல்லா லெபனானில் குறிப்பிடத்தகுந்த அரசியல் சக்தியாகவும் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- On Road Indian என்ற யூசர் நேம் கொண்ட யுடியூபர் ஒருவர் ஈரானுக்கு பயணப்பட்டுள்ளார்.
- இந்தியர் கீழே இருக்க ஹுசைன் மாடிக்கு சென்றார்
புதிய ஊருக்கு சென்றாலே திக்கு திசை தெரியாமல் முழிக்கும் நிலைமைதான் அனைவர்க்கும். அதே புதிய நாட்டுக்கு சென்றால் அதுவும் அங்கு தெரிந்தவர் யாரும் இல்லாமல் இருந்தால் பெரும்பாடு தான். அந்த நிலைமைதான் யூடியூபில் டிராவல் VLOGGING செய்யும் இந்தியர் ஒருவருக்கு ஈரானில் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் புது இடங்களைப் பார்க்க வேண்டும், பயணங்கள் செய்ய வேண்டும் என்று விருப்பம் கொண்டிருப்பர். ஆனால் வீடு, பொறுப்பு, வேலை என பலவிதமான கண்ணுக்குத் தெரியாத சங்கிலிகளால் அவர்கள் கட்டுண்டு கிடக்கிறார்கள்.
வேலையிடம் - வீடு என இந்த இடைப்பட்ட அளவு மட்டுமே அந்த சங்கிலியின் நீளம் இருக்கும். எனவே புது இடங்களுக்கு பயணித்து அதை வீடியோவாக எடுத்து யூடியூபில் பதிவிடுபவர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இவ்வாறு புது இடங்களுக்கு பயணம் செய்து வீடியோ பதிவு செய்வோர் VLOGGER என்று அழைக்கப்படுகின்றனர்.
அந்த வகையில்,On Road Indian என்ற யூசர் நேம் கொண்ட யுடியூபர் ஒருவர் ஈரானுக்கு பயணப்பட்டுள்ளார்.அங்கு என்ன ஏது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த அவருக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் உதவி செய்துள்ளார்.

ஈரான் விமான நிலையத்தில் வந்திறங்கிய அந்த இந்திய யுடியூபர் விமான நிலையத்தில் வைத்து ஹுசைன் என்ற பாகிஸ்தானிய இளைஞனை சந்தித்துள்ளார். இவர் ஈரானில் பயின்று வரும் மாணவர் ஆவார். இந்தியரின் செல்போனில் நெட்வொர்க் பிரச்சனை இருந்துள்ளது. எனவே அதற்கு தீர்வுகாண ஹுசைன் முன்வந்துள்ளார். இந்தியரை டாக்சி மூலம் தனது வீட்டுக்கு ஹுசைன் அழைத்து சென்றார்.
இந்தியர் கீழே இருக்க ஹுசைன் மாடிக்கு சென்றபோது, தனது வீடியோவில் தனக்கு ஏற்பட்ட நிலைமை குறித்து தனது கவலையை தெரிவித்தார்.
ஆனாலும் இந்தியருக்கு நெட்வொர்க் கிடைக்கும் சிம்கார்டை வழங்க ஹுசைன் தனது வீட்டில் சிரமம் எடுத்து தேடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. இந்தியரின் நெட்வொர்க் பிரச்சனையை ஹுசைன் கடைசியாக தீர்த்து வைத்தார். அதன்பின் இந்தியர் ஈரானில் பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிப் பார்க்கிறார்.
இது அனைத்தும் வீடியோ ஆக்கப்பட்டு அவர் இதை வெளியிடவே, YouTube இல் ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது. மேலும் பிற சமூக ஊடங்களிலும் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே பாகிஸ்தானியர்கள் ஆபத்தானவர்கள், அவர்கள் இந்தியர்களின் எதிரிகள் என இந்திய சினிமாக்களும் அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் பொதுப்படையான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்திருந்தாலும், இது போன்ற சம்பவங்கள் அது வடிகட்டிய பொய் என்பதை நிரூபிக்கத் தவறுவதில்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
- 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உயர் [தேசிய-மத] தலைவராக (Supreme Leader) ருஹோல்லா கோமேனி பதவி வகித்தார்.1989 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின் தேசிய தலைவரான அயத்துல்லா அலி காமேனி [85 வயது] இன்று வரை அந்த பதவியில் இருக்கிறார்.

ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியும் ஆகும். இந்நிலையில் தற்போது இஸ்ரேலுடன் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் அடுத்த ஈரான் தேசிய தலைவராகத் தனது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வயது மூப்பு மற்றும் உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்படும் காமேனி இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி அயத்துல்லா காமேனியின் அவசர அழைப்பின்படி ஈரான் நிபுணர்கள் சபை [Assembly of Experts] -இல் அங்கம் வகிக்கும் 60 உறுப்பினர்கள் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ரகசிய கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த வாக்கெடுப்பில் ருஹோல்லா கோமேனியை அடுத்த தலைவராக ஏற்கும் முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஜனநாயக முறையில் இல்லாமல் அடுத்த தலைவர் தேர்வு நடப்பது வெளியே தெரிந்தால் எதிர்க்கட்சி மற்றும் மக்கள் மத்தியில் குழப்பம் மற்றும் போராட்டம் வெடிக்கும் என்று அஞ்சுவதால் இந்த தலைவர் தேர்வு ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அலி காமேனி பதவி விலகி மொஜிதாபாவிடம் அதிகாரம் கைமாறும் என்று கூறப்படுகிறது.

