search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "iran nuclear deal"

    அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.
    டெஹ்ரான்:

    அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது நேசநாடுகளும் ஈரானை புறக்கணிக்க வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறையின் சார்பில் நிர்பந்திக்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகினாலும் நாங்கள் தொடர்ந்து கடைபிடிப்போம் என இதில் கையொப்பமிட்டுள்ள இதர வல்லரசு நாடுகள் தெரிவித்துள்ளன.

    இந்நிலையில், அமெரிக்கா விலகிய பின்னர் முதன்முறையாக வல்லரசு நாடுகளுடன் ஈரான் கலந்துகொள்ளும் அணு ஆயுத தடை ஒப்பந்த ஆலோசனை கூட்டம் வியன்னா நகரில் வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது.

    பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் ஈரான் நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி முஹம்மது ஜாவத் ஸரிப் இந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. #Irannucleardeal #Viennanuclearmeet 
    ஈரானுடன் 2015-ம் ஆண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் இருந்து சமீபத்தில் விலகிய அமெரிக்கா, தற்போது மீண்டும் அந்நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. #IranNuclearDeal #US
    வாஷிங்டன்:

    2015-ம் ஆண்டு வல்லரசு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை ஈரான் மீறிவருவதாக கூறி வந்த அமெரிக்கா, சமீபத்தில் இதில் இருந்து விலகியது. இதனால், ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிக்கவும் அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்நிலையில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஈரான் மீது தடை விதிக்கும் பணியில் அமெரிக்கா ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு வெளியுறவு மந்திரி மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். “எங்களது தீவிரம் குறித்து ஈரான் தலைவர்களுக்கு சந்தேகமே வரக்கூடாது” என அவர் உறுதிபட கூறினார்.

    ஈரான் மீதான புதிய அமெரிக்க கொள்கையை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், 12 கடுமையான நிபந்தனைகளுடன் ஈரான் உடன் எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளவது போன்ற அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளதாக மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று சீனா நாட்டுக்கு சென்றடைந்தார். #IranNuclearDeal #IranFM #ChinaVisit

    பீஜிங்: 

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. 

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும். 

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன. எனவே பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்யும் முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து சீனாவுடன் ஆலோசனை செய்ய ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மொகமது ஜாவித் சாரிப் இன்று சீனா சென்றார். அதைத்தொடர்ந்து சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். 



    அங்கு சென்றடைந்த அவர் பேசுகையில், ஈரான் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து விவாதிப்போம். ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னரும், பின்னும் சீனாவுடன் நட்புறவில் இருந்து வருகிறோம். சீனாதான் ஈரானின் முதன்மை பொருளாதார பங்குதாரர். சீனா இப்போழுதும் எங்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறது, என அவர் கூறினார். #IranNuclearDeal #IranFM #ChinaVisit
    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் இன்று ஆலோசனை நடத்தினார். #IranNuclearDeal #Putin #Merkel
    மாஸ்கோ:

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது.

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும்.

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன.

    இந்நிலையில், ஜெர்மனி வேந்தர் ஏஞ்சலா மெர்கெல் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இன்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஏஞ்சலா மெர்க்கெல் ஆலோசனை மேற்கொண்டார். #IranNuclearDeal #Putin #Merkel
    ஈரான் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால், பெட்ரோல், டீசல் விலை உயரும். பணவீக்கமும் அதிகரிக்கும். #IranNuclearDeal #PetrolDieselPrice
    ஹாங்காங்:

    ஈரான், வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா நேற்று முன்தினம் விலகியது. அத்துடன் ஈரான் மீது பொருளாதார தடைகளையும் விதிக்கிறது.

    இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

    இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு இறக்குமதியையே சார்ந்து உள்ளது. ஈராக், சவுதி அரேபியாவை தொடர்ந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக ஈரான் திகழ்ந்து வருகிறது.



    இப்போது ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதால், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது பாதிக்காது. ஏனென்றால், அமெரிக்காவை போன்று ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்காதது வரையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்காது.

    ஈரானிடம் இருந்து வாங்குகிற கச்சா எண்ணெய்க்கான விலையை ஐரோப்பிய வங்கிகள் வழியாகத்தான் இந்தியா கொடுத்து வருகிறது. அவற்றை தடை செய்யாத வரையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடரும்.

    தற்போது ஈரானில் இருந்து இந்தியா நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 5 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.

    ஈரான் அதிபர் ரூஹானி சமீபத்தில் இந்தியா வந்து சென்றபோது, 2018-19 ஆண்டில் நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 96 ஆயிரம் பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவின் பொருளாதார தடையால் ஏற்பட்டு உள்ள இழப்புகளை ஈடுகட்டுவதற்காக, ஈரான் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும்.

    ஏற்கனவே அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகி விடும் என்ற எதிர்பார்ப்பில், கச்சா எண்ணெய் ஒப்பந்த விலை உயரத் தொடங்கி விட்டது. கடந்த 3½ ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த விலை உயர்வு அமைந்து உள்ளது.

    கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 80 டாலர் அளவுக்கு (சுமார் ரூ.5,200) உயரும் என்ற பேச்சு உள்ளது.

    நேற்று ஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்துக்கு அதிகமாக உயர்ந்தது.

    அமெரிக்கா விலகலுக்கு முன்பாகவே எரிபொருள் விலை 20 சதவீத அளவுக்கு உயரும் என்று உலக வங்கி கணித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    எனவே கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயரும் நிலை உருவாகி உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்கிறபோது, அது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    ஏற்கனவே இதுவரை இல்லாத வகையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.77.43 ஆகவும், டீசல் விலை ரூ.69.56 ஆகவும் உள்ளது. இந்த விலை மேலும் உயர்கிறபோது, அது சங்கிலித்தொடர்போல ஒவ்வொன்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பண வீக்கம் எகிறும் எல்லா பொருட்களின் விலைகளும் உயரும். நாட்டின் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும்.  #IranNuclearDeal #PetrolDieselPrice  #Tamilnews

    ×