கடந்த இரண்டு வருடங்களாக மொஜிதாபா காமேனிக்கு இந்த தலைமை பொறுப்புக்கான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி தற்போது ஈரான் அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் குழுவில் மொஜிதாபா ஏற்கனவே செயல்பட்டு வருகிறார்.
ஈரானில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு போராட்டங்களை ஒடுக்கியவர் மொஜ்தபா. எனவே அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு எதிராக பல்வேறு அதிரடி முடிவுகளை எடுக்கலாம் என்றும் அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
- டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்தது.
- ஒரு அணு ஆயுத்ததில் யுரேனியத்தை சுற்றி உள்ள பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் குண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள்.
அக்டோபர் 26 தாக்குதல்
காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த 1 ஆம் தேதி சுமார் 180 ஏவுகணைகளை ஏவி ஈரான் திடீர் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்க காத்திருந்த இஸ்ரேல் சுமார் 25 நாட்கள் கழித்து கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ஈரான் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
100 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய F-35 'Adir' ஸ்டெல்த் ஃபைட்டர்கள் விமானங்கள் 2000 கிலோமீட்டர்கள் பயணித்து ஈரான் வான் பரப்புக்குள் நுழைந்து மூன்று கட்டங்களாக குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலால் தங்களுக்கு அதிக பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று ஈரான் தெரிவித்திருந்தது.

பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ்
ஆனால் ஈரானில் உள்ள ரகசிய அணு ஆயுத ஆராய்ச்சி தளம் கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக 3 அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரான் படு ரகசியமாக வைத்திருக்கும் பார்சின் மிலிட்டரி காம்பிளக்ஸ் [Parchin military complex] அணு ஆயுத ஆராய்ச்சித் தளத்தில் உள்ள டேல்கான் 2 [Taleghan 2 ] ஆராய்ச்சி கூடம் இஸ்ரேல் தாக்குதலில் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சி
முன்னதாக தனது அணு ஆயுத ஆராய்ச்சிகளை வெளியுலகில் ஈரான் மறுத்து வந்த நிலையில் இந்த டேல்கான் 2 கூடம் செயல்படாமல் இருந்ததாக கருதப்பட்டது. கடந்த 2003 ஆம் ஆண்டில் ஈரான் தனது அணு ஆயுத ஆராய்ச்சி திடமான அமாட் நியூக்கிலியர் புரோகிராமில் இந்த டேல்கான் 2 ஒரு அங்கமாக இருந்தது.
ஆனால் செயலிழந்ததாக நம்பப்பட்ட இந்த டேல்கான் 2 தளத்தில் கடந்த ஆண்டு முதல் மீண்டும் ஈரான் ஆராய்ச்சிகளை தொடங்கியதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்புகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையில்தான் இந்த தளம் இஸ்ரேல் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டேல்கான் 2
அணு ஆயுதத்தில் உள்ள யுரேனியத்தை சுற்றி அமைக்கப்படும் பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் வெடிமருந்துகள் அணுகுண்டை வெடிக்கச் செய்ய முக்கியமாக தேவைப்படும் பொருள் ஆகும். இந்த பிளாஸ்டிக் எக்ஸ்புளோசிவ்ஸ் தயாரிக்க பயன்பட்ட சாதனம் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளது என்றும் இதனால் ஈரானின் அணு ஆயுத ஆராய்ச்சியில் பின்னடைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று பிரசுரத்தில் கூறினார்.
- அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.
பாலஸ்தீனம் மற்றும் லெபனான் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் இஸ்ரேல் மத்திய கிழக்கில் முக்கிய நாடாக விளங்கும் ஈரானையும் குறிவைத்து வருகிறது. காசா போருக்கு எதிராக இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பைட்டர் ஜெட்கள் மூலம் ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் தாக்கியது. ஈரான் அணுசக்தி நிலையங்கள் மற்றும் எண்ணெய் கிணறுகள் மீது எந்த நேரமும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அபாய சூழல் நிலவி வருகிறது. ஆனால் இஸ்ரேலுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு கடிவாளம் போட்ட நிலையில் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் தனது பிரசாரத்தின்போது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் ஒரு கருத்தை தெரிவித்தார்.
அதாவது, இஸ்ரேல் முதலில் ஈரான் அணு நிலையங்கள் மீதுதான் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஈரான் மக்களுக்கு வீடியோ செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பேசும் அவர், [ஈரான் மதத்தலைவர்] அயத்துல்லா கமேனிக்கு இஸ்ரேலை விட பயம் தரும் விஷயம் ஒன்று இருக்கிறது.

அது நீங்கள் தான்.. ஈரான் மக்கள். அதனால்தான் அவர்கள் உங்கள் நம்பிக்கைகளை நசுக்குவதற்கும் உங்கள் கனவுகளைத் தடுக்கவும் அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள்.
நம்பிக்கையை இழக்காதீர்கள், சுதந்திர உலகில் இஸ்ரேலும் மற்றவர்களும் உங்களுடன் நிற்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்று பேசியுள்ளார். மேலும் இஸ்ரேலை தாக்க நினைத்தால் ஈரானின் மொத்த பொருளாதாரமும் முடங்கும் என்றும் நேதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
A special message from me to the Iranian people: there's one thing Khamenei's regime fears more than Israel. It's you — the people of Iran. Don't lose hope.پیام ویژهای از من برای مردم ایران: یک چیز هست که رژیم خامنهای بیش از اسرائیل از آن میترسد. آن شما هستید — مردم ایران.… pic.twitter.com/iADxSjNXCs
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) November 12, 2024
இதற்கிடையே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் கடந்த சில நாள்களில்மூன்று பேசியிருக்கிறேன். இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டணியை இன்னும் வலிமையாக இணைப்பது குறித்துப் பேசினோம்" என்று நேதன்யாகு பேசியதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் டிரம்ப்பும் நானும் இணைந்து ஈரான் விவகாரத்தை கவனித்து வருகிறோம் என்றும் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